உன்னில் நான் ஏன்
அன்பு கொண்டேன்?
அடிக்கடி என் மனதை
விடைதேட வினாவுகிறேன்
இன்றுவரை பதில் இல்லை
ஆதலால் அன்பே
நான் உன்னை விட்டு
நீண்ட தூரம் போக
எத்தணித்து அதை
உன்னிடம் தெரிவிக்க
"எப்போ மீண்டும் வருவாய் என
அப்பாவியாய் உன் மனம் வினாவ
நீயோ வாய் திறந்து பேசாமல்
மெளனித்திருப்பது ஏனோ
உன் மெளனம் எனை
இன்று சாகடிப்பது போல்
என் மரணமும் உனை
ஓர்நாள் சாகடிக்கும்
அதுநாள்வரை
எனைப் பார்க்கத் துடிக்கும்
உன் விழிகளிடமிருந்து
விடைபெற்றுச் செல்கின்றேன்
உன் மனம் என்னோடு
பேச முயன்றால்
உன் நினைவோடு இருக்கும்
என் மனசுக்கு அது புரியும்
உன் வாய்மொழி பேச்சால்
என் மீதான காதலை
என்றொருநாள் உதிர்ப்பாயோ
அன்று எனக்கு
சொல்லி அனுப்பு
அதை செவிமெடுக்க
உன்னருகில் நான் இருப்பேன்.
அதுவரையில்
உனைப் பிரிந்து
உன் மேலான காதலினால்
உருகிப்போயிருக்கும்
உன்னுயிர் காதலன்...!
குட்டி உலகத்தில் ஓர் வழிப்போக்கன்...! காலை இளம் பனி! நிலா முற்றம்! குளிர்ந்த காற்று! வெண்பஞ்சு முகில்கள்! குழந்தையின் செல்ல சிரிப்பு! காதல் பெண்ணின் ஓரப் பார்வை! அம்மாவின் அன்பு மடி! இதுவே என் குட்டி உலகம்...!
Tuesday, November 17, 2009
Saturday, November 14, 2009
வீழும் தமிழ்...!!!
இன்றைய வேகமான நவீன விஞ்ஞான உலகில் தொழில் நுட்ப வளர்ச்சியினூடே தமிழ் மொழியும் ஆட்டம் கண்டபடி நகர்ந்து கொண்டுருக்கின்றது. அண்றாட வாழ்க்கையில் பல்வேறுபட்ட மொழிக் கலவையின் தலையீட்டினால் எம் தமிழ் மொழியும் கலப்படமாகிவருகின்றது...
"மெல்லத் தமிழினிச் சாகும் – அந்தமேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ! இந்தவசையெனக் கெய்திட லாமோ?"
என்று என்றோ உரைத்த பாரதி கூற்று இன்று நனவாகிக் கொண்டிருக்கின்றது.
பண்டைக் காலமதில் வழக்கத்திலிருந்த எத்தனையொ சொற்கள் இன்று மருவிப் போய்க் கொண்டிருக்கின்றன, இதற்கு யார் தான் காரணம்...??? நாமா இல்லை நாம் சார்ந்து வாழும் எமது சீமைக் கலாசாரமா...??? மழுங்கடிக்கப் படும் எம் தமிழைத் தூக்கி நிறுத்துவோன் எவனோ...??? மீண்டுமோர் பாரதி தேவை போலும்...!
"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவது எங்கும் கானோம்;
பாமரராய், விலங்குகளாய்,உலகனைத்தும்
இகழ்ச்சி சொல்லப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்."
இப்படியும் கூறிச்சென்றான் கவியதனை... இன்றோ அதை செவிமடுப்பார் யாருமில்லை...
பண்டைய வீரத் தமிழதனில் எத்தனை எத்தனை அருமையான சொற்கள்... இன்று அவற்றுக்கு என்ன ஆகிவிட்டது??? எங்கே அவைகள்?? எம்மால் மறக்கப்பட்டு விட்டதா??? இல்லை மரிக்கப்பட்டு விட்டனவா??? விடையில்லா வினாக்கள்...
இருந்தும் எம் தமிழ் உறவுகளுக்காய் வழக்கொழிந்த வார்த்தைகள் சிலதை தேடி அறிந்து உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன். நிச்சயம் உங்களால் இவற்றை நினைவுபடுத்திக் கொள்ள முடியும் என நம்புகிறேன்.
இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் எதிர்பாருங்கள்......!!!
"மெல்லத் தமிழினிச் சாகும் – அந்தமேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ! இந்தவசையெனக் கெய்திட லாமோ?"
என்று என்றோ உரைத்த பாரதி கூற்று இன்று நனவாகிக் கொண்டிருக்கின்றது.
பண்டைக் காலமதில் வழக்கத்திலிருந்த எத்தனையொ சொற்கள் இன்று மருவிப் போய்க் கொண்டிருக்கின்றன, இதற்கு யார் தான் காரணம்...??? நாமா இல்லை நாம் சார்ந்து வாழும் எமது சீமைக் கலாசாரமா...??? மழுங்கடிக்கப் படும் எம் தமிழைத் தூக்கி நிறுத்துவோன் எவனோ...??? மீண்டுமோர் பாரதி தேவை போலும்...!
"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவது எங்கும் கானோம்;
பாமரராய், விலங்குகளாய்,உலகனைத்தும்
இகழ்ச்சி சொல்லப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்."
இப்படியும் கூறிச்சென்றான் கவியதனை... இன்றோ அதை செவிமடுப்பார் யாருமில்லை...
பண்டைய வீரத் தமிழதனில் எத்தனை எத்தனை அருமையான சொற்கள்... இன்று அவற்றுக்கு என்ன ஆகிவிட்டது??? எங்கே அவைகள்?? எம்மால் மறக்கப்பட்டு விட்டதா??? இல்லை மரிக்கப்பட்டு விட்டனவா??? விடையில்லா வினாக்கள்...
இருந்தும் எம் தமிழ் உறவுகளுக்காய் வழக்கொழிந்த வார்த்தைகள் சிலதை தேடி அறிந்து உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன். நிச்சயம் உங்களால் இவற்றை நினைவுபடுத்திக் கொள்ள முடியும் என நம்புகிறேன்.
இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் எதிர்பாருங்கள்......!!!
ஏ-9 பாதையில் பஸ்ஸில் பயணிக்க பாதுகாப்பு அனுமதி தேவையில்லை
ஏ9 பாதை ஊடாக இ.போ.ச. பஸ்களில் பயணிக்க இன்று முதல் பாதுகாப்புத் தரப்பின் அனுமதி ("கிளியரன்ஸ்") தேவையில்லை. பாதுகாப்பு அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
மக்கள் தமது தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து இ.போ.ச பஸ்களில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கும் பயணம் செய்யலாம்.
பாதுகாப்பு அமைச்சின் சார்பில் இராணுவ இணைப்பதிகாரி மேஜர் ஜெனரல் டபிள்யு.பி.பி. பெர்னாண்டோ இந்த விவரத்தை நேற்று அறிவித்தார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கும் ஏ9 பாதையூடாக பயணம் செய்வோர் இதுவரை பாதுகாப்புத்தரப்பினரின் பயண அனுமதி ("கிளிய ரன்ஸ்") இன்றிப் பஸ்களில் பயணம் செய்ய முடியாதவாறு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தடை நீக்கப்பட்டதால் மக்கள் இருவழிப் போக்கு வரத்தையும் சுலபமாக மேற்கொள்ளமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பஸ்களில் ஏ9 பாதையூடாக செல்லும் பயணிகள் வழமையான பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் பயணம் செய்ய இயலும் என்றும், பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. விமானமூலம் பயணம் செய்வோருக்கு பாதுகாப்பு அனுமதி (கிளியரன்ஸ்) நீக்கப்பட்டதா என்பது குறித்து தகவல் எதனையும் நேற்றிரவுவரை பெற இயலவில்லை.
Friday, November 13, 2009
உனக்காக.....!!!
அறிமுகம் இல்லாத எண்ணம்
மறைந்து போகும்
உன்னை கண்டால்…
இதழ் திறக்கும் மென்மை
உன் விழி சொல்லும் வார்த்தை
உன்னையே அறியாமல்
உன் குரலுக்கு நானும் ரசிகன்…
நெருக்கமான நினைவுகள் இல்லை
நம்முடன்
ஆனாலும் நெஞ்சில் சுமக்கபாரமில்லை…
உன் அகல விழி பார்வை
எனக்கும் பிடிக்கும்
அது பேசும் வார்த்தைக்காக
என் நட்பும் துடிக்கும்…
விடைபெறும்போது
அது சிந்திய
கண்ணீர் துளிகள்
எனக்கும் பாரம்…
நட்பில் பிரிவுகள் நிதர்சனம்
ஆனாலும் உனை பிரிந்த போது
சிறிய வருத்தம் மனதில்…
உன்னையே அறியாமல்
என் மேல் நீ வைத்திருக்கும்
நம்பிக்கை
சில நேரம் நீ சொல்லும்
“Anything u say hmmmm”
ஊமை பொருளின் உயிரோவியம்…
எத்தனை நாள் சுவாசம்
நான் அறியாதது
உன் புன்னகையின் வெளிச்சம்
என் நட்பையும் ஆளும்…
நெஞ்சில் அடைத்து வைத்த
சோகம் உனை தொடும் போது
தலை சாய்த்து கொள்ள
என் தோளும் இருக்கும்…
உன் பயணத்தில்
என் பாதச்சுவடுகளும் வாழும்…
மறைந்து போகும்
உன்னை கண்டால்…
இதழ் திறக்கும் மென்மை
உன் விழி சொல்லும் வார்த்தை
உன்னையே அறியாமல்
உன் குரலுக்கு நானும் ரசிகன்…
நெருக்கமான நினைவுகள் இல்லை
நம்முடன்
ஆனாலும் நெஞ்சில் சுமக்கபாரமில்லை…
உன் அகல விழி பார்வை
எனக்கும் பிடிக்கும்
அது பேசும் வார்த்தைக்காக
என் நட்பும் துடிக்கும்…
விடைபெறும்போது
அது சிந்திய
கண்ணீர் துளிகள்
எனக்கும் பாரம்…
நட்பில் பிரிவுகள் நிதர்சனம்
ஆனாலும் உனை பிரிந்த போது
சிறிய வருத்தம் மனதில்…
உன்னையே அறியாமல்
என் மேல் நீ வைத்திருக்கும்
நம்பிக்கை
சில நேரம் நீ சொல்லும்
“Anything u say hmmmm”
ஊமை பொருளின் உயிரோவியம்…
எத்தனை நாள் சுவாசம்
நான் அறியாதது
உன் புன்னகையின் வெளிச்சம்
என் நட்பையும் ஆளும்…
நெஞ்சில் அடைத்து வைத்த
சோகம் உனை தொடும் போது
தலை சாய்த்து கொள்ள
என் தோளும் இருக்கும்…
உன் பயணத்தில்
என் பாதச்சுவடுகளும் வாழும்…
Saturday, September 12, 2009
உனது விழிகளுக்குள் நான்
உன்னைப் பார்த்த நாள் முதலாய்
நான் நானாக இல்லை...!
உனது விழிகளுக்குள்
எனது விம்பம் தோன்றிய போது
என் மனதில்
ஆயிரம்பட்டாம் பூச்சிகள்
சிறகடித்துப் பறந்தன...!
என் மனதில் உன் விம்பம்
சஹானாவாக வீற்றிருந்தது..!
நான் இரவில் தூங்கும் போது
உன் எண்ணம் என்னை
பல பல வண்ணக் கனவுகளோடு
ஆக்கிரமித்துக் கொள்கின்றன...!
என் தூக்கம் கலைந்ததும்
நான் சுனாமியில் அகப்பட்ட
ஓடம் போல எங்கெங்கோ
உன்னை நினைத்து
அலைந்து திரிகின்றேன்...
மீண்டும் எனக்கு
Sunday, September 6, 2009
உலகின் உண்மையான வில்லன் இனிமேல் தான் வரப்போகிறான். -ரோபோ வடிவத்தில்!-
உலகின் உண்மையான வில்லன் இனிமேல் தான் வரப்போகிறான். ரோபோ வடிவத்தில் ! வெறும் இயந்திரம் எனும் நிலையில் ஆரம்பிக்கப்பட்ட ரோபோக்களின் இன்றைய வளர்ச்சி பிரமிப்பூட்டுகிறது.
இதுவரை வந்ததெல்லாம் வெறும் சாம்பிள் தான் இனிமேல் தான்பா மெயின் பிக்சர் என மிரட்டுகின்றனர் விஞ்ஞானிகள். அதாவது சுயமாகச் சிந்தித்து, முடிவெடுக்கக் கூடிய ரோபோக்கள் தான் அடுத்த இலக்காம்! அப்படி ஒன்று சாத்தியமாகும் காலத்தில் நிகழப் போகும் விபரீதங்கள் தான் திகிலை ஏற்படுத்துகின்றன.
டெர்மினேட்டர் படம் பார்த்திருப்பீர்கள். ஆட்களைத் தேடித் தேடிக் கொல்லும் வில்லன் ரோபோ. அப்படிப்பட்ட வாடகைக் கொலையாளியை உருவாக்கும் காலம் இதோ வெகு அருகில் என அதிர்ச்சியளிக்கிறார் இங்கிலாந்திலுள்ள ஷெப்பீல்ட் பல்கலைக்கழகத்தின் ரோபோட்டிக்ஸ் பேராசிரியர் நோயல் ஷார்க்கி.
ரோபோக்களின் “அறிவு” படிப்படியாய் வளர்ந்து கொண்டே வருகிறது. முதலில் சுவிட்ச் போட்டால் ரோபோக்கள் இயங்கின, பின்னர் கம்ப்யூட்டரின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டன, இப்போதோ மனித மனதிற்கே கட்டுப்படுகின்றன என பரபரப்பு ஏற்றுகிறார் இவர். கூடவே, ரோபோக்களின் வளர்ச்சி ஒவ்வோர் நாட்டிலும் வெகு சுதந்திரமாய் வளர்கிறது. இது ஆபத்தானது. “அணு” வுக்கு இருப்பது போல உலகளாவிய சட்டங்களும் கட்டுப்பாடுகளும் ரோபோ தயாரிப்பிலும் வரவேண்டும் என காரசார அரசியலையும் கலக்கிறார்.
வயர்களும், இரும்புக் கம்பிகளும் கொண்ட லெப்ட் ரைட் போட்டு நடக்கும் “மெஷின் லுக்” ரோபோக்கள் இப்போதெல்லாம் குறைந்துவிட்டது. அச்சு அசலாக மனிதர்களைப் போலவே இருக்கும் ரோபோக்கள் தான் லேட்டஸ்ட் டிரண்ட். ஜப்பானில் சமீபத்தில் கோபியன் எனும் ரோபோவை வெள்ளோட்டம் விட்டார்கள். இது ஏழு விதமான மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்தி வியப்பூட்டியது. அட்ஷோ டகான்ஸி தலைமையில் டோக்கியோவிலுள்ள வசீடா அறிவியல் மற்றும் பொறியியல் கல்வி நிறுவனம் இதை உருவாக்கியிருந்தது.
போர்களில் ரோபோக்களின் பணி இனிமேல் வெகுவாக அதிகரிக்கப் போகிறது. வெடிகுண்டுகளை அழிக்கும் பணியில் இப்போதே பல ரோபோக்கள் ஈடுபட்டுள்ளன. ஆளில்லாத ரோபோ விமானங்களையும் செய்தாகிவிட்டது. இவற்றை ராணுவ தளத்தில் இருந்து கொண்டு செயற்கைக் கோள் மூலமாக இயக்க முடியும். இதன் அடுத்த இலக்கு, தொலைவில் இருந்து கூட இயக்கத் தேவையில்லாத ரோபோக்கள். அதாவது ரோபோக்களே தீர்மானிக்கும், எங்கே குண்டு போடவேண்டும், எப்போது போடவேண்டும் என்பதை ! தேவைப்பட்டால் அதுவே ஒரு மனித வெடிகுண்டாக…, மன்னிக்கவும் ரோபோ வெடிகுண்டாகவும் மாறி வெடிக்கும் !
இப்படி சகட்டு மேனிக்கு ரோபோக்கள் அதிகரிப்பதால் வேலையில்லாத் திண்டாட்டம் 2030ல் பல மடங்கு அதிகரிக்கும் என்கிறார் அமெரிக்காவின் மார்ஷல் பிரைன் எனும் பியூச்சராலஜிஸ்ட். ரோபோவைச் செய்யும் வேலை மட்டும் தான் மனிதனுக்கு. மற்ற வேலைகளெல்லாம் இனிமேல் ரோபோவுக்கு.
ரோபோக்களைக் குறித்து அடைமழை போல வரும் வியப்பும், திகைப்புமான செய்திகளுக்குச் சிகரம் வைக்கிறார் ஹாலந்தில் ரோபோ ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்ற லெவி. அவர் சொல்வது இது தான். 2050ல் மக்கள் ரோபோவுடன் ????? வைத்துக் கொள்வார்கள். அதை யாராலும் தடுக்க முடியாது.
Saturday, September 5, 2009
உன் உயிரில் நான்
கண்கள் என்னை தேடுகின்றபோது
உன் விழிமலர நான் எதிரில் இல்லை !
சந்தோஷத்தை கொண்டாடுகின்றபோது
பகிர்ந்துக்கொள்ள நான் பக்கத்தில் இல்லை !
சோகங்களில் சோர்ந்து போகின்றபோது
ஆறுதலாக தலைகோதிட நான் அருகினில் இல்லை !
தனிமையில் உணர்கின்றபோது
துணையாக நான் உன்னுடன் இல்லை !
உறக்கமில்லா இரவுகளின்போது
மடிசாய்த்து தூங்கவைக்க நான் உன்னுடன் இல்லை !
இசையை கவிதையை ரசிக்கின்றபோது
சுவாசமாக நேசிக்க நான் உன்னுடன் இல்லை !
பார்த்ததை படித்ததை பற்றி பேசவிரும்பும்போது
கருத்து பறிமாற்றத்திற்கு நான் உன்னுடன் இல்லை !
மனதின் ஆர்வம் குறைகின்றபோது
உற்சாகத்திற்கு உயிர்கொடுக்க நான் உன்னுடன் இல்லை !
ஆனால்நீ நினைக்கும்போது மட்டும்
இதயத்தில்.....
உணர்வுகளில்.......
உன் உயிரில் நான் இருப்பேன் !
அடுத்த தலைமுறை தொழில் நுட்பங்கள்
இயந்திர மனிதன் பற்றிய ஆய்வுகள் எல்லா துறைகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. பிரிட்டனின் Wales சிலுள்ள Aberystwyth பல்கலைகழகத்தின் உயிரியல் ஆய்வாளர் ரோஸ் கிங் மற்றும் அவரது குழுவினர் அறிவியலாளர் இயந்திர மனிதனை அதாவது இயந்திர அறிவியலாளரை உருவாக்கியுள்ளனர்.
Adam என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திர அறியலாளர் தானாகவே பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் முறையில் செயற்கை மதிநுட்பத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்களை சீன வானொலி மூலம் நேயர்கள் ஏற்கென
Adam என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திர அறியலாளர் தானாகவே பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் முறையில் செயற்கை மதிநுட்பத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்களை சீன வானொலி மூலம் நேயர்கள் ஏற்கென
வே கேட்டிருக்கிறீர்கள். தற்போதைய புதிய வரவு ஹெலிகாப்டர் அதாவது உலங்கு வானூர்தி இயந்திர மனிதன்.அறிவியலாளர்கள் இதனை ஆய்வுசெய்து தற்சார்பாக வடிவமைத்துள்ளனர். தொலைவிலிருந்து இயக்கக்கூடிய தொலைக்கட்டுபாட்டு கருவிகள் இன்றி தானாகவே இயங்குகின்ற அளவில் இந்த உலங்கு வானூர்தி இயந்திர மனிதன் தயாரிக்கப்பட்டுள்ளது தான் இதன் சிறப்பு.
அறிவியல் கழகத்தின் கீழ் இயங்கிவரும் Shenyang தன்னியக்க நிறுவனம், இந்த உலங்கு வானூர்தி இயந்திர மனிதனை இரண்டு மதிரிகளில் உருவாக்க நான்கு ஆண்டுகள் ஆய்வுசெய்து வடிவமைத்துள்ளது. அதில் பெரிய மாதிரி மூன்று மீட்டர் நீளம் உடையதாக ஏறக்குறைய சிறிய சீருந்து போன்று உள்
ளது. 120 கிலோ எடையுடைய இது, 40 கிலோ எடையை ஏற்றிச் செல்லக்கூடியது. ஒரு மணிநேரத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் நான்கு மணிநேரம் தொடர்ந்து பறக்கக்கூடியது. ஆனால் சிறிய மாதிரியோ 40 கிலோ எடையுடையதாக 15 கிலோ எடையை சுமந்து செல்லக்கூடியது. இதனுடைய அதிகபட்ச வேகம் ஒரு மணிநேரத்தில் 70 கிலோமீட்டர். நிழற்ப்பட கருவிகள் பொருத்தபட்டு
வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உலங்கு வானூர்தி இயந்திர மனிதன் வானில் மிதந்து பறந்து
கொண்டே பறவையின் பார்வையில் பொருட்கள் தெரிவது போன்ற பாணி
யில் மேலிருந்து நிழற்ப்படங்கள் எடுக்கக்கூடியது. மேலும், இலக்குகளை தானாகவே ஆராய்ந்து தேடி படமெடுக்கும் வசதியும் இதிலுண்டு.
பொதுவாக, காற்று ஒரு மணிநேரத்திற்கு 11 கிலோமீட்டர் திசைவேகத்திற்கு குறைவாக
பொதுவாக, காற்று ஒரு மணிநேரத்திற்கு 11 கிலோமீட்டர் திசைவேகத்திற்கு குறைவாக
வீசும்போது வானில் பறப்பதற்கான சோதனை ஆய்வுகள் நடத்தப்படுவதுண்டு. ஒரு பொருள் காற்றில் நகரும் திசையையும் வேகத்தையும் அளவிடும் அலகு தான் திசைவேகம் எனப்படுகிறது. இத்தகைய ஆய்வுக்கு உலங்கு வானூர்தி இயந்திர மனிதன் உதவும் என்று இந்த நிறுவனத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோலால் இயக்கப்படும் இந்த உலங்கு வானூர்தி இயந்திர மனிதன், ஏழு இலட்சம் முதல் 20 இலட்சம் யுவான் (அதாவது ஒரு இலட்சத்து ஈராயிரம் முதல் இரண்டு இலட்சத்து தொன்நுற்று ஒன்றாயிரத்து தொள்ளாயிரத்து எழுபது அமெரிக்க டாலர்) வரை விற்கப்படும் என்று சீனாவின் லியோனிங் மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள நிறுவனத்தின் ஆய்வாளர் Wu Zhenwei தெரிவித்துள்ளார்.
இந்த உலங்குவானூர்தி இயந்திர மனிதனை சந்தைப்படுத்துவதற்கான எந்த திட்மும் இதுவரையில்லை. அதிகளவிலான உற்பத்தியை உருவாக்க, கூட்டு குழும நிறுவனங்கள் இந்நிறுவனத்தோடு இணைந்து செயல்படாததால், 20 முதல் 30 தொகுதிகள் என சிறிய அளவிலேயே இதன் உற்பத்தி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த உலங்கு வானூர்தி இயந்திர மனிதன் ஆய்வுத் திட்டம் சீன நடுவண் அரசு நிதியின் ஊக்குவிப்போடு, 2006 ஆண்டி
ல் சீன தேசிய முக்கிய திட்டப்பணிகளில் ஒன்றாக பட்டியலிடப்பட்டது. தகவல்களை சேகரிப்பது, நிலநடுக்கம் நடந்த மற்றும் நச்சுவாயு கசியும் மோசமான சூழ்நிலையுள்ள இடங்களுக்கு பொருட்களை ஏற்றிச்செல்லும் நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதே, தேசிய
முக்கிய ஆய்வு திட்டப் பணிகளில் ஒன்றாக இது சேர்க்கப்பட்டதற்கு காரணமாகும். வேதியல் மருந்துகளை துவவும், வீசவும் உலங்கு வானூர்தி இயந்திர மனிதன் பயன்படுத்தப்படலாம்.
Thursday, September 3, 2009
எங்கே என் தோழி
நட்பெனும் வானமதில்
சிறகடித்துப் பறந்த - எம்
நட்பு இன்று சிறகொடிந்து
போனதன் காரணம் தான் என்ன......?
பள்ளிப் பருவமதில்
கதைத்துச் சிரிக்க ஒரு நட்பு
கல்லூரி வாழ்க்கையதில்
சுக, துக்கங்களைப் பகிர்ந்துகொள்ள
என் இன்றைய நட்பு.......!
நல்ல நட்பை யாசித்த
என் வாழ்க்கையில்.......
வசந்தத்தை எனக்குக்
காட்டியவள் என் தோழி.......!
அன்பில்த் தாயாக.......
சரிவுகளில் என் உடன்பிறப்பாக......
சோகங்களில் தோள் கொடுக்கும்
என் தோழியாக......
என்னோடிருந்த என் நண்பி....
இன்று எங்கே சென்றுவிட்டாய்.....?
என்னதான் ஆகிவிட்டது உனக்கு.....?
நேற்றுவரை........
நட்பெனும் தரு தனிலே
தோழர்களாய் மகிழ்ந்த நாம்....
கை தட்டினால் கலைந்து செல்லும்
காக்கைகளைப் போல் இன்று
சிதறியேபோனதன் காரணம் தான் என்ன....?
இன்றும் கூட......
நீ மௌனமாக இருந்தாலும்......
நெருங்கி வந்து
விலகிச் செல்கிறேன்......
பேச மனம் இருந்தும்...
பேசிக்கொள்ளாமல்........... !
ஒன்று தெரியுமா உனக்கு....?
நீ என்னோடு இல்லாததால்
என்னவோ........!
நீண்ட காலத்தின் பின்.....
சோகங்களும், சந்தோஷங்களும்.....
என் மனதில் மெல்ல மெல்ல....
கனக்கத் தொடங்குகின்றன.......!
என் தோழியே..........!
நீ
எங்கிருந்தாலும்
பேசிக்கொள்வாயா என்னோடு.......?
என் சோகங்களை
உன்னோடு பகிரவேண்டும்........!
சிறகடித்துப் பறந்த - எம்
நட்பு இன்று சிறகொடிந்து
போனதன் காரணம் தான் என்ன......?
பள்ளிப் பருவமதில்
கதைத்துச் சிரிக்க ஒரு நட்பு
கல்லூரி வாழ்க்கையதில்
சுக, துக்கங்களைப் பகிர்ந்துகொள்ள
என் இன்றைய நட்பு.......!
நல்ல நட்பை யாசித்த
என் வாழ்க்கையில்.......
வசந்தத்தை எனக்குக்
காட்டியவள் என் தோழி.......!
அன்பில்த் தாயாக.......
சரிவுகளில் என் உடன்பிறப்பாக......
சோகங்களில் தோள் கொடுக்கும்
என் தோழியாக......
என்னோடிருந்த என் நண்பி....
இன்று எங்கே சென்றுவிட்டாய்.....?
என்னதான் ஆகிவிட்டது உனக்கு.....?
நேற்றுவரை........
நட்பெனும் தரு தனிலே
தோழர்களாய் மகிழ்ந்த நாம்....
கை தட்டினால் கலைந்து செல்லும்
காக்கைகளைப் போல் இன்று
சிதறியேபோனதன் காரணம் தான் என்ன....?
இன்றும் கூட......
நீ மௌனமாக இருந்தாலும்......
நெருங்கி வந்து
விலகிச் செல்கிறேன்......
பேச மனம் இருந்தும்...
பேசிக்கொள்ளாமல்...........
ஒன்று தெரியுமா உனக்கு....?
நீ என்னோடு இல்லாததால்
என்னவோ........!
நீண்ட காலத்தின் பின்.....
சோகங்களும், சந்தோஷங்களும்.....
என் மனதில் மெல்ல மெல்ல....
கனக்கத் தொடங்குகின்றன.......!
என் தோழியே..........!
நீ
எங்கிருந்தாலும்
பேசிக்கொள்வாயா என்னோடு.......?
என் சோகங்களை
உன்னோடு பகிரவேண்டும்........!
Sunday, August 30, 2009
பொறுமையின் உச்சம் பெண்
இந்த அவலப் பெண்ணின் சோக நிலைதனைச் சற்றே செவிமடுங்கள்... எவ்வளவு பொறுமை இவளிடத்தில்... வியந்து பார்க்கிறேன், கற்பனையில்ப் புனைந்து சிந்தித்தும் பார்க்கிறேன்...!!!
குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்டவள் படும்பாடு உலகறிந்ததே.... இங்கேயும் ஒரு அவல நிலை கற்பனையூடே உண்மையும் கலந்து.... பொறுமை காக்கும் பெண்ணவள் கருப்பொருளாய் அமைகிறாள்... வன்செயல், துன்பம், சோதனைகள் இங்கு முக்கிய கதாபாத்திரங்கள், அவள் வாழும் வீடு அரங்கமாய் அமைகிறது....!!!
வெளி உலகைப் பொறுத்தவரை இவள் வீடு அமைதியும், சந்தோஷமும் இரண்டறக் கலந்த சொர்க்க பூமி ஆனால் ஒரு நாள் அவள் இல்லமதில் இருந்து பாருங்கள் அவலப் பெண்ணும் அவள் இரு குழந்தைகளும் "போதை தாசன்" கோரப் பிடிக்கிள் மாட்டிக் கொண்டு அனுபவிக்கும் சொல்லனாத் துயரை....!!!
காட்சி மலர்கிறது.................
குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்டவள் படும்பாடு உலகறிந்ததே.... இங்கேயும் ஒரு அவல நிலை கற்பனையூடே உண்மையும் கலந்து.... பொறுமை காக்கும் பெண்ணவள் கருப்பொருளாய் அமைகிறாள்... வன்செயல், துன்பம், சோதனைகள் இங்கு முக்கிய கதாபாத்திரங்கள், அவள் வாழும் வீடு அரங்கமாய் அமைகிறது....!!!
வெளி உலகைப் பொறுத்தவரை இவள் வீடு அமைதியும், சந்தோஷமும் இரண்டறக் கலந்த சொர்க்க பூமி ஆனால் ஒரு நாள் அவள் இல்லமதில் இருந்து பாருங்கள் அவலப் பெண்ணும் அவள் இரு குழந்தைகளும் "போதை தாசன்" கோரப் பிடிக்கிள் மாட்டிக் கொண்டு அனுபவிக்கும் சொல்லனாத் துயரை....!!!
காட்சி மலர்கிறது.................
ஆரவாரமாய் இருந்த அயலட்டம் மெல்ல அமைதியினை நோக்கிப் பயணிக்கத் தொடங்குகிறது..... அந்தி சாயும் வேளை 6 மணியிருக்கும் அவள் கணவன் வீட்டை விட்டு வெளிச் செல்கிறான்... சென்ற கணவன் திரும்பி வரும்வரை அவன் வரவை எண்ணி நடு
ஆளரவமற்ற வீதி தனில் அவள் கணவனின் சப்பாத்துச் சத்தம் கேட்கிறதா என உற்று செவிமடுத்தும் பார்க்கின்றாள். இருந்தும் வீடு திரும்பும் தன் கணவன் குடித்துவிட்டு கற்பனையான கதைகள் சேர்த்து தன்னில் பிழை கண்டு தன்னை அடித்தும் அயலட்டம் கேட்கும் படி சமூகத்தால் புறம் தள்ளி வைத்த வார்த்தைகளால் ஏசியும் தன்னை நோகடிப்பார் என அவள் நன்கு அறிந்திருந்தாள்.
கணவன் வெளிச் சென்ற வேளையில் வீட்டு வேலை முதல் தாய்க்குரிய வேலை வரை அத்தனையையும் செய்து முடித்து விட்டு களைப்படைந்து காணப்பட்டாள். அதனால் அவள் கண்கள் அவளையறியாமலே தூங்கிக்கொண்டிருந்தன...
நேரம் மெல்ல கழிந்து கொள்கிறது...........................
திடீரென வீதி வழி யாரோ நடந்து வரும் சத்தம் அவள் காதுகளில் ஒலிக்கிறது...... பதறியபடி கட்டிலில் எழுந்து அமர்ந்து கொண்டு கேட்கும் பாதச் சத்தம் தன் கணவனுடையதா என தனக்குள்ளே கேட்டுக்கொள்கிறாள்.... அவள் இதயம் படபடவென வேகமாக அடித்துக் கொண்டிருந்தது.... கவனமாக உற்றுக் கேட்கிறாள்.... சலனம் கண்ட அவள் மனதிலிருந்து ஒரு முடிவு வந்தது... கேட்கும் பாதச் சத்தம் தன் கணவனுடையதில்லை என... மீண்டும் படுத்துக் கொள்கிறாள் இருந்தும் நிம்மதியான தூக்கம் அவள் கண்களை விட்டு வெகு தொலைவிலே.........!!!
நேரமும் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது...........!
முன்னர் கேட்டதை விட பெரிதாய் ஒரு சத்தம் அவள் காதுகளை ஆக்கிரமிக்கிறது ஆனால் தள்ளாடித் தள்ளாடி நடந்து வருபவர்களின் கால்த் தடம் என்பதை உணர்ந்து கொள்கிறாள்.... இது நிச்சயமாகத் தன் கணவன் தான் குடித்து விட்டு வருகிறார் என உறுதியும் செய்கிறாள்.....!!! கணவன் தான் என அறிந்ததுமே பேதையவள் விழிகளிநோரம் கண்ணீர் அவளுக்குத் தெரியாமல்.....!!!
வீடு வந்த அவள் கணவன் கதவை மிகச் சத்தமாகத் தட்டித் திறக்கிறான்..... பீதியடைந்த அவள் தன் மூச்சைக் கட்டுப்படுத்தி மெல்ல சுவாசிக்கிறாள்... இருந்தும் வீட்டு வேலை செய்து கால் வலியுடன் கட்டிலில் அமர்ந்திருந்த அவள் கணவன் தன்னை என்ன செய்யப் போகிறானோ என்ற பயத்தினால் தன்னையறியாமல் நகங்கள் கொண்ட விரல்களினால் அவள் உள்ளங்கையை இறுகப் பற்றிக் கொண்டபடி அமர்ந்திருந்தாள்...... தன் கணவன் வீட்டுக்குள்ளே தள்ளாடிய படி நடந்து போவதைப் பார்க்கிறாள்..... ஆனால் அவன் முதலில் குளியலறைக்குள் நேரே செல்கிறான்.... சென்று அவன் தனியே கத்திச் சிரித்துக் கொண்டிருந்தான்..... சிரித்துச் சிரித்து அவன் உண்டவற்றை வெளியெடுத்துக் கொள்கிறான்... அங்கு எவரும் இருக்கவில்லை... கணவன் சிரிக்கும் சத்தம் கேட்ட அவளோ பயத்தின் எல்லையில் நின்று கொண்டிருந்தாள்....
சற்று நேரம் கழித்து அவன் தட்டுத்தடுமாறி சாப்பாட்டு அறை நோக்கி நடக்கலானான்..... அங்கே தனக்குரிய இராப் போசனத்தை எடுத்து உண்ணத் தொடங்குகிறான்.... இடைவழியில் தண்ணீர்க் குவளையைத் தேடிப் பார்த்து எடுக்க முனைகிறான் அது அவன் கை தவறி நிலமதில்ப் பட்டு உடைந்து கொள்கிறது.... குவளை உடையும் சத்தம் கேட்ட அவள் மேலும் அச்சம் கொண்டு தன் புயங்களுக்குள்த் தன்னைப் புதைத்துக் கொள்கிறாள்.... சிறிது நேரம் அமைதி நிலவிக் கொண்டிருந்தது.... அந்த அமைதியினூடே அவள் கணவன் அடுப்பை மூட்டிக் கொள்கிறான்.... அந்த நெருப்பின் சத்தம் அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது..... அவள் நடக்கப் போகும் அசம்பாவிதங்களை எண்ணி அவளை அறியாமல் நடுங்கிக் கொண்டு துன்பத்தின் இறுதி எல்லையில் நின்று கொண்டிருந்தாள்... ஆனால் அவனோ அடுப்பை நிறுத்தாமல் உரத்த குரலில்ப் பாடிக்கொண்டு அவளை நோக்கிய படி படுக்கையறைக்குள் நுழைகின்றான்....
அறைக்குள் வந்த கணம் இன்னும் சத்தமாக கத்தத் தொடங்கினான்... அவன் கத்திய சத்தம் கேட்டு அச்சத்தினால் அவன் குழந்தை கதறி அழத் தொடங்கியது...குழந்தை அழுவதை கண்ட அவனோ குழந்தையைப் பார்த்து ஏசிக்கொண்டிருந்தான்.... போதையில்க் குழந்தையை ஏதும் செய்து விடுவானோ என்ற அச்சத்தால் அவள் விரைந்தோடி குழந்தைகளை அள்ளி அணைக்க முயற்சிக்கிறாள்.... அவ்வேளை ஒரு குழந்தை கை தவறி நிலத்தில் விழுகின்றது... இருந்தும் அவள் தன் மற்றைய குழந்தையைப் பத்திரமாய் மார்போடு அணைத்துக் கொள்கிறாள்.... இத்தனையும் கண்ட அவள் கணவன் குழந்தைகள் மேல் கோவம் கொண்டு அவர்களைத் தாக்க முனைகின்றான்... அவன் அவளருகில் வருவதை கண்ட கோதை தன் பிள்ளைகள் இருவரையும் கைகளால் அணைத்த படி நின்றாள்... இதனைக் கண்ட அவன் ஆத்திரத்தில் அவளை தாக்கத் தொடங்கினான்.... எங்கே தான் அழுதால் தன் குழந்தைகளும் அழுதுவிடும் என்பதற்காய், அத்தனை அடிகளையும் தன் உதடுகளை இறுகக் கடித்த படி தாங்கிக் கொண்டு நின்றாள்... அப்போது கூட அவள் தனக்குள்ளே கேட்டுக் கொள்கிறாள் தான் என்ன பிழை செய்தேன் என்றவாறு....
அவளைத் தாக்கியதால்த் தடுமாறி கட்டில் மேல் விழுகின்றான் அவன்.... விழுந்தபடியே உரத்துக் கத்திவிட்டு அப்படியே தூங்கிவிட்டான். அவன் தூங்கியபின் ஒரு முறை அவள் அவனை வடிவாகப் பார்க்கிறாள்.... அவள் மனதிற்குள் சிந்திக்கின்றாள்.... எத்தனை துன்பத்தை அவர் எனக்குத் தந்தாலும் அவர் என் கணவர் என்று அவளை அவளே தேற்றிக் கொள்கிறாள்... இருந்தும் அவள் மனதில் ஒரு கேள்வி நன்மை எது... தீமை எது... என்று கூட அறியாத இந்தப் பச்சிளம் குழந்தைகள் மீது ஏன் அவர் இப்படி சீற்றம் கொள்கிறார் என்பதே..... இந்த குழப்பமான நிலையை எண்ணி அவளும் கண்ணீர் வடித்துக் கொள்கிறாள்.... சிறிது நேரம் கழித்து அவள் தன் கணவன் குழியலறையில் எடுத்த உணவுத் துகல்களை துப்பரவு செய்து கொள்கிறாள்....
இத்தனை இம்சைகளையும் பொறுத்து இன்னும் அவள் தன் கணவனுக்காக வாழும் இந்த சிறைவாசத்திற்கு எப்போது தான் விடிவு வருமோ.....!!!
கணவன் வெளிச் சென்ற வேளையில் வீட்டு வேலை முதல் தாய்க்குரிய வேலை வரை அத்தனையையும் செய்து முடித்து விட்டு களைப்படைந்து காணப்பட்டாள். அதனால் அவள் கண்கள் அவளையறியாமலே தூங்கிக்கொண்டிருந்தன...
நேரம் மெல்ல கழிந்து கொள்கிறது...........................
திடீரென வீதி வழி யாரோ நடந்து வரும் சத்தம் அவள் காதுகளில் ஒலிக்கிறது...... பதறியபடி கட்டிலில் எழுந்து அமர்ந்து கொண்டு கேட்கும் பாதச் சத்தம் தன் கணவனுடையதா என தனக்குள்ளே கேட்டுக்கொள்கிறாள்.... அவள் இதயம் படபடவென வேகமாக அடித்துக் கொண்டிருந்தது.... கவனமாக உற்றுக் கேட்கிறாள்.... சலனம் கண்ட அவள் மனதிலிருந்து ஒரு முடிவு வந்தது... கேட்கும் பாதச் சத்தம் தன் கணவனுடையதில்லை என... மீண்டும் படுத்துக் கொள்கிறாள் இருந்தும் நிம்மதியான தூக்கம் அவள் கண்களை விட்டு வெகு தொலைவிலே.........!!!
நேரமும் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது...........!
முன்னர் கேட்டதை விட பெரிதாய் ஒரு சத்தம் அவள் காதுகளை ஆக்கிரமிக்கிறது ஆனால் தள்ளாடித் தள்ளாடி நடந்து வருபவர்களின் கால்த் தடம் என்பதை உணர்ந்து கொள்கிறாள்.... இது நிச்சயமாகத் தன் கணவன் தான் குடித்து விட்டு வருகிறார் என உறுதியும் செய்கிறாள்.....!!! கணவன் தான் என அறிந்ததுமே பேதையவள் விழிகளிநோரம் கண்ணீர் அவளுக்குத் தெரியாமல்.....!!!
வீடு வந்த அவள் கணவன் கதவை மிகச் சத்தமாகத் தட்டித் திறக்கிறான்..... பீதியடைந்த அவள் தன் மூச்சைக் கட்டுப்படுத்தி மெல்ல சுவாசிக்கிறாள்... இருந்தும் வீட்டு வேலை செய்து கால் வலியுடன் கட்டிலில் அமர்ந்திருந்த அவள் கணவன் தன்னை என்ன செய்யப் போகிறானோ என்ற பயத்தினால் தன்னையறியாமல் நகங்கள் கொண்ட விரல்களினால் அவள் உள்ளங்கையை இறுகப் பற்றிக் கொண்டபடி அமர்ந்திருந்தாள்...... தன் கணவன் வீட்டுக்குள்ளே தள்ளாடிய படி நடந்து போவதைப் பார்க்கிறாள்..... ஆனால் அவன் முதலில் குளியலறைக்குள் நேரே செல்கிறான்.... சென்று அவன் தனியே கத்திச் சிரித்துக் கொண்டிருந்தான்..... சிரித்துச் சிரித்து அவன் உண்டவற்றை வெளியெடுத்துக் கொள்கிறான்... அங்கு எவரும் இருக்கவில்லை... கணவன் சிரிக்கும் சத்தம் கேட்ட அவளோ பயத்தின் எல்லையில் நின்று கொண்டிருந்தாள்....
சற்று நேரம் கழித்து அவன் தட்டுத்தடுமாறி சாப்பாட்டு அறை நோக்கி நடக்கலானான்..... அங்கே தனக்குரிய இராப் போசனத்தை எடுத்து உண்ணத் தொடங்குகிறான்.... இடைவழியில் தண்ணீர்க் குவளையைத் தேடிப் பார்த்து எடுக்க முனைகிறான் அது அவன் கை தவறி நிலமதில்ப் பட்டு உடைந்து கொள்கிறது.... குவளை உடையும் சத்தம் கேட்ட அவள் மேலும் அச்சம் கொண்டு தன் புயங்களுக்குள்த் தன்னைப் புதைத்துக் கொள்கிறாள்.... சிறிது நேரம் அமைதி நிலவிக் கொண்டிருந்தது.... அந்த அமைதியினூடே அவள் கணவன் அடுப்பை மூட்டிக் கொள்கிறான்.... அந்த நெருப்பின் சத்தம் அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது..... அவள் நடக்கப் போகும் அசம்பாவிதங்களை எண்ணி அவளை அறியாமல் நடுங்கிக் கொண்டு துன்பத்தின் இறுதி எல்லையில் நின்று கொண்டிருந்தாள்... ஆனால் அவனோ அடுப்பை நிறுத்தாமல் உரத்த குரலில்ப் பாடிக்கொண்டு அவளை நோக்கிய படி படுக்கையறைக்குள் நுழைகின்றான்....
அறைக்குள் வந்த கணம் இன்னும் சத்தமாக கத்தத் தொடங்கினான்... அவன் கத்திய சத்தம் கேட்டு அச்சத்தினால் அவன் குழந்தை கதறி அழத் தொடங்கியது...குழந்தை அழுவதை கண்ட அவனோ குழந்தையைப் பார்த்து ஏசிக்கொண்டிருந்தான்.... போதையில்க் குழந்தையை ஏதும் செய்து விடுவானோ என்ற அச்சத்தால் அவள் விரைந்தோடி குழந்தைகளை அள்ளி அணைக்க முயற்சிக்கிறாள்.... அவ்வேளை ஒரு குழந்தை கை தவறி நிலத்தில் விழுகின்றது... இருந்தும் அவள் தன் மற்றைய குழந்தையைப் பத்திரமாய் மார்போடு அணைத்துக் கொள்கிறாள்.... இத்தனையும் கண்ட அவள் கணவன் குழந்தைகள் மேல் கோவம் கொண்டு அவர்களைத் தாக்க முனைகின்றான்... அவன் அவளருகில் வருவதை கண்ட கோதை தன் பிள்ளைகள் இருவரையும் கைகளால் அணைத்த படி நின்றாள்... இதனைக் கண்ட அவன் ஆத்திரத்தில் அவளை தாக்கத் தொடங்கினான்.... எங்கே தான் அழுதால் தன் குழந்தைகளும் அழுதுவிடும் என்பதற்காய், அத்தனை அடிகளையும் தன் உதடுகளை இறுகக் கடித்த படி தாங்கிக் கொண்டு நின்றாள்... அப்போது கூட அவள் தனக்குள்ளே கேட்டுக் கொள்கிறாள் தான் என்ன பிழை செய்தேன் என்றவாறு....
அவளைத் தாக்கியதால்த் தடுமாறி கட்டில் மேல் விழுகின்றான் அவன்.... விழுந்தபடியே உரத்துக் கத்திவிட்டு அப்படியே தூங்கிவிட்டான். அவன் தூங்கியபின் ஒரு முறை அவள் அவனை வடிவாகப் பார்க்கிறாள்.... அவள் மனதிற்குள் சிந்திக்கின்றாள்.... எத்தனை துன்பத்தை அவர் எனக்குத் தந்தாலும் அவர் என் கணவர் என்று அவளை அவளே தேற்றிக் கொள்கிறாள்... இருந்தும் அவள் மனதில் ஒரு கேள்வி நன்மை எது... தீமை எது... என்று கூட அறியாத இந்தப் பச்சிளம் குழந்தைகள் மீது ஏன் அவர் இப்படி சீற்றம் கொள்கிறார் என்பதே..... இந்த குழப்பமான நிலையை எண்ணி அவளும் கண்ணீர் வடித்துக் கொள்கிறாள்.... சிறிது நேரம் கழித்து அவள் தன் கணவன் குழியலறையில் எடுத்த உணவுத் துகல்களை துப்பரவு செய்து கொள்கிறாள்....
இத்தனை இம்சைகளையும் பொறுத்து இன்னும் அவள் தன் கணவனுக்காக வாழும் இந்த சிறைவாசத்திற்கு எப்போது தான் விடிவு வருமோ.....!!!
பிறேம்...
Friday, August 21, 2009
பேருந்துப் பயணம்
யன்னலோரம் அமர்ந்தபடி
என்
பேருந்துப் பயணமதில்
முன்பு எங்கோ பார்த்த முகம்
இருந்தும்
முழுமையாக அறியாத...
கருமைக் கயல் விழியாள்
என் முன் ஆசனமதில்
அமைதியான சிறு புன்னகையுடன்....!
என் ஒவ்வொரு அசைவுகளையும்
தெரிந்தும் தெரியாதவளாய்
அவளும்...!
அவளின் ஒவ்வொரு அசைவினாலும்
மனம் தடுமாறி தவிப்பவனாய்
நானும்...!
ஒரே வீச்சில் பயணித்த படி...!
சிறு தூர இடைவெளியில்
காற்றோடு மிதந்து வந்த
பூவாசம் வீசும் அவள்
தோகைக் கூந்தல்
என் வதனம் பட்ட கணம்
மயில்த் தோகை வருடல்
எனக்குள் அவள் நினைப்பைத்
தூண்டுவதாய்...!
அப்படியே அவள்
கூந்தல் தனைக் கையிலெடுத்து
அவளிடத்தில் சேர்த்த போது
விழியோரம் சிறு பார்வை
சிறைப்பட்டேன் முழுமையாக...!
அவள் கன்னமதை
அலங்கரிக்கும் கருங் கூந்தல்
காற்றில் நடனமிட
அதை அவள்
காதோரம் சேர்க்கும்
ஒவ்வொரு தருணங்களிலும்
என்னை அவள் பக்கம்
ஈர்ப்பதாய் ஓர் அதிர்வு
மனதுள்ளே...!
என்
எண்ணற்ற கற்பனைகளும்
அழகிய இயற்கைகளும்
அவள் முன் சரண்
புகுந்தாற் போல்
ஓர் ஏக்கம்...!
என் இனிமையான
நெடுதூரப் பயணம்
குறுந்தூரம் கண்டபடி
முடிவுறப் போகுதென்ற
உணர்வோடு
அவளை ரசித்தபடி
சென்றிருக்க...!!!
என் இடம் வந்துவிட்டதாம்...
நடத்துனர் தட்டி சொல்கிறார்
இருந்தும்...
இறங்கிக் கொள்ள மனமின்றி
என் மனதை அங்கேயே விட்டுவிட்டு
தனியே நடக்கலானேன்
அவள் நினைவுகளைச் சுமந்தபடி...!!!
என்
பேருந்துப் பயணமதில்
முன்பு எங்கோ பார்த்த முகம்
இருந்தும்
முழுமையாக அறியாத...
கருமைக் கயல் விழியாள்
என் முன் ஆசனமதில்
அமைதியான சிறு புன்னகையுடன்....!
என் ஒவ்வொரு அசைவுகளையும்
தெரிந்தும் தெரியாதவளாய்
அவளும்...!
அவளின் ஒவ்வொரு அசைவினாலும்
மனம் தடுமாறி தவிப்பவனாய்
நானும்...!
ஒரே வீச்சில் பயணித்த படி...!
சிறு தூர இடைவெளியில்
காற்றோடு மிதந்து வந்த
பூவாசம் வீசும் அவள்
தோகைக் கூந்தல்
என் வதனம் பட்ட கணம்
மயில்த் தோகை வருடல்
எனக்குள் அவள் நினைப்பைத்
தூண்டுவதாய்...!
அப்படியே அவள்
கூந்தல் தனைக் கையிலெடுத்து
அவளிடத்தில் சேர்த்த போது
விழியோரம் சிறு பார்வை
சிறைப்பட்டேன் முழுமையாக...!
அவள் கன்னமதை
அலங்கரிக்கும் கருங் கூந்தல்
காற்றில் நடனமிட
அதை அவள்
காதோரம் சேர்க்கும்
ஒவ்வொரு தருணங்களிலும்
என்னை அவள் பக்கம்
ஈர்ப்பதாய் ஓர் அதிர்வு
மனதுள்ளே...!
என்
எண்ணற்ற கற்பனைகளும்
அழகிய இயற்கைகளும்
அவள் முன் சரண்
புகுந்தாற் போல்
ஓர் ஏக்கம்...!
என் இனிமையான
நெடுதூரப் பயணம்
குறுந்தூரம் கண்டபடி
முடிவுறப் போகுதென்ற
உணர்வோடு
அவளை ரசித்தபடி
சென்றிருக்க...!!!
என் இடம் வந்துவிட்டதாம்...
நடத்துனர் தட்டி சொல்கிறார்
இருந்தும்...
இறங்கிக் கொள்ள மனமின்றி
என் மனதை அங்கேயே விட்டுவிட்டு
தனியே நடக்கலானேன்
அவள் நினைவுகளைச் சுமந்தபடி...!!!
பிறேம்...
பன்றிக் காய்ச்சலைப் போல நாய்க் காய்ச்சலும் வந்து விட்டது
Thursday, August 20, 2009
மண் வாசனை
என் தாய் நிலத்தில்
நான் பெற்ற சந்தோஷங்களை
எண்ணிப்பார்க்கின்றேன்...!! !
ஏக்கத்துடன்....!
அயல் வீட்டில்த் தணல் எடுத்து
எம் வீட்டில் அடுப்பு மூட்டி
மண் பானை, சட்டி கொண்டு
மனம் மகிழச் சோறாக்கி......!
மத்தியான நடு வெயிலில்
அக்கம் பக்கம் பரிமாறி
நாமும் உண்ட காலம் எங்கே....???
வயலுக்குச் சென்ற கணவன்
திரும்பி வரும் வேளைதனில்
அயரை மீன் குழம்பு ஆக்கி
காத்திருந்து காத்திருந்து...!
குதூகலமாய் ஊட்டி
மகிழ்ந்த காலம் எங்கே....???
ஊர் வீட்டுத் திண்ணையில்ப்
பாட்டியுடன் அமர்ந்திருந்து...!
பழங் கதைகள் கேட்டு
ரசித்த காலம் எங்கே...???
கோயில் மணலில் அமர்ந்திருந்து,
கேலிக் கதைகள் பேசிப் பேசி
மணல் வீடு கட்டி நாம்
குடிபுகுந்த காலம் எங்கே...???
ஒற்றைப் பனையடியில்
நொங்கு குடித்துவிட்டு
தோழர்களாய் அமர்ந்து அங்கே,
காவோலை மேடை கட்டி
கரகாட்டம் ஆடி மகிழ்ந்த
காலம் எங்கே...???
வயல் வரம்பு தனில்
இதமான காற்றோடு
என் காதல்க் கதை பேசி
மகிழ்ந்த காலம் எங்கே...???
பட்டப் பகல் வேளை
எட்டுமூலைப் பட்டம் கட்டி,
பணிக்கர் வளவுதனில்....!!!
இராக் கொடி பறக்க விட்ட
காலம் தான் எங்கே...???
நான் தொலைத்த என்
அத்தனை சந்தோஷங்களும்
என்னில் மீள வந்து சேருமா...???
நான் பெற்ற சந்தோஷங்களை
எண்ணிப்பார்க்கின்றேன்...!!
ஏக்கத்துடன்....!
அயல் வீட்டில்த் தணல் எடுத்து
எம் வீட்டில் அடுப்பு மூட்டி
மண் பானை, சட்டி கொண்டு
மனம் மகிழச் சோறாக்கி......!
மத்தியான நடு வெயிலில்
அக்கம் பக்கம் பரிமாறி
நாமும் உண்ட காலம் எங்கே....???
வயலுக்குச் சென்ற கணவன்
திரும்பி வரும் வேளைதனில்
அயரை மீன் குழம்பு ஆக்கி
காத்திருந்து காத்திருந்து...!
குதூகலமாய் ஊட்டி
மகிழ்ந்த காலம் எங்கே....???
ஊர் வீட்டுத் திண்ணையில்ப்
பாட்டியுடன் அமர்ந்திருந்து...!
பழங் கதைகள் கேட்டு
ரசித்த காலம் எங்கே...???
கோயில் மணலில் அமர்ந்திருந்து,
கேலிக் கதைகள் பேசிப் பேசி
மணல் வீடு கட்டி நாம்
குடிபுகுந்த காலம் எங்கே...???
ஒற்றைப் பனையடியில்
நொங்கு குடித்துவிட்டு
தோழர்களாய் அமர்ந்து அங்கே,
காவோலை மேடை கட்டி
கரகாட்டம் ஆடி மகிழ்ந்த
காலம் எங்கே...???
வயல் வரம்பு தனில்
இதமான காற்றோடு
என் காதல்க் கதை பேசி
மகிழ்ந்த காலம் எங்கே...???
பட்டப் பகல் வேளை
எட்டுமூலைப் பட்டம் கட்டி,
பணிக்கர் வளவுதனில்....!!!
இராக் கொடி பறக்க விட்ட
காலம் தான் எங்கே...???
நான் தொலைத்த என்
அத்தனை சந்தோஷங்களும்
என்னில் மீள வந்து சேருமா...???
பிறேம்...
ஆறுமுகத்தாற்ர குசும்பு
அட என்ன தம்பியவ இங்க வெள்ளவத்தேக்க சுத்தித் திரியிறியள், யாழ்ப்பாணம் போகலையே...??? அங்க நல்லூர்த் திருவிழாவும் வேற நடக்குது நீங்க எல்லாம் போகனும் எண்டதுக்காக உங்கட பெரிய மாமா A9 றோட்டையெல்லாம் திறந்திட்டாராம் நீங்க கேள்விப்படலையோ....???
அட போங்கையா நீங்க.... உவங்கட கதையக் கேட்டு Busல யாழ்ப்பாணம் போக வெளிக்கிட்டா அவ்வளவும் தான் நடு றோட்டில நிக்க வேண்டியது தான் பாருங்கோ...!!!
தம்பி ஏன் நீங்க அப்பிடிச் சொல்லுறியள் ஆ....
இஞ்ச பாருங்கோ தம்பியவ... நான் சொல்லுறத கொஞ்சம் கேக்கிறியளே.... நீங்களெல்லாம் இளந்தாரிப் பெடியள் தானே அப்புறமென்ன Busல ஏறி பெடியளோட பெடியளா போய்ட்டு வாறது தானே... விழங்குதே நான் சொல்லுறது....
அது சரி ஐயா...!!!
அப்போ நீங்க ஏன் போகல...
எனக்கு வயசு போச்சுத் தம்பி... பிரயாணம் செய்யிறதெண்டால் செரியாண கஷ்டம்... அதால தான் நான் எங்கையும் போகிறேல... அப்பிடியும் வெளிக்கிட்டாலும் உடம்பு உசும்பாதப்பா... ஒரே அம்மலாயிடும் பொடியள்....
என்னையா நீங்க...
பெரிசுகளோட பெரிசா பகிடியா போய்ட்டு வாறது தானே.... ஆ....
தம்பி உங்களுக்கும் என்னோட தனகாட்டி திருப்தியா இருக்காதே...
சரி தம்பியவ எனக்கு நேரமாச்சு என்ட மனிசிய வேற கோயிலுக்கு கூட்டிக்கொண்டு போகணும்... அப்ப நான் வரட்டே....
பிறகு சந்திப்பம்....!!!
பிறேம்...
நிலவு தேவதை...!!!
என்
சலனம் கண்டமனதிலிருந்த
சோகங்கள் அத்தனையும்
என்னவளிடம்பகிர்ந்து கொள்ள...
என்நிலவுப் பெண்டாட்டிவருகைக்காய்
காத்திருந்த வேளை தனில்
நாண் ஏற்றும் விழியில்
நாணமதை ஏற்றிக்கொண்டு
என்
கண்ணெதிரேவந்து நின்றாய்...
இனிமையாக பேசி
என்
சோகமதை உணர்ந்த
நீ
தலை சாய மடி தந்தாய்...
என்
மனம் மகிழ தலை கோதி
ஆறுதலும் தந்தாய்...
நீ
காட்டிய பாசமதில்
தாய்மையின் சாயலை
ஒரு கணம் உணர வைத்தாய்...
என்
சோகங்களை உன்னிடத்தில்
இறக்கி வைத்தேன்...
அத்தனையும்
நீ
சுமக்கின்றாய் எனக்காக
இனியவளே...
இத்தனை அன்பான காதலி
நீ
என் அருகிருக்க
உன் குட்டிஇதயமதில்
அன்பான காதலனாய்
நான் என்றென்றும்
உன்னோடு துணையிருப்பேன்...!!!
சலனம் கண்டமனதிலிருந்த
சோகங்கள் அத்தனையும்
என்னவளிடம்பகிர்ந்து கொள்ள...
என்நிலவுப் பெண்டாட்டிவருகைக்காய்
காத்திருந்த வேளை தனில்
நாண் ஏற்றும் விழியில்
நாணமதை ஏற்றிக்கொண்டு
என்
கண்ணெதிரேவந்து நின்றாய்...
இனிமையாக பேசி
என்
சோகமதை உணர்ந்த
நீ
தலை சாய மடி தந்தாய்...
என்
மனம் மகிழ தலை கோதி
ஆறுதலும் தந்தாய்...
நீ
காட்டிய பாசமதில்
தாய்மையின் சாயலை
ஒரு கணம் உணர வைத்தாய்...
என்
சோகங்களை உன்னிடத்தில்
இறக்கி வைத்தேன்...
அத்தனையும்
நீ
சுமக்கின்றாய் எனக்காக
இனியவளே...
இத்தனை அன்பான காதலி
நீ
என் அருகிருக்க
உன் குட்டிஇதயமதில்
அன்பான காதலனாய்
நான் என்றென்றும்
உன்னோடு துணையிருப்பேன்...!!!
Subscribe to:
Posts (Atom)