Saturday, September 12, 2009

உனது விழிகளுக்குள் நான்

உன்னைப் பார்த்த நாள் முதலாய்
நான் நானாக இல்லை...!
உனது விழிகளுக்குள்
எனது விம்பம் தோன்றிய போது
என் மனதில்
ஆயிரம்பட்டாம் பூச்சிகள்
சிறகடித்துப் பறந்தன...!

என் மனதில் உன் விம்பம்
சஹானாவாக வீற்றிருந்தது..!
நான் இரவில் தூங்கும் போது
உன் எண்ணம் என்னை
பல பல வண்ணக் கனவுகளோடு
ஆக்கிரமித்துக் கொள்கின்றன...!

என் தூக்கம் கலைந்ததும்
நான் சுனாமியில் அகப்பட்ட
ஓடம் போல எங்கெங்கோ
உன்னை நினைத்து
அலைந்து திரிகின்றேன்...
மீண்டும் எனக்கு
தூக்கம் வரும் வரை....!!!

Sunday, September 6, 2009

உலகின் உண்மையான வில்லன் இனிமேல் தான் வரப்போகிறான். -ரோபோ வடிவத்தில்!-


உலகின் உண்மையான வில்லன் இனிமேல் தான் வரப்போகிறான். ரோபோ வடிவத்தில் ! வெறும் இயந்திரம் எனும் நிலையில் ஆரம்பிக்கப்பட்ட ரோபோக்களின் இன்றைய வளர்ச்சி பிரமிப்பூட்டுகிறது.
இதுவரை வந்ததெல்லாம் வெறும் சாம்பிள் தான் இனிமேல் தான்பா மெயின் பிக்சர் என மிரட்டுகின்றனர் விஞ்ஞானிகள். அதாவது சுயமாகச் சிந்தித்து, முடிவெடுக்கக் கூடிய ரோபோக்கள் தான் அடுத்த இலக்காம்! அப்படி ஒன்று சாத்தியமாகும் காலத்தில் நிகழப் போகும் விபரீதங்கள் தான் திகிலை ஏற்படுத்துகின்றன.

டெர்மினேட்டர் படம் பார்த்திருப்பீர்கள். ஆட்களைத் தேடித் தேடிக் கொல்லும் வில்லன் ரோபோ. அப்படிப்பட்ட வாடகைக் கொலையாளியை உருவாக்கும் காலம் இதோ வெகு அருகில் என அதிர்ச்சியளிக்கிறார் இங்கிலாந்திலுள்ள ஷெப்பீல்ட் பல்கலைக்கழகத்தின் ரோபோட்டிக்ஸ் பேராசிரியர் நோயல் ஷார்க்கி.

ரோபோக்களின் “அறிவு” படிப்படியாய் வளர்ந்து கொண்டே வருகிறது. முதலில் சுவிட்ச் போட்டால் ரோபோக்கள் இயங்கின, பின்னர் கம்ப்யூட்டரின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டன, இப்போதோ மனித மனதிற்கே கட்டுப்படுகின்றன என பரபரப்பு ஏற்றுகிறார் இவர். கூடவே, ரோபோக்களின் வளர்ச்சி ஒவ்வோர் நாட்டிலும் வெகு சுதந்திரமாய் வளர்கிறது. இது ஆபத்தானது. “அணு” வுக்கு இருப்பது போல உலகளாவிய சட்டங்களும் கட்டுப்பாடுகளும் ரோபோ தயாரிப்பிலும் வரவேண்டும் என காரசார அரசியலையும் கலக்கிறார்.

வயர்களும், இரும்புக் கம்பிகளும் கொண்ட லெப்ட் ரைட் போட்டு நடக்கும் “மெஷின் லுக்” ரோபோக்கள் இப்போதெல்லாம் குறைந்துவிட்டது. அச்சு அசலாக மனிதர்களைப் போலவே இருக்கும் ரோபோக்கள் தான் லேட்டஸ்ட் டிரண்ட். ஜப்பானில் சமீபத்தில் கோபியன் எனும் ரோபோவை வெள்ளோட்டம் விட்டார்கள். இது ஏழு விதமான மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்தி வியப்பூட்டியது. அட்ஷோ டகான்ஸி தலைமையில் டோக்கியோவிலுள்ள வசீடா அறிவியல் மற்றும் பொறியியல் கல்வி நிறுவனம் இதை உருவாக்கியிருந்தது.

போர்களில் ரோபோக்களின் பணி இனிமேல் வெகுவாக அதிகரிக்கப் போகிறது. வெடிகுண்டுகளை அழிக்கும் பணியில் இப்போதே பல ரோபோக்கள் ஈடுபட்டுள்ளன. ஆளில்லாத ரோபோ விமானங்களையும் செய்தாகிவிட்டது. இவற்றை ராணுவ தளத்தில் இருந்து கொண்டு செயற்கைக் கோள் மூலமாக இயக்க முடியும். இதன் அடுத்த இலக்கு, தொலைவில் இருந்து கூட இயக்கத் தேவையில்லாத ரோபோக்கள். அதாவது ரோபோக்களே தீர்மானிக்கும், எங்கே குண்டு போடவேண்டும், எப்போது போடவேண்டும் என்பதை ! தேவைப்பட்டால் அதுவே ஒரு மனித வெடிகுண்டாக…, மன்னிக்கவும் ரோபோ வெடிகுண்டாகவும் மாறி வெடிக்கும் !

இப்படி சகட்டு மேனிக்கு ரோபோக்கள் அதிகரிப்பதால் வேலையில்லாத் திண்டாட்டம் 2030ல் பல மடங்கு அதிகரிக்கும் என்கிறார் அமெரிக்காவின் மார்ஷல் பிரைன் எனும் பியூச்சராலஜிஸ்ட். ரோபோவைச் செய்யும் வேலை மட்டும் தான் மனிதனுக்கு. மற்ற வேலைகளெல்லாம் இனிமேல் ரோபோவுக்கு.

ரோபோக்களைக் குறித்து அடைமழை போல வரும் வியப்பும், திகைப்புமான செய்திகளுக்குச் சிகரம் வைக்கிறார் ஹாலந்தில் ரோபோ ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்ற லெவி. அவர் சொல்வது இது தான். 2050ல் மக்கள் ரோபோவுடன் ????? வைத்துக் கொள்வார்கள். அதை யாராலும் தடுக்க முடியாது.

Saturday, September 5, 2009

உன் உயிரில் நான்


கண்கள் என்னை தேடுகின்றபோது
உன் விழிமலர நான் எதிரில் இல்லை !

சந்தோஷத்தை கொண்டாடுகின்றபோது
பகிர்ந்துக்கொள்ள நான் பக்கத்தில் இல்லை !

சோகங்களில் சோர்ந்து போகின்றபோது
ஆறுதலாக தலைகோதிட நான் அருகினில் இல்லை !

தனிமையில் உணர்கின்றபோது
துணையாக நான் உன்னுடன் இல்லை !

உறக்கமில்லா இரவுகளின்போது
மடிசாய்த்து தூங்கவைக்க நான் உன்னுடன் இல்லை !

இசையை கவிதையை ரசிக்கின்றபோது
சுவாசமாக நேசிக்க நான் உன்னுடன் இல்லை !

பார்த்ததை படித்ததை பற்றி பேசவிரும்பும்போது
கருத்து பறிமாற்றத்திற்கு நான் உன்னுடன் இல்லை !

மனதின் ஆர்வம் குறைகின்றபோது
உற்சாகத்திற்கு உயிர்கொடுக்க நான் உன்னுடன் இல்லை !

ஆனால்நீ நினைக்கும்போது மட்டும்
இதயத்தில்.....
உணர்வுகளில்.......
உன் உயிரில் நான் இருப்பேன் !

















அடுத்த தலைமுறை தொழில் நுட்பங்கள்

இயந்திர மனிதன் பற்றிய ஆய்வுகள் எல்லா துறைகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. பிரிட்டனின் Wales சிலுள்ள Aberystwyth பல்கலைகழகத்தின் உயிரியல் ஆய்வாளர் ரோஸ் கிங் மற்றும் அவரது குழுவினர் அறிவியலாளர் இயந்திர மனிதனை அதாவது இயந்திர அறிவியலாளரை உருவாக்கியுள்ளனர்.

Adam என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திர அறியலாளர் தானாகவே பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் முறையில் செயற்கை மதிநுட்பத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்களை சீன வானொலி மூலம் நேயர்கள் ஏற்கென
வே கேட்டிருக்கிறீர்கள். தற்போதைய புதிய வரவு ஹெலிகாப்டர் அதாவது உலங்கு வானூர்தி இயந்திர மனிதன்.அறிவியலாளர்கள் இதனை ஆய்வுசெய்து தற்சார்பாக வடிவமைத்துள்ளனர். தொலைவிலிருந்து இயக்கக்கூடிய தொலைக்கட்டுபாட்டு கருவிகள் இன்றி தானாகவே இயங்குகின்ற அளவில் இந்த உலங்கு வானூர்தி இயந்திர மனிதன் தயாரிக்கப்பட்டுள்ளது தான் இதன் சிறப்பு.

அறிவியல் கழகத்தின் கீழ் இயங்கிவரும் Shenyang தன்னியக்க நிறுவனம், இந்த உலங்கு வானூர்தி இயந்திர மனிதனை இரண்டு மதிரிகளில் உருவாக்க நான்கு ஆண்டுகள் ஆய்வுசெய்து வடிவமைத்துள்ளது. அதில் பெரிய மாதிரி மூன்று மீட்டர் நீளம் உடையதாக ஏறக்குறைய சிறிய சீருந்து போன்று உள்
ளது. 120 கிலோ எடையுடைய இது, 40 கிலோ எடையை ஏற்றிச் செல்லக்கூடியது. ஒரு மணிநேரத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் நான்கு மணிநேரம் தொடர்ந்து பறக்கக்கூடியது. ஆனால் சிறிய மாதிரியோ 40 கிலோ எடையுடையதாக 15 கிலோ எடையை சுமந்து செல்லக்கூடியது. இதனுடைய அதிகபட்ச வேகம் ஒரு மணிநேரத்தில் 70 கிலோமீட்டர். நிழற்ப்பட கருவிகள் பொருத்தபட்டு
வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உலங்கு வானூர்தி இயந்திர மனிதன் வானில் மிதந்து பறந்து
கொண்டே பறவையின் பார்வையில் பொருட்கள் தெரிவது போன்ற பாணி
யில் மேலிருந்து நிழற்ப்படங்கள் எடுக்கக்கூடியது. மேலும், இலக்குகளை தானாகவே ஆராய்ந்து தேடி படமெடுக்கும் வசதியும் இதிலுண்டு.
பொதுவாக, காற்று ஒரு மணிநேரத்திற்கு 11 கிலோமீட்டர் திசைவேகத்திற்கு குறைவாக
வீசும்போது வானில் பறப்பதற்கான சோதனை ஆய்வுகள் நடத்தப்படுவதுண்டு. ஒரு பொருள் காற்றில் நகரும் திசையையும் வேகத்தையும் அளவிடும் அலகு தான் திசைவேகம் எனப்படுகிறது. இத்தகைய ஆய்வுக்கு உலங்கு வானூர்தி இயந்திர மனிதன் உதவும் என்று இந்த நிறுவனத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெட்ரோலால் இயக்கப்படும் இந்த உலங்கு வானூர்தி இயந்திர மனிதன், ஏழு இலட்சம் முதல் 20 இலட்சம் யுவான் (அதாவது ஒரு இலட்சத்து ஈராயிரம் முதல் இரண்டு இலட்சத்து தொன்நுற்று ஒன்றாயிரத்து தொள்ளாயிரத்து எழுபது அமெரிக்க டாலர்) வரை விற்கப்படும் என்று சீனாவின் லியோனிங் மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள நிறுவனத்தின் ஆய்வாளர் Wu Zhenwei தெரிவித்துள்ளார்.

இந்த உலங்குவானூர்தி இயந்திர மனிதனை சந்தைப்படுத்துவதற்கான எந்த திட்மும் இதுவரையில்லை. அதிகளவிலான உற்பத்தியை உருவாக்க, கூட்டு குழும நிறுவனங்கள் இந்நிறுவனத்தோடு இணைந்து செயல்படாததால், 20 முதல் 30 தொகுதிகள் என சிறிய அளவிலேயே இதன் உற்பத்தி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த உலங்கு வானூர்தி இயந்திர மனிதன் ஆய்வுத் திட்டம் சீன நடுவண் அரசு நிதியின் ஊக்குவிப்போடு, 2006 ஆண்டி
ல் சீன தேசிய முக்கிய திட்டப்பணிகளில் ஒன்றாக பட்டியலிடப்பட்டது. தகவல்களை சேகரிப்பது, நிலநடுக்கம் நடந்த மற்றும் நச்சுவாயு கசியும் மோசமான சூழ்நிலையுள்ள இடங்களுக்கு பொருட்களை ஏற்றிச்செல்லும் நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதே, தேசிய
முக்கிய ஆய்வு திட்டப் பணிகளில் ஒன்றாக இது சேர்க்கப்பட்டதற்கு காரணமாகும். வேதியல் மருந்துகளை துவவும், வீசவும் உலங்கு வானூர்தி இயந்திர மனிதன் பயன்படுத்தப்படலாம்.

Thursday, September 3, 2009

எங்கே என் தோழி

நட்பெனும் வானமதில்
சிறகடித்துப் பறந்த - எம்
நட்பு இன்று சிறகொடிந்து
போனதன் காரணம் தான் என்ன......?

பள்ளிப் பருவமதில்
கதைத்துச் சிரிக்க ஒரு நட்பு
கல்லூரி வாழ்க்கையதில்
சுக, துக்கங்களைப் பகிர்ந்துகொள்ள
என் இன்றைய நட்பு.......!

நல்ல நட்பை யாசித்த
என் வாழ்க்கையில்.......
வசந்தத்தை எனக்குக்
காட்டியவள் என் தோழி.......!

அன்பில்த் தாயாக.......
சரிவுகளில் என் உடன்பிறப்பாக......
சோகங்களில் தோள் கொடுக்கும்
என் தோழியாக......
என்னோடிருந்த என் நண்பி....
இன்று எங்கே சென்றுவிட்டாய்.....?
என்னதான் ஆகிவிட்டது உனக்கு.....?

நேற்றுவரை........
நட்பெனும் தரு தனிலே
தோழர்களாய் மகிழ்ந்த நாம்....
கை தட்டினால் கலைந்து செல்லும்
காக்கைகளைப் போல் இன்று
சிதறியேபோனதன் காரணம் தான் என்ன....?

இன்றும் கூட......
நீ மௌனமாக இருந்தாலும்......
நெருங்கி வந்து
விலகிச் செல்கிறேன்......
பேச மனம் இருந்தும்...
பேசிக்கொள்ளாமல்...........!

ஒன்று தெரியுமா உனக்கு....?
நீ என்னோடு இல்லாததால்
என்னவோ........!
நீண்ட காலத்தின் பின்.....
சோகங்களும், சந்தோஷங்களும்.....
என் மனதில் மெல்ல மெல்ல....
கனக்கத் தொடங்குகின்றன.......!

என் தோழியே..........!
நீ
எங்கிருந்தாலும்
பேசிக்கொள்வாயா என்னோடு.......?
என் சோகங்களை
உன்னோடு பகிரவேண்டும்........!


பிறேம்...