Sunday, April 4, 2010

என் யாழ் மண்...!!!

வாழ்ந்து கொஞ்சக் காலம் என்றாலும்
நெஞ்சில் வாழும்
புனித தேசம் தான்...
என் யாழ் தேசம் தான்........

அழகிய இழகிய நெஞ்சங்கள்......
இந்து, கிறிஸ்தவமும் உண்டு தான்..........

நகரத்தில் நல்லூர் எனும்
கிராமத்தில் மக்கள்
நளினம் நிறைந்த தேசம் தான்........

நகரத்து சினிமா தமிழை விட மோசம்......
கிராமத்து கலையெல்லாம் அருமை தான்.....

பல்கலைக் கழகங்கள் பெயருக்கேற்ப
பல்கலைக் கோயில்கள் தான்.....
பெருமனம் கொண்ட பேராசிரியர்கள்
யாழ் பெற்ற பெரும் பேறு தான்.....

தேசத்தின் ஜனாதிபதிக்கு மாளிகை......
அவர்
தேசியமும் வியப்புத்தான்........!
ஆனால்
அங்கும் கொலைகள், கொள்ளைகள்......
எங்கேயும் அவலம் தான்..........

அரசியல் புரட்சி அலைகள் எங்கேயும்
ஆழமதாய் கேட்கும்.........
சில
மாவட்டங்கள் சுதந்திர நாடாய்(...)
தனித்திடப் போராடும்............!
என்னதான் இருந்தாலும்
இங்கும்
மயக்கம் மேலையில் தான்...........

Hi...!
உங்கள் தேசத்திலும்
பெருங்கோயில்கள் உண்டா....?
என் நல்லூர்
தேசத்தை வியப்பதுவும்
இதிலே தான்.......!

பஞ்சகுடியேற்றத்தின் பிடிகளுக்குள்
நன்கு நசுக்குகின்றார்கள்.........
நம்மைப் போலவே
புறத்தியர்களும் கூலிகளய்
நாடு நாடாய்
அலைந்து திரிகிறார்கள்......

அன்னியர் பிடியினுள்
அகப்பட்டுக் கொண்டாலும்
நலமாக வாழத்தான்
நல்லூரானை நினைப்பார்கள்........

நசுக்கப்பட்டு இருந்தாலும்
நமது தமிழை நினைப்பார்கள்.......
சிலர்
நம்மை நல்லூரான் என்று...
நகைத்துமே
தம்மை மறக்கிறார்கள்......!

இந்த நிலைமை
எரிச்சலாய் இருந்தாலும்
இனிய மனிதர்கள் தான்..........
என்றும்
சந்தோஷமாய் சிரித்து உழைப்பதில்..........
சந்தர்ப்பவாதிகள் தான்.........

மதங்களின் கொள்கைகளை
மனதினில் கொண்டு.............
மகிழ்ச்சியாய் வாழ்வதில்
இவர்களுக்கு ஈடு எவருமில்லை...........

வாழ்ந்து கொஞ்சக் காலம்
என்றாலும்
வாழும் தேசம் தான்.......
என்
நல்லூர் தேசம் தான்..............!

Saturday, April 3, 2010

மண் வாசனை...!!!
















என் தாய் நிலத்தில்
நான் பெற்ற சந்தோஷங்களை
எண்ணிப்பார்க்கின்றேன்...!!!
ஏக்கத்துடன்....!

அயல் வீட்டில்த் தணல் எடுத்து
எம் வீட்டில் அடுப்பு மூட்டி
மண் பானை, சட்டி கொண்டு
மனம் மகிழச் சோறாக்கி......!
மத்தியான நடு வெயிலில்
அக்கம் பக்கம் பரிமாறி
நாமும் உண்ட காலம் எங்கே....???

வயலுக்குச் சென்ற கணவன்
திரும்பி வரும் வேளைதனில்
அயரை மீன் குழம்பு ஆக்கி
காத்திருந்து காத்திருந்து...!
குதூகலமாய் ஊட்டி
மகிழ்ந்த காலம் எங்கே....???

ஊர் வீட்டுத் திண்ணையில்ப்
பாட்டியுடன் அமர்ந்திருந்து...!
பழங் கதைகள் கேட்டு
ரசித்த காலம் எங்கே...???

கோயில் மணலில் அமர்ந்திருந்து,
கேலிக் கதைகள் பேசிப் பேசி
மணல் வீடு கட்டி நாம்
குடிபுகுந்த காலம் எங்கே...???

ஒற்றைப் பனையடியில்
நொங்கு குடித்துவிட்டு
தோழர்களாய் அமர்ந்து அங்கே,
காவோலை மேடை கட்டி
கரகாட்டம் ஆடி மகிழ்ந்த
காலம் எங்கே...???

வயல் வரம்பு தனில்
இதமான காற்றோடு
என் காதல்க் கதை பேசி
மகிழ்ந்த காலம் எங்கே...???

பட்டப் பகல் வேளை
எட்டுமூலைப் பட்டம் கட்டி,
பணிக்கர் வளவுதனில்....!!!
இராக் கொடி பறக்க விட்ட
காலம் தான் எங்கே...???

நான் தொலைத்த என்
அத்தனை சந்தோஷங்களும்
என்னில் மீள வந்து சேருமா...????

எங்கே என் தோழி...!!!

நட்பெனும் வானமதில்
சிறகடித்துப் பறந்த - எம்
நட்பு இன்று சிறகொடிந்து
போனதன் காரணம் தான் என்ன......?

பள்ளிப் பருவமதில்
கதைத்துச் சிரிக்க ஒரு நட்பு
கல்லூரி வாழ்க்கையதில்
சுக, துக்கங்களைப் பகிர்ந்துகொள்ள
என் இன்றைய நட்பு.......!

நல்ல நட்பை யாசித்த
என் வாழ்க்கையில்.......
வசந்தத்தை எனக்குக்
காட்டியவள் என் தோழி.......!

அன்பில்த் தாயாக.......
சரிவுகளில் என் உடன்பிறப்பாக......
சோகங்களில் தோள் கொடுக்கும்
என் தோழியாக......
என்னோடிருந்த என் நண்பி....
இன்று எங்கே சென்றுவிட்டாய்.....?
என்னதான் ஆகிவிட்டது உனக்கு.....?

நேற்றுவரை........
நட்பெனும் தரு தனிலே
தோழர்களாய் மகிழ்ந்த நாம்....
கை தட்டினால் கலைந்து செல்லும்
காக்கைகளைப் போல் இன்று
சிதறியேபோனதன் காரணம் தான் என்ன....?

இன்றும் கூட......
நீ மௌனமாக இருந்தாலும்......
நெருங்கி வந்து
விலகிச் செல்கிறேன்......
பேச மனம் இருந்தும்...
பேசிக்கொள்ளாமல்...........!

ஒன்று தெரியுமா உனக்கு....?
நீ என்னோடு இல்லாததால்
என்னவோ........!
நீண்ட காலத்தின் பின்.....
சோகங்களும், சந்தோஷங்களும்.....
என் மனதில் மெல்ல மெல்ல....
கனக்கத் தொடங்குகின்றன.......!

என் தோழியே..........!
நீ
எங்கிருந்தாலும்
பேசிக்கொள்வாயா என்னோடு.......?
என் சோகங்களை
உன்னோடு பகிரவேண்டும்........!

Friday, April 2, 2010

அன்பு நண்பனே கிருஷான்...!!!

அன்பு நண்பனே கிருஷான்...!!!
கல்லூரிக் காலமதில்
சொல்லிலடங்கா சந்தோஷங்களைப்
பகிர்ந்த நாம்...
பள்ளி கடந்தும் தொடர்ந்திருக்க
பாதி வழியில் எனை விட்டுச்
செல்ல எப்படி மனசு வந்தது
உனக்கு...!!!

கல்லூரித் தடகளமதில்
உனக்காகக் கரகோஷம்
செய்த பவிலியன் தனை
கண்ணீரில் பரிதவிக்க விட்டு
சென்றுவிட்டாயே நண்பா...!!!

சொல்லுக்கு சொல்
மச்சான் சொல்லிக்
கதைக்கும் உன்
அழகிய பேச்சை
நான் இனி
எப்போது கேட்பேன் நண்பா...???

அன்பு நெஞ்சம் கொண்ட உனை
அழிக்கும் அளவுக்கு
ஆழிக்கு என்னடா கோபம்
உன்மேல்....???

நீ இல்லா
இவ்வுலகில்
உன் நினைவுகள் மட்டும்
நிமிடம் தோறும்
கனத்துக் கொண்டே
இருக்கிறது தோழனே...!!!

என்
அன்பு நண்பனே கிருஷான்...!!!
உன்னோடு
நான்
பகிர்ந்து மகிழ்ந்த
அத்தனை சந்தோஷங்களும்
என்னுள்ளே
என்றென்றும் நிரையோடிக்
கொண்டே இருக்கும்...!!!

நண்பா
என்
இதயத்தை உடைத்து
மனதைப் பறித்து
உன் நினைவுகளை
என்னுள் விதைத்து
சென்றவனே...
உனக்காக
என்
இறுதிக் கண்ணீர்த் துளியைக்
காணிக்கையாக்குகிறேன்....!!!

நேசமுடன்....
பிறேம்...

நிலவு தேவதை...!!!

என்
சலனம் கண்ட
மனதிலிருந்த
சோகங்கள் அத்தனையும்
என்னவளிடம்
பகிர்ந்து கொள்ள...
என்
நிலவுப் பெண்டாட்டி
வருகைக்காய்
காத்திருந்த வேளை தனில்
நாண் ஏற்றும் விழியில்
நாணமதை ஏற்றிக்கொண்டு
என்
கண்ணெதிரே
வந்து நின்றாய்...

இனிமையாக பேசி
என்
சோகமதை உணர்ந்த
நீ
தலை சாய மடி தந்தாய்...
என்
மனம் மகிழ
தலை கோதி ஆறுதலும் தந்தாய்...

நீ
காட்டிய பாசமதில்
தாய்மையின் சாயலை
ஒரு கணம் உணர வைத்தாய்...

என்
சோகங்களை
உன்னிடத்தில்
இறக்கி வைத்தேன்...
அத்தனையும்
நீ
சுமக்கின்றாய் எனக்காக
இனியவளே...

இத்தனை
அன்பான காதலி
நீ
என் அருகிருக்க
உன் குட்டி
இதயமதில்
அன்பான காதலனாய்
நான் என்றென்றும்
உன்னோடு துணையிருப்பேன்...!!!

நேசமுடன்.......
பிறேம்...