Friday, August 13, 2010

யாழ்ப்பாண மினிபஸ்சிலையும் மனிசன் ஏறுவானா....???

வணக்கமுங்கோ....!!!
ஆனப்பந்தி, அரசடி, நல்லூர், முத்திரச்சந்தி, கட்டப்பிரா, இருபால, கோப்ப, அச்சுவேலி, நெல்லியடி, பருத்துறை, பருத்துறை.....
ஆனப்பந்தி, அரசடி, நல்லூர், முத்திரச்சந்தி, கட்டப்பிரா, இருபால, கோப்ப, அச்சுவேலி, நெல்லியடி, பருத்துறை, பருத்துறை.....!

வாங்க வாங்க... அம்மா எவடம் போகணும். வாங்கோ ஏறுங்கோ. அண்ணே அந்த வாசல்ல நிக்கிற அண்ணை கொஞ்சம் தள்ளி இடம் விடுங்கோ அம்மா உள்ள போகட்டும். தயவு செய்து வாசல்ல நிக்காதீங்க அண்ணே. சொன்னா கேளுங்கோவன்...!!!
இதவிட எங்கண்ணே உள்ள போறது? புட்போட்டில நிண்டுகிட்டே கொண்டைக்ரரோட சண்ட.
இந்தக் கட்டத்தில தான் என்ர கதையக் கேளுங்க...
அதே பஸ்ல தான் நானும் போக வேண்டிய கட்டாயம் சோ கொஞ்ச நேரம் பஸ்சுக்குப் பக்கத்திலேயே நிண்டன் உந்த திருக் கூத்துக்கள பாத்துக்கிட்டு... ஏன்னா நான் நல்லூர்ல இறங்கணும் அதால என்ன கடசியா ஏறச் சொன்னார் அந்த நல்ல மனிதர். நானும் பாக்கிறன் பாக்கிறன் உர(B)பாக்கில உமிய அடையிற மாத்திரி அந்த டம்மாத் துண்டு கதவுக்கால வாறாக்கள கூப்பிட்டு கூப்பிட்டு அடைஞ்சுக்கிட்டு இருந்தார் அந்த நடத்துனர்.

இப்போ பஸ் வெளிக்கிட தொடங்கிச்சு கொண்டைக்ரர் என்னட்ட சொல்லுறார் அப்பன் ஏறு, உள்ள கால வை, தலைய உள்ள எடு எண்டு தொண தொணத்துக்கிட்டே... ஒரு கட்டத்துக்கு அப்புறம் முடியல. சோ ஒரு கால வெளில தொங்கப் போட்டுக்கிட்டு கதவ இறுக்கமா பிடிச்ச படி நான் நிக்கிறன் ஆனா பஸ் வேகமா போறதுக்கான எந்த அறிகுறியும் இல்ல. இறங்கி நடந்து போயிடலாமோ எண்டு கூட நினைச்சன். அப்பிடி ஒரு இம்சை.

ஏதோ ஏறிற்ரம் இனி என்ன வீடு போய் சேருவம் எண்டு வௌவால் மாதிரி தொங்கிக்கிட்டே வந்தன் வீடு வரைக்கும். என்ர பஸ் ஹொல்ட்ல இறங்கினதுக்கு பிறகு தான் யோசிச்சன் எனி என்ர சீவியத்தில உந்த யாழ்ப்பாண மினி பஸ்சில ஏறவே கூடாதெண்டு... என்னமா படுத்துறானுகள்.

இத விடுங்கப்பா போற வழில நடக்கிற சில்மிசங்கள் அத விடக் கொடும. ஏன்னா எந்த நேரமும் கம்பஸ் அக்காமார், பள்ளிக்கூட பிள்ளையள் எண்டு அடிக்கடி ஏறிக் கொள்ளுவாங்க. அப்பேக்கில நம்ம கொண்டைக்ரர் மார் என்ன செய்வினம் தெரியுமோ (கொஞ்சப் பேர் தான்) அவங்களுக்கு முதுகு தடவி விடுவினும். இதவிட வேற வேற சேட்டைகளும் நடந்திருக்கிறதா அறிஞ்சன். நானா பாக்காததால இங்க சொல்லிக்க விரும்பல.

இதுக்கெல்லாம் என்ன காரணம் மினிபஸ்காரங்களுக்குள்ள இருக்கிறா போட்டியா இல்ல காசா...? அவங்கட லாபத்துக்கும் தொழிலுக்கும் நாங்கதானா கிடச்சம். நாங்க என்ன ஆட்டு மந்தையளா அடசி ஏத்திக் கொண்டு போறதுக்கு...?
ஆனா வேற வழி இல்லாம திரும்பவும் அவங்ககிட்டையே போக வேண்டி இருக்கு. இத விட அரசாங்கம் ஓடுற இ.போ.ச கொஞ்சம் பறவால்ல (இ.போ.ச) ட விளக்கம் தெரியுமோ... ( இதில போனா சங்கு)

நான் அனுபவப்பட்ட என்னொரு சந்தர்ப்பம்...
ஏதோ ஒரு கோயில் திருவிழா மூட்டம் அடிக்கடி மினிபஸ் விட்டாங்கள். சன்னதி கோயில் திருவிழாவா இருக்கணும். ஒவ்வொரு ஹோல்ட்லையும் தங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேர ஏத்திக்கிட்டு போய்க்கிட்டே இருந்தானுகள். ஒரு கட்டத்தில யாரையும் ஏத்த இடமில்லை எண்ட நிலை வந்தபோ எதப்பற்றியுமே யோசிக்காம பஸ்ஸின்ர மேல் கரியர்ல என்னைய மாதிரி பெடியங்கள ஏத்திவிட்டாங்கள். சோ மேலுக்கும் (f)புள் கீளுக்கும்
(f)புள். ஆனா உள்ளுக்க இருந்த சனங்கள் உம்மையாவே செரியான பாவங்கள். உள்ள இருந்து நசிஞ்சு வெந்திருக்குங்கள்.

இந்த நிலையிலும் அவங்க குறிக்கோள் காசாத்தான் இருந்திச்சே தவிர எங்கட சனத்துக்கான போக்குவரத்துச் சேவையா இருக்கல. இந்த மாதிரியான போட்டியால எத்தினையோ தரம் பஸ் அடிபட்டிருக்குது, எத்தினையோ உயிர் போயிருக்கு. இதுக்கெல்லாம் முகம் குடுத்தும் திரும்பவும் இதையே தான் இண்டை வரைக்கும் செய்யிறாங்கள். இனியும் செய்ய போறாங்க...

கடசியா போன மாசம் ஒரு பஸ் கொண்டைக்ரரோட சண்ட பிடிச்ச கதைய கேளுங்க... முதல் சொன்ன மாதிரியே புட்போட்டில தான் நான் நிக்கிறன் ஒரு படி மேல போற அளவுக்கு அங்க இடமே இல்ல... இதில அவர் என்னட்ட சொல்லுறார் தம்பி றோட்டில பொலிஸ் நிக்கிது மேலுக்கு ஏறு எண்டு... அப்ப நான் சொல்லுறன் அண்ணே இடமில்ல அண்ணே மேலுக்கு போறதுக்கு. அதெல்லாம் போகலாம் நீ ஏறு எண்டார். அப்ப எனக்கு வந்திச்சே பாரு கோபம். நான் அவன் கிட்ட கேட்டன் எங்க முதல்ல நீ அந்த இடத்தில ஏறி நிண்டு காட்டு அப்புறமா நான் நிக்கிறன். அதுக்கப்புறமா எதுவுமே கதைக்கல அந்த நல்ல மனிதர்.

மூஞ்சுறு தான் போக வழியக்காணம் விளக்குமாத்தையும் சேத்துக் காட்டிச்சாம் எண்ட மாத்திரி இருந்திச்சு அந்தாள்ட கத...

இனிமேலும் யாழ்ப்பாணம் போனா 200 என்ன 2000 குடுத்து ஓட்டோலையோ இல்ல ஒன்னுமே இல்லாம நடந்து போவனேயொளிய உந்த மினிபஸ்சில மட்டும் ஏறவே மாட்டன்.
இது ஒண்ணும் சிரிக்கிற விசயமில்ல சிந்திக்கிற விசயம்.

யார் மனசையும் புண்படுத்திறதுக்காக சொல்லல இது நான் கண்ட அனுபவம், நீங்க கூட என்ன விட அதிகமா அனுபவப்பட்டிருப்பியள். இன்னமும் யாழ்ப்பாணத்தில இருகிற உங்களுக்கு கனக்க தெரிஞ்சிருக்கும்,,,, இப்ப சொல்லுங்க நான் சொன்னதில ஏதும் பிழையிருக்குதோ...?

Thursday, August 5, 2010

என்னே ஒரு ஈர்ப்பு அவள் கண்களில்...!!!

வழக்கம் போல் புலர்கிறது காலை
வழக்கத்துக்கு மாறாய்
எனது செயற்பாடுகள்
எல்லாமே வேகமாய் நடப்பனவாய்
ஒரு புரிதல்...!

பாயைச் சுருட்டிக் கொண்டு
கட்டில் பக்கம் ஓடுகிறேன்...
சுவரோரம் அவற்றை சாய்த்துவிட்டு
அருகே தொங்கும் நாட்காட்டியில்
தின பலன் பார்ப்பதற்காய்...
திகதி கிழிக்கிறேன்...!
இடபம் - புதிய சந்திப்பு
பார்த்த கணத்தில் இருந்து
மனதில் அன்று மட்டும் ஏதோ
கேள்விகள்...!

அந்தரப்பட்டு அவசரப்பட்டு
காலைச் சாப்பாட்டை மறந்து
புறப்பட தயாராகிக் கொண்டிருக்கையில்
அம்மா அழைக்கிறார்
தம்பி ஒருவாயாவது சாப்பிட்டுப் போயன்...
மறுப்புக் குரல் குடுத்து
வேகமாய் வாசல் கடக்கிறேன்...!

என்னவாய் இருக்கும்..?
யாராய் இருக்கும்..?
அவள் எப்படி இருப்பாள்...?
வினாக்கள் மட்டுமே என்னுள்
விடைகள் ஏதுமில்லை...
இப்படியே நுழைகிறேன்
ஏதோ ஒரு Plazzaக்குள்...
என் தேவையை ஒவ்வொன்றாய்
நிவர்த்தி செய்து கொண்டுவருகிறேன்
இருந்தும்
புதிய சந்திப்புக்களுக்கான
தடயங்கள் ஏதும் இல்லை...

ஒரு கட்டத்தில்
மனசு கேட்கிறது என்னிடத்தே
”ஏன் இத்தனை ஆர்ப்பரிப்பு...?
நீ யாரையாவது சந்திக்க நேர்ந்தால்
அவர்கள் ஏன் ஒரு ஆணாக இருக்கக் கூடாது...?
இல்லை
வயது வந்தவராக இருக்கக் கூடாது...?”
மனசின் கேள்வி நிஜாயமானதாய்
எனக்குப்பட்டது...!
ஒரு கணம் என் தலையை நானே தட்டிக் கொண்டு
இத்தனை நேரமும் என் எண்ண ஓட்டத்தில்
ஒரு பெண்ணின் சந்திப்பாய் எண்ணியிருக்கிறேனே... சே...!

அவ்விடம் விட்டு நகர
வாசல் நோக்குகிறேன்
எதிரே ஒரு தேவதை...
என்னுள் எல்லாமே ஸ்தம்பித்தாயிற்று
அவள் முன் ஒரு சிலை என நின்றேன்
சில வினாடிகள்...!
என்னே ஒரு ஈர்ப்பு அவள் கண்களில்...!

Heyyy....!
Helloooov...!
Excuse meee...!
அவள் என்னிடத்தே ஏதோ சொல்லிக் கொள்கிறாள்
நானோ அவள் கண்கள் வழி உள்நுழைந்து
அவள் மனசில் எனக்காய் இடம் தேடிக் கொண்டிருக்கிறேன்...!
இது தான் கண்டதும் காதலா... ம்ம்
கண்களை குணுக்கி
உதடுகளைச் சுழித்தபடி விலகிச் செல்கிறாள்
அவள்...

என்னுள்
மீண்டு வந்தேன் நான்
ஆனால்
என் முன் அவள் இல்லை...
தூரம் விலகிச் சென்று கொண்டிருக்கிறாள்
சற்றே துரத்துகிறேன்...
Excuse me...! Excuse me...!
மெல்லத் திரும்புகிறாள்...
அவள் விழி விழிம்பில் சிறைப்பட்டுக் கொண்டேன்
நான்...!

மெல்ல வாய் திறக்கிறேன்...
you... you... you are looking very cute...!
என்னை அறியாமல் சொல்லிவிட்டேன்...
அவளோ சிறிதாய் புன்னகைத்து
Thanks... என்று ஒரு வார்த்தையில்
எல்லாத்தையும் முடித்துவிட்டு
அவள்பாட்டுக்கு சென்றுவிட்டாள்...!

இது தான் அந்த சந்திப்பா...?
இருந்தும்
அவசரப்பட்டு விட்டோமோ
என எண்ணி கைகளால்
என் தலையைக் குழப்பியபடி
கண்களுக்குள் பதிந்திட்ட
அவள் நினைவுகளோடு
வெளியில் விரைகிறேன் நான்...!!!




Tuesday, August 3, 2010

நல்லூர் கந்தனுக்கு அரோகரா...!!!

கந்தனுக்கு அரோகரா.... முருகனுக்கு அரோகரா... முத்துக் குமரனுக்கு அரோகரா.... வடிவேலனுக்கு அரோகரா... முருகா... முருகா... முருகா... முருகா...!!!

ஏய்... ஏய்... கொஞ்சம் பொறுங்கப்பா இத வாசிச்சிட்டு இப்பவே வீட்டுக்க உறுண்டிடாதீங்கப்பா... பொறுமை... பொறுமை...! நாமெல்லாம் ஒண்ணா விடியக்காலம நல்லூர்ல போய் பிரதட்ட அடிக்கிறதுக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு அது வரைக்கும் பொறுத்துக்குங்கப்பா...!

இப்ப விசயம் என்னண்டா இந்த முற நல்லூர் திருவிழா ஒரு களைகட்டும் அதில எந்த சந்தேகமும் இல்ல ஆனா என்ன நல்லூர் தொண்டர் படை தான் ஏதோ புதுசா சட்டம் போட்டிருக்கினம் போல. அது வேற ஒண்ணுமில்லிங்கோ கோயிலுக்குள்ள போறப்போ ஆம்பிளைங்க வேட்டி சால்வையோட மட்டும் தான் போகேலுமாம் அதே மாதிரி பொம்பளைங்க சேலை, முழுப்பாவாடை சட்டை அதோட பாவாடை தாவணியோட தான் போகலாமாம்.

இதுகூட நல்ல ஐடியா தான். இல்ல சீரியஸ்சா தான் சொல்லுறன் A9 திறந்து பட்டி அவிட்டு விட்டதுக்குப் பிறகு யாழ்ப்பாணம் றொம்ப மாறிட்டு. யாழ் மண்ணுக்கே உரிய பாரம்பரியங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டு தான் போகுது. இந்த காலகட்டத்தில நல்லூர் கோயில் நிர்வாகம் இப்பிடியான அறிவித்தல குடுத்தது உண்மையில ஒரு நல்ல விசயம் எண்டு தான் நான் சொல்லுவன். ஏன்னா சமயப் பாரம்பரியங்களையாவது கட்டிக்காக்கிறதுக்கு இவங்கட இந்த முயற்சி நிச்சயமா வெற்றி பெறும் எண்டு நினைக்கிறன். இதையே தொடந்து செய்வினும் எண்டா இது பாராட்டுக்குரிய விசயம் தான்...!

இதால கோயில்லுக்க காத்து வாங்கிற மாதிரியான யன்னல் வைச்ச உடுப்புக்கள் போடுறவங்க பாடு அதோ கெதி தான். அது மட்டுமில்லாம ஒரு சாண் களிசாணும் ரெண்டு கைக்குட்டையளவு மேலுடுப்பும் போட்டுக்கிற பொண்ணூங்களுக்கு கோயில் வைச்சிச்சே பாரு ஆப்பு. முதலாளி உங்களுக்கு ஒரு பாராட்டு.

மூண்டு வருசத்துக்கு பிறகு நல்லூர் திருவிழாக்குப் போறதா இருக்கிறன். கன வித மாறுதலோட இந்த முற திருவிழா நடக்கும் எண்டு எதிர் பார்க்கிறன். அதிலும் மும் மதமும் ஒண்ணா நிண்டு கொண்டாடிற மாதிரியா இம் முற திருவிழா இருக்க போகுது. எல்லாருக்கும் இருக்கிற போல எனக்குள்ளும் கனக்க கற்பனைகள மெருகேத்தி வைச்சிருக்கிறன். முடிஞ்சளவு எல்லாத்தையும் நிறைவேத்திடனும்.

உங்க எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும் நல்லூர் கொடி ஏறிடிச்சுன்னா ஐஞ்சில இருந்து தொண்ணூறு வரைக்கும் ஒரே கொண்டாட்டம் தான் அந்த இருவத்தஞ்சு நாளும். கோயில சுத்தி ஒரே கடையளும், பாதாள கிணறு சேக்கஸ் எண்டு எந் நேரமும் எங்கட சனங்கள் பிஸியா தான் திரிவினும் காலமல இருந்து நடுச் சாமம் வரைக்கும் அப்பிடி ஒரு திருவிழாவ வேறெங்கையும் பாத்ததில்ல. என்ன இந்த முற கொஞ்சம் அட்வான்ஸா பல தரப்பட்ட பிஸ்னஸ் நடக்கும் “வாங்க வாங்க மலிவு எல்லாம் மலிவு எண்டு கத்துறவங்க மத்தியில அப்பப்போ லாபாய்... லாபாய்... எண்ட சத்தமும் கேக்கப் போது”.

அதால எந்த நேரமும் சன நடமாட்டம் கோயில சுத்தி இருக்கப் போது. அப்ப என்ன மாதிரிப் பொடிப் பசங்கள சொல்லவா வேணும்...! எங்க பாடு ஒரே ஜாலி தான்.

அட இத விடுங்கப்பா முக்கியமான விஷயம் என்னண்டா கள்ளர் தான் இந்த முறை திருவிழாவின் கதாநாயகர்கள், மறை பொருட்களும் அவர்களே... இந்த முற அவங்க பாடு கொந்தாய் தான்... ஒரே தங்க வேட்டை தான் போங்க... சோ திருவிழாக்கு போறவங்க நீங்க நீங்க உங்க உடமைகள சரியா பாதுகாத்துக்கோங்க.

இது எல்லாத்தையும் கடந்து இம் முற நல்லூர் கந்தனின் உட்சவம் வெகு சிறப்பாக நடந்தேறும் எண்ட நம்பிக்கைல இப்ப நான் போய்ட்டு வாறன்.

பிறகென்ன திருவிழால சந்திப்பம்.
கந்தனுக்கு அரோகரா...!!!