Friday, February 18, 2011

யாழ் அன்னை கதறி அழுகிறாள்...!!!

யாழ் செய்தி இல்லா
பத்திரிகை கண்டீரோ...?
தினம்
கொலை, கொள்ளை, கற்பழிப்பு
இது
தானே அண்றாடம்
தலைப்பு செய்திகளாய்...
நம்
தலைவிதி செய்திகளாய்....!
ஜனநாயக நாட்டில்
ஜன”நாய்களின்” வெறியாட்டம்....!

பாடசாலை மாணவி
கருக்கலைப்பு!
பள்ளி மாணவிகள் கருவீதம்
தினந்தோறும்
அதிகரிப்பு...
இது தானா
நான் வாழ்ந்த யாழ்ப்பாணம்....?

ஆலய வீதியில் களியாட்ட விடுதி
காவலரன் பக்கத்தில் கன்னிப் பெண்கள் விடுதி
களத்து மேடு கிடக்குதெண்டு
கரணம் தான் அடிப்பீரோ?
கண்டறியா கலாச்சாரத்தை - எம்
பெண்கள் மீது திணிப்பீரோ....?

தமிழன் குரல் உலகொலிக்க
உண்மையாய் உழைத்தவர்களே
எங்கே ஐயா போனீர்கள்?
ஊதாரித் தனம் பண்ணுபவர்கள்
தான் இன்று
பாராளுமன்ற அரங்கினுள்ளே...!

சமிக்கைக்கு ரெண்டு பொலிஸ்
பாதுகாப்புக்கு எட்டு, பத்து
கொமாண்டோக்கள்
குண்டு துளைக்கா A/C கார்
உயிர் காக்க அம்புலன்ஸ்
உங்களுக்கென்னப்பா
ராஜ வாழ்க்கை வாழ்கிறீர்கள்...!!!

இலங்கையின்
தலை சிதறிக்கிடக்கிறது
நடு நிலமை பேண
யார் வருவார்
இந் நாட்டில்....?

அரசியல் மேடைகளில்
அதிரடிப் பேட்டி
மாற்றம் கொண்டு வருவேன்
என்னை
தலைமையாக்கினால்
மந்திரிகளாக்கினால்
எம்.பி ஆக்கினால்...!

நம்பினோம் அன்று
அது
நாட்டுக்கான மாற்றம்
இல்லை
உங்களின் ஆடம்பரத்தின்
மாற்றம் என்றறியாமல்...!

நிறுத்துங்கள் இத்தோடு!
இன்னுமா மிதிக்கிறீர்...?
யாழ் அன்னை கதறி அழுகிறாள்...!!!

Wednesday, February 16, 2011

கடற்கரை காமுகர்கள்

வேகாத வெய்யிலில்
உனக்கென்ன வேலை...
கடற்கரை மணல் தனிலும்
ஆங்காங்கு சோலை...
அதற்குள்ளும் நடக்குது பார்
தினம் காம லீலை...

நாலு சுவற்று
இன்பம் தனை
நாலுபேர் மத்தியிலும்
நாசுக்காய் செய்து
நாய்க் குணத்தை
காட்டுகிறான்...!

அடல்ஸ் ஓன்லி
திரைப் படத்தை
ஊர் பார்க்க
தானே
நடித்தும் காட்டுகிறான்...!

தம்மைப்
பெயர் சொல்லி
அழைக்கட்டுமாம்
அன்புள்ள
காதலர் என்று...
இவர்களா
காதலர்கள்
கண்டறியா
காமுகர்கள்...!

அவனைப் பிடித்து
கேட்டுப் பார்
அவுட் ஒவ் சிட்டி
என்பான்...
அவன் அருகில்
இருப்பது யார்
பக்கத்து வீட்டு
அன்ரி என்பான்...!

சம்பந்தமே இல்லாமல்
காம லீலை
நடக்குது பார்...
இந்த
இலட்சனத்தில்
ஓடி விளையாட
என் மகனை
அழைத்து இனி
கடற்கரை தான் போவது யார்...?