Sunday, September 30, 2012

சக்திமான்(Shaktimaan) - 1998/99களில் எங்கள் சூப்பர் ஹீரோ...!

வணக்கமுங்கோ! 

ன்றைய கால கட்டத்தில் திரைப்படங்கள் முதற் கொண்டு நாடகங்கள் வரையில் புதிய புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு பிரமாண்டமான படைப்புக்கள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. கட்மான்(CATMAN), பட்மான்(BATMAN), ஸ்பைடர்மான்(SPIDERMAN) என எத்தனை மான்கள் வெளிவந்தாலும் நம்ம சக்திமான் கதாபாத்திரத்தையும் படைப்பையும் இன்றும் மறந்துவிட முடியாது. 

1998/99 காலப்பகுதி... அப்போது தான் யாழ்ப்பாணம் மீண்டும் நீண்ட கால இடைவெளியின் பின்னர் ஒளி பெற்று துல்லியதொரு வளர்ச்சியை எட்டிக்கொண்டிருந்த காலம், தொலைக்காட்சி பாவனையும் அதிகமாக பயன்படுத்தப்பட்ட காலம் அது! எல்லா வீடுகளிலும் தொலைக்காட்சி குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சிக்காக இயங்கிக்கொண்டு இருக்குமேயானால் அது ஞாயிற்றுக் கிழமை மதியம் 12 மணியாக தான் இருக்க முடியும். 

பொதிகை அலைவரிசை யாழ் மண்ணைப் பொறுத்தவரை எமது பொழுதுபோக்கு தொலைக்காட்சி அலைவரிசை. மதியம் 12 என்றாலே போதும் எங்கும் சக்திமான், சக்திமான் தான்! குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் மிக பிடித்த சூப்பர் ஹீரோ நாடகம் அது! சிறுவர்கள் என்ற வட்டத்தில் இருந்து நானும் சக்திமானை ரசித்தவன் தான்... :) 

எல்லோருக்கும் பிடித்தமான கதாபத்திரம் அந்த சக்திமான் கதாபாத்திரம், சக்திமானில் முகேஷ் கண்ணா(Mukesh Khanna) சக்திமானாகவும், கங்காதராகவும்(Gangadhar) இரு வேடங்களில் நடித்திருப்பார். இவர் தவிர சிறப்பான கதாபாத்திரங்களாக கீதா விஷ்வாஸ், தாம்ராஜ் கில்ஃபிஷ், டாக்டர் ஜக்கால் என முக்கிய பாத்திரங்களை ஏற்று திறமையான படைப்பொன்றை உருவாக்கியிருந்தார்கள். 

சிறியவர் முதல் பெரியவர்கள் வரை எல்லோராலும் விரும்பிப் பார்க்கப்பட்ட வித்தியாசமான படைப்பு இது எனலாம்! சக்திமான் சுழன்று சுழன்று வானத்தில் பறப்பதும், எதிரிகளை எதிர்த்துப் போராடுவதும் அந்த காலத்தில் வியக்கத்தக்க ஒரு கலையாக காட்டியிருந்தார்கள். அதிலும் குறிப்பாக கங்காதராக சக்திமான் செய்யும் குறும்புகள் ரசிக்கத்தக்கவை. வேற்றுக்கிரக வாசிகளைப் போல பல எதிரிகளை உருவாக்கி இருந்தார்கள், அவர்களோடு புதிய வியூகங்களில் சண்டை போடுவதும் பறப்பதும், மறைவதுமாக அற்புதமாக அந்த சக்திமான் படைப்பு இருந்தது.

சக்திமானை பொறுத்தவரையில் முக்கிய கதாபாத்திரமாக பார்ப்போரை அஞ்சவைக்கும் விதத்தில் தாம்ராஜ் கில்ஃபிஷ்ன் கதாபாத்திரம் இருந்தது. “இருள் நீடிக்கின்றது” என்ற வாசகம் அடிக்கடி அந்த கதாபாத்திரத்தால் உபயோகிக்கப்பட்டது மட்டுமல்லாமல் நாமும் அந்தக் காலத்தில் அடிக்கடி முனுமுனுத்த வசனமாக இருந்தது. அத்தோடு டாக்டர் ஜக்காலின் “பாவ்வர்” என்ற வசனமும் கூட. 

2000ம் ஆண்டை நெருங்கிய காலகட்டத்தில் மிகப் பிரபல்யமாக ஒளிபரப்பப்பட்ட தொடர் நாடகம் என்றால் அது சக்திமான் தான், அதன் பாடலும் கூட அந்த காலத்தில் மிகப் பிரபலமாக இருந்தது. இன்று பலரால் மறக்கப்பட்டிருக்கும் சக்திமான் என்ற நாடகம் இப்பதிவை வாசிப்பவர்கள் மனதில் மீண்டும் அந்த சூப்பர் ஹீரோ ஞாபகத்திற்கு வந்திருப்பார் என்பது திண்ணம். :) 

ஹாய் நண்பர்ஸ்! நம்ம ஹீரோவ நாங்க மறக்கலாமா...? அது தான் ஒருக்கா ஞாபகப்படுத்தினன் :) “இருள் நீடிக்கிறது” #லொலொ

நாடகத்த ஞாபகப்படுத்திட்டன் அப்ப நான் போய்ட்டு வரட்டே... பாய்...! 


Saturday, September 29, 2012

எழுத்து திருட்டும், விசயமே அற்ற பதிவுகளும்...!

சில மாத இடைவெளியின் பின்னர் பதிவர்களையும் பதிவுலக நாயகர்களையும் சந்திப்பது மிக்க மகிழ்ச்சி! இனி இனி தொடர்ச்சியாக பதிவுகள் எழுதுவேன் என்று எழுந்தமாணமாய் கருத்துக்களைச் சொல்லி நான் அதைச் செயற்படுத்தியது இல்லை இதுவரையில் ;)
கருத்து சொல்வது சுலபம் செயற்படுத்துவது சிரமம்! ஆதலால் இம்முறை நான் எந்த வாக்கும் கொடுப்பதாக இல்லை! கொடுத்த வாக்குகள் செல்லுபடியற்றுவிட்டன. 

இன்றைய விசயம் பதிவர்களின் பதிவுகளும் அவர்களின் பதிவுகள் திருட்டுப் போவதும், வேதனைக்குரிய விடயம். சில பதிவர்கள் நல்ல கருத்தோட்டமான பதிவுகளை அனுபவங்களை சிந்தித்து சிறிது சிறிதாக செதுக்கி அதை ஆக்கமாக்கி சமூகத்தின் முன் பகிர, ஒரு சில நொடிகளில் அதையே சுருட்டி எடுத்து தமது தளங்களில் பிரசுரித்து பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள் ஒரு சில புதிய பதிவர்கள். சரி திருட்டு தான் செய்கிறீர்கள் செய்யும் திருட்டு திருட்டு இல்லாமல் இருக்க திருடும் தளத்தின் சுட்டியையாவது போட்டு உங்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாமே! 

மிகச்சிறந்த பதிவுகள் மற்றவர்களால் சமூகத்திற்கு பரிமாற்றப்படுவது வரவேற்க்கத்தக்கதே ஆனால் அது திருடாமல் சரியான விதத்தில் பரிமாற்றப்படும் போது பதிவர்களைப் பொறுத்தவரையில் ஏற்றுக் கொள்ளப்படத் தக்க ஒன்று! 

எழுத்து திருட்டு என்பது சில ஆண்டுகளுக்கு முதல் பதிவுலகில் பதிவர்கள் பகிர்ந்த பதிவுகளைத் தோண்டி எடுத்து தமது பெயர்களில் பிரசுரிக்கிறார்கள். திருடும் அவர்களின் நினைப்பு யாராலும் கண்டுபிடிக்க முடியாதென்று! “உனக்கு இரண்டு கண்கள் என்றால் சமூகத்திற்கு ஆயிரம் கண்கள்” ஒவ்வொருவர் எழுத்து நடையும், சிந்தனையும் வேறுபட்டவை, எழுதிய பதிவர்களுக்கு தெரியாதா தமது சொந்த பதிவா இல்லை தமது பதிவு திருடப்பட்டு விட்டனவா என்று!!!

சுயமாக சிந்திக்க தெரியாதவர்கள் எல்லாம் கருத்துக்கள் பகிர்கின்றோம் என்ற போர்வையில் ஏன் இந்த நாடகம்...? இது இவ்வாறிருக்க சிறந்த பல பதிவர்களின் ஆக்கங்கள் இந்த காலகட்டத்தில் பெரிதாய் வெளிவருவதில்லை போலும், எங்கையா போனீர்கள் பிரபல பதிவர்களே!!! உங்களது கருத்தோட்டமான, காத்திரமான படைப்புக்கள் தான் பதிவுலகத்திற்கும் சமூகத்திற்கும் தேவையான ஒன்று! பிரபல பதிவர்களின் வேகம் குறைய புதிது புதிதாய் கிளம்பியிருக்கிறார்கள் சில குட்டிப் பதிவர்கள்! புதிய பதிவர்களை பதிவுலகில் வரவேற்கின்றோம்!

புதிதாய் பதிவுலகில் காலடி எடுத்து வைத்திருக்கும் சில பதிவர்கள் ஏதாவது பதிவுகளை தாமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக விசயமே இல்லாத, சமூகத்திற்கு இயல்பான கருத்துக்களை மறுத்து ஏதேதோ பதிவுகளைப் பகிர்ந்துவிடுகின்றார்கள். பதிவுலகைப் பொறுத்த வரையில் புதியவர்களால் பதிவுகள் பகிரப்படுகின்றன ஆனால் கருத்துக்கள் புதைக்கப்படுகின்றன. 

தரமான நல்ல சமூக சிந்தனையாளர்களின் கருத்துக்கள் மீண்டும் பதிவுலகை ஆக்கிரமிக்க வேண்டும், தொய்ந்து போய் இருக்கும் பதிவுலகம் மீண்டும் புதுப் பொலிவுடன் எழுச்சி கொள்ள வேண்டும். உங்களது சிறந்த பதிவுகள் ஒரு பாடமாக புதிய பதிவர்களுக்கு இருக்க வேண்டும்! 

எழுத்து திருட்டை தடுக்க மூத்த பதிவர்களே நீங்கள் விழித்திருக்க வேண்டும்! உங்கள் முயற்சியின் பலனை வேறொருவன் அனுபவிக்க இடமளிக்காதீர்! எழுத்து திருட்டுக்கும் விசயமே அற்ற பதிவுகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம்!!! 

“யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல! இப்படிப்பட்ட தவறுகள் இனியும் இடம் பெறக்கூடாது என்பதற்கான வேண்டுகோள்”

Sunday, July 8, 2012

யாழில் பரவி வரும் பஸ் காமம்...!

மீண்டும் ஒரு தடவை யாழ்ப்பாணப் பதிவோடு உங்கள் முன் வருகின்றேன் என் பார்வையில் ஏற்பட்ட அவதானிப்பு இது. அன்றே கொட்டித்தீர்த்திருக்க வேண்டும், மடிக்கணினி கைவசம் இல்லாததால் கொஞ்சம் ஆற வைத்துப் பதிவிடுகின்றேன்.

யாழின் பதிவுகளை தினம் தினம் ஏதோ ஒரு வழியில் நாம் அறிந்து கொண்டே இருக்கின்றோம், தினம் மோசமடையும் யாழின் போக்கே இன்றைய நிலை. இதற்கான காரணங்களாக கலாசாரம், மற்றும் காதல் எனும் பெயரில் அரங்கேறும் காமம் என்பன காரணங்களாக் இருந்து வருகின்றன. கட்டவிழ்த்துவிடப்பட்ட கலாசார நோயால் தினம் பாதிக்கப்படுவது என்னவோ எம் மக்களே, இதை நன்கு அறிந்தும் அதன் வழி மீள்ச்சியில்லாமல் தொடர்ந்து செல்லும் எம்மவர்கள் மீதும் தவறுகள் இருக்கின்றது.


யாழ்ப்பாணத்தின் கலாசாரம், பண்பாடு என்பவற்றை சிதைக்கும் நோக்கில் தினம் செயற்பட்டு வருகின்றன சில சக்திகள் அதற்கு துணை போகும் தமிழ் கறுப்பு ஆடுகள் இருக்கும் வரையில் தமிழ் தாழ்வாந்து போகும் என்பது திண்ணமே! படித்தோர் பெரியோர் இருந்தும் என்ன பயன். கெடுகிறேன் பந்தையம் பிடி எனும் போக்கில் போய்க் கொண்டிருக்கின்றது தமிழ் இளைஞர்களின் போக்கு.


சரி நான் சொல்ல வந்த விசயத்துக்கு வருகின்றேன்...! 


கொழும்பைப் பொறுத்தவரையில் பஸ்சில் காதல் என்ற பெயரில் காமம் என்பது சர்வ சாதாரணமாகிப் போனது என்பது உண்மையே! சராசரியாக ஒவ்வொரு பஸ்சிலும் காதலர்கள் மத்தியில் காமுகர்களும் பயணிக்கின்றார்கள். இப்படியான கேவலங்களைப் கொழும்பு பஸ்களில் பார்த்து சலித்து போய்விட்டோம்... இது இவ்வாறு இருந்த போதிலும் யாழ்ப்பாணத்திலும் இதே நிலை என நான் நினைத்திருக்கவில்லை, கலாச்சார மாற்றம் சடுதியாக இருக்கின்றது என்பதை நான் அறிவேன், ஆளில்லா வீடுகளில் காமம் அரங்கேறுவதை செய்திகள் வாயிலாக அறிந்திருக்கின்றேன் ஆனால் இந்த தொற்று வியாதி பஸ்சுக்குள்ளும் பரவும் என பெரிதாய் நினைக்கவில்லை! 


இதற்கு ராணும்வம் நடாத்தும் களியாட்ட நிகழ்வுகள், இராத்திரி நேர நிகழ்ச்சிகள், ஆபாச பட வினியோகம் என பல காரணங்களால் காதல் இளைஞர்கள் மத்தியில் காமமாக மாறியுள்ளது என்பதே உண்மை...! 


பஸ்சைப் பொறுத்தவரையில் கடைசி ஆசனம் என்பது காமுகர்களுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவதானிப்புக்கள் மூலம் அறிய முடியும்! (எல்லா நேரமும் அல்ல) நான் யாழில் நேரில் கண்ட காமத்தை சொல்கிறேன் இது எவ்வளவு கேவலம் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்...! 




அதே கடைசி ஆசனம்!
ஒரு 45 வயசு மதிக்க தக்க பெண், பெண் என்று சொல்வதை விட அன்ரி என்று சொல்லலாம் 20 வயது மதிக்கத் தக்க பெடியன் (இவனுக்கென்ன மரியாதை பையன் எண்டு சொல்ல) கிட்டத்தட்ட அந்த அன்ரியின் மகன் எண்டு சொல்லிக்கலாம், அதுகள் ரெண்டும் கடைசியில் பண்ணிய காமலீலைகளை (Hidden Camera) நீலப் படத்துக்குள் சேர்க்கலாம்...! வெக்கம், மானம், சூடு, சுறணை இல்லாத பிறவிகள்...!

அன்று தான் தெரிந்து கொண்டேன் காமம் யாழில் வயது பேதம் இன்றி பாதித்துக் கொண்டிருக்கின்றது என்பதை! மலசல கூட குழியில் குழந்தை, குப்பைத் தொட்டிக்குள் சிசு, கருக் கலைப்பு, தற்கொலை, ஏமாற்றம், கற்பழிப்பு என எல்லா வித மனம் கோணும் நிகழ்வுகளும் யாழில் அரங்கேறியது எப்போதிருந்து...? 

காமம் தொடர்பாக யாழ் மக்களிற்கு போதிய தெளிவின்மை என யாராச்சும் சொன்னியளோ வாயில சூடுவைப்பன்! ஏன்னா எங்கட சனம் ஒண்ணுமே தெரியாத பாப்பா தானே! ஏய்யா வாய கிளர்றீங்க...?

கலாச்சார காவலர்கள் எங்கே...? ஒரு காலத்தில் இருந்தார்களாம்! (ஒரு காலத்தில்)

கிட்டத்தட்ட யாழ்ப்பாணத்தில் காமம் என்பது காதலின் பெயரால் மேடையேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்கு யார்மேலும் காரணம் சொல்ல விரும்பவில்லை, ஆனால் சுய புத்தி என்று ஒன்று இருக்கிறது என்று நான் நினைக்கின்றேன்! அது சில பேருக்கு சுய புத்தி சரியாக இயங்குவதில்ல போலும் ஆதலால் வந்த விளைவு...!

ஊசி இடம் கொடாமல் நூல் நுழையாது...! இது காமுகர் மொழி...! 

மனவருத்தத்தோடு விடைபெறுகின்றேன்...! யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல! என் அவதானிப்பு இது! உண்மையும் கூட!




Wednesday, June 27, 2012

புரிதல் தொலைத்த வலி...!

இன்றும் பயணிக்கின்றேன்
புது புது கனவுகளைச் சுமந்தபடி
போகும் வழி நெடுக சிதறி
விழுகின்றன என் கனவுகள்
நான் செல்லும் பாதை
புல் வெளி தாண்டி
முட்கள் நிறைந்த வழிவழி
திருப்பம் காண்கிறது,
மனதின் கடிவாளத்திற்குள்
கட்டுண்டு கிடக்கிறேன் - நான்
கடலில் தத்தளிக்கும் துரும்பு போல
அவ்வப்போது கனவுகளும் வந்து போகும்
வரும் கனவுகளில் வலிப்பது
என்னவோ என் இதயமே! - உயிர் வலியது!
இனம் தெரியாத புரிதலுடன்
இரு மருங்கும் பரந்து தொடரும்
இரட்சகர்கள் கூட்டம் நடுவே
நாதியற்றவனாய் பயணிக்கின்றேன்
விடிவென்பது உனக்கில்லை
என கூவிப் பறக்கின்றது சாக்குருவி...!!!

Wednesday, June 20, 2012

சிந்தனைக்கு ஒரு நிமிடம் - உங்கள் சிந்தனை உங்களைக் குறிகாட்டும்...!

மீண்டும் ஒருமுறை வணக்கங்களைச் சொல்லிக்கொண்டு வித்தியாசமான ஒரு கருத்தாடலோடு வந்திருக்கிறேன்! இது முழுக முழுக்க மனிதர்களுடைய சிந்தனை சம்பந்தப்பட்டதாகவே இருக்கப் போகின்றது. அதாவது சராசரியாக குறிப்பிட்ட ஒரு தொகை மக்களை எடுத்துக் கொண்டால் அவர்களது சிந்தனைத் திறன் மனிதருக்கு மனிதர் வித்தியாசமானதாகவே காணப்படுகின்றது, இருப்பினும் ஒரு சில சந்தர்ப்பங்களில் சிலரது சிந்தனைகள் ஒன்றுபட்டனவாகக் காணப்படக்கூடிய சாத்தியங்களும் இருக்கின்றன.

குறிப்பாக சிந்தனை என்று வருகின்ற போது பல எண்ணற்ற சிந்தனைகள் ஒரு சில கணத்திலேயே தோன்றிவிடுகின்றன அதுவே குறிப்பிட்ட நாளை சந்தோஷமானதாக அல்லது குழப்பம் நிறைந்த நாளாக மாற்றிவிடுகின்றன. அதற்கான காரணங்கள் என பார்க்கப் போனால் சிலரது சிந்தனை கடந்த கால சம்பவங்களின் தொடர்ச்சியாக இருக்கும். அதாவது சிறிது காலத்திற்கு முன்னராக நடந்த சம்பவம் அவரவர் சிந்தையில் புதிய தொடர்ச்சியாக தோன்ற வாய்ப்புள்ளது, அது சில வேளைகளில் நல்லதாக இருக்க கூடும் சில வேளைகளில் கடுமையானதாக கூட இருக்க கூடும்.

இதே போன்று வேலைக்கு செல்பவர்களின் மன நிலையை எடுத்துக் கொண்டால், ஞாயிற்றுக் கிழமையாக இருக்கும் போது ஒரு சிலர் மனதில் சடுதியாக தோன்றும் எண்ணம் ஐயய்யோ நாளைக்கு திங்கக்கிழமை, வேலைக்கு போகணும்... இப்படி அவர்கள் சிந்தனை சலிப்புடன் இருக்குமேயானால் அன்றைய நாள் அவர்களைப் பொறுத்தவரையில் மகிழ்ச்சிகரமானதாக அமைய வாய்ப்புக்கள் குறைவே!

எது எவ்வாறாயினும் வேலைத் தளங்களில் வேலையுடன் ஒருமித்துவிட்டால் இப்படியான சிந்தனைகள் கூட மழுங்கடிக்கப்பட்டுவிடும். எல்லாம் மனம் சம்பந்தப்பட்ட எண்ணங்களாகவே இருக்கின்றன.

அது தவிர்த்து சிலர் தமது சக வேலையாட்களுடன் எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறோம் என்றவாறே சிந்தனைக்குள் பயணிப்பர், இது கூட அவர்களை தேவையற்ற கற்பனைக்குள் அழைத்து சென்று முடக்கிவிட சாத்தியங்கள் அதிகமே.

இது போன்று இன்னும் பல வேறுபட்ட சிந்தனைகளை நாம் கண்டிருக்கின்றோம், ஒரே நாளில் ஒரே நிமிடத்தில் அளவுக்கு அதிகமான சிந்தனைகள் எழுவது சாத்தியமே. ஒருவரின் மனநிலையே அவரது சிந்தனையை வழிநடாத்துகின்றது, அதாவது ஒருவரது மனம் எதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறதோ அதுவே பிரதிபலனாக குறிப்பிட்ட சிந்தனையை அடையாளப்படுத்துகின்ன்றது. இதுவே யதார்த்தமும் கூட.


சிலர் மனதில் கெட்ட கீழான சிந்தனைகள் அரங்கேறும், ஆதலால் அவர்களது நாள், நடவடிக்கைகள் தவறான பாதையிலேயே பயணிக்க ஆரம்பிக்கும். ஒருவனை நல்லவனாக்குவதும் சிந்தனை தான், கெட்டவனாக்குவதும் சிந்தனை தான். எப்போதும் எண்ணம் உயர்வாக இருத்தல் வேண்டும் என பல ஆய்வுகளில் கண்டிருக்கிறோம். அது உண்மையே!

இந்த சிந்தனை சம்பந்தமான பதிவைப் படிக்கும் நீங்கள் உங்கள் மனதிடம் ஒரு கேள்வியைச் சடுதியாகக் கேளுங்கள், இந்த நிமிடம் எதுபற்றிய சிந்தனை உங்கள் மனதில் நிரையோடிக்கொண்டிருக்கின்றது என்பதை. அது ஏற்புடையதென்றால் தொடர்ந்து செல்லுங்கள். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்...!


எல்லாம் யதார்த்தமே!

பெரிய மனுசன் போல கதைச்சிட்டன் எல்லா! மன்னிச்சூசூசூசூசூசூ...!

Tuesday, June 19, 2012

நண்பனின் காதல் சுயசரிதை

நண்பனின் சுயசரிதை...

இது ஒரு சோகக் கதை...! நண்பனின் கடுப்புக்கலந்த கவலை...! வாசிங்க உங்களுக்கே விளங்கும்! வேலைத் தளத்தில் நான் என் நண்பனைச் சந்திச்சபோது அவன் சொன்ன கதை...!

இதோ...!

அவரை நான் எனது பாணியில் அறிமுகப்படுத்துகிறேன்...

நான் காண்டிபன், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு படிக்க வந்தனான், வந்த இடத்தில ஆப்பு இருக்கு தெரியாம‌ மேல குந்திட்டன்! வலி தாங்க முடியல தான் இருந்தாலும் என்னால எழும்ப முடியல, குந்தினாலும் வலிக்கிது கொஞ்சம் அசைஞ்சாலும் வலிக்கிது! ஆனாலும் ஒரு வழியா படிச்சு முடிச்சிட்டன். வாழ்நாள் சாதனை இது! ஏன் தான் இப்பிடியோ! - சலிச்சுக்கிறான் நண்பன்!

மாசத்துக்கு மாசம் விசர் ஊசி போடுறதே வேலையா போச்சு! எடுகிற சம்பளம் ஊசில போது! ஓசில திண்ட‌ காலம் போய் ஊசி திண்டுற காலம் எனக்கு! இதை ஏன் சொல்லுறன் எண்டு இன்னும் கொஞ்சம் வாசிச்சீங்கள் எண்டால் விளங்கும்.

இப்ப புதுசா ஒரு வேலைக்கு சேந்திருக்கிறன் அதில எடுக்கிற சம்பளம் அப்பாடா இந்த மாசம் சம்பளம்  வந்திட்டு எண்டு சொல்லுறதுக்குள்ளையே வர்ற காசு முடிஞ்சிடுது, எனக்கும் ஒரு கேள் பிரண்ட் இருக்கிறா, என்ர ஊசி செலவு அவவால தான்! இப்ப முதல் சொன்னது ஞாபகம் வரும் உங்களுக்கு...
மற்றவங்க தொட்டு தொட்டு பேசுவாங்க ஆனா என்ர அவா கீறி கீறி பேசுவா! அவளவு பாசம் என் மேல!

இப்பிடி கனக்க நடந்திருக்கு எனக்கு எல்லாமே சொல்ல ஏலாது தானே!  இத ஒருவேள அவ பாத்தா அப்புறம் ஒரு அன்புக் கீறல் விழும்! எதுக்கு எனக்கு ஊசி செலவு?

அப்பிடி இருந்தும் நான் அவ கூட அன்பா கதைக்க போவன் கடைசில அதுவே புது ஆப்பா மாறிடும்! ஊத்தப்  பேச்சைத் தவிர மிச்ச எல்லா கேவலத்தையும் ஒண்ணா சேத்து பேசுவா! அதிலையும் விசர் சவம்,  விசர் மூதேவினு அவ திட்டுறது கேவலமா தெரிஞ்சாலும் அழகா இருக்கும்...!

ஆனா ஒண்ணுங்க லவ் பண்ணுற பசங்க ஒருத்தருக்கொருத்தர் அடிக்கடி முத்தம் குடுப்பாங்க ஆனா என்ர அவ‌ எனக்கு மொத்தமா குடுப்பா நாலு நாளைக்கு வீங்கிற மாரி! அப்புன்னா அப்பு அப்பிடியொரு அப்பு! மூஞ்சில
மூஞ்சி எனக்கு மட்டும் தான் அடிக்கடி வரும்...


ஆ! இன்னும் ஒண்ட சொல்ல மறந்திட்டன்! அவ போன்ல கதைக்கிறதே நேர்ல கதைக்கிற போல தான் இருக்கும் அவளவு மெல்லமா தான் கதைப்பா, சிரிப்பு கூட அவளவு அழகு! அவ சிரிக்கும் போது சூர்பனகைக்கு டப்பிங் குடுத்தத போல இருக்கும்...

அட விடுங்க என்ர சோகக் கதைய இதோட நிப்பாட்டுறன், இவளவு சொல்லியும் உங்களுக்கு புரிஞ்சிருக்காதா என்ர வீர வரலாறு...? என் உடம்பில் உள்ள தழும்புகள் எல்லாம் காதல் தழும்புகள்...! தழும்புகளைப் பாக்குற  நேரமெல்லாம் ஏதோ நேர்ல அவ வந்து அடிச்சிட்டு போற போல கற்பனையெல்லாம் தோணுது!  சாமத்தில கத்திக்கூட இருக்குறன்னா பாருங்கவன்!

இனியும் நான் கதைக்க விரும்பல... இத மட்டும் அவக்கு சொல்லிடாதீங்க அடி அகோரமா இருக்கும்..!

கேட்டியள் தானே அவன்ர கதைய! உந்த பெட்டையளே இப்பிடி தான் போல! ஒருத்தன் கதையே இப்பிடி  நாறிப் போய் கிடக்கு...!!!

ச்சீ ச்சீ! வெந்து போய் கிடக்கு! இது காணும் இண்டைக்கு!  

வேணாம்டா வேணாம் காதல் மோகம், பொண்ணுங்க எல்லாம் வாழ்வின் சாபம்...!

அப்பாடா சொல்லி முடிச்சாச்சு! போய்ட்டு வாறன்! - நண்பனின் குமுறல் இது!

பஸ் எண் - 154 இல் திருடர்கள்...!

தெமட்டகொட, பொரல்ல, கொழும்புக்கம்பஸ், பம்பலப்பிட்டிய எண்டு இடங்களின்ர பெயர அடுக்கிக் கொண்டே போனார் கொண்டைக்டர். 154 எண்ட பஸ் கிரிபத்கொடைக்கும் - அங்குலானைக்கும் ஓடுற ஒரு பஸ். ஓரளவு வேகமா ஓடும் ஆனா என்ன ஒவர்நாளும் கொழும்ப சுத்திக் காட்டிக்கொண்டே தான் போகும்! சுத்திற சுத்தில களவும் போகும். விடிய காலம வேலை நேரத்திலையும், பின்னேரம் வேலை முடிஞ்சு வாற நேரமும் அந்த பஸ்ல சனம் தாங்காது! அப்பிடி ஒரு கூட்டம் அந்த பஸ்ஸுக்க.

கொண்டைக்டர் கத்த கத்த சனமும் ஏறினபடியே தான், அதுக்க கள்ளங்களும் ஏறுவாங்கள்! மக்கா! ஜாக்கிருதை! 

இப்ப கொஞ்சக்காலமா நான் கேட்டறிஞ்சதின் படி 154ல செரியான கள்ளர் தொல்லையாம் நம்மள, நம்மட சாமான் சக்கட்டுக்கள பாதுகாக்க வேண்டியது நம்மட கடமை, அதிலையும் வேற யாருக்கும் கள்ளரால ஆபத்து எண்டு வந்திச்செண்டாலும் அவர்களுக்கு அதை தெரியப்படுத்திறதிலையும் நாங்க முன் நிக்க தான் வேணும்! ஏன்னா நாளை எங்களுக்கும் இதுவே நடக்க கூடும்! 


பஸ்ஸில செரியான கூட்டம் எண்டால் கொஞ்சம் கவனமா நில்லுங்க, கூட்டமான பஸ்ல தான் கள்ளர் அதிகம் ஏறுவாங்கள். உங்கட உங்கட பேர்ஸ்(Purse), ஹாண்ட்பாக் (Handbag), கையடக்க தொலைபேசி (Phones), சங்கிலி காப்பு நகைகள் (chain) அது மட்டுமில்லாம காசு (cash) அப்பிடி ஏதாச்சும் வைச்சிருந்தா பத்திரப்படுத்திக் கொள்ளுங்க! 

இப்பெல்லாம் களவெடுக்க வாறவங்கள் எங்கள விட Decentடா தான் வாறாங்கள், பாத்தா பெரிய பெரிய கொம்பனில CEO Levelல இருக்கிறாக்கள் போல. போலிகளைக் கண்டு ஏமாராதீர்கள்!

இன்னார் தான் திருடன் என்று ஒரு சில வழிகளில் ஊகிக்க முடியும், அவர்களிடத்தில் கொஞ்சம் ஜாக்கிரிதையாக இருந்தால் போதும். பஸ்ஸில் திருட வரும் கள்ளர் கையில் ஒரு 5ரூபா ஓ 10 ரூபா Shopping Bagஐ வைத்திருப்பார்கள், அவர்களுடைய பார்வை ஆக்களையும் திருட எத்தணிக்கும் நபருடைய உடைமையிலுமாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் கொஞ்சம் பதற்றத்துடனே காணப்படுவர், முக்கியமா யாராச்சும் சீட்டில இருந்தபடி உங்கட சாமான் ஓ Bagஐ தான் வைச்சிருக்கிறதா சொல்லி கேட்டா கொஞ்சம் உஷாராகிக்கொள்ளுங்க! 

பெண்கள் உங்கள் Handbagஐ எக்காரணம் கொண்டும் கூட்டமாய் இருந்தாலும் பரவாயில்லை அமர்ந்திருப்பவர்கள் கைகளில் கொடுக்க வேண்டாம்! நான் நேரில் கண்ட அனுபவத்தை வைத்து சொல்கிறேன். உங்கள் நண்பராக இருக்கட்டும் உங்கள் உறவுகளாக இருக்கட்டும் கொடுங்கள் பரவாயில்லை ஆனால் அறிமுகமில்லா நபர்களிடம் பைகளைக் கொடுப்பதை தவிருங்கள். அப்படி ஒருவேளை கொடுக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தால் கொடுத்தவர் மேல அவதானமாய் இருங்கள்.

நான் இவள நேரமும் 154ஐ பற்றி தான் சொல்லிக்கொண்டு இருக்கிறன், ஆனா வேற வேற பஸ்ல என்னென்ன நடக்குதெண்டு யாருக்கு தெரியும்.

பையன்களின் கவனத்துக்கு!


உங்கள் Purse, பணம், கையடக்க தொலைபேசி எல்லாம் பத்திரமாக இருக்கிறதா என்பதை நேரத்துக்கு நேரம் சரி பார்த்துக் கொள்ளுங்கள்! யார்மேலாவது சந்தேகம் வந்துவிட்டால் அவர்கள் மேல் ஒரு கண் வையுங்கள், அத்தோடு யாக்கிருதையாகவும் இருங்கள்! 

தினம் தினம் வித்தியாசமான முறைகளில் திருட்டு நடக்கிறது! அனைவருக்கும் இதை அறியப்படுத்த வேண்டியது எனது கடமை! 

இது முழுக்க முழுக்க பயணிகள் கவனத்துக்கு! அடுத்த முறை இன்னும் ஒரு பதிவோட வாறன்! 

கவனமா இருந்து கொள்ளுங்கோ! 

Wednesday, June 13, 2012

உனக்குள் நான்!

என்
மனமெனும் ஓடையில்
இன்றும் அழகாய்
நீந்திக்கொண்டிருக்கின்றன 
அழகிய நீ எனும்
கவிதைகள்...

என் மௌன மொழிகளுக்கு
இதயத்தில் இருந்தபடியே
அழகாய் பதில் தந்து கொண்டிருக்கிறாய்
நீ!

எம் கடந்தகாலம் - பற்றி
இதயத்திற்கு மெல்ல
தந்தியனுப்பிக் கொண்டிருக்கின்றது
என் நரம்புகள்...

உன் நினைவுகளுடே
நானும் மெல்ல உனக்குள் 
கடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன்
என்னையே அறியாமல்...

Monday, May 28, 2012

தெருவோர பிச்சை...

ஒவர்நாளும் காலம வேலைக்கு போகேக்க இல்லாட்டி வேலையால வரேக்க எப்பிடியும் ஒரு பிச்சக்காரன கண்டுடுவன்.... அவங்கள்ல கனக்க விதம் இருக்கினும், பஸ்சுக்க பிச்சையெடுக்கிறது, றோட்ல பிச்சஎடுக்கிறது, வீடு வீடா பிச்சஎடுக்கிறது எண்டு கனக்க விதம்! ஆனா பஸ்சிலயோ ரெயின்லயோ பாட்டுப் பாடி பிச்சைஎடுக்கிறவங்கள் எண்ணிக்க குறைவு எண்டாலும் அவங்களுக்கு ஏலுமோ ஏலாதோ எண்டத அடுத்த கட்டம் விட்டு அவையளின்ர முயற்சிய பாராட்டவேணும். இல்ல உண்மையா ஏதும் நொண்டிச்சாட்டு சொல்லாம தங்களால முடிஞ்சத பண்ணி காசு வாங்கிற தெருவோர விரதங்கள பஸ்லையோ ரெயின்லையோ ஏத்திறது சரி எண்டு தான் நான் சொல்லுவன்...

இண்டயான் அனுபவத்த சொல்லுறன்..

நான் வழக்கமா வேலைக்கு போற நேரத்தில பஸ் செரியான சனம் உந்த புட்போட்ல தொங்கிக்கொண்டு தான் போனவையள் எல்லாரும், அதோட மழ வேற! ஏற்கனவே காச்சல் குணமா இருந்தது சோ நான் கொஞ்சம் சுணக்கமா தான் பஸ் பிடிச்சுக்கொண்டு போனனான் அங்க போனா 8.30க்கு செரியா தெகிவளை ஸ்டேசனுக்கு ரெயின் வந்து நிண்டது, நான் அவசர அவசரமா ரிக்க்ட்ட எடுத்துக்கொண்டு ஓடினா பெரிசா சனம் இருக்கேல்ல ரெய்னுக்க...

நல்ல ஆசுவாசமா இருந்து போனன். அப்ப எங்கையோ தூரத்தில ஆரோ பாட்டுப்படிக்கிற சத்தம் கேட்டது... நான் நினைச்சன் சில வேள காலி மாத்தறைல இருந்து வாறவங்கள் அலுப்புத் தெரியாம இருக்க பாட்டுபாடுறவங்கள், அவங்கள் தான் பாடுறாங்களாக்கம் எண்டு அத கேட்டுக்கொண்டே இருந்தன்... சும்மா சொல்ல கூடாது பாட்டு நல்லா தான் இருந்தது.. கொஞ்சத்தில பாட்டு பெரிசா கேக்குதேண்டு பாத்தா உது யாரோ ரெண்டு பேர் மேளமும் அடிச்சு பாட்டும் பாடிக்கொண்டு வந்தவே... அவையள் ரெண்டு பேருக்கும் செரியான வயசு தான் ஒருத்தருக்கு ஒரு கால் இல்ல, மற்றவருக்கு செரியான வயசு, ஆனா கிழவன் சும்மா சொல்ல கூடாது மவுத்தோகன வாய்ல வைச்சது தான் தாமதம் என்ன ஒரு இசை மழையா!


இடைக்க இடைக்க பாட்டும் வேற பாடின படி, ஒரு இன்னிசக்கச்சேரியே போச்சு ரெய்னுக்க, அவையள் எடுக்கிறது பிச்சையா இருந்தாலும் நல்ல ஒரு இசைய எங்களுக்காக குடுத்து தான் காசு வாங்கினும்...

உத நான் ஏன் சொல்ல வாறன் எண்டா, பாவம் அவையள் இவ்வளவு கஸ்டத்துக்கையும் பாட்டும் பாடி சம்பாதிக்க நினைக்கேக்க நாங்க தானே அவையளுக்கு ஏதோ எங்களால முடிஞ்சத குடுக்கோணும், இலையெண்டுறியளே...? குறைஞ்சது ஒர்வா தனும் போடலாம் தானே! நான் பாத்தன் மனுசன் நல்ல வாசிக்கிது, பாடுது , மேளத்துக்கெ ஏற்ற மாரி நம்ம சில்க் மாரி இடுப்ப வழைச்சு வழைச்சு ஆடுது...

அவர்ட வயசுக்கு மீறின ஆட்டத்துக்காவது காசு குடுக்கலாம் தானே!

நான் ஒண்டு கவனிச்சிருக்கிறன் அது பஸ்சிலயும் சரி ரெயின்லையும் சரி ஆராச்சும் பாடேக்க அத கேக்கிறியள் பாக்கிறியள் எல்லாம் முடிஞ்சதுக்கு பிறகு அவர் பிச்சை எடுத்துக்கொண்டு வாறார் எண்டோன காத சொறிவியள், ரெலிபோன தூக்கி காதுக்க வைப்பியள், பக்கத்தில இருக்கிறவரோட கத குடுப்பியள் ஏன் நித்திரையே கொள்ளாம நித்திர மாரி கிடப்பியள்...

ஏன் இந்த அற்ப நாடகம்....? நீங்க மற்றவைக்கு உதவுறதால உங்கட வயசு குறைஞ்சிடுமா...? இல்ல என்ன காரணத்துக்காக பிச்சை போட மறுக்குறீங்க...? அத தான் விடுவம் பிச்சக்காரன் என்ன நீங்க போடுற காச பாத்து உது காணாது இன்னும் கொஞ்சம் போட்டு தா எண்டா கேக்கிறான்...?
ஒவரு நாளும் தன்ர வயித்துப் பசிக்கா பிச்சை கேக்கிற பிச்சைக்காரர்களுக்கு உதவி செய்ங்க... நீங்க வாழ்கைல நல்லா இருப்பீங்க....

அதுக்காக எல்லா பிச்சைகாரங்களுக்கும் குடுங்க எண்டு சொல்ல வரேல, எனக்கு தெரியும் நான் எத்தினையோ பிச்சக்காரங்கள் கஸ்டப்படுறமாரி கத எல்லாம் சொல்லுவாங்கள் ஆனா காச நல்லா சேத்திட்டு நேர நவீன தவறணை (பார்)க்கு தான் போவாங்கள், குடிச்சு வெறிச்சு அதே றோட்டில விழுந்தும் கிடப்பாங்கள்... அவர்களை நீங்க இனங்கண்டா பாத்தும் பாராம இருங்க, உண்மையாவே பசிக்காக சாப்பாடு தேடி தன்னால எது முடிதோ அத பண்ணி உழைப்பு கேக்கிற பிச்சைக்காரங்களுக்கு சிறு உதவியாவது செய்ங்க...!

உது நான் ஆர்ட மனசையும் காயப்படுத்த சொல்லேல மனசில பட்டது சொல்லிட்டன்... தப்பு இருந்த மன்னிச்சுக்கொள்ளுங்க.... :)

Thursday, May 24, 2012

அவள் காவியா...!

அம்மா காவியா!
குஞ்சு காவியா எழும்பு விடிஞ்சு நேரமாச்சு எழும்பி போய் கால் முகத்த கழுவிட்டு வா பிள்ள...

அனுக்கம் கலந்த குரலில் அவளது அம்மா அவளை துயில் எழுப்புகிறாள்! என்னம்மா இப்ப தானே படுத்தன் இன்னும் கொஞ்ச நேரம் படுக்க விடம்மா எண்டு சினுங்கிய படியே சோம்பல் முறித்து மறு பக்கம் திரும்பிப் படுக்கிறாள் காவியா!

இப்பிடி அதிக நேரம் காவியா தூங்குவதில்லை, மிகவும் சுறு சுறுப்பான பிள்ளை அவள்! காவியாவின் நீண்ட நேர உறக்கமும், சோம்பலும் அவளது அம்மாவிற்கு சந்தேகத்தை எழுப்பியது! காவியா அருகே சென்ற அம்மா அவளை பார்த்த போது அவள் முகத்தில் ஏதோ வாட்டம் தெரிந்தது!

பொதுவா காவியா தான் சோகமா இருக்கிற நேரங்களில தன்ர கடந்த கால நிகள்வுகள அதிலும் தன்ர பள்ளிப் பருவ வாழ்க்கைய, தன்ர நண்பி துளசியோட தான் செய்த குறும்புகள நினைச்சு தன்னை ஆறுதல்ப்படுத்திக்கொள்ளுவாள்...

அம்மா கேக்கிறா...

பிள்ள உனக்கென்னாச்சு, நீ இப்பிடி ஒருகாலமும் இருக்கிறதில்லையே! அம்மாக்கு சொல்லு ராசாத்தி எண்டு அம்மா காவியாவிடம் கருசனையாக பேச, அது ஒண்ணும் இல்லை அம்மா என்று சொல்லிக்கொண்டே காவியா அம்மாவிடம், அம்மா என்ர கால எடுத்து தா என கேக்கிறாள் (காவியாவிற்கு போரில் அகப்பட்டு ஒரு கால் அகற்றப்பட்டது, துணைத் தடிகள் வைத்தே அவள் தன் கடமைகளை செய்பவள்) அம்மா எடுத்து குடுக்க சிறிய சிரிப்போடு எழுந்து தனது அன்றாட கடமைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற ஆரம்பிக்கிறாள்.

காவியா தான் ஊனம் ஆனவள் என ஒரு நாள் கூட ஏங்கியதில்லை அவளது ஏக்கத்துக்கும் , கவலைகளுக்கும் காரணமாய், தன்னால் சுயமாக ஏதாவது வேலையை செய்து சொந்த காலில் நின்று அம்மாவை தான் பார்க்க வேண்டும் என்பதாகவே இருந்தது. ஆனால் அவளது வேலைகள் அனைத்தும் வீடளவிலே மட்டுப்படுத்தப்பட்டமையே அவளது வாட்டத்துக்கு காரணம்.

தன் பிள்ளை ஊனம் ஆனவள் என்பதாலே காவியாவின் அம்மா அவளை இன்னும் சிறு குழந்தையை பராமரிப்பதைப் போலவே பார்த்துவருகிறாள் ஆனால் அவள் மகள் சுறுசுறுப்பானவள் என்பதை அம்மா அறிய முற்படவில்லை.

காவியா காலையில் இருந்து மாலை வரை தன் வேலை முதற்கொண்டு அம்மாவிற்கான வேலை வரை அனைத்தையும் முடித்துக்கொண்டு மெல்லவே ஓய்விற்கு வந்து படிக்கட்டில் அவரவே அவளது மாமா படலையில வந்து அம்மா காவியா....? என்று கூப்பிட்ட படி உள்ளே வருகிறார், அட வாங்க மாமா என்று அன்பு கலந்த வார்த்தைகள் கொண்டு தன் மாமாவை வரவேற்கிறாள் காவியா! தன் தம்பியின் குரல் கேக்க அடுப்படியில் இருந்து முந்தானையில் கைகளை துடைத்தபடி விரைந்து வருகிறாள் காவியாவின் அம்மா,

வா தம்பி என்ன புதினம், கன காலம் இஞ்சால பக்கம் காணவே இல்ல. என்ன பிஸியோ அப்பிடி எண்டு கேட்ட படி தன் நெற்றி வேர்வைய புறங்கையால் துடைக்கிறாள் காவியாவின் அம்மா.

அது ஒண்ணும் இல்ல அக்கா, உந்த வீடு கட்டிற அத்தடிக்க நான் ஒரு இடமும் அசயேல உப்பிடியே மணல் ஏத்திறதும் கல்லு பறிக்கிறதிலையும் ஒரே ஓடுப்பட்டுத் திரிஞ்சன் அது தான் வர ஏலாம போச்சு!

பிறகு காவியா சொல்லு நீ என்னம்மா செய்ற? அம்மாக்கு உதவி ஏதும் செய்றியா எண்டு சிறு சிரிப்போடு கேக்கிறார் காவியாவிடம், காவியா பதில் சொல்ல முன்னமே அவளது அம்மா பதில் சொல்லுறா!
அத ஏன் கேக்கிற நீ, ஒரு இடத்தில நில்லாள்! எப்ப பாரு எங்கையாச்சும் திரிவாள், நான் செய்ய வேண்டிய வேலை எல்லாம் அவளே செய்றாள். நான் எவளவு சொன்னாலும் கேக்கிறாள் இல்ல, மாமா நீ சொன்னா தான் கேப்பாள்.

அதுக்கென்ன அக்கா! என்ர மருமகள் சுறுசுறுப்பான பிள்ள தானே! அப்ப அப்பிடி தானே இருப்பாள். பாவம் விதி காவியாவ ஊனமாக்கிட்டு எண்டு சொல்லிய படியே காவியாவின் காலை பாக்கிறார் அவர். மாமா தனக்கு கால் இல்லை எண்டதை ஞாபகப்படுத்திட்டார் என நினைச்சு கண்கலங்கி மெல்ல வானம் பாத்து நிக்கிறாள் காவியா.

காவியாவின் கண்களில் கலக்கத்தைக் கண்ட மாமா, உடனே அவளை வழிப்படுத்த காவியா! நீ சொந்தமா உழைக்க நான் ஒரு வழி சொல்லட்டே என்று பேச்சுக் குடுத்தார், உடனே காவியா முகத்தில் அப்பிடியொரு மலர்ச்சி, ஓம் மாமா ஏதாவது நல்ல உருப்படியா சொல்லுங்க நான் நல்லா செய்து முன்னுக்கு வருவன் எண்டாள் காவியா.

ம்ம்ம்...

காவியா உனக்கு தான் வாகனங்கள் எண்டாலே செரியான பைத்தியம், உன்ர மச்சான்ர CD 100 மோட்டச்சைக்கிளையே எடுத்து ஓடினாளாச்சே! ஏன் நீ ஓட்டோ ஒண்டு வாங்கி ஓட கூடாது எண்டு மாமா கேக்க, இடையே குறுக்கிடுகிறாள் காவியாவின் அம்மா... ஏன் தம்பி! நீ தெரிஞ்சு தான் பேசிறியா? காவியாட நிலை தான் உனக்கு தெரியுமே அப்பிடி இருக்க ஏன் நீ இப்பிடி ஒரு யோசின சொல்லுற உனக்கென்ன புத்தி கித்தி கெட்டு போச்சா எண்டு திட்டுகிறாள் காவியாவின் அம்மா.

அதுக்கு மாமாவின் பதில் வர முன்னமே காவியா தன் அம்மாவிடம் கோவமாக சொல்லுகிறாள், இப்பிடி என்னை காலில்லாதவள், ஊனம் ஆனவள் எண்டு நீங்களே சொல்லி சொல்லி ஏன்மா என்ன நோகடிக்கிறீங்க? நான் ஒருகாலமும் எனக்கு ஒரு கால் இல்ல எண்டு யோசிச்சதே இல்ல. என்னால எல்லாம் முடியும் எண்டு வீறாப்போடு சொன்னாள் காவியா, காவியாவின் குரலில் ஒரு தன் நம்பிக்கை துளிர்விட்டிருந்தது.

மாமா தொடர்கிறார்......

அக்கா! காவியா தைரியசாலி, தன்னம்பிக்கையானவள் அவள்ட பிடிவாதம் தான் உனக்கு தெரியுமே அக்கா ஒரு ஓட்டோ ஒண்ட தான் வாங்கி குடுத்துப்பாப்பமே. அது அவளுக்கு பிடிச்சிருந்தா அப்பிடியே அத செய்யட்டும் இல்லாட்டி வேற ஏதாவது வழிய பாப்பம். இப்பிடியே வீடு வளவு எண்டு எவளவு காலம் தான் அவளும் வீட்டுக்கையே இருக்கிறது. நாலிடத்துக்கு போய் பழகத்தானே வேணும்.

எண்டாலும் தம்பி அவள் ஒரு பொம்பிள பிள்ள, அத விட இப்ப நாடு இருக்கிற நிலமல இது தேவ தானா? பேசாம ஒரு தையல் மிசின வாங்கி தைக்க பழக்கினா அவள் வீட்ட இருந்தே தைப்பாள்! இப்ப தான் ஏதோ மோட்டர் போட்ட தையல் மிசின் இருக்காமே...? அதவிட்டிட்டு வாகனம் கீகனம் எண்டுற! தச்சேலா ஏதும் நடந்திட்டா...?

ஐயோ அக்கா, அவள் என்ன யாழ்ப்பாணம் கொழும்பு பஸ்ஸா ஓட போறாள் ஓட்டோ தானே ஓட போறாள் அதுவும் பகல்ல குறிப்பிட்ட ஒரு கொஞ்ச தூரத்துக்கு தானே. அவள் எல்லாம் நல்லபடியா செய்வாள் அக்கா, நீ ஒன்னுக்கும் யோசியாத.
அவளுக்கு நம்பிக்க குடுக்கவேண்டிய நாங்க நம்பிக்க இல்லாம கதைச்சா என்ன தான் ஆகிறது.
சரி அக்கா இருட்டுது நான் போய்ட்டு பிறகு வாறன், காவியா ஓட்டோ விசயத்த நான் நாள நாளண்டைக்கு சொல்லுறன் நாங்க போய் பாத்து எடுப்பம் எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் இருக்கிறார் அவரிட்ட ஓட்டோ வாடகைக்கு எடுக்கலாம்னு நினைக்கிறன், எதுக்கும் நான் கேட்டிட்டு சொல்லுறன்.

சரி நீ எதுக்கும் யோசியாத, அக்கா நீயும் தான். போய்ட்டு வாறன்..

மாமா படலைய தாண்டி போய்விட்டார்.............

காவியாவின் மனதில் அப்பிடியொரு சந்தோசம். வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கனும் போல தோணிருக்கும் அவளுக்கு. காவியா தன் கனவிலையே வாழ்கைய ஆரம்பிச்சு நடத்த ஆரம்பிச்சிட்டாள். நிம்மதியான தூக்கம், விடியக்காலம வழக்கம் போல எழும்பிறது எண்டு எல்லாமே ரிப்ரொப்பா நடக்கிது....

ஒருவாரம் உருண்டோடியது.....................

காவியா வீட்டு வாசலில் ஒரு ஓட்டோ வந்து நிண்டது. அது தான் காவியாவின் வாழ்கையில் அவள் ஒரு காவியம் படைக்க உந்து சக்தியானது.
விரைவாய் ஏறி இருந்துகொண்டாள் பிறகு அம்மா வாங்க மாமா வாங்க எண்டு ரெண்டு பேரையும் ஓட்டோக்குள் ஏற சொன்னாள் மெல்லமாக ஓட்டம் எடுத்த அவள் சந்தோசத்தின் உச்சத்தில் வேகத்தை கூட்டிக்கொண்டே போனாள், ஒரு கட்டத்தில் அவளது அம்மா பிள்ள கொஞ்சம் மெதுவா போ! பயமாகிடக்கு! கண்டபாட்டுக்கு யாரும் கொண்டந்து குறுக்க விட்டிடுவாங்கள் பிள்ள. பாத்து போ எண்டு சொல்லிக்கொண்டே இருந்தாள். அட சும்ம இரம்மா நீ எண்டு சொல்லி ஊரெல்லாம் சுத்தி தன் வீட்டு வாசலில் கொண்டுவந்து நிப்பாட்டினாள் காவியா...!

படிப்படியாக அவளது தொழில் வளர்ச்சிகண்டது....

நிஜாயமான உழைப்பு , நேர்மை, நேரசூசி, கட்டுப்படியான காசு எண்டதால அந்த ஏரியாக்காரர்களுக்கு வாடிக்கையான ஓட்டோக்காரியானாள் காவியா. இப்பிடியே நாட்கள் கரைந்தோடியது.

ஒருநாள் தன் அம்மாவையும் ஏத்திக்கொண்டு சந்தைக்கு போட்டு வாற வழில தனது ஓட்டோக்கு குறுக்காக கைக் குழந்தைய தூக்கிக் கொண்டு ஒரு பெம்புள கடக்கிறத கண்டோன ஓட்டோவ சடுதியா நிறுத்திக்கொண்டாள் காவியா, நிறுத்திய வேகத்தில சரிஞ்சு விழுந்த கூடைக்க இருந்த தேங்காய் றோட்டில விழுந்து குழந்தைய தூக்கிக்கொண்டு நிண்ட பெண்மணின்ர காலில பட்டு கிடந்திச்சு அத எடுக்க போன காவியா கிட்டப்போய் பாத்ததும் அதிர்ச்சியடைஞ்சிட்டாள், அது வேற ஒண்ணும் இல்ல கையில குழந்தைய தூக்கிக்கொண்டு பிச்சை எடுக்கிறது அவளது உயிர் நண்பி துளசி.

இவ்வளவு காலமும் தன்ர நண்பி தன்னவிட்டு பிரிஞ்சிட்டதாவே இருந்துவிட்டாள் காவியா! எல்லாம் உந்த சண்டையின்ர விளைவுகள்...

யாராலையோ ஏமாத்தப்பட்டு, குடும்பத்த துலைச்சு நடு றோட்டில பிச்சை எடுத்துக்கொண்டு நிண்ட துளசிய கண்டதும் காவியா மலைத்துப்போய் நின்றுவிட்டாள் அதே கணம் தன் நண்பி கால் இழந்து தடிகளில் தன்னை தாங்கி நிப்பதைக் கண்ட துளசிவாயடைத்து நின்றாள்.

இருவரிடையிலும் பேச்சுப்பரிமாற்றங்கள் தடைப்பட்டு இருந்தது. இடையிட்ட அம்மா துளசி!!! என்னம்மா உன்ர கோலம்! என்னாச்சு உனக்கு! அழுகுரலில் அரவணைத்துக் கொண்டாள் அவர்கள் மூவரையும் ஒன்றாய்...!

சிறிது நேரம் கழிய காவியா பழைய நிலைக்கு திரும்பி நண்பிகள் இருவரும் தம் சொந்தக்கதை சோகக்கதைகளை ஒருவருக்கொருவர் சொல்லி ஆறுதல் படுத்திக் கொண்டனர்... காவியா தனது  முயற்சி, சுறுசுறுப்பு வேலை எல்லாவற்றையும் துளசிக்கு சொல்லிக்கொண்டிருக்க துளசிக்கு காவியா ஒரு அதிசயமாக தெரிந்தாள்!

கால் போனாலும் காவியா நீ ஒரு காவியம் படைத்த வீர பெண் என அவள் தோள் தட்டி அதே பழைய தன்னம்பிகை குடுத்தாள் அவள் உயிர் நண்பி துளசி!




மனிதருக்கு ஊனம் ஒரு குறையில்லை - முயன்றால் முன்னேறலாம் என்ற தொணிப் பொருளுக்குள் அடக்கப்படும் காவியா என்ற பெண்மணியின் காவியம்.

Saturday, May 12, 2012

உயிரும் நீயே.........!


அம்மா...!
அன்னையர் தினமென்று 
இதயத்தில் சொல்லெடுத்து
வார்த்தைகளாய் கோர்ப்பித்து
வரைக்கிறேன் ஓர் மடல்!

அம்மா இது உனக்கு  
பாசமே உருவான என் வாழ்த்து மடலாகட்டும்!

கணப்பொழுதும் கலங்காது 
என்னை ரட்சிக்கும் ஆருயிரே
உன் 
நினைவெல்லாம் நானாய்
நித்தமும் நினைத்தபடி 
என் வாழ்க்கைக்கும் அர்த்தம் தந்த தாயே! 
உனக்கு என் கோடி நன்றிகள்!

என்
சோர்விற்கும், தோல்விக்கும்
என்றும் துணை நிற்பது உன்
மடி தான் அம்மா! 
தூக்கம் தொலைத்த பொழுதுகளில்
உன்னைக் கட்டியணைத்து 
குறுகிப் படுத்த மாத்திரத்தில்
தூக்கம் தருவிப்பதும் நீயே அம்மா!  

சின்னக் கோபங்கள், சிறு தண்டிப்புக்கள்
பாசமான பேச்சுக்கள், அன்பான அரவணைப்புக்கள்
என் வாழ்க்கையின் நல்வழிக்காய்
நீ செய்த முயற்சிகள்...! 

நான் வெற்றி பெற்ற நாட்களில்
நீ
உச்சி மோர்ந்து 
தலை கோதிய கணங்களை
எண்ணிப்பார்க்கிறேன்...
பனிக்கிறது என் கண்கள்! 

கால நேரம் தவறாது 
எனக்கான பணிவிடைகள் 
கச்சிதமாய் செய்யும் தாயே!
இன்று! இது! 
உனக்கான நாள் அம்மா! 

அம்மா!
உன்னை நினைக்கும் போது
சிலிர்க்கும் என் தேகம்
அந்த நொடி தாய்மையின் உச்சக்கட்டம்!

என் வழிகாட்டி, கலங்கரை விளக்கு
முன்னோடி எல்லாமாய் நீயே அம்மா!

நடமாடும் தெய்வமாய்
அகிலமெங்கும் பரந்திருக்கும்
தாய்மை என்ற மந்திரத்தின்
அரசிகட்கு! 
என் மனம் கனிந்த 
அன்னையர் தின வாழ்த்துக்கள்
உரித்தாகட்டும்...!














Monday, April 16, 2012

திருந்துவார்களா இவர்கள் - சீரழியும் பஸ் சேவை (A9)

எந்தவொரு தனி மனிதனுக்கும் தனது சொந்தமண்ணுக்கு, தான் பிறந்து வளர்ந்த இடத்தை நாடிச் செல்லும் போது மனதளவில் பலத்த எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது! இதை எவராலும் மறுத்துவிட முடியாது. அவ்வாறான காலகட்டம் இப்போ அடிக்கடி நம்மவர்களுக்கு அனுபவமாக, நிகழ்வுகளாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது! அது வேறு எதுவும் அல்ல! யாழ்ப்பாணம் - கொழும்புக்கிடையிலான போக்குவரத்து தான். நம் சொந்த ஊருக்கான பயணம்.


தத்தமது சொந்த இடங்களுக்கு செல்வதெனும் போது பலவாறான கற்பனைகளை தமக்குள்ளே தீட்டி வைத்துக் கொள்கிறார்கள், அது மட்டுமல்லாமல் அந்த கனவுகள் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் தமக்கான தயார்ப்படுத்தல்களில் ஈடுபட்டுக்கொள்கிறார்கள்!

இவ்வாறான தயார்ப்படுத்தலின் இறுதிக்கட்டமாக தொடர்வது தான் போக்குவரத்து ஊடகம்! அதாவது தாம் தமது சொந்த இடங்களுக்கு செல்வதற்கான போக்குவரத்து சேவை. பலருக்கு தெரிந்திருக்கும் யாழ் - கொழும்பு A9 வீதியூடான பயணத்திற்காக பல்வேறு பட்ட பேருந்துச் சேவைகள்

நடாத்தபட்டுக் கொண்டிருக்கின்றது. அரசாங்கம் மற்றும் தனியார் இணைந்து இந்த போக்குவரத்து சேவையை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இது வரவேற்க்கத்தக்க விடயமாக இருக்கிற போதிலும், ஒரு சில பஸ் சேவைகளின் குழறுபடிகளால் அவ் பஸ் சேவைகள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சம் குறைவடைந்து கொண்டே செல்கின்றது என்பதையும் யாராலும் மறுத்துவிட முடியாது.
தனியாரால் நடாத்தப்படும் பஸ் சேவைகளை அரை சொகுசு, சொகுசு, கடுகதி என பலவகைப்படுத்திக் கொள்ளலாம். பெயர்கள் என்னவோ கேட்பதற்கு ஆசையாக இருந்தாலும் சேவை தரமானதா என்ற கேள்வி எழும்போது அதற்கான பதில் தற்காலத்தில் கொஞ்சம் ஆட்டம் காணுகிறது என்றே கூற வேண்டும்!

யாழ் கொழும்புக்கிடையிலான பிரயாணத்தைப் பொறுத்தவரையில் என்னை விட பல தடவைகள் சென்றுவந்தவர்கள் பலர் இதை படித்துக்கொண்டிருப்பீர்கள்! உங்களுக்கு நிச்சயமாக புரிந்திருக்கும் நான் சொல்ல வரும், சொல்லிக்கொண்டிருக்கும் விடயத்தின் உண்மைத்தன்மை.

மக்களின் தேவைக்கேற்ற சேவை கிடைக்காதவிடத்து சேவைக்கான தேவையும் மக்களால் புறந்தள்ளப்பட்டுக்கொண்டே செல்லும்! பஸ் சேவையானது சிறப்புற நடக்கவேண்டும் என்றால் மக்களின் நன்மதிப்பை பெற்றுக் கொள்ளவேண்டியது முக்கிய இடத்தைப் பெறுகிறது.
அவ்வாறான சேவையை ஒரு சில பஸ் உரிமையாளர்களே தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் நிரந்தரம் இல்லை என்று தான் எண்ணத் தோன்றுகிறது.


சில பஸ் உரிமையாளர்கள் நடத்துனர்கள் மற்றும் வாகன ஓட்டுணர்கள் பயணிகளை எவ்வாறு நடத்தவேண்டும் என்ற போதிய அறிவே இல்லாமல் ஏதோ ஆடு மாடுகளை விரட்டுவதைப் போல பேசிக்கொ(ல்)ள்வார்கள். அது அவர்களது சின்னத்தனத்தையே எடுத்துக்காட்டிக் கொள்கிறது அது மட்டும் அல்லாமல் பயணிகள் மத்தியில் அவர்களுக்கான அவப்பெயரை தாமே ஏற்படுத்திக் கொள்ள வழிசமைக்கிறது.

இது ஒருபுறமிருக்க...

முன்னரைப்போல் அல்லாமல் பஸ் சேவைகள் முழுக்க முழுக்க வியாபார மயமாக்கப்பட்டு வருகிறது. அதற்கான சில உதாரணங்களை நான் இங்கே முன்வைக்கின்றேன்...!
முற்பதிவுக்காக செல்லும் பயணிகளுக்கு ஒரு ஆசனத்தை பதிவு செய்து அதே ஆசன இலக்கத்துக்கு வேறு ஒருவரையும் பதிவு செய்தல்!
இதற்கான காரணம் ஒன்று பணமதிப்பு மற்றையது ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் ஒரு பஸ்ஸுக்கான பதிவுகளை மேற்கொள்ளல்.
முன்னர் எல்லாம் பெண்களுக்காக ஒரு ஆசனம் ஒதுக்கப்பட்டால் அதற்க்கு பக்கத்து ஆசனத்தில் ஒரு பெண்ணையே பதிவு செய்வது வழக்கம், ஆனால் இன்று அது மருவி விட்டது.
பஸ் பதிய செல்லும் பயணிகளிடம் நல்ல பஸ், முன்னுக்கு சீட், அட்யஸ்ட் பண்ணலாம் சீட்ட! நேரத்துக்கு போய்டும், நேரத்துக்கு எடுப்பம் எண்டு ஈர்வையாய் பேசுவதில் உள்ள உண்மைத் தன்மை பஸ்ஸில் ஏறியவுடன் பொய்த்துவிடும்.

இது எல்லாவற்றுக்கும் காரணங்கள் என்று பார்க்கப்போனால், ஒன்று வியாபாரமயமாக்கப்பட்ட போக்குவரத்து சேவை, பதிவுகள் மேற்கொள்ளுகையில் உள்ள விசுவாசத் தன்மையின்மை, ஏனோதானோ என்ற பற்றற்ற சேவை, பதிவுகளில் உள்ள போட்டி.

இது முழுக்க முழுக்க பயணிகளை நம்பி நடாத்தப்படும் சேவை. ஆகவே பயணிகள் நிச்சயமாக சிறந்த பயனை பெற்றுக்கொள்ளவேண்டும். அவர்களால் கொடுக்கும் பணத்திற்கேற்ற சேவையை பஸ் உரிமையாளர்களாக இருக்கட்டும், ஓட்டுணர் நடத்துனராக இருக்கட்டும் கட்டாயம் மக்களுக்கு, மக்கள் மனங்களுக்கு வழங்கி மதிப்பழிக்க வேண்டியது உங்களது கடமையாகிறது.

தொடர்ந்தும் சிறந்த சேவையை மக்களுக்காக வழங்கிவீர்கள் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன்!

இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல! நான் கண்ட உண்மைத் தன்மையின் வெளிப்பாடு. யார் மனதையும் காயப்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்...!

இப்ப போறன் திரும்பி வருவன் வேற வில்லங்கத்தோட!!!!
பாய்...



Monday, February 13, 2012

என் காதலே...!

என் காதலே!

கண்கள் வழி இதயம் புதுந்து

என்னை நித்தம் கொல்லும்

என் காதலே!

இமைகளில் ஒரு கணம் இதமாய் வாழ்ந்துவிட்டு போவாய்

நீ!

தூக்கம் தொலைத்து என்னுள்

வலி கொள்பவன் நான் தானே!

புயலென வந்து

வலிக்காமல் இதயம் திருடும்

வித்தையை எங்கே தான் கற்றாயோ!

இன்றும்

உனக்காய் வரைந்த காதல் கடிதங்கள்

சட்டைப் பைக்குள் ஏராளம்!

அவை ஓர் குட்டி நூலகம் என்பேன்!

எனக்குள் சேர்த்தேன்

உன் நினைவுகளை

ஓர்

பொக்கிஷமாய்!

அவையாவும் அழகிய கவிதையென்பேன்!

காதலர் தினங்களில்

காத்திருப்பு தான் என் காதலியாகிறது!

என்

தனிமைக்குளேயும் குதூகலமாய்

வந்து போகிறாய் நீ!

என் கனவுகளில் உனக்கே முதலிடம்!

என்னே! அழகாய் பேசிகிறாய் நீ!

உன் ஓரப் பார்வையில்

என்

கனவுகள் அனைத்தும்

உயிர் பெற்றெழக் காண்பேன்!

இனிமையான பேச்சுக்களில்

இலக்கியப் பாவையாகிறாய் - நீ!

தனிமையான நேரங்களில்

தளிர் விடும் பசுமையாகிறாய் - நீ!

தினம் ஓர் கற்பனைக்குள்

வாழ்ந்துவிட்டுப் போகிறேன் உன்னோடு!

கனவில் உன் நெருக்கம், காதல்

அது போதும் எனக்கு!

காலங்களுக்குள் கட்டுண்டவனாய்

உன் காதலின் வாசல் தேடி

இன்றும் காத்திருக்கும் உன் காதலன்!
















நினைவுகளோடு,

யாசித்திருக்கும் உன் காதலன்!

பிறேம்!

Saturday, February 11, 2012

போக்குவரத்து நெரிசலின் உந்துசக்தி - போக்குவரத்து பொலிஸ்

இதோ வந்திட்டேன்...!

கொஞ்ச நாளாவே யாரையாச்சும் வம்புக்கிழுத்து அரட்டையடிக்கிறதே எனக்கு வேலையா போச்சு. இளம் கண்று பயமறியாதாமே... என்னை சொன்னன்... லொலொ

இண்டைக்கு நம்ம நாட்டின் காவலர்கள், சேவகர்கள் பற்றி கொஞ்சமா சொல்ல போறன்! இவர்கள் தான் நாட்டின் தூண்கள் (முட்டுக்கட்டையான தூண்கள்) என்றால் மிகையாகாது!

போக்குவரத்து பொலிஸின் சேவை ஒரு நாட்டுக்கு இன்றியமையாதது. அதுவும் கொழும்பு போன்ற பெரு நகரங்களுக்கு போக்குவரத்து பொலிஸாரின் தேவை அத்தியாவசியமானது. பொதுவாகவே போக்குவரத்து பொலிஸ் என்பதன் விளக்கம். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவது தான் என்று நம் எல்லோருக்கும் தெரிந்த விடயமே!

இருந்த போதும் நமது நாட்டில் போக்குவரத்து பொலிஸ் என்பதன் விளக்கம் சனமே இல்லாத இடத்தில் சன நெரிசலை ஏற்படுத்துபவர்கள் என்று பொருள்படுகிறது.
இத நான் சொல்லேல பொதுவா எல்லாரும் தான் சொல்லுறாங்கள். அதுக்காக என் மேல கோபப்படாதீங்க சொல்லிப்போட்டன்.

எங்கெல்லாம் சனமே இல்லையோ அங்கெல்லாம் கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் வரைக்கும் சன நெரிசலை ஏற்படுத்துவதே இவர்களின் அளப்பெரிய சேவை! அதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக செயற்படுகிறார்கள்.
இதனாலேயே வீதிகளில் கொஞ்சமாக வாகன நெரிசலை கண்டவர்கள் மனதில் உடனே எழும் சந்தேகம் போக்குவரத்து பொலிஸ் ஏதும் கடமையில் நிற்கிறார்களோ என்பதே!
மனசத் தொட்டு சொல்லுங்கப்பா! நான் சொன்னது உண்மையோ இல்லையோ!

இதற்கு, இந்த போக்குவரத்து பொலீஸாரால் ஏற்படுத்தப்படும் போக்குவரத்து நெரிசலுக்கு பல காரணங்களை சொல்லிக்கொள்ளலாம்!
குறிப்பாக அனுபவமில்லாத இளம் பொலீஸாரை கடமையில் ஈடுபடுத்தல். அவர்களால் தங்களையே கட்டுப்படுத்த தெரியாதவர்கள் எப்படி வீதிப் போக்குவரத்து ஒழுங்கு முறைகளை கைக்கொண்டு நெரிசலைக் கட்டுப்படுத்த போகிறார்கள்.

தேவையில்லாத தருணங்களில் வீதிகளை மறியல் போடுதல், அதுவும் குறிப்பாக மந்திரி, தந்திரி வாறாராம் எண்டு யாராச்சும் புரளிய கிழப்பினாலும் சரி உண்மையா சொன்னாலும் சரி இதையே குறிக்கோளா வைச்சு காலைல இருந்து வெய்யில் காஞ்சு வீதிகளை மறியல் போட்டு நெருக்கடிகளைத் தாங்களாவே ஏற்படுத்திக் கொள்கிறார்கள்!
பின்னர் அதையே அறக்கபறக்க அப்புறப்படுத்த முயற்சிப்பது! இது சிறந்த திட்டமிடல் இல்லாமையின் வெளிப்பாடு என்றே சொல்லிக்கொள்ளலாம்.

இதுக்கெல்லாம் அப்பால் போக்குவரத்து நெரிசலுக்கு பொலிஸாரையே காரணகர்த்தா ஆக்குவதை விட நம்மவர்களிலும் சில தவறுகள் இருக்கதான் செய்கிறது! அதுவும் குறிப்பாக அளவுக்கு மீறிய பேருந்து போக்குவரத்து சேவைகள், அதிகரித்த முச்சக்கர வண்டிகள் பாவனை! இதனாலும் அதிகம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது!

இவற்றைக் கட்டுப்படுத்துவதே போக்குவரத்து பொலிஸாரின் மிகப்பெரிய சவாலாக காணப்படுகிறது! ஆனாலும் அதிலே இன்றும் அவர்கள் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள். நம்மவர்களும் விடுவதாய் இல்லை. கெடுகிறேன் பந்தையம் பிடி எண்ட கணக்கில் அவர்களும் குறுக்கும் நெடுக்குமாக வாகனங்களை செலுத்திய வண்ணமே இருக்கிறார்கள்.

இப்படியான செயற்பாடுகளால் திறமையான பொலிஸார் பலரின் திறமைகள் வீண் போகின்றது! எது எவ்வாறு இருந்தாலும் போக்குவரத்து பொலிஸாரின் பணி இலங்கையைப் பொறுத்த வரையில் சரியான வகையில் கட்டமைக்கபடவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

அளவுக்கு அதிகமான வாகன பாவனை, தற்போதைய போக்குவரத்து நெரிசல், வீதி கட்டமைப்புக்கள் எல்லாமே இவற்றுக்கு வழிகோலும் அடிப்படைக் காரணங்களாக இருக்கின்றன, இருந்தும் வருகின்றன.

இவற்றையில்லாம் தாண்டி நெரிசலைக் குறைக்கும் வகையில் மின் சமிக்ஞைகள், பாதசாரிகள் கடவைகள் இருந்தும் அவ்விடங்களில் போக்குவரத்து பொலிஸ் ஒருவர் கடமையேற்கும் போது தானாகவே வீதி நெரிசல் ஏற்படுகிறது.

ஆகவே போக்குவரத்து நெரிசலின் உந்துசக்தி போக்குவரத்து பொலிஸாரே....!

பொலிஸ் மாமாஸ் என்னை மன்னிச்சுக்கோங்கோ.... ஐயாம் பாவம்!

இனி காதலர் தினத்தில காதலியோட வாறன்...! பாய்!

Friday, February 10, 2012

உதுகள் திருந்தவே திருந்தாதுகள்...!

வணக்கமுங்கோ...!

இதோ வந்துட்டேன்! சின்ன விவகாரமான விசயத்தோட தான் வாறன் றோட்டில கீட்டில கண்டா ஆள் வைச்சு அடிச்சு போடாதீங்கோ! பொடியன் பாவம்....!

என்ன பெரிசா ஒண்ணும் சொல்ல வரல! நம்மட சனத்தப்பற்றி ஒரு நாலு விசயம் கண்டறிஞ்சன் அத யாரிட்டையாவது சொல்லனும் போல இருக்கு அது தான் இதுல வந்து பகிரங்கமா ஊதிட்டு போலாம்னு ஒரு முனைப்பு தான்.... லொலொ!

போன கிழம நான் யாழ்ப்பாணம் போயிருந்தன்!
என்னென்னமோ அபிவிருத்தி எண்ட பேர்ல செய்திருக்கிறாங்களப்பா... அதுக்கு பாராட்டு மாலை தெரிவிக்கிற வகைல றோட்டு முழுக்க மண் புளுதி! உது தான் யாழ்ப்பாணமா எண்டு ஒரு சந்தேகம் வேற!

எப்ப யாழ்ப்பாணத்துக்கு போனாலும் இன்னும் மாற்றம் இல்லாம இருக்கிறது ஒரு சில விசயங்களும் நம்மடாக்களின்ர நடவடிக்கைகளும்.

பொதுவாவே எனக்கு யாழ்ப்பாணம் போனா மினி பஸ்சில ஏற பிடிக்கிறதில்ல! ஏன்னா அவங்கள் தங்கட வியாபார போட்டிக்காக நம்மள பலிக்கடா ஆக்கிர்றாங்கள்!
உவங்களின்ர பஸ்சில நெரிஞ்சு கொண்டு போகணும்னு எங்களுக்கென்ன தலையெழுத்தா...!
அவையளுக்கு எங்கள பாத்தா உமி, பஞ்சு, நெல்லின்ர ஞாபகம் வாறதோ என்னமோ! நம்மள போட்டு அந்த அடைசல் அடைவினும்!
விரலுக்கேத்த வீக்கம் இருக்கனும்! பஸ்சுக்கேத்த சனம் இருக்கணும்! அளவுக்கு மீறி ஆக்கள ஏத்தி போட்டி போட்டு எத்தினையோ மினி பஸ் இடிபட்ட, கவுண்ட தரவுகள் ஆறா வடுக்கள் இன்னும் இருக்குது.

ஆனாலும் உவங்கள் திருந்தவே இல்ல! உவங்களோட இப்பிடி சண்டை பிடிச்சு தான் பயணம் பண்ணனும் எண்ட அவசியம் எனக்கில்ல! என்னை போல பலருக்கும் இல்லை.

அடுத்தது!
எந்த பஸ்சில ஏறினாலும் ஒரு தாய் கைக் குழந்தைய தூக்கிட்டு வந்தா ஒரு மனுசர் கூட அந்த பொண்ணுக்கு இடங்குடுக்க தயாரில்ல! பாவம் அந்த தாய்மார் தங்கட குழந்தைகள தூக்கிக் கொண்டு பரிதாபமா நிப்பாங்க!
நம்மட ஆக்களுக்கு பழக்கவழக்கம் பூச்சியம்!

சத்தியமா சொல்லுறன் பஸ் பயணம், கரிசனை, பிறருக்கு உதவி எண்டத நம்மட சனம் எங்கட சிங்கள மக்களிட்ட இருந்து தான் பழகிக்கணும்!
இதுக்காகவே சிங்கள சனத்திட்ட ஒரு கிழம பயிற்சி எடுத்தா கூட தப்பில்ல எண்டு தான் நான் சொல்லுவன்!

அரை ரிக்கட்! முழு ரிக்கட் சண்டை பிடிக்கிறது கைக் குழந்தைக்கு அடை ரிக்கட் போடுறது! ரெண்டு பேர் இருக்கிற சீட்டில மூணு நாலு பேர நெருக்கி ஏத்திறது! ஏய்யா இந்த வெறி!
ஒரு கலியாண வீட்டுக்கு போற பெண் பஸ்ல ஏறி போனா அது இறங்கிறபோ கலியாண வீட்ட போற மாதிரியா போய்ச் சேரும்...?
இல்ல தெரியாம தான் கேக்கிறன் உவங்களுக்கு இந்த விசயத்தில மனசாட்சி தான் இல்லையா இல்ல சமயோசிதமா சிந்திக்க தான் தெரியலையா...?

ம்ம்...!
உவங்கள் திருந்தவே மாட்டாங்கள்!

அத தான் விடுவம் பள்ளிக்கூடத்துக்கு போனா வாத்திமாருக்க ரெண்டு பிரிவு! அதிபருக்கு பந்தம் பிடிக்கிற வாளி வைக்கிற கூட்டம் மற்றது வாத்திமாருக்கே வாளி வைக்கிற கூட்டம்!
வேலையே செய்யாம செய்ற மாதிரி பிள்ளைகளையும் ஏமாத்தி தங்கள, தங்கட முன்னேற்றத்துக்கு தாங்களே முட்டுக்கட்டையா இருக்கிற கோஷ்டி! உதுகளும் வாழ்க்கைல திருந்தவே திருந்தாதுகள்!

இன்னும் சொல்ல போனா படிபெல்லாம் முடிச்சிட்டு றோட்டில வெட்டியா அங்கையும் இங்கையும் திரிற கூட்டம்! இப்பெல்லாம் காலுக்கையும் கைக்கையும் ஓரே மோட்டச்சைக்கிள் தானே! பெடி பெட்டை எல்லாம்!
அதில வெட்டியா திரிறது தான் கூட!

இதுகள திருத்தவே முடியாது!
என்ன தான் சரியா சரியான நேரத்துக்கு திருந்தினாலும் ஒரு சிலர, அவங்களின்ர நடவடிக்கைகள திருத்தவோ மாற்றவோ முடியாது!
இது நான் என்ர வாழ்கைல, யாழ் நோக்கிய பயணத்தில கண்ட உண்மை!

திரும்பவும் சொல்லுறன் ஏதோ எண்ட மனசில பட்டிச்சு! சொல்லனும்னு தோணிச்சு சொல்லிட்டன்!
ஏற்றுக்கொள்ளுறவங்க ஏற்றுக்கொள்ளுங்க!

அப்ப போய்ட்டு வரட்டே!
கூடிய சீக்கிரம் திரும்ப வாறன்....! பாய்!

Tuesday, February 7, 2012

நாகரிக மோகம்

து நான் வரைந்த கவியரங்க கவிதைகளில் முதலாவது கவி! நாகரிக மோகம் எனும் தலைப்பில் வரைந்தது...!

இறை வணக்கம் :

தமிழ் எனும் அமுது தந்து
தரணியெங்கும் புகழ் பரப்ப
எனக்கருள் பொழியும்
பரம் பொருளே - உமக்கு
பல கோடி வணக்கங்கள்...!

தமிழ் வணக்கம் :

தீந்தமிழ் சொல்லெடுத்து
தீராமல் நான் பேச
அலையென அள்ளி வரும்
என் தமிழே!
உனக்கோர் சக வணக்கம்...!

அவையடக்கம் :

மூத்தோர் குடி தனிலே
சிறியோன் கிறுக்கல் தனை
எடுத்தியம்ப வந்துள்ளேன்
நான்
கற்றவைகள் சில!
அடியேன் கல்லாதவை பல!
தவறுகள் தலை தூக்கின்
தன்மையோடு மன்னியுங்கள்!

நாகரிக மோகம்

நாடு செழிக்க நானிலம் வேண்டுமாம்
நாடு பற்றி யாருக்கிங்கே கவலை
நாம் ஒண்டு! வாழ்வொண்டு!
நாசுக்காய் வாழ்ந்திவிட்டு போவோம்!

வாழ்வியல் பாதையிலே எத்தனை திருப்பங்கள்
துல்லியமாய் வாழ்வதிலே குறியாய் இருக்கிறார்கள்
தன் வீடு!
தன் குடும்பம்!
தன் சொத்து! என்று
தனக்கென வாழ்பவர்கள் தாராளமாய் இங்கே!

தன்னியல் மேம்பாடு! சுயநல கோட்பாடு!
எடுத்தியம்ப முடியாத வாழ்க்கையின் படிப்பினைகள்!
புது வாழ்க்கைப் பயணத்தில் திணிசு திணிசாய்
சிந்திக்கிறார்கள்!
நாகரிக மோகத்தில் கண்டபடி பறக்கிறார்கள்!

மொழியியல் மோகம்!
நடையியல் மோகம்!
குணயியல் மோகம்! என்று
எல்லாமே மாற்றம் தான்!

அழகு தமிழ் அரைகுறையாய்
கலப்பு மொழி நிறை மனதாய்!
அப்படி என்ன கண்டீர்கள் கலப்பு மொழி
பயன்பாட்டில்!
தாய் மொழி பேசிட வெட்கம்!
ஆங்கில மோகம் அது நாகரிக தலை நகரம்!
அம்மா முதல் அம்மி வரை அனைத்துமே
ஆங்கிலத்தில்...
வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிலம்!
தமிழ் பேசும் குழந்தைகள்
தங்கிலிஸ் பேசிறார்கள்...!

என் பிள்ளைக்கு இண்டர்நஷனல் ஸ்கூல் அட்மிசன்
இடைவிடாத படிப்பு!
எண்டர்ரெயின்மெண்ட் டைம் எண்டு
ஏதும் இல்லை அவனுக்கு!
பிறகென்ன வாழ்க்கை இது!

ஆள் பாதி! ஆடை பாதி!
அதிகமாய் பரவும் தொற்று வியாதி!
ஆள் வளர ஆடை குறையும்!
இது தான் புது மொழியோ?

பெண் பூவை, கோதை, மடந்தை
எவன் சொன்னான் பைத்தியக்காரன்!
பெண் என்ற பதம் போய்
எது பெண் எது ஆண் என்று
அடையாளம் தேடும் படலம்
தொடர்கிறது!

மேலாடை ரெண்டு கைக்குட்டை
கீழாடை ஒரு கைக்குட்டை
காற்றோட்ட உடுப்பாம்
கேட்டால் ஃபஷன் என்பாள்!

வட்ட பொட்டு கூர் பொட்டானது!
மஞ்சள் குங்குமம் மங்கிப் போனது!
பெண்ணியம் கொஞ்சம் ஆட்டம் கண்டது!
நாகரிகம் நல்லாய் தலைவிரித்தாடுது!

வெளிநாட்டு மோகம் வெள்ளைக்காரன் தொடர்புகள்
வெகுளித் தனமாய் வாழ்வதற்கு
அடித்தளம் இடும் நம்மவர்கள்...
அப்பா வெளிநாடு அண்ணன் வெளிநாடு!
அப்பாடா எனக்கென்ன கவலை
கேட்டதெல்லாம் கிடைக்கும்!
ஊதாரித்தனத்தின் உந்து சக்தி
டொலரிலும் பவுண்ட்சிலும்
சக்கரமாடுது...!

தொட்டதெல்லாம் புது மாற்றம்
சொல்வதறியா கால மாற்றம்
நாகரிக குகைக்குள்
நல்லாவே திரிகிறீர்கள்
கரையேறும் வழி எங்கென்றில்லை
கரையேற கை கொடுத்தால்
ஏற்பதற்கும் தயாரில்லை...

நாகரிக மாற்றம் இது நரகத்தின் மாற்றம்....!
முடிவை நான் தேட
வார்த்தைகள் வரவில்லை....!

நன்றி!