tag:blogger.com,1999:blog-61071195639744008582024-03-19T10:03:12.617+05:30வைகறை மேகங்கள்...!குட்டி உலகத்தில் ஓர் வழிப்போக்கன்...! காலை இளம் பனி! நிலா முற்றம்! குளிர்ந்த காற்று! வெண்பஞ்சு முகில்கள்! குழந்தையின் செல்ல சிரிப்பு! காதல் பெண்ணின் ஓரப் பார்வை! அம்மாவின் அன்பு மடி! இதுவே என் குட்டி உலகம்...!Premhttp://www.blogger.com/profile/04447613447033692983noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-6107119563974400858.post-19966668055489305752016-12-27T12:43:00.000+05:302016-12-27T12:43:21.500+05:30ஆன்மாவோடு ஓர் இரவு பயணம்...!<span style="font-size: xx-small;">8 ஆண்டுகளுக்கு முன்னர் கல்லூரி ஒன்றுகூடல் ஒன்றுக்கு சென்றுவிட்டு நடுநிசி கழித்து வீட்டிற்கு வந்து கொண்டிந்தேன், வீதியில் ஆள் நடமாட்டமே இல்லை சாதுவான மழை, வேகமான இடி, மின்னல் என் சப்பாத்தின் தடம் வீதியில் பெரிதாய் கேட்கத் தொடங்கியிருந்தது அதைக் கேட்ட நாய்களின் ஓலம் மெல்ல மெல்ல வலுப் பெறத் தொடங்கியிருந்தது... </span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">எனக்கோ பீதி மெல்ல மெல்ல அதிகரிக்கவே வேகமாக நடக்க ஆரம்பித்தேன் எங்கே நான் ஓடினால் வீடு வந்து சேர முன்னர் மூச்சுத் திணறி மயங்கி வழியில் விழுந்தால் பழி தீர்க்கும் கெட்ட ஆத்மாக்களின் பிடியில் சிக்கி விடுவனோ என்ற பயத்தில் யாராவது வழித்துணை தருவார்களா என்று தேடியபடி நடக்கலானேன், அத்தனை கடவுளும் நொடியில் கண்களில்...</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">மழையும் கொஞ்சம் வலுப்பெற ஆரம்பித்திருந்தது தூரமாய் ஒரு உருவம் என்னை நோக்கி வருவதாய் உணர்ந்தேன் அது என்னைக் கடக்கும் முன் நான் வேகமாய் ஓடினால் இன்னும் கொஞ்சம் வீட்டுக்கு கிட்டவாய் சென்றுவிடலாம் என்ற ஆவலில் என்னையறியாமல் ஓட ஆரம்பிக்கிறேன், வீதியில் நின்ற நாய் ஒன்று என்னைக் கலைக்க ஆரம்பிக்கவே ஓட்டத்தை நிறுத்திவிட்டேன் அப்போது தான் ஞாபகம் வந்தது நாய்களுக்கு அமானுஷங்களை உணரும் தன்மை இருப்பதாய் யாரோ முன்னர் சொன்னது.</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">மனதை திடப்படுத்திக் கொண்டு அந்த நாயின் பக்கமாய் நிண்டுவிட்டேன் சிறிது நேரத்தில் தூரமாய் வெளிச்சம் ஆம் ஒரு ஆட்டோ என்னை நெருங்கியது. எப்பிடியாவது அதில் ஏறி வீடு சென்றுவிட வேண்டும் என்ற வேகத்தில் கையை நீட்டி மறித்தேன் ஆட்டோ ஓடி வந்தவர் உருவம் கூட இயல்பிற்கு மாறாய் இருப்பதாய் ஒரு உணர்வு கறுப்பான உருவம், தாடியுடன் அழுக்கான உடை வாயில் பீடி வாயாலும் மூக்காலும் புகை. எதுவானாலும் நான் இதிலே சென்றுவிட வேண்டும் இல்லையேல் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலைப்பாட்டில் வீட்டின் அடையாளத்தை சொல்லி ஏறி அமர்ந்தவுடன் வந்தது ஒரு வித தெம்பு.</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">பயத்தைப் போக்க ட்ரைவருடன் கதை தொடுக்கிறேன் எதற்கும் அவரிடம் இருந்து பதில் இல்லை, அதுவும் எனக்குள் ஒருவித பயத்தை ஏற்படுத்தினாலும் துணைக்கு ஒருவர் இருக்கிறார் என்ற அந்த தெம்பில் தொடர்ந்தும் பயணிக்கிறேன்.</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<span style="font-size: xx-small;">இது இப்படியிருக்க வீட்டிற்கு அண்மையில் இருக்கும் ஒரு வீடு அது மரண வீடாய் இருந்தது அதைக் கடக்க வேண்டுமே என்ற பயம் மீண்டும் என் மனதில். மழையோ கனதியாய். மரண வீட்டை ஆட்டோ நெருங்கிய வேளை ஆட்டோ நின்றுவிடுகிறது. ட்ரைவர் இறங்கி ஆட்டோவின் பின்பக்கமாய் செல்கிறார் சில வினாடிகளில் கனதியான அலறல் ஒரு சத்தம். திடுக்கிட்டு பின் கண்ணாடியால் திரும்பி பார்க்கிறேன் கறுப்பாய் ஒரு உருவம் வான் நோக்கிப் போவதை உற்று பார்த்துக்கொண்டு நிற்கிறது ஒரு கறுப்பு பூனை, ஆட்டோவை விட்டு இறங்கி ட்ரைவரை தேடினால் காணவில்லை, எதிர்த்தால் போல் பெரிய லாறி வேகமாய் ஆட்டோவை நெருங்கிக்கொண்டிருந்தது சடுதியாய் விலகி கண்ணை மூடி ஓட்டம்பிடிக்கிறேன் என்னை சுற்றி குளிர்மை உணரப்படுகின்றது ஆன்மாக்கள் உலாவும் இடத்தில் குளிர்ச்சி இருக்கும் என்பதை எங்கோ படித்த ஞாபகம் நினைவிற்கு வருகிறது இருந்தும் ஆன்மாக்கள் என்னைத் துரத்தும் அளவிற்கு நான் எந்த தவறும் செய்ததாய் ஞாபகத்தில் இல்லை.</span><br />
<span style="font-size: xx-small;"><br /></span>
<span style="font-size: xx-small;">விடிகிறது காலை, வழக்கம் போல வெளியில் வர வீட்டு வாசலில் அடிபட்டு நெழிந்த ஆட்டோ என் நினைவைத் தட்டி எழுப்புகிறது 16 நாட்களுக்கு முதல் நண்பனும் நானும் காரில் பயணிக்கும் போது அதிவேகத்தில் வந்து யாரும் அற்ற வீதியில் ஆட்டோ ஒன்றுடன் மோதி விட்டு பயணித்தது. அதன் தாக்கமாக இருக்க கூடும் என்று நினைக்கும் போதே எனது கைபேசி மணி ஒலிக்கிறது அதை எடுத்து காதில் வைக்கிறேன் நண்பன் வீதி விபத்தில் மரணமானதாய் அவனின் தான் புலம்பி அழும் அந்த அழுகை என்னை அப்படியே புரட்டிப் போட்டது...</span>Premhttp://www.blogger.com/profile/04447613447033692983noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6107119563974400858.post-63365667604729246962016-12-20T12:52:00.001+05:302016-12-20T12:53:22.431+05:30நதியோடை மீன்கள்...எப்போதும் கண்களால் வலை வீசும்<br />
காந்தக் கண்ணியை<br />
நதிக்கரையில் சந்தித்தேன்<br />
நிர்வாணமாய் நீந்தும்<br />
மீன்களுக்கு தன் ஆடை வண்ணத்தில்<br />
மின்னிடும் ஆடைகளை<br />
அவள் அவைகளுக்கு<br />
வழங்கிக் கொண்டிருந்தாள்...<br />
<br />
எப்போதும் காந்தப் பார்வை<br />
தரும் அவள் இன்று என்மேல்<br />
காதல் பார்வை எய்கிறாள்!<br />
<br />
அருகில் நெருங்கினேன்<br />
எழுந்து நின்றவள்<br />
அருகில் இழுத்தணைத்து<br />
என்<br />
நெற்றியில் முத்தமிட்டாள்...<br />
<br />
துள்ளிக் குதித்தன நதியோடை<br />
வண்ண மீன்கள்!<br />
சிலிர்த்தது என் தேகம்!<br />
சலனமற்று காற்றில் ஆடி<br />
நதி விழும் ஆலம் இலை<br />
அந்த நொடி பாரிய சப்தம் எழுப்பி<br />
நீரில் மிதக்கத் தொடங்குகிறது!<br />
<br />
விழுந்த இலையின் மேல் பயணிக்கிறது<br />
அவள் இதயமும் என் இதயமும்!<br />
காற்றிடை புகா எம் நெருக்கத்தின்<br />
கதகதப்பில்<br />
பிறந்தன ஆயிரமாயிரம் பட்டம்பூச்சிகள்!<br />
ஈற்றில் நமக்கு நாமே உடையாய்<br />
மாறியிருந்தோம் காதல் பறவைகளின் சப்தம்<br />
கேட்டு ரசித்தபடி!<br />
நீரில் மிதந்துகொண்டிருந்தது<br />
மின்னிடும் அவள் ஆடையும் என் ஆடையும்!<br />
<br />Premhttp://www.blogger.com/profile/04447613447033692983noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6107119563974400858.post-11373100578021280482016-11-30T11:51:00.003+05:302016-11-30T12:01:14.839+05:30நயினாதீவு! <div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
கனத்த மனதோடு வள்ளத்தில் இருந்து பாலத்தில் கால் வைக்கிறேன், ஊருக்கே உரிய தனித்துவமான அந்த ஈர்ப்பு, தாய் அன்பிற்கு ஈடான அந்த குளிர்ந்த காற்றின் வருடல், பாலம் பட்டு தெறிக்கும் கனத்த அலையின் நீர்த்துகள்களின் பன்னீர் வரவேற்பு! அங்கும் இங்கும் நடமாடும் நம்மவர்கள் சக ஊரவர்கள்!<br />சரவணமுத்து வாத்தியார்ட பேரன் தானே நீர் என்றும், பொன்னம்மா குஞ்சியாச்சிட பேரனா தம்பி நீர் எண்டும், சுசீலா டீச்சர்ட மகனா நீர் எண்டும் அவர்கள் கேட்கும் ஒவ்வொரு தருணங்களிலும் எம் உறவுகளின் பந்தம் இன்றும் அதே பாசத்துடன் புத்துயிர் பெற்றிருப்பதைப் பறைசாற்றும்!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
கைப் பையை ஒரு கையில் ஏந்தி எட்டடி நடக்கையிலே கம்பீரமாய் வரவேற்கும் தாயவளின் ராஜ கோபுரம் நாம் அறியா மாத்திரத்தில் நெஞ்சில் கை வைத்து ஒருகணம் கண் மூடி அம்மாளாச்சி தாயே என்று முணுமுணுத்தே நகரச்சொல்லும்!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
பலத்த காற்றை எதிர்கொண்டு கோயில் நோக்கி பாலத்தில் நடப்பதன் சுகம் வேறு லெவல்! கிட்டவாய் அம்மாளை தரிசித்து கோயிலடி வாமதாஸ் அண்ணன் கடையடி போகையிலே அது தீவின் நவீனத்தின் அடையாளமாய், நயினாதீவின் குட்டி நகரம் என்றும் சொல்லிக்கொள்ளலாம் அந்த இடத்தை! பெரும்பாலும் எல்லாவசதிகளும் பெருவாரியாய் கிடைக்கும் இடம்!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
அந்த இடத்தில் தான் என்னோடு கூட நடக்க சேர்ந்து கொண்டது அந்த பறவை!<br />அது நிச்சயமாக நம் மூதாதேயராய் தான் இருக்க வேண்டும், நான் நடக்கும் வீதியெங்கும் என் கூடவே வர ஆரம்பிக்கிறது, ஆரம்பத்தில் அதை நான் துரத்திவிடுவதிலே குறியாய் இருந்தேன் காரணம் அது என் கையில் இருக்கும் வடைக்கு குறி வைக்கிறது என்ற நினைப்பில் ஆனால் அதன் நோக்கம் அதுவல்ல!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
மறுகணம் துரத்த எத்தணிக்கவே, அது என்னிடம் சொல்கிறது 2ம் வட்டாரம் முந்திய கலகலப்பில்லை!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
என்னது! காகம் பேசுமா?</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
ஆம் என்னிடம் பேசியது!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
அது தன்னை இன்னார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு நான் எடுத்து வைக்கும் ஒவ்வோரு அடியிலும் ஒவ்வொருவரைப் பற்றி விளக்கம் கொடுத்தபடியே நகரத் தொடங்கியது!<br />இது இன்னாருடைய காணி, இது இன்னாருடைய கடை, இது இன்னாருடைய வளவு, இது இன்னாருடைய ஒழுங்கை, அது சொல்லும் ஒவ்வொரு இன்னாரின் பின்னரும் இப்ப இதில் யாரும் இல்லை, யாரும் வந்து பார்ப்பதும் இல்லை, எல்லாம் வெறிச்சோடி போச்சு என்ற கனதியான ஏக்கம் கலந்தே இருந்தது!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
அன்னதான மடம் தாண்டி தொடர்ந்தும் நடக்கிறோம், சுந்தா மாமாவின் வீடு இருந்ததற்கான ஒரே ஒரு தடையமாய் உடைந்து புதைந்து போன தொட்டி வீதியோரமாய், சற்று நேரம் இழைப்பாற அந்த குந்தில் அமர்கிறேன் தடையமே இல்லாத வளவில் அழகான வீடு வீறுகொண்டு எழுந்து நின்றது!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
உள்ளே என் உறவுகள் அதே கழிப்புடன், நிஜமாக்கப்பட்ட என் கனவுகள் அங்கே உருவங்களாகி தமக்கிடையே பேசிக்கொள்கின்றன! சுந்தா மாமாவின் குரல் மட்டும் எனக்கு தெளிவாக கேட்கிறது காரணம் அவரை நான் அண்மையில் சந்தித்ததன் பிரதிபலிப்பாய் கூட இருக்க கூடும்!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
அந்த பறவை எனக்கு சொல்கிறது பார்த்தாயா உன் உறவுகள் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் என்று... ம்ம்ம் உண்மை தான் நவீனத்தில் புதையுண்டு கிடக்கின்றன எமக்கான வாழ்வு!<br />கனவை நிஜமாக்கி விட்டு மேலும் நடக்கிறேன்...</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
ஏதோ சொர்க்காபுரிக்குள் நுளைவதான உணர்வு!<br />ஆம் சொர்க்கம் என்றே சொல்லலாம் அப்படி ஆக்கப்பட்டிருக்கிறது புத்த விகாரையும் அதன் சூழலும் என்னே ஒரு முற்போக்கு, என்னே ஒரு மேம்படுத்தல்! எதிர்ப்புக்கள் பல இருந்தும் அவர்களின் செயற்பாடுகளில் தடைகள் இல்லை. அந்த சூழல், மொழி மீண்டும் என்னை கொழும்பிற்கு கடத்தி விட்டதான உணர்வு காரணம் எல்லாமே சகோதர மொழிமயமாக்கல்!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
அந்த பறவை ஏழன சிரிப்போடு சொல்கிறது இது எல்லாம் நம்மவர் காணிகள், பார்த்தாயா ஆக்கிரமிப்பை! ஸ்ரீமான்ர காணி வீடு எல்லாம் மாளிகை போல! ம்ம்ம் நடக்கட்டும்... இன்னும் எவ்வளவற்றை தாரைவார்க்கப் போகிறோம்!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
இப்படியே இறுதி வேகத்தடையை கடந்து நடக்கையில் ரதினி சித்தியின் வளவு எல்லையோடு பௌத்த ஆக்கிரமிப்பு முற்றுப் பெற்றுள்ளது... அதுவும் தொடருமா என்ற ஆச்சரியக் குறியை அந்த பறவையின் பார்வை எனக்கு உணர்த்தியது!<br />அதைக் கடக்க சிவகாமி சின்னம்மா வளவுக்க சின்னதாய் ஒரு கட்டடம் எட்டிப்பார்த்தபடி... ஏதோ ஒரு செயற்திட்டத்திற்கான ஆரம்பக்கட்டம் என்றே நினைக்கின்றேன்! அது வரவேற்க்கத்தக்கதாய்...</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
பறவை மேலும் தொடர்கிறது பார்த்தாயா உன்னுடைய இடத்தை... வெறிச்சோடுப்போய், காடுபத்திப் போய் ஆள் நடமாட்டமே இல்லாமல் என்று அது இழுக்கும் போது நிதி அன்ரியின் ஆள் நடமாட்டமே இல்லாத காடு பத்திப்போய் நிற்கும் அந்த வீடு கண்முன்னே!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
எங்களால் கனவுகளில் மட்டும் தான் இந்த அழகிய ஊரில் வாழ முடியுமா என்ற கேள்வி வந்து சிறு வண்டு போல் கண்ணில் விழவே கண்கள் பனித்தன, கண்ணில் விழுந்த அந்த வண்டு கூட ஆக்களே இல்லாத இடத்தில் நாம் மட்டும் என்னத்தை கண்டு விட்டோம் என்ற உண்மையை சொல்லி மாய்ந்ததை போல் இருந்தது...</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
மேலும் ஒரு அடி எடுத்து வைத்து நகர முடியவில்லை! 2ம் வட்டாரம் எப்படி இருந்தது என்று ஒவ்வொன்றாய் விளக்கம் கொடுக்க தொடங்கியது அந்த பறவை...</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
இதிலே ஒரு பெரிய ஆலமரம், ஆலடி மீனாச்சி, சரவணமுத்து வாத்தியார், பொன்னம்மா, கோபுவீட்டு அம்மம்மா அது தான் என்ர பெரியம்மம்மா, அங்கால குமரைய்யா அண்ணன், இஞ்சால கந்தைய்யா, இந்தா புனிதவதியா, பின்னுக்கு சிவகாமியா, அதுக்கும் பின்னுக்கு குற்றாலம் அதுகளின்ர பெடியள், அதுகளின்ர பேரப்பெடியள் எண்டு அது சொல்லும் ஒவ்வொரு பெயர்களிலும் நிஜமாகி அந்தந்த இடத்தில் என் உறவுகள் உருவாகிக்கொண்டே இருந்தார்கள்...</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
கலகலப்பிற்கு பஞ்சமே இல்லை! அம்மம்மா சொல்லும் கதைகள் அனைத்தும் நிஜத்தில் என் கண் முன்னே! அம்மம்மா அடிக்கடி சொல்லுவா 2ம் வட்டாரம் தான் எப்பவும் டாப்! அது உண்மை தான் போலும்! மாட்டு வண்டிப் பாதை, ஒற்றையடிப் பாதை, கிடுகு வேலை, காவோலை, கருக்கு மட்டை கதவுகள்... ஆடு, மாடு, நாய், கோழி வளவுகளிற்கால் அடுத்தவர் வீட்டிற்கு போக வழி என்று 2ம் வட்டாரம் உயிர்பெற்றுக்கொண்டிருந்தது அந்த பறவை சொல்லும் ஒவ்வொரு வசனத்திலும்!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
உண்மையிலே கிராமியத்தை அழகாகத்தான் வாழ்ந்திருக்கிறார்கள் இவர்கள்!<br />வியந்து என் வட்டாரத்தை பார்த்து நிற்கையிலே என் உறவுகள் என்னை அழைப்பதாயும் அவர்களோடு நான் கூடி இருப்பதாயும் இவைகள் எல்லாம் நிஜமாகக் கூடாதா என்ற ஏக்கத்தில் நான் அந்த நொடிகளை வாழத்தொடங்கையில் என் தோளில் வந்து அமந்த அந்த பறவை காதோரம் சொல்லுகிறது...</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
வாழ்க்கை என்பது இது தான்... என்றும் கூட வரும் சொந்த பந்தங்கள், அன்பான உறவுகள், எழிமையான வாழ்க்கைமுறைகள், இதை விட வேறு எதை இப்போது எதிர்பார்க்கிறாய்!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
போ!<br />உன் உறவுகளோடு வாழ்ந்து பார் என்று சொல்லியபடி அந்த ஆலமரம் இருந்த மண்ணை தோண்டி புதையுண்டு கொண்டது அந்த பறவை! அது வேறு யாராகவும் இருக்க முடியாது! ஆலடி மீனாச்சியாக தான் இருக்க முடியும்!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
பாம்புகள் வாழ நாம் கட்டி வைத்திருக்கும் வீடுகள், புற்கள் புதர்கள் வளர பூட்டி வைத்திருக்கும் எமது வீடுகள், ஓடுகள், சிலாகைகள் கள்ளருக்கு தாரை வார்க்க கட்டி வைத்திருக்கும் வீடுகள் எல்லாம் தரைபட்டமாகிக்கொண்டிருந்தன நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடுத்த அடிகளிலும்!</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
இதே நிலைமை தான் எனது ஊரின் எல்லா வட்டாரங்களிலும்...</div>
<div style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-top: 6px;">
அழிவு என்பது வந்து கொண்டே தான் இருக்கும் அதை தடுக்க முயற்சி செய்யாவிடின்!<br />நாம் வாழ்ந்த பூமியை, வீட்டை வந்து பார்த்து திருத்தியமைக்காவிடினும் பரவாயில்லை... தற்சமயம் இருக்கின்றதறுவாயிலாவது வைத்துப் பாதுகாக்கலாமே...!</div>
Premhttp://www.blogger.com/profile/04447613447033692983noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6107119563974400858.post-71171202245236403292016-09-28T13:02:00.001+05:302016-09-28T13:03:56.062+05:30ஆளுமையின் நாயகன் - தனபாலன் சேர்<span style="font-size: x-small;">ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொருவர் முன்னுதாரணமாக எப்போதும் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். அது சிலருக்கு சில சந்தர்ப்பங்களில் வேறுபட்ட நபர்களின் ஆளுமையால் மாறிக்கொண்டே தான் இருக்கும்.</span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">எனது வாழ்க்கையிலும் ஒருவர் இன்றும் முன்னுதாரணமாய் இருகிறார், அவர் வேறு யாரும் இல்லை என்னுடைய கல்லூரியின் அதிபர் திரு.தனபாலன் சேர் அவர்கள். அவரது ஆளுமை, ஆற்றல், முற்போக்கு நடத்தைகள் அபாரமானது. சென். ஜோன்ஸ் கல்லூரியில் அவரது தலைமைத்துவத்தின் கீழ் படித்தவர்கள் பாக்கியசாலிகள். </span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSc1WD5DAfEfCZsuHNx2Oy_1BJRhazMVAP-162LWeWQ_Zli87OOmva6VUF_muPsPP0RMEHd4fw74L9dlobO0QOZrhP7Xeh7ICfACpZFaklnh1Tkg_i42QVvfoJ_XspEv_tjnwgJAJdqcM/s1600/1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSc1WD5DAfEfCZsuHNx2Oy_1BJRhazMVAP-162LWeWQ_Zli87OOmva6VUF_muPsPP0RMEHd4fw74L9dlobO0QOZrhP7Xeh7ICfACpZFaklnh1Tkg_i42QVvfoJ_XspEv_tjnwgJAJdqcM/s320/1.jpg" width="320" /></a></div>
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">நான் அறிந்தவரையில் தனபாலன் சேரின் ஆளுமை கண்டு வியந்தவர்கள் பலர், நேர்மையான பேச்சு, தரமான ஆங்கிலம், நேரம் தவறாமை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவற்றுக்கு இன்றும் உதாரணம் எம் ஆசான் தனா சேர் தான். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இவரை நாம் இன்றும் நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றோம் காரணம் நாம் கடந்து வந்த பாதையில் தனபாலன் சேரின் வழிகாட்டல் படி ஏதோ ஒரு இடத்தில் நம்மை இன்றும் கடக்க வைக்கிறது.</span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">சென். ஜோன்ஸ் இல் படித்தவன் என்ற திமிர் எல்லா சென். ஜொன்ஸ் மாணவனுக்கும் இருந்தாலும் தனபாலன் சேரின் ஆளுமையின் கீழ் வளர்ந்தவனுக்கு என்றும் கொஞ்சம் கூடவே திமிர் இருக்கும் காரணம் அவன் பதப்படுத்தி வளர்க்கப்பட்டவன், வளர்க்கப்பட்டவன் என்பதை விட சேரைப் பார்த்து வளர்ந்தவன் என்று கூறுவது சால சிறந்தது.</span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">நான் ஒரு ஆசிரியரைப் பார்த்து முரட்டுத்தனமாக ரசித்திருக்கிறேன் என்றால் அது தனபாலன் சேர் மட்டுமேயாகத்தான் இருக்க வேண்டும், தனபாலன் சேர் குணாதிசயங்கள் பற்றி சொல்லுவதானால் அளவான உயரம், மிடுக்கான தோற்றம், கட்டக்கையோ இல்ல புல்சிலீப் சேர்ட் போட்டு அதை வடிவா இன் பண்ணி அதற்கு ஏற்றால் போல் டையும் கட்டி ஒரு கையை (கூடுதலால இடது கை) பொக்கட்டுக்குள் வைத்து அவரின்ர பங்களாக்குள்ள இருந்து கிரவுண்ட் கரையோரமா நடந்து வாற ஸ்டைல் இருக்கே! சொல்ல வார்த்தைகள் இல்லை... சுருங்க சொன்னால் தனபாலன் சேரைப் போல் கம்பீரமாய் நடக்கப் பழகி என் போல் தோற்றவர்கள் பலர்! </span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">ஆசிரியர்கள் பிரச்சினை தொடங்கி, தனிப்பட்ட மாணவனின் பிரச்சினைகள் வரை அத்தனையையும் சுமூகமாக அணுகக்கூடிய கைங்கரியம் தனபாலன் சேரிடம் கொஞ்சம் அதிகமே இருந்தது எனலாம். அதற்கு உதாரணம் நான் என் அனுபவத்தையே சொல்கிறேனே!</span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglBVao-f7uUpeHDVP7ddsDaBVOE1P2XaD3dWJi5-yXmpUnoqLD3OWg69ITPUJN9gl7KUnFBPMe3QV973bEuX7vEVB8LxrIi5L1-YVtdI_E3gc-M3VO5zf_NPsqJGUEiYJ_TzJNG2kUCjQ/s1600/3.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglBVao-f7uUpeHDVP7ddsDaBVOE1P2XaD3dWJi5-yXmpUnoqLD3OWg69ITPUJN9gl7KUnFBPMe3QV973bEuX7vEVB8LxrIi5L1-YVtdI_E3gc-M3VO5zf_NPsqJGUEiYJ_TzJNG2kUCjQ/s320/3.jpg" width="91" /></a></div>
<span style="font-size: x-small;">நான் ஒரு தடகள விளையாட்டு வீரன், ஆகையால் கோலூன்றி பாயும் பயிற்சியில் மாலையில் ஈடுபடும் போது ஒருமுறை தனபாலன் சேர் அவரது பங்களாவில் இருந்து பார்த்து விட்டு எனக்கு கிட்டே நெருங்குகிறார், எனகோ நெஞ்சு பக்கு பக்கு என்று அடிக்க தொடங்குகிறது, கிட்டவாய் வந்தவர் சிறு புன்னகையுடன் Welldone i have seen you from my house, you are doing well in pole vault, You know Prabakaran master! he is good in pole vault, you better get some advice from him, he will guide you... என்று கூறியபடி மீண்டும் புன்னகைத்து அவரது ஸ்டைலில் நாடியை வலது கையால் தடவிய படி நடக்கிறார். </span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">இப்படியே நாட்கள் ஓடி விடுகிறது தனபாலன் சேர் ஏதோ கல்லூரி விசயமாய் கொழும்புக்கோ, எங்கேயோ சென்று விடுகிறார். அதை அறியாமல் நான் ஆங்கிலத்தில் தனபாலன் சேரிற்கு கடிதம் எழுதி தபாலில் அனுப்பி விடுகிறேன் உயரம் பாய்தல், கோலூன்றி பாய்தல் விளையாட்டுக்களுக்கு எங்களுக்கு பொதுவான ஒரு மெத்தை வாங்கினால் நன்றாக இருக்கும் என்ற கோரிக்கையை முன்வைத்து, நேரில் சென்று எனது கோரிக்கையை முன் வைக்க தயக்கதினால். அந்த கால கட்டத்தில் அமலசீலம் மாஸ்டரும், ஞானப்பொன்ராஜா சேரும் தான் கல்லூரி நிர்வாகத்தை கவனித்துக்கொண்டிருந்தார்கள். </span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">நான் அனுப்பிய கடிதம் அமலியிடம் சென்றுவிடுகிறது, அமலி அதை பிரித்து படித்துவிட்டு அமளிப்பட்டு ஆள் அனுப்புகிறார் என்னை கையோடு கூட்டி வரும் படி, அப்போது நாங்கள் வில்லியம்ஸ் ஹாலில் கொமர்ஸ் செக்ஸனுக்குள் இருக்கிறோம். எட்டுக்குண்டி என்ர பெயரை சொல்லிக்கொண்டு அமலசீலன் மாஸ்டர் பிறேம்ஜியை கூட்டிக்கொண்டு வரட்டாம் எண்டு சொல்லவே எனக்கு விளங்கிட்டு அமலி கையில தனபாலன் சேருக்கு நான் எழுதின கடிதம் கிடைச்சு மனுசன் குழம்பிட்டு எண்டு.</span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">கொஞ்சம் தயக்கத்துடன் அமலியிடம் போறன், அமலியின்ர முதல் கேள்வி ஏன் இப்பிடி கடிதம் எழுதினி? உம்மட கோரிக்கை நியாயமானது தான் இருந்தாலும் அத நீர் பீ.ஓ.ஜீ மூலம் எங்களுக்கு தெரியப்படுத்தியிருக்கலாம் எண்டு சொல்லிக்கொண்டே ஞானப்பொன்னியிடமும் இதைப் பற்றி விவாதிக்கிறார். நான் சொன்னன் எனக்கு நேர போய் கதைகிற பயத்தில தான் இப்பிடி கடிதம் எழுதினன் எண்டு சொல்ல, எனிவே ப்றின்சிப்பல் வந்தோண இத நான் குடுக்கிறன் நீர் சேர வந்து சந்தியும் எண்டு என்னை அனுப்பி வைகிறார் அமலி.</span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-THvV3SdedpoTwOiVQyCe-lEJuB5bPS0UTmH23iT76hc8KtcmiLVLYOuBRVVk6mxqcsb9uo7ywFwedUSN0NrloEU14dV4T2aDAPvMr70XRDganKa1MK7sG4wty3NM2qG8JmstEs8oKmY/s1600/2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="212" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-THvV3SdedpoTwOiVQyCe-lEJuB5bPS0UTmH23iT76hc8KtcmiLVLYOuBRVVk6mxqcsb9uo7ywFwedUSN0NrloEU14dV4T2aDAPvMr70XRDganKa1MK7sG4wty3NM2qG8JmstEs8oKmY/s320/2.jpg" width="320" /></a></div>
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">ரெண்டொரு நாளில் தனபாலன் சேர் பாடசாலைக்கு வந்ததும் மீண்டும் அழைப்பு வருது பிறேம்ஜி உம்மை ப்ரின்சிப்பல் வந்து சந்திக்கட்டாம். அண்டைக்கு உண்மையிலே பயந்திட்டன். பதற்றத்துடன் தனபாலன் சேரின்ட றூமுக்க போறன். </span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">Excuse me Sir என்ற வாறே உள்ளே நுழைகிறேன். </span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">முழு நேர பயத்துடன் சென்ற எனக்கு அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. </span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">தனபாலன் சேர் கையில் என்னுடைய கடிதம் இருந்தது, கடிதத்தை ஆட்டி ஆட்டி சொல்லுகிறார்: </span><br />
<span style="font-size: x-small;">Excellent letter you have written and the way of writing is perfect. </span><br />
<span style="font-size: x-small;">மிரண்டே விட்டேன். சிறிது நேரம் கடிதம் பற்றி கதைத்தவாறே கடிதத்தின் சாராம்சத்தை பற்றி எனக்கு விளக்குகிறார்...</span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">ஏன் இன்னமும் மெத்தை(Mattress</span><span style="font-size: x-small;">) வாங்கப்படவில்லை என்றும் அதற்கான வேலைப்பாடுகள் நடப்பதாகவும் கூறி, இனி ஏதும் இப்படியான பிரச்சினைகள் இருந்தால் கடிதம் தேவையில்லை எந்த நேரமும் நீர் என்னை வந்து சந்திக்கலாம் என்று கூறிய அந்த motivational words என்னை ஏதோ வேறு ஒரு கோணத்தில் பார்க்க வைத்தது தனபாலன் சேரை. </span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhaWAnkqaIVYNGPvPkg5bMDvUdgdshgigM1fkN7xDoBGaNsKnUM1WlbOMx4bmcAclMaxFzKVTup_ayXtXPcoZvOCoB1I9EbNOTnowOHQ32Fcfo5YWB4ICGUn7meqYBn15VBXuJm7LJNdzY/s1600/4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhaWAnkqaIVYNGPvPkg5bMDvUdgdshgigM1fkN7xDoBGaNsKnUM1WlbOMx4bmcAclMaxFzKVTup_ayXtXPcoZvOCoB1I9EbNOTnowOHQ32Fcfo5YWB4ICGUn7meqYBn15VBXuJm7LJNdzY/s1600/4.jpg" /></a></div>
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், தன்னலம் பாராது பொது நலமாக பொதுப்பட்ட பிரச்சினைகளை தானே அணுகி தீர்த்து வைக்கும் அவரது குணம் என்றுமே பாராட்டுக்குரியது.</span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">இன்றும் நான் நேரம் தவறாமால் நிகழ்ச்சிகள், வைபவங்கள், வேலைத் தளங்களுக்கு செல்கிறேன் என்றால் அதற்கு காரணம் நான் கல்வி கற்ற சென். ஜோன்ஸ் கல்லூரியே!</span><br />
<span style="font-size: x-small;">இன்றும் நான் ஆங்கிலத்தில் ஓரளவு புலமையோடிருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் தனபாலன் சேர், மற்றும் என் சென். ஜோன்ஸ் கல்லூரி தான்.</span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">இப்படிப் பட்ட ஆளுமை மிக்க மனிதரின் கீழ் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் நாம் என்பதில் பெருமை கொள்கிறேன்... </span><br />
<br />Premhttp://www.blogger.com/profile/04447613447033692983noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6107119563974400858.post-65702934837422092362016-09-26T11:04:00.000+05:302016-09-27T13:07:44.279+05:3026 - 09 - 1987- திலீபன் அண்ணாவின் இறுதிநாள்!<div style="background-color: white; font-family: helvetica, arial, sans-serif; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em;">
இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்துவிட்டது!திடீரென்று மின்சாரம் தடைப்பட்டுவிட்டது. எங்கும் ஒரே <span class="text_exposed_show" style="display: inline; font-family: inherit;">இருள்மயம். காற்றும் பலமாக வீசத் தொடங்கியது. பல நாட்களாக திலீபனுடன் சேர்ந்து நானும் எனது நண்பர்களும், முழுமையான தூக்கமில்லாமல் இருந்ததால் இன்று மிகுந்த சோர்வுடன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தோம். மாறன், ராஜன், தேவர், இரு நவீனங்கள், மாத்தயா, திலீபனின் அண்ணன் இளங்கோ, எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு தூங்கினோம்.</span></div>
<div class="text_exposed_show" style="background-color: white; display: inline; font-family: helvetica, arial, sans-serif; font-size: 12px;">
<div style="font-family: inherit; margin-bottom: 1em; margin-top: 1em;">
பன்னிரண்டு நாட்கள் உடல்களைச் சாறாகப் பிழிந்தெடுத்த அசதித் தூக்கமின்றி, அது வேறொன்றுமில்லை. மேடைக்கு முன்னே அமர்ந்திருந்த ஒருவர் என்னை வந்து தட்டி எழுப்பியதும் நான்தான் முதலில் திடுக்கிட்டு எழும்பினேன்.</div>
<div style="font-family: inherit; margin-bottom: 1em; margin-top: 1em;">
கும்மிருட்டில் என்ன செய்வதென்று தெரியாமல்,<br />
"நவீனன்" என்று அழைத்தபடி திலீபனின் கட்டிலில் கையை வைத்தேன். அவர் ஆடாமல் அசையாமல் படுத்திருந்தார். அதனால் மனம் அமைதியடைந்தது. அவரின் உடல் ?ஜில்? லென்று பனிக்கட்டியைத் தொடுவது போல் குளிர்ந்து காணப்பட்டது.</div>
<div style="font-family: inherit; margin-bottom: 1em; margin-top: 1em;">
மனம் 'பட பட' வென்று அடிக்கத் தொடங்கியது?<br />
மீண்டும் 'நவீனன்' என்று அழைத்தேன்.<br />
நவீனன் எழும்பி விட்டான்.</div>
<div style="font-family: inherit; margin-bottom: 1em; margin-top: 1em;">
ஐந்து நிமிடங்களில் மேடையில் ஒரு பெரிய மெழுவர்த்தி எரியத் தொடங்கியது? மெழுகுவர்த்தியின் ஒளியிலே திலீபனின் முகம் நன்றாகத் தெரிந்தது? ஒரே வினாடிதான்! அதற்குள் அந்த மெழுகுவர்த்தி காற்றின் வேகத்தினால் அணைந்துவிட்டது.</div>
<div style="font-family: inherit; margin-bottom: 1em; margin-top: 1em;">
பலத்து வீசிய காற்று அதை மீண்டும் எரிய விடுமா? என்பது சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனால், ஐந்து நிமிடங்களில் மின்சாரம் வந்துவிட்டது. திலீபனின் நிலை எல்லையைக் கடந்துவிட்டது என்பது எனக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. அதனால், என்மீதே எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. நாடித்துடிப்பைப் பரிசோதிக்கிறேன். கணிக்க முடியவில்லை. மிகவும் மெல்லியதாக அடிக்கிறது. உடனே இரத்த அழுத்தத்தைக் கணிக்கின்றேன். அது மிகவும் குறைவாக இருக்கிறது. 50 என்ற நிலையில் ஒரு நோயாளியால் இன்னும் எத்தனை மணித்தியாலங்கள் உயிர் வாழ முடியும் என்பது எனக்குத் தெரியும்.</div>
<div style="font-family: inherit; margin-bottom: 1em; margin-top: 1em;">
உலகமே தலைகீழாகச் சுற்றுவது போல் இருந்தது. திலீபன் அடிக்கடி கூறிய வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன.</div>
<div style="font-family: inherit; margin-bottom: 1em; margin-top: 1em;">
'வாஞ்சி அண்ணை! எனக்கு என்ன நடந்தாலும் நீங்கள் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட பலவந்தமாகவோ, சுய நினைவற்ற நிலையிலோ தர முயற்சிக்கக்கூடாது. அப்படி என் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் நான் இறக்குமட்டும் எனக்கு எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கக் கூடாது. சுயநினைவோடு என்றாலும் சரி.சுய நினைவில்லை என்றாலும் சரி. இதுக்குச் சம்பதிக்கிறனெண்டு சத்தியம் செய்து தாருங்கோ'<br />
என்று விடாப்பிடியாக நின்று என்னிடம் சத்தியம் வாங்கிய பிறகுதான் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார் அவர்.</div>
<div style="font-family: inherit; margin-bottom: 1em; margin-top: 1em;">
அப்படியிருக்க, அவர் விருப்பத்துக்கு மாறாக எப்படி அவருக்குச் சிகிச்சையளிப்பேன்? எப்படி அவருக்கு நீர் ஊட்டுவேன்? மனிதநேயத்தையும் - அதன் தார்ப்பரியங்களையும் மதிக்கும் ஓர் வைத்திய சேவையாளன் என்ற நிலையைத் திலீபன் விஷயத்தில் நிறைவேற்ற விடாமல் என் கைகளைக் கட்டிப் போட்டது எது?.......<br />
எது?<br />
ஆம்.<br />
சத்தியம்! என்ற இந்த ஐந்து எழுத்துக்களுக்காகத் தானே திலீபன், ?அகிம்சை? என்ற நான்கு எழுத்துக்களைக் கொண்ட போராட்டக் களத்தில் குதித்தான். கடமை ? கண்ணியம் - கட்டுப்பாடு என்ற மூன்று உயரிய அம்சங்களினால் வேரூன்றி வளர்த்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பதால், 'கட்டுப்பாடு' என்ற நல்வழியிலே கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காகத் திலீபனை என் கண்ணெதிரிலேயே பலி கொடுப்பதைத் தவிர, வேறு வழியொன்றும் எனக்குத் தெரியவில்லை.</div>
<div style="font-family: inherit; margin-bottom: 1em; margin-top: 1em;">
என் கடமையைச் செய்வதற்காக மேடையின் பின்பக்கம் இறங்கிச் செல்கிறேன். அங்கே பிரதித் தலைவர் மாத்தயா நிற்கிறார். அவரிடம் திலீபனின் உடல் நிலையின் அபாயகரத்தைப் பற்றி எடுத்துரைக்கிறேன்.</div>
<div style="font-family: inherit; margin-bottom: 1em; margin-top: 1em;">
திலீபனின் உடல் நிலை மோசமாகிவிட்ட விடயம் யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் பரவத் தொடங்கியது விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் பொதுமக்களும் மேடையைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். திலீபனுக்கு கடைசி நிமிடம் வரையும் ஒருவித சிகிச்சையும் அளிக்க முடியாமல் எமது கைகள் கட்டப்பட்டிருந்ததற்கு வேறு முக்கிய காரணமும் ஒன்று இருந்தது. எமது காதில் விழக்கூடியதாகவே பல எதிரணி உறுப்பினர்களும், எமது இயக்கத்துக்கு எதிரானவர்களும் பேசியதைக் காதால் கேட்டவர்களில் நானும் ஒருவன்.</div>
<div style="font-family: inherit; margin-bottom: 1em; margin-top: 1em;">
'புலிகள் தந்திரமாக மக்கள் மனத்தை மாற்றுவதற்காக உண்ணாவிரதம் என்ற பெயரிலே தண்ணியைக் குடிச்சுக்கொண்டு இருப்பார்கள். ஆர் இதைக் காணப்போகினம்? கடைசியில் 5 தீர்மானங்களும் நிறைவேறுமட்டும் வைத்தியம் செய்து ஆளைச் சாகவிடமாட்டினம். இதுதான் இந்த சாகும்வரை நீர் அருந்தாமல் உண்ணாவிரதம் இருப்பதன் உண்மை'</div>
<div style="font-family: inherit; margin-bottom: 1em; margin-top: 1em;">
இப்படியான பேச்சுக்களுக்கு உண்மை வடிவம் கொடுத்து, புலிகள் பொய்யர்கள் என்ற கெட்ட பெயரை வரவிடாமல் காப்பாற்றுவதற்காகவும் எம்கைகள் கட்டப்பட்டிருந்தனவே தவிர, வேறு ஒன்றுக்காகவும் அல்ல.</div>
<div style="font-family: inherit; margin-bottom: 1em; margin-top: 1em;">
எம் கைகள் மட்டும் கட்டுப்படாமல் இருந்திருந்தால், எமது உயிரினும் மேலான, தியாக தீபம் திலீபனை எமது உயிர்களைக் கொடுத்தாவது காப்பாற்றியிருப்போம். ஆனால் முடியவில்லையே? விதி! தன் வலிய கரங்களை மிக நன்றாகவே திலீபனின் கழுத்தில் இறுக்கிவிட்டான்.</div>
<div style="font-family: inherit; margin-bottom: 1em; margin-top: 1em;">
உயிருடன் அந்த மனித தெய்வம் நீண்ட நேரம் போராடிக் கொண்டிருப்பதை என் கண்களால் பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டமைக்காக, நான் வெட்கப்பட்டேன். வேதனைப்பட்டேன். ஆனால், என்ன செய்ய முடியும்?</div>
<div style="font-family: inherit; margin-bottom: 1em; margin-top: 1em;">
265 மணித்தியாலங்கள் தனது சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை வெற்றிகரமாக நடாத்தி முடித்த அந்த தியாகத் திலீபன், இன்று காலை (26.09.1987) 10.48 மணியளவில், எம்மையெல்லாம் இந்தப் பாழும் உலகில் பரிதவிக்க விட்டுவிட்டுத் தான் மட்டும் போய்விட்டான்.</div>
<div style="font-family: inherit; margin-bottom: 1em; margin-top: 1em;">
ஆம். தமிழர்தம் விளக்கு அணைந்துவிட்டது! அணைந்தேவிட்டது! டொக்ரர் சிவகுமார் அவர்கள், திலீபன் இறந்த பின் அவரைப் பரிசோதனை செய்து தனது இறுதியான முடிவைச் சொல்லிவிட்டு, திலீபனின் பாதங்களில் விழுந்து வணங்கி எழுந்த போது, மக்கள் கதறி அழத் தொடங்கினர்!</div>
<div style="font-family: inherit; margin-bottom: 1em; margin-top: 1em;">
எங்கும் அழுகைச் சத்தம். விம்மல் ஒலி. சோக இசை. வானமே இடிந்து விட்டதைப் போன்ற வேதனை எல்லோரையும் ஆக்கிரமித்திருந்தது. வானத்து நிலவு கீழே விழுந்து விட்டது போன்ற உணர்வு!</div>
<div style="font-family: inherit; margin-bottom: 1em; margin-top: 1em;">
காலை 11 மணிக்கு "என்பார்ம்" செய்வதற்காக, அவரது உடலை யாழ். வைத்தியக் கல்லூரிக்கு எடுத்துச் சென்றோம்.</div>
<div style="font-family: inherit; margin-bottom: 1em; margin-top: 1em;">
பிற்பகல் 4.15 மணியளவில் திரும்பவும் அதே மேடைக்கு முன்பாக அவரின் புகழுடம்பு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் புள்ளி போட்ட, பச்சையும் - கறுப்பும் கலந்த இராணுவ உடையும், தொப்பியும் திலீபனுக்கு அணியப்பட்டு, 'லெப்டினன்ட் கேணல்' என்ற பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது.</div>
<div style="font-family: inherit; margin-bottom: 1em; margin-top: 1em;">
அவர் செய்த தியாகத்துக்கு அவருக்கு எந்தப் பட்டமும் தகுதியில்லை, அல்லது ஈடாகாது என்பது எமக்குத் தெரியும். ஆனால், என்ன செய்ய முடியும்?</div>
<div style="font-family: inherit; margin-bottom: 1em; margin-top: 1em;">
அவரைப் படுக்க வைத்திருந்த பேழையை, விடுதலைப்புலிகளின் சிவப்பு நிறத்திலான கொடி அலங்கரித்திருந்தது. தந்தை, சகோதரங்கள், உறவினர்கள் ஆகியோர் உடலை வந்து தரிசித்துச் சென்றனர். பெட்டியைத் திறந்ததுமே அவரது அன்புத் தந்தையும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான, திரு. இராசையா அவர்கள் 'ஓ' என்று அலறியவாறு அவர் உடல்மீது விழுந்து புரண்டு அழத் தொடங்கிவிட்டார். அவரின் அழுகையைத் தொடர்ந்து பொதுமக்களும், சிறு பிள்ளைகளைப் போல் குலுங்கிக் குலுங்கி அழுத காட்சி நெஞ்சை உருக்கியது.</div>
<div style="font-family: inherit; margin-bottom: 1em; margin-top: 1em;">
பொதுமக்கள் மணிக்கணக்காகக் காத்திருந்து, நீண்ட வரிசையிலே வந்து தமது இறுதி அஞ்சலியை மண்ணின் மைந்தனுக்குச் செலுத்தினர்.</div>
<div style="font-family: inherit; margin-bottom: 1em; margin-top: 1em;">
ஈரோஸ் இயக்கத் தலைவர் திரு. பாலகுமார், தமிழகத்திலிருந்து வருகைதந்து தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் தலைவர் திரு. நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் கலங்கி அழுதவாறு தமது அஞ்சலியைச் செலுத்தினர்.</div>
<div style="font-family: inherit; margin-bottom: 1em; margin-top: 1em;">
தலைவர் பிரபாகரன், சொர்ணம், மாத்தயா, குமரப்பா, புலேந்திரன், சந்தோசம், ஜொனி, பிரபா, இம்ரான், அன்ரன் மாஸ்ரர், சங்கர் அண்ணா, நடேசன் மற்றும் ஏனைய இயக்க உறுப்பினர்களும் தத்தம் இறுதி அஞ்சலியைத் தமது தோழனுக்குச் செலுத்தினர்.</div>
<div style="font-family: inherit; margin-bottom: 1em; margin-top: 1em;">
சாஜகான், நரேன், அருணா, சிறி, ராஜன், தினேஸ் போன்றோர் தம்மைச் சமாளிக்க முடியாமல் விம்மி விம்மி அழுதனர்.</div>
<div style="font-family: inherit; margin-bottom: 1em; margin-top: 1em;">
திலீபனின் தியாகப் பயணத்தில் 12 நாட்கள் அவரின் கூட இருந்து, அவரின் போராட்டத்தில் பங்குபற்றி, வேதனையின் எல்லைக்கே சென்றுவந்த எனக்கு, இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு இன்னும் எத்தனை நாட்கள் தேவையோ நானறியேன். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்! திலீபனின் உயிர் அநியாயமாகப் போகவில்லை அதற்குப் பதிலாக அவர் ஒரு படிப்பினையை எமக்குக் கற்பித்து விட்டுப் போயுள்ளார்?</div>
<div style="font-family: inherit; margin-bottom: 1em; margin-top: 1em;">
அகிம்சைப் போராட்டம் என்பது மனித நேயமும், உயர் பண்பும் மிக்கவர்களிடம்தான் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். ஆயுதங்கள் தான் எமது தமிழீழப் போராட்டத்தைப் பொறுத்தவரை சரியான பதில் தரமுடியும் என்பதையும், திலீபன் மறைமுகமாக உணர்த்திவிட்டுப் போயிருக்கிறார் என்பதே எமது கணிப்பு. அந்தத் தியாக தீபத்தின் இலட்சியங்கள் நிறைவேற, எம்மை நாம் அர்ப்பணிப்போமாக!</div>
<div style="font-family: inherit; margin-bottom: 1em; margin-top: 1em;">
நன்றி : மு.வே. வாஞ்சிநாதன்</div>
</div>
Premhttp://www.blogger.com/profile/04447613447033692983noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6107119563974400858.post-79284442835555093532016-09-08T15:55:00.000+05:302016-09-08T15:55:32.023+05:30யாழ்ப்பாணத்தில வாடகை டீ.வி...<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; line-height: 19.32px; margin-bottom: 6px;">
<span style="font-size: x-small;">ஏனோ தெரியல கொஞ்ச காலமா பழைய பசுமையான நினைவுகள் மனசுக்க புது புது மலர்களாய் பூக்குது... கைபேசியில பழைய போட்டோஸ் ஏதும் இருக்கா எண்டு கிண்ட தொடங்கவே மனசு தொண்ணூறுகளிற்குள்ள போய்டுது...</span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: x-small;">95/96 ஆண்டுகளிற்கு பின்னர் பிரச்சினைகள் ஓரளவு ஓய்ந்து யாழ்ப்பாணத்திற்கு மின்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக வினியோகிக்கப்படத் தொடங்கியிருந்தது அதுவும் சீராக என்று சொல்லும்படியாக இல்லை அந்த காலகட்டத்தில் தான் முதன்முதலில் எங்கள் வீட்டில் டீ.வி. போட்டு படம் பார்க்க சந்தர்ப்பம் கிட்டியது, எங்கள் வயதில் இருந்த ஒவ்வொருத்தனுக்கும் அந்த நாள் ஒரு திருவிழா போல இருக்கும்.</span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: x-small;">இப்படி சீரற்ற மின்சாரம் மற்றும் மின்சாரமே இல்லாத காலகட்டத்தில் கொஞ்சம் வசதி படைத்தோர் மற்றும் இலத்திரணியல் உபகரணங்களை பிஸ்னஸ் செய்வோர் டீ.வி, டெக் மற்றும் ஜெனரேற்றர்களை ரெண்டு மூன்று நாட்களுக்கு வாடகைக்கு விட்டு சம்பாதிக்க தொடங்கியிருந்தார்கள். அந்த நாளைல ஒரு நாள் வாடகை 50/- எண்டு நினைக்கிறன். ஒரு சிலருக்கு இதுவே ஒரு பெரிய பிஸினஸ்.</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_YaHRw8Z8Z1Z6lN0_4YTZNhvKBYOmKxftoni0ZcR8AR1NoBx_Ww24oFgR4c6zfpbq0f_Pquvt1SOKc_Ox3qz6wHj2rANteL4F-7RxBOX2y7mz0BH2HQhq-x8N0mbwEbtHgzziaGf3fgE/s1600/87661998_XS.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_YaHRw8Z8Z1Z6lN0_4YTZNhvKBYOmKxftoni0ZcR8AR1NoBx_Ww24oFgR4c6zfpbq0f_Pquvt1SOKc_Ox3qz6wHj2rANteL4F-7RxBOX2y7mz0BH2HQhq-x8N0mbwEbtHgzziaGf3fgE/s1600/87661998_XS.jpg" /></a></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: x-small;"><br /></span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: x-small;">நல்லூரடியிலும் யாரோ ஒருத்தர் டீ.வி வாடகைக்கு குடுக்கிறவர் எண்டதை கேள்விப்பட்டு பெரியண்ணாவும் பெரியப்பா ஒராளும் போய் கதைச்சு அந்த டீ.வி, டெகோட அவயளே புதுசா வந்த பட கெசட்டுக்கள் ரெண்டு மூண்டையும் தருவினும், அதையும் எடுப்பிச்சுக் கொண்டு வீட்ட வந்திட்டினும்.</span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: x-small;">பிறகு அதை பெரிய கரியர் பூட்டின சைக்கிளுக்கு பின்னால வைச்சு கட்டிக் கொண்டு வந்து, வீட்ட கூட வந்தவர் பொருத்தி தந்திட்டு சொல்லுவார் இப்பிடி இப்பிடி எல்லாதையும் செய்யோணும் எண்டு காட்டிக்குடுத்திட்டு தொடக்கி வைச்சிட்டு போய்டுவார் மிச்சத்த பெரியண்ணா தான் பாத்துக்கொள்ளுவான் கூடவே சின்னண்ணாவும் ஒட்டிக்கொள்ளுவான் நாங்கள் எல்லாம் சின்ன வானரக் குட்டிகள் போல பின்னாலையும் முன்னாலையும் திரிவம் என்ன தான் நடக்குதெண்டு பாத்துக்கொண்டு ஏன் எண்டால் எங்களுக்கு எப்படா டீ.வில படம் பாக்கலாம் எண்ட மனநிலை...</span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: x-small;">மறுபக்கம் பெத்தம்மாவும் அம்மாவும் அஞ்சரைக்கே புட்டு எல்லாம் அவிச்சு வைச்சிட்டு படத்துக்காக பாத்துக்கொண்டு இருக்க அப்பப்போ அவையளுக்கும் கரைச்சல் குடுத்து பேச்சும் வாங்கி அது ஒரு விதமான சுவாரசியம்.</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgijVsYyW5wWLhSjn0ubUVvMdNt0UgoAZyM8dM5ddhiMqiO_ys6dSm8z7KtktdGeBT1QI_TwNha-_IgFufZQu9FtZTO46d2s5KyFNOeiC75MPHrE9no4Xv6nwD-LVLhovuteghi3VInT8c/s1600/generator-batteries.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgijVsYyW5wWLhSjn0ubUVvMdNt0UgoAZyM8dM5ddhiMqiO_ys6dSm8z7KtktdGeBT1QI_TwNha-_IgFufZQu9FtZTO46d2s5KyFNOeiC75MPHrE9no4Xv6nwD-LVLhovuteghi3VInT8c/s320/generator-batteries.jpg" width="320" /></a></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: x-small;"><br /></span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: x-small;">ஜெனரேட்டர் இயங்க தொடங்குது டீ.வியில் வெள்ளை கறுப்பு புள்ளி விளத் தொடங்குகிறது சத்தமான இரைச்சலுடன், எங்கோ நிண்ட நாங்கள் எல்லாம் பறந்தடிச்சு டீ.விக்கு முன்னாலையே போய் குந்தினம்<br />அப்ப பின்னால இருந்து அம்மாவின்ர குரல் எல்லாம் கொஞ்சம் பின்னால வந்து இரு, கிட்ட இருந்து பாக்க வேணாம் கண்ணுக்கு கூடாது, காதில் வாங்கிக்கொள்ளவில்லை ரெண்டாம் தரம் அம்மாவின் சொல்லும் தொணி மாறவே இருந்த வாக்கிலே கை ரெண்டையும் பின்னால ஊணி ஒரடி பின்னுக்கா இருந்து கொண்டோம்.</span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: x-small;">டீ.வி போட்டு விட வந்தவர் டீ.வி பட்டன்கள ஏதோ எல்லாம் செய்ய அப்பிடியே டெக்ல என்னமோ பண்ணிக்கொண்டிருந்தார், அந்த காலத்தில எங்களுக்கு இது எல்லாம் றொக்கட் சயன்ஸ் மாதிரி இருந்திச்சு ஆனா என்ன எங்களுக்கு தேவ பெரிய டீ.வி ல படம் பாக்கோணும் அத அடுத்த நாள் போய் பள்ளிக்கூட பெடியளுக்கு சொல்லி பெருமப்படோணும்.</span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: x-small;">புள்ளிப் புள்ளியையே கண் வெட்டாம பாத்துக்கொண்டிருக்க திடீர்னு வானவில் மாரி கோடு கோடா வெள்ளை, மஞ்சள், நீலம், பச்சை, நாவல், சிவப்பு, கரு நீலம் எண்டு டீ.வில விழுந்திச்சு கொஞ்ச நேரத்தில படம் கலங்கி கலங்கி போக தொடங்கி இருந்திச்சு அப்பாடா படம் தொடங்க போது எண்டு சின்னப்பிள்ள தனமா வெள்ளாந்தி போல முதல் படத்த பாத்திட்டு இருக்கிற மனசிருக்கே அது தான் சார் கடவுள்...</span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: x-small;">படம் ஓட தொடங்குது கொஞ்ச நேரம் ஆனந்த கொண்டாட்டம் எல்லாரும் படம் பாத்தாலும் நாங்க எல்லாருக்கும் மாறி மாறி சொல்லுறம் அண்ணா படம் தொடங்கிட்டு, அம்மா படம் தொடங்கிட்டு... கொஞ்ச நேரம் பெரிய அமளி துமளி வீட்டுக்க டீ.விக்கு முன்னால இருந்து கொண்டு.</span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: x-small;">ஒரு படம் ஓடி முடிய இரவு சாப்பாட்டுக்கு ஓய்வு, திரும்ப அடுத்த படம் எண்டு ராத்திரி முழுக்க ஒரே கொண்டாட்டம் தான் அதுவும் விடியும் வரைக்கும், கூடுதலா வெள்ளிக் கிழமைகளிலே இவ்வாறான படம் போடும் வேலைகளை நம்மூர் காரங்கள் செய்தாங்கள். இப்பிடியெல்லாம் கஸ்டப்பட்டு படம் பார்த்திருக்கிறோமா என்று இப்போதெல்லாம் நினைக்கும் போது ஏக்கமாவும், சந்தோசமாகவும் இருக்கிறது.</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVw9gGA6SrfEBJ5u8WnT32AvC11xLkiLAmwxo_k_28hCE-29yRiSu5IYkfEsKYcXqP-XPONaF72FlJAa0ir1XWKPNbr6aSsFyvg4952ZJygy_L67hhoekdl7e_alRvEvzSfR2VY8QCrDM/s1600/FNYJ38KGXQPMTQV.RECT2100.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVw9gGA6SrfEBJ5u8WnT32AvC11xLkiLAmwxo_k_28hCE-29yRiSu5IYkfEsKYcXqP-XPONaF72FlJAa0ir1XWKPNbr6aSsFyvg4952ZJygy_L67hhoekdl7e_alRvEvzSfR2VY8QCrDM/s320/FNYJ38KGXQPMTQV.RECT2100.jpg" width="320" /></a></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: x-small; line-height: 19.32px;">அதுவே காலம் செல்ல செல்ல மின்சாரமும் வரத் தொடங்க புதிதாக டீவி வாங்குவோரும், அதுவரை மூடிக் கட்டி மூலையில் போட்டிருந்த டீவிக்களைத் திருத்த முற்பட்டோருமாக டீவி, அன்டெனா விற்பனை வேகமாக நடைபெற தொடங்கி இருந்தது. VHF இற்கு ஒரு பெரியா சைசாகவும், UHF இற்குச் சிறிதாக மீன்முள்ளு போன்ற ஒரு அன்ரெனாவும் தனித்தனியாக வாங்கி அதைப் பொருத்துவது அடுத்த தலையிடி பிடிச்ச வேலை, அதுக்கென வேறு 20 அடி பைப்புகளை வாங்க வேண்டும், இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக நவீனத்திற்குள் வர தொடங்கிய காலங்களை மனசு புதுப்பித்துக் கொண்டிருக்கையிலே கையில் இருந்த கைபேசிக்கு நான் யூடியூப்பில் சப்ஸ்கிறைப் செய்த செனலில் இருந்து புதிதாக பட ட்ரெயிலர் வந்து விட்டதாய் அலார்ட் வருகிறது...</span></div>
<div style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: helvetica, arial, sans-serif; line-height: 19.32px; margin-top: 6px;">
<span style="font-size: x-small;">அன்று ஒரு படம் பார்க்க நாம் பட்ட பாடு இப்போதெல்லாம் ஒரு நொடியில் நினைத்த படத்தை பார்க்க முடியுமானதாக இருந்தாலும் அன்றைய நாளைப்போல இன்பம் கிடைப்பதில்லை...! அது ஒரு கனாக்காலம்! </span></div>
Premhttp://www.blogger.com/profile/04447613447033692983noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6107119563974400858.post-10660522575700921132016-09-07T08:33:00.000+05:302016-09-07T08:33:13.441+05:30தட்டிவானை தடவிப்பாக்கிறன் இங்கின கிடைக்குமான்னு...<span style="font-size: x-small;">நாளுக்கு நாள் வாகன நெரிசல் அதிகமாகிக்கொண்டே போகின்ற நிலையில் ஒரு சில பிடித்தமான அதுவும் ஊர் வாழ் மக்களுக்கு பிடித்தமான தட்டிவான் என்றழைக்கப்படும் பயணிகள் ஏற்றும் வாகனம் கொஞ்சம் கொஞ்சமான வழக்கொழிந்து வருவதான உணர்வு தோன்றியிருக்கிறது...</span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJWjL9ZvNBDfj6gNmKqNgjfgiW5_eq_recbj16vRG2WhzCRADBA40dREXNTNAIC4cx29pnluRmjWq2p_fPBTJXNEl97PJCfES_mcx-ZLIZXIYixvUA5vg_haflnTqDsVqdsjQZWy92qRo/s1600/Thaddi+van+01.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJWjL9ZvNBDfj6gNmKqNgjfgiW5_eq_recbj16vRG2WhzCRADBA40dREXNTNAIC4cx29pnluRmjWq2p_fPBTJXNEl97PJCfES_mcx-ZLIZXIYixvUA5vg_haflnTqDsVqdsjQZWy92qRo/s320/Thaddi+van+01.jpg" width="243" /></a><span style="font-size: x-small;">வாகன நெரிசலில் கடுப்பாகி நின்ற போது தட்டிவான் போலான ஒரு வாகனம் என்னை கடக்க கண்டேன் ஞாபகங்கள் தொண்ணூறுகளிற்குள் சென்று விடுகின்றது!</span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">நான் அறிய தட்டிவானை அதிகமாக கண்டது குறிகட்டுவான்-யாழ்ப்பாணம் போக்குவரத்து சேவையில் தான், அது தவிர நெல்லியடி, அச்சுவேலி பக்கங்களிலும் அந்த தட்டிவான் பாவனை இன்னமும் வழக்கத்தில் உள்ளதாக கேள்வி சரியாகத் தெரியவில்லை.</span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">இதன் அமைப்பு எப்படியிருக்கும் என்றால் சிறிய ரக லொறியைப் போல உள்ளே ஆசணங்கள் பொருத்தப்பட்டு பின்புறமாக பாதி பலகையை நீட்டி விட்டு சங்கிலியால் இரு புறமும் கொழுவி விட்டிருப்பர் அப்படியாக அமைக்கப்பட்ட பலகையையே தட்டி என்று அழைப்பதாலோ என்னவோ அந்த வாகனத்திற்கு தட்டிவான் என பெயர் வந்திருக்கலாம் என நினைக்கின்றேன்.</span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">பஸ் பிரயாணப்பிரியர்கள் இந்த தட்டிவானில் பயணிப்பரேயானால் நிச்சயமாக வித்தியாசமான அனுபவத்தினை பெற்றிருப்பர் காரணம் இந்த தட்டிவான்களுக்கு யன்னல்கள் கிடையாது ஆகவே தட்டிவான் பயணிக்கும் வேகத்தில் எல்லா புறமும் காற்று அலாதியாய் பயணிகளை வந்தடையும் இந்த பயணத்தை அதிகமாக யாழ்ப்பாணத்து மக்கள் அனுபவித்திருக்க கூடும்.</span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="font-size: x-small;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmyeyxCqnk6duX6K_Zht10clDItEd3iflQya3aXBT_NeQAblkKCCrg0YmxNjTeuAOkN_KSUtOhTQxmJ8WYTPSr9OPTSGbGquRatf1F2mvzlTZ0NxxTXrIgSQpPyYI1otc0J-G70mE4g50/s1600/Chavalot+Lorry.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmyeyxCqnk6duX6K_Zht10clDItEd3iflQya3aXBT_NeQAblkKCCrg0YmxNjTeuAOkN_KSUtOhTQxmJ8WYTPSr9OPTSGbGquRatf1F2mvzlTZ0NxxTXrIgSQpPyYI1otc0J-G70mE4g50/s1600/Chavalot+Lorry.jpg" /></a></span></div>
<br />
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">பயணிகள் தவிர சந்தைப் பொருட்கள் அதாவது பழவகைகள், மரக்கறி வகைகள், ஆடு மாடு என எல்லாவற்றையும் ஏற்றி செல்லும் வசதி வாய்ப்புக்கள் நிறைந்த ஒரு வாகனமாக இந்த தட்டிவான் இருந்தமை குறிப்பிடத்தக்கது. </span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">அண்மையில் நான் கதிர்காமம் சென்றிருந்த வேளை அங்கே தட்டிவான் பாவனை இன்னமும் இருக்கின்றமையை அவதாணித்தேன் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது இவையெல்லாம் நான் தட்டிவான் பற்றி எழுத ஆரம்பிக்கும் போதே ஞாபகத்திற்கு வருகின்றன. </span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgo5iBJLW-sWwtqfwRAIOMI8g48r_6rJ-IQDferojeMIHLNKhmuPwub3LYiZnpCoSWI3Tr7hAUy7LMfqO_3dSgjcWydUIgOl47IXoM-hNp50r3hcJQMqj1QWSjhSskcJEC1uMwN-Z7LEGQ/s1600/jafvan.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="192" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgo5iBJLW-sWwtqfwRAIOMI8g48r_6rJ-IQDferojeMIHLNKhmuPwub3LYiZnpCoSWI3Tr7hAUy7LMfqO_3dSgjcWydUIgOl47IXoM-hNp50r3hcJQMqj1QWSjhSskcJEC1uMwN-Z7LEGQ/s320/jafvan.JPG" width="320" /></a></div>
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">பாதுகாப்பான இயற்கையை ரசித்தபடி காற்றுடன் முழு நேரம் கதை பேசியபடி பயணிக்க ஆர்வமிருந்தால் ஒரு தடவை தட்டிவானில் பயணித்துப் பாருங்கள்... </span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">ஒரு சில பொருட்கள் எவ்வளவு காலம் சென்றாலும் எம் மனதை விட்டு இலகுவில் மறைந்து போகாது, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவை போன்ற அல்லது அவை கண்ணில் தென்படும் போது நாம் நம்மை அறியாமல் எமது கடந்த கால பசுமை நினைவுகளிற்குள் இலகுவாக கடத்தப்பட்டுவிடுகின்றோம்.</span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">அந்த மாதிரியான ஒரு சுவாரசியமான பயண அனுபவமே இந்த தட்டிவான் பயணங்கள், எதிர் காலத்தில் இம் மாதிரியான பயணங்கள் யாருக்கும் இலகுவில் வாய்த்துவிட போவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.</span><br />
<div>
<br /></div>
Premhttp://www.blogger.com/profile/04447613447033692983noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6107119563974400858.post-12409942493216179402016-09-04T12:17:00.000+05:302016-09-04T12:17:59.341+05:30கணினி வகுப்பில் முதல் நாள்...<div dir="ltr" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
2000ம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் மெல்ல கணினி பாவனை வரத் தொடங்கிய காலம்.<br />என்னையும் குட்டி அண்ணாவையும் அம்மா கணினி படிக்க திருநெல்வேலியில் இருக்கும் கணினி ஆசிரியரிடம் சேர்ப்பித்தார், பின்னர் தான் தெரிந்தது அது எனது நண்பன் சிவராஜ்ன் அக்கா என்று...</div>
<div dir="ltr" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<br /></div>
<div dir="ltr" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
மெல்ல மெல்ல தட்டுத்தடுமாறி கணினியை பயில தொடங்கினோம், முதல் பாடம் பெயிண்டில்(Paint) வட்டம் சதுரம் கீறி அதற்கு கலர் அடிப்பது.</div>
<div dir="ltr" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<br /></div>
<div dir="ltr" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
அது அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை என்றாலும் அந்தக் காலத்தில் பாவனையில் இருந்த மவுசை(Mouse) கையாள்வதில் தான் வெற்றி இருந்தது ஏனெனில் மவுசை கொஞ்சம் அசைத்தால் மவுஸ் பொயிண்டர்(Mouse Point) எங்கே போய் சொருகிக்கிடக்குதெண்டு மொனிட்டருக்குள்(Monitor) பல தேடல்கள்...</div>
<div dir="ltr" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<br /></div>
<div dir="ltr" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
ஒருவழியாக பலத்த போராட்டத்திற்கு மத்தியில் ஓரளவு கணினி அறிவை பெற்றுக் கொண்டோம்...!</div>
<div dir="ltr" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<br /></div>
<div dir="ltr" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
இப்படியே 2004ம் ஆண்டு வந்து விடுகிறது கொஞ்சம் மேலதிகமாக கற்றுக்கொள்ள யாழ்ப்பாணத்தில் இருந்த ஏசியன் கணினி நிறுவனத்தில்(Asian Computer Institution) போய் சேர்ந்தேன்...</div>
<div dir="ltr" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<br /></div>
<div dir="ltr" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
அங்கு வரிசையில் அடுக்கப்பட்ட கணினியில் ஒரு கணினியில் போய் அமர்ந்தேன் எனக்கு இடது புறத்தில் ஒருவன் வந்து அமர்ந்து கொண்டான் நான் அறிய அவனுக்கு அது தான் முதல் ஓ இரண்டாவது வகுப்பாக இருக்க வேண்டும்.</div>
<div dir="ltr" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgv4jowpxdCv8RkFVYlmu-oCmVi7eD8hs1DZ9oj907Fe_EU0ZxjG7FAyJabjDAvsuUg6gIc1dcT-Fxt0Pwd73dD3xIizHCs8CtxwPRReGcjJrCS8dXCf-J7kRgkT-8S5P9Z5zYvJI8WADo/s1600/is.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgv4jowpxdCv8RkFVYlmu-oCmVi7eD8hs1DZ9oj907Fe_EU0ZxjG7FAyJabjDAvsuUg6gIc1dcT-Fxt0Pwd73dD3xIizHCs8CtxwPRReGcjJrCS8dXCf-J7kRgkT-8S5P9Z5zYvJI8WADo/s1600/is.jpg" /></a></div>
<div dir="ltr" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
கணினி ஆசிரியர் சொல்வதை செய்ய ஆரம்பித்தவன் சிறிது நேரத்தில் எனது எனது மொணிட்டரை(Monitor) உற்று பார்த்தவண்ணம் ஏதோ தேடலில் இருந்தான் பெடியன்...</div>
<div dir="ltr" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
இதை கவனித்த நான் என்ன என்று கேக்க அவன் அப்பாவியாய் ஒரு பதில் சொன்னான் "இல்ல மவுஸ் பொயிண்டை வலது பக்கம் இழுத்தன் அதை காணல உங்கட மொணிட்டருக்க வந்திருக்குமோன்னு தான்...!"</div>
<div dir="ltr" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<br /></div>
<div dir="ltr" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
ஆரம்ப காலத்தில் மவுஸ் பொயிண்டரோரு நான் போராடிய நாட்கள் நினைவிற்கு வந்தது...<br />இவன் என்னை விட ஒருபடி மேலே போய் அடுத்தவன் மொணிட்டரில் தேடியிருக்கிறான் அம்புட்டும் தான்...!</div>
<div dir="ltr" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
<br /></div>
<div dir="ltr" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
ஆரம்ப கால கணினி வாழ்க்கை அற்புதமானது எங்களைப் போல பல அன்றைய கணினி போராளிகள் இன்று கணினியில் கைதேர்ந்தவர்களாய்... </div>
Premhttp://www.blogger.com/profile/04447613447033692983noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6107119563974400858.post-48549257825835377022016-09-02T16:04:00.000+05:302016-09-04T12:18:18.064+05:30நல்லூரில் இன்று நான்! கச்சான் கடையும் நானும் - நினைவில் 2<span style="font-size: x-small;">தேடுவாரத்துக் கிடக்கும் கச்சான் சாப்பிடும் ஆசை எல்லாம் அந்த 25 நாட்களுக்கும் அளவே இன்றி அத்தியாவசியமாகும். நல்லூருக்கு போனால் கச்சான் சாப்பிடாமல் வீட்டுக்கு வந்தால் அந்த நாள் அர்த்தமற்றதாய் ஒரு பிரம்மையை தோற்றுவிக்கும் காரணம் நல்லூருக்கு போறவன் எல்லாம் கட்டாயம் கச்சான் வாங்கி தின்னாம வீட்ட போக மாட்டான் என்பது ஐதீகம்... </span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">கடவுள் சித்தம் நான் நல்லூர் கோயிலடியிலே பிறந்தது வளர்ந்தது எல்லாமே, செரியா 4 மணிக்கு கம்பீரமாய் அடிக்கும் அந்த நல்லூரான் மணி ஆலய தரிசனத்திற்கான புறப்பாட்டு மணியாக மனதில் பதிந்து கொள்ளும் திருவிழா நேரம் அதுவும் பின்னேரம் வீதிகள் சல சலக்க தொடங்கிவிடும் வியாபரிகள் கூக்குரல் போட தொடங்கிவிடுவார்கள் வீதியின் இரு மருங்கும் ஒரே களேபரமாய் தான் காணப்படும் குறைந்தது இரவு 9-10 மணி வரைக்காவது. கூட்டத்தோடு கூட்டமாய் நடந்து கோயிலுக்கு போய் சாமியுடன் ஐக்கியமாகி வீடு திரும்பும் இருள் தூழ்ந்த வேளையில் கச்சான் கடைக்காரருடன் பேரம் பேசுவதிலும் ஒரு சுவாரசியம் இருக்க தான் செய்கிறது.</span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">(+) நல்லூர் நடு மையம் என்றால் நாலா புறமும் கட்டாயம் கச்சான் கடைகளால் அணிவகுத்திருக்கும் அந்த நல்லூர் ஏரியாவே, சரி விசயத்திற்கு வருவம்...</span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">சாமிய இருப்புக்கு அனுப்பிட்டு பின் வீதியால நடக்கிறன் நான்,</span><br />
<span style="font-size: x-small;">முதல் கடைல இருந்து தொங்கல் கடை வரைக்கும் ஆக்களைக் கண்டோன கத்த தொடங்கிடுவாங்கள்:</span><br />
<span style="font-size: x-small;">அம்மா வாங்கோ கச்சான் வாங்கிட்டு போங்க</span><br />
<span style="font-size: x-small;">அக்கா வாங்க சாப்பிட்டு பாத்து வாங்குங்கிட்டு போங்க</span><br />
<span style="font-size: x-small;">தம்பி வாடா சுடச்சுட கச்சான்</span><br />
<span style="font-size: x-small;">அண்ண வாங்க இப்ப வறுத்தது சுட சுட கச்சான், சாப்பிட்டு பாத்து வாங்குங்கோ... ஓடியாங்கோ எண்டு ஆளாளுக்கு கூவ.... </span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7rnXoim7dCoqkv7kFoHTBBw9rJOkUUOXATbBzrIRRXcHRbhUHlTQeIrtxGp7x9nG4Wr6VbHZOknVpqOZqvCYI5ya_Se3T4KZ9Tj85JJuODY6f1BsDHo8VX9rXEF4KHvBNMdJ0tQhKvLE/s1600/IMG_6136.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7rnXoim7dCoqkv7kFoHTBBw9rJOkUUOXATbBzrIRRXcHRbhUHlTQeIrtxGp7x9nG4Wr6VbHZOknVpqOZqvCYI5ya_Se3T4KZ9Tj85JJuODY6f1BsDHo8VX9rXEF4KHvBNMdJ0tQhKvLE/s320/IMG_6136.jpg" width="240" /></a></div>
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">சரி அவங்கட கூவலுக்கு சொவி சாச்சு ஏதாச்சும் ஒரு கடைக்க பூந்தா முதல் றவுண்டு சுளகுக்க குவிச்சிருக்கிற கச்சான்ல ரெண்டு மூண்ட எடுத்து திண்டு பாத்திட்டு இந்தா இதில அம்போருவாக்கு போடுங்க போளம் போடாம எண்டு சொல்லிட்டு எங்கட பாட்டில அந்த குவியல்ல ஒண்ணொண்ணா எடுத்து கொறிச்சுக்கொண்டே நிண்ட படி பேரம் போசுவம் பேசினன்...</span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">என்னம்மா கொஞ்சமா போடுறியள் இன்னும் கொஞ்சம் கிள்ளி போடாம அள்ளி போடுங்க எண்டு சொல்லி சொல்லி கச்சான் பாஃக்கு வாய் மூடாத அளவுக்கு நிரப்பிக்கொண்டு வழி நீளமும் திண்டபடி வெளிக்கிட தெரிஞ்சவன் எவனாச்சும் சிக்குவான் பின்ன அவனுக்கும் நீட்டி கதைச்சு கதைச்சு நிக்க அந்த பக்கட் முடிஞ்சிடும்...</span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">சரி போவம் எண்டு அவன காய் வெட்டிட்டு இன்னும் ஒரு பக்கட்ட வாங்கிக்கொண்டு கொஞ்ச தூரம் கோயில் பக்கமா நடக்க இன்னும் ஒரு அடிமை சிக்கும் அதையும் கூட்டிக்கொண்டு வாடா மச்சான் அப்பிடி அந்த பின் வீதி மணலுக்க இருந்து கச்சான் சாப்பிட்ட படி சரக்கு பாப்பம் எண்டு அதையும் இழுத்துக்கொண்டு மணலுக்க இருந்து திண்டிட்டு ஒரு ஒம்பது மணி வரைக்கும் அரட்டை அடிச்சு வீட்ட போகேக்க இன்னும் ஒரு பக்கட்ட வாங்கிக் கொண்டு போய் வேட்டி எல்லாம் களட்டி வைச்சிட்டு ஈசி சியர்ல படுத்துக் கிடந்து திரும்பவும் மிச்சம் சொச்சம் எல்லாத்தையும் கொறிச்சு தள்ளி கச்சான் கோதெல்லாத்த்தையும் அங்கங்க கொட்டி அம்மாட்ட பேச்சும் வாங்கி வீட்ட கூட்டிட்டு விறாந்தைக்க வெறுந்தரைல விட்டத்த பாத்தபடி மல்லாக்கா படுத்தோண வரும் பாருங்க ஒரு மரண நித்திரை அது தான் சார் சொர்க்கம்...! </span>Premhttp://www.blogger.com/profile/04447613447033692983noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6107119563974400858.post-20840796091366472402016-09-02T10:52:00.000+05:302016-09-04T12:18:39.835+05:30நல்லூரில் இன்று நான் - நினைவில் 1<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; line-height: 19.32px; margin-bottom: 6px;">
<span style="line-height: 19.32px;"><span style="font-size: x-small;">காலையில் கொழும்பில் இருந்து வந்து மளமளவெண்டு குளிச்சு வெளிக்கிட்டுக் கொண்டு நல்லூருக்கு விறுக்காய் நடக்க ஆரம்பிக்கிறேன், வைமன் றோட்டில இருந்து பாரதியார் சிலை அரசடி முதலாம் பரியரைத் தாண்ட எத்தணிக்யில் அங்கு போடப்பட்டிருக்கும் பரியல் நவீனமாய் காணப்பட்டது அதாவது சில்லுகள் பூட்டி பொலீஸ் காவலுடன், அதைக் கண்ட கணமே நினைவுகள் என்னை 2000த்திற்குள் அழைத்து செல்கிறது...</span></span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: x-small;">அந்தக் காலத்தில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி சாரணர்கள் சிறப்பாய் நல்லூரில் தமது கடமைகளை செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருந்த காலமது, காலையில் நாங்கள் கோயிலுக்கு போறதுக்கு அலார்ம் வைப்பதே இல்லை காரணம் அவர்கள் 4 மணியானால் நல்லூர் முனிசிபல் கவுன்சிலுக்க இருந்து பரியலுக்கு போடுற ரம்(பீப்பா பரல்)ஐ காலால் உதைத்து உதைத்து உறுட்டி வரும் சத்தமே எங்களை எழுப்பி விடும்.</span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: x-small;">அவர்கள் மட்டுமல்ல சென் ஜோன்ஸ், சென்றல், வேறு சில பாடசாலை மாணவர்கள் ஒன்றாய் இணைந்து சிறப்பாக கடமையாற்றிய காலம் என்றால் அக் காலத்தையே சொல்வேன்... அவ்வளவு நேர்த்தி கடமையில் ஆனால் இன்று அவ்வாறோ என்று ஒரு கணம் சிந்திக்க வைத்தது ஏன் என்று தெரியவில்லை...</span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-hHcbl_Bw6Y3yn0Pm1PPMk_xQ37r_JMYGe8k1cwZvNDaUdXJK8OS9KIjPHjQidO0zjR2nd59H8XFGAPL3ELaxv2fuYaN0lY8hD6FrWvlCPmCNA3nmw4nAzHiTP_MtAGO-Z1PLIPy-g_U/s1600/frtnhjfnj.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><span style="font-size: x-small;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-hHcbl_Bw6Y3yn0Pm1PPMk_xQ37r_JMYGe8k1cwZvNDaUdXJK8OS9KIjPHjQidO0zjR2nd59H8XFGAPL3ELaxv2fuYaN0lY8hD6FrWvlCPmCNA3nmw4nAzHiTP_MtAGO-Z1PLIPy-g_U/s320/frtnhjfnj.jpg" width="320" /></span></a><span style="font-size: x-small;">மேலும் நடக்கிறேன் இரு மருங்கும் என்றும் மாறாத ஆனால் முகங்கள், பாஷைகள் மாறி</span></div>
<span style="font-size: x-small;">ன கச்சான் மற்றும் மாலை சக விளையாட்டுச்சாமான் கடைக் காரர்கள் 'அக்கா வாங்கோ கச்சான் வாங்கிட்டு போலாம், அண்ண வாங்கோ சாப்பிட்டு பாத்து வாங்குங்க சுட சுட கச்சான், அம்மா வாங்கோ நல்ல சாறீஸ் மலிவு மலிவு, எது எடுத்தாலும் அறுவோருவா எது எடுத்தாலும் அறுவோருவா...</span><br />
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: x-small;">இடை விடாத கூவல்கள் இவைகளைக் கடந்து திலீபன் தூபியடி முச்சந்தியை அடைகிறேன் அது தான் ஒரு காலத்தில் எங்களது கோட்டை என்றே சொல்லலாம் கோயில் திருவிழாக்கள் முடிந்து நட்புக்கள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து லூட்டியடிக்கின்ற எமது அசைக்க முடியா கோட்டை. அதை பல புது முகங்கள் ஆக்கிரமித்திருந்தார்கள் ஆனால் இன்றும் நாங்கள் கூடி கதைப்பதாய் நினைவில் நிழல்ப்படம் ஓட ஆரம்பித்து விட்டது... பழமைகளை ஆங்காங்கே நினைவுகளாக்கி நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நான் சின்னவனாக மாறிக்கொண்டருக்கிறேன் என்னையே அறியாமல்...</span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: x-small;">மெல்ல வலது பக்கம் திரும்பினால் றியோவில் அன்று போல் இன்றும் எந்நேரமும் கூட்டம் அலை மோதியபடி ஆங்காங்கே பெட்டிக்கடைகளும் விளையாட்டுசாமான் கடைகளும் அது போக மோட்டார் சைக்கிள் கடைகளும் என நல்லூர் ஏரியாவே களைகட்டியிருந்தது இவைகள் தான் இன்றும் மாறாத அதே பழமையுடன் நவீனமும் கலந்து...</span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2auD8KGT9fu8yCikRh61MnUNXOJpjdoLvE6W7vahjdHxcaWq3eVQNaPMYu1an8gfziZh0VIwHWdXxnJx9qOyTPnlu8QLTS2rMNAcEWv1UCF21Gdsfd1IpCFAkeNolJnMZGjjYWYnTHfc/s1600/fth.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><span style="font-size: x-small;"><img border="0" height="179" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2auD8KGT9fu8yCikRh61MnUNXOJpjdoLvE6W7vahjdHxcaWq3eVQNaPMYu1an8gfziZh0VIwHWdXxnJx9qOyTPnlu8QLTS2rMNAcEWv1UCF21Gdsfd1IpCFAkeNolJnMZGjjYWYnTHfc/s320/fth.jpg" width="320" /></span></a><span style="font-size: x-small;">விசித்திரமான பறக்கந்தட்டுக்கள், வான வேடிக்கைப் பொருட்கள், வீதியில் கற்பூரம் விப்போர் என வீதி எந்த நேரமும் அல்லோலப் பட்டுக் கொண்டே இருக்க நான் முனிசிப்பல் கவுன்சிலைக் கடக்கிறேன் நல்லூர் சிவன் கோயிலில் புத்தகக் கடையும் அதற்கு எதிர்த்தாற் போல் உடுப்புக் கடையும் மாற்றம் இல்லாமல்... ஏறத்தாள நான் சிறுவனாக மாறியிருந்தேன் கண்டதெல்லாம் வாங்க வேண்டும் என்ற மனப்பாங்கோடு நான் நடந்த வீதியில் நிசப்தமாக நான் நடந்தாலும் நினைவுகள் போடும் குழப்பங்கள் என்னை எதையாவது வாங்கி விட தூண்டிய வண்ணம்! சரி பழைய நினைவிற்காய் எதையாவது வாங்கி விட வேண்டும் ஆனால் கோயிலுகுக்கு போய் திரும்பி வரும் போது என்று சிவன் கோயிலைக் கடக்கையிலே அந்த காலத்தில் 5/=க்கு வித்த அந்த பெரிய பலூன் 15/- என்று கூறியபடியே முகத்துக்கு நேரே நீட்டினார் அந்த பலூன் வியாபாரி அந்த கணமே மனசு சம்மதிக்கிறது வாங்கிக் கொண்டே நடக்கிறேன்...</span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: x-small;">ஆதீன முன்றல் கடக்கையில் சிறுமி அப்பாவிடம் அடம்பிடித்தபடி அவள் அந்த பலூனுக்காய் அடம்பிடிப்பது அழகாய் இருந்தது நான் கோயிலுக்கு தானே போறன் இந்தாங்கோ அண்ண இத இவளுக்கு குடுங்கோ என்று அதை குடுத்துவிட்டு இரண்டாவது பரியலைத் தாண்டுகிறேன் வீதி முழுவதும் சிவப்பு வெள்ளை சீலையால் மறைத்து கட்டப்பட்டு இருந்தது இந்த வேலைப்பாடு கடந்த திருவிழாவில் இருந்து அரங்கேறியிருக்கிறது ஏதேதோ மாற்றம் வருசா வருசம் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.</span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: x-small;">ம்ம்ம்</span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: x-small;">கோயிலுக்க போய் தான் பார்ப்போம் என்றவாறே தெற்கு வாசல் பக்கமாய் நடக்கிறேன் சென் ஜோன்ஸுக்கு அடுத்த படியாக (இப்போ எப்பிடியோ) நேரம் தவறாமை என்பதன் இலக்கணம் நல்லூரில் தான் காண முடியும் அப்படி அந்தந்த உற்சவங்கள் அந்தந்த வேளைகளில் உரிய நேரத்தில் நடந்து கொண்டே இருக்கும்... வசந்த மண்டபத்தில் பஞ்சாலாத்தி காட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது நான் தெற்கு வாசல் படியைக் கடந்து உள்ளே போகிறேன் அரோஹரா என்ற வாறே... அழகுற உள் வீதி அளவான பக்தர்கள் சற்று நேரத்தில் சாமி உள்வீதி வலம் வருகிறது அழகாய் ஆரோகணித்த வண்ணம்...</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="font-size: x-small;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0Xpfuuj-ORUYWiL3tAZw0Zz5DwiOXaSLWi0tGT1PusfHycnlHP9yfY9EFKjs-jhYWcH_GZcc7vmrvgncElpNDCjqvnO4mxuhUAKCxNFqaRDP398XyRiz2yG8bmpXPEnw3d73h0FwLYZ0/s1600/uytu.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0Xpfuuj-ORUYWiL3tAZw0Zz5DwiOXaSLWi0tGT1PusfHycnlHP9yfY9EFKjs-jhYWcH_GZcc7vmrvgncElpNDCjqvnO4mxuhUAKCxNFqaRDP398XyRiz2yG8bmpXPEnw3d73h0FwLYZ0/s320/uytu.jpg" width="256" /></a></span></div>
<br />
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: x-small;">பக்தி பரவசத்தில் சற்று நேரம் திழைத்தபடியே சாமியை நோக்கிய வண்ணம் பின் புறமாக சாமியுடன் மேள தாள விற்பன்னர்களுடன் நடக்கிறேன்... உண்மையில் இது தான் வரம்...</span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: x-small;">அப்படியே யாக சாலைக்கு சாமி வர நான் வெளியில் வந்தால் தமிழ் சிங்களம் எல்லாம் கைகளில் ஸ்மார்ட் போஃன் வைத்தும் டி எஸ் எல் ஆர் வைத்தும் செல்ஃபி குள்ஃபி என வளைத்து வளைத்து போஃட்டோ எடுத்த படி... திருவிழாக்கள் தொழில்நுட்பமயப்படுதலின் ஆரம்பகட்டத்தில் நாங்கள் இருக்கிறோம் என்ற மனநிலையுடன் ஆதீனம் நோக்கி நடக்கிறேன் வெள்ளைக்காரன் வேட்டியுடனும், வெள்ளைக்காரி சீலையுடனும் கோயிலுக்கு வருகிறார்கள் இவர்கள் தான் அடுத்த கலாச்சார காவலர்கள் என்ற வாறே வெளி வீதி சாமி உலாவிற்காய் ஆதின வாசலில் நின்றுகொண்டிருக்கிறேன்.</span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: x-small;">ஆங்காங்கே அழகான பிள்ளைகளைக் காணக்கூடியதாய் இருந்தது சும்மா சொல்ல கூடாது மொத்தத்தில எல்லாமே செம்ம பிகருகள் தான் சாமி வரும் வரை அதுகளை பார்த்துக்கொண்டு நிற்கிறேன்... அந்த காலத்தில் செய்த தொழிலை இப்போ செய்வதில் ஒரு ஆத்ம திருப்தி...</span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: x-small;">சாமி வருகிறது... மீண்டும் வெளி வீதியில் நடக்கிறேன் என்னுடன் என் நண்பனும் இணைந்து கொள்கிறான் இருவரும் பழைய நினைவுகளை மீட்டிய வண்ணம் சாமியை தூரே விட்டு விட்டு எங்கட பாட்டுக்கு நடந்து தேர்மூட்டியடியில் வந்து நின்று மீண்டும் அதே கணக்கெடுப்பு... எல்லோரும் அழகிகள் தான் பிழை சொல்வதற்கில்லை.</span></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: x-small;">மச்சான் இண்டைக்கு சாமி உள்ள போனோன்ன கரம்சுண்டல் வாங்கி சாப்பிட்டு போவம் எண்டான் சரி எண்டு ஆதீனத்தடிக்கு வாறம் சாமியும் உள்ள போது... அந்த கரம் சுண்டல் இப்போ ஏதோ ஸ்பெசல் எண்டு மரவள்ளி எல்லாம் போட்டு கறியெல்லாம் ஊத்தி வித்தியாசமா இருந்திச்சு ம்ம்ம் ஒரே அடில அடிச்சு தள்ளிட்டு, கடைகளை பாத்துக்கொண்டு வீட்டுக்கு நடக்கிறன்... அழகாய் சோபித்திருகிறது நல்லூர்... கண் கவர் கடைகள், கவர்ச்சியான பொருட்கள் என்று... ம்ம்ம்</span></div>
<div style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: helvetica, arial, sans-serif; line-height: 19.32px; margin-top: 6px;">
<span style="font-size: x-small;">இவைகள் தான் இன்றும் பழமை மாறாமல் அதே தோற்றத்தோடு... 'மகிழ்ச்சி' திருவிழாவும் முடியப் போது நல்லூரும் சோர்விழந்து போக போது எண்டு நினைச்ச படி கச்சான் ஒரு பக்கட்ட வாங்கி உடைச்சு உடைச்சு கோத றோட்டில போட்ட படி வீட்டுக்கு வந்து ஈசி சியரில கண்ணை மூடினால் அன்றும் இன்றும் எத்தனையோ மாற்றங்கள்... ஆனால் எல்லாமே ஒரே மாதிரியாய்...</span></div>
Premhttp://www.blogger.com/profile/04447613447033692983noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6107119563974400858.post-50670226663825442202016-08-20T09:47:00.000+05:302016-08-20T09:47:12.605+05:30சேற்றிலே முளைத்த செந்தாமரை...!<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px;">
தூரமாய் ஓர் ஓலை குடிசை<br />தள்ளி தள்ளி பனை மரங்கள்<br />இவை நடுவே உடுப்பு காய<br />குறுக்கும் நெடுக்குமாய்<br />கொடி கைறுகள்<br />ஓட்டை கிழிஞ்சல்களுடன்<br />எந்நேரமும் காயும்<br />கந்தல் ஆடைகள்<br />கூனல் விழுந்த ஆச்சி<br />குதூகலமாய் சிறுவன்<br />மக்கிப் போன விறகு சேர்த்து<br />மண் சட்டி பானை சமையல்...</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
மழை வந்தால் போதும்<br />குசினியின் சட்டி பானை எல்லாம்<br />விறாந்தையில் படையெடுக்கும்<br />விடியும் வரை ஆச்சிக்கு வீட்டிற்குள்ளே<br />அலைச்சல் வரும்...</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
முதுமையில் ஆச்சி<br />முத்தான பேரன்<br />ஆச்சிக்கு ஆதாரம் பேரன்<br />பேரனுக்கு அன்பு காட்ட ஆச்சி<br />சிறு குழந்தை அவன்<br />வாழ்வின் பொறுப்புக்களை<br />நித்தமும் படிப்பினையாய்...</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
பொழுது போக்க<br />முற்றத்தில் விளையாட்டு<br />தூக்கம் தேட ஆச்சி கதை<br />வயித்தைக் கழுவ<br />அவள் போடும்<br />வறண்டு போன கறி சோறு...</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
காதல் என்ற போர்வையில்<br />காமத்தில் சிக்குண்டு<br />இரு மனமும்<br />சிற்றின்பம் கண்டதினால்<br />சிதறி விழுந்த முத்து இவன்<br />மனமறியா தாயொன்றால் - வீதியிலே<br />மறைத்து விடப்பட்டவன்...</div>
<div style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-top: 6px;">
விடுகதையாய் போன - இவன்<br />வாழ்வின் பேசு பொருளாய்<br />அவன் ஆச்சி!<br />போக்கற்ற வேளைகளில்<br />முற்றத்தில் அவன்<br />உறுட்டி விளையாடும்<br />அந்த பெட்டியில் தான்<br />உன் தாய் உன்னை விட்டு சென்றாள் - என்று<br />புத்தி பேதளித்தும் பேசாமல்<br />மௌனித்திருக்கும் அவன் ஆச்சி<br />காலத்தை வென்ற கடவுளாய்<br />என்றும்...!</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlhdPdxqWi2B_rKi7WXKHCZioOnaoXPzkLOmlcQ7B3b_NfAA7ydbI26wx8GhPpL7v86ips_tlIQgX9mgKZoQkn8tMh6l1FvplRYp76fwzg-PWk-qD6KA09p8Z4kBZZHIMNi9uf9LBkA_A/s1600/116M-Grandmother-and-chil.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlhdPdxqWi2B_rKi7WXKHCZioOnaoXPzkLOmlcQ7B3b_NfAA7ydbI26wx8GhPpL7v86ips_tlIQgX9mgKZoQkn8tMh6l1FvplRYp76fwzg-PWk-qD6KA09p8Z4kBZZHIMNi9uf9LBkA_A/s320/116M-Grandmother-and-chil.jpg" width="269" /></a></div>
Premhttp://www.blogger.com/profile/04447613447033692983noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6107119563974400858.post-38788182881950072442012-09-30T13:12:00.000+05:302012-09-30T13:12:35.667+05:30சக்திமான்(Shaktimaan) - 1998/99களில் எங்கள் சூப்பர் ஹீரோ...!வணக்கமுங்கோ! <div>
<br /></div>
<div>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwVpIHWSsTSOEVTEM20Gv0xRkOdAuUvEqaX1NDuWK4eMxbnTWKIiVVBbPptOhCX0cQO75m8XcBZAmWMywIcfOMtb6biQQBmH40L6FpcRnNIGld6u-SCaeudk9LvcPYlwJX-Z5IWveG1z8/s1600/1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwVpIHWSsTSOEVTEM20Gv0xRkOdAuUvEqaX1NDuWK4eMxbnTWKIiVVBbPptOhCX0cQO75m8XcBZAmWMywIcfOMtb6biQQBmH40L6FpcRnNIGld6u-SCaeudk9LvcPYlwJX-Z5IWveG1z8/s200/1.jpg" width="200" /></a><b>இ</b>ன்றைய கால கட்டத்தில் திரைப்படங்கள் முதற் கொண்டு நாடகங்கள் வரையில் புதிய புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு பிரமாண்டமான படைப்புக்கள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. கட்மான்(CATMAN), பட்மான்(BATMAN), ஸ்பைடர்மான்(SPIDERMAN) என எத்தனை மான்கள் வெளிவந்தாலும் நம்ம சக்திமான் கதாபாத்திரத்தையும் படைப்பையும் இன்றும் மறந்துவிட முடியாது. </div>
<div>
<br /></div>
<div>
1998/99 காலப்பகுதி... அப்போது தான் யாழ்ப்பாணம் மீண்டும் நீண்ட கால இடைவெளியின் பின்னர் ஒளி பெற்று துல்லியதொரு வளர்ச்சியை எட்டிக்கொண்டிருந்த காலம், தொலைக்காட்சி பாவனையும் அதிகமாக பயன்படுத்தப்பட்ட காலம் அது! எல்லா வீடுகளிலும் தொலைக்காட்சி குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சிக்காக இயங்கிக்கொண்டு இருக்குமேயானால் அது ஞாயிற்றுக் கிழமை மதியம் 12 மணியாக தான் இருக்க முடியும். </div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8xi6Xe7J5pAa3HR22bka_zHVVMZcke3TKyOxmRNtnN22bIK65ON982XFF18Q4Y8d_i8cJoT3wejCMGrQ5o7Cx4g0wCb_-FfB_zI-XkUlR40C6z6xVfLxYLxn973238lI2I7SWpvHuyxo/s1600/4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8xi6Xe7J5pAa3HR22bka_zHVVMZcke3TKyOxmRNtnN22bIK65ON982XFF18Q4Y8d_i8cJoT3wejCMGrQ5o7Cx4g0wCb_-FfB_zI-XkUlR40C6z6xVfLxYLxn973238lI2I7SWpvHuyxo/s200/4.jpg" width="158" /></a></div>
<div>
பொதிகை அலைவரிசை யாழ் மண்ணைப் பொறுத்தவரை எமது பொழுதுபோக்கு தொலைக்காட்சி அலைவரிசை. மதியம் 12 என்றாலே போதும் எங்கும் சக்திமான், சக்திமான் தான்! குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் மிக பிடித்த சூப்பர் ஹீரோ நாடகம் அது! சிறுவர்கள் என்ற வட்டத்தில் இருந்து நானும் சக்திமானை ரசித்தவன் தான்... :) </div>
<div>
<br /></div>
<div>
எல்லோருக்கும் பிடித்தமான கதாபத்திரம் அந்த சக்திமான் கதாபாத்திரம், சக்திமானில் முகேஷ் கண்ணா(Mukesh Khanna) சக்திமானாகவும், கங்காதராகவும்(<span style="background-color: white; font-family: sans-serif; font-size: 13px; line-height: 19.200000762939453px;">Gangadhar</span>) இரு வேடங்களில் நடித்திருப்பார். இவர் தவிர சிறப்பான கதாபாத்திரங்களாக கீதா விஷ்வாஸ், தாம்ராஜ் கில்ஃபிஷ், டாக்டர் ஜக்கால் என முக்கிய பாத்திரங்களை ஏற்று திறமையான படைப்பொன்றை உருவாக்கியிருந்தார்கள். </div>
<div>
<br /></div>
<div>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjO-i1q1hL7NuUWusBWfu04i6vCMDSCQO70llImvSKUhgpfc2mrYhm9Hf58B9e2WUQQeBiX8vO-dnOItBhp_mGJLLh04p1X44piw-9IU-6Qjx_CW-g7F0YfTno9LJxDW0sAor_4B92kKx8/s1600/2.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="150" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjO-i1q1hL7NuUWusBWfu04i6vCMDSCQO70llImvSKUhgpfc2mrYhm9Hf58B9e2WUQQeBiX8vO-dnOItBhp_mGJLLh04p1X44piw-9IU-6Qjx_CW-g7F0YfTno9LJxDW0sAor_4B92kKx8/s200/2.jpg" width="200" /></a>சிறியவர் முதல் பெரியவர்கள் வரை எல்லோராலும் விரும்பிப் பார்க்கப்பட்ட வித்தியாசமான படைப்பு இது எனலாம்! சக்திமான் சுழன்று சுழன்று வானத்தில் பறப்பதும், எதிரிகளை எதிர்த்துப் போராடுவதும் அந்த காலத்தில் வியக்கத்தக்க ஒரு கலையாக காட்டியிருந்தார்கள். அதிலும் குறிப்பாக கங்காதராக சக்திமான் செய்யும் குறும்புகள் ரசிக்கத்தக்கவை. வேற்றுக்கிரக வாசிகளைப் போல பல எதிரிகளை உருவாக்கி இருந்தார்கள், அவர்களோடு புதிய வியூகங்களில் சண்டை போடுவதும் பறப்பதும், மறைவதுமாக அற்புதமாக அந்த சக்திமான் படைப்பு இருந்தது.</div>
<div>
<br /></div>
<div>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsaYTSs9eXgMta98Kgri5ce8l_-dbXGcxzYW27rU99Aq3-oO23rT9ZCXk2w0Dl6l27TS8DCx_7LgbI6zDEuLbkAYItx66g5GJyo90vArdb3gqVUo74FbGUSbKvRGALh_VY6Kea9jpdCqE/s1600/6.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="192" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsaYTSs9eXgMta98Kgri5ce8l_-dbXGcxzYW27rU99Aq3-oO23rT9ZCXk2w0Dl6l27TS8DCx_7LgbI6zDEuLbkAYItx66g5GJyo90vArdb3gqVUo74FbGUSbKvRGALh_VY6Kea9jpdCqE/s200/6.jpg" width="200" /></a></div>
<div>
சக்திமானை பொறுத்தவரையில் முக்கிய கதாபாத்திரமாக பார்ப்போரை அஞ்சவைக்கும் விதத்தில் தாம்ராஜ் கில்ஃபிஷ்ன் கதாபாத்திரம் இருந்தது.<b> “இருள் நீடிக்கின்றது”</b> என்ற வாசகம் அடிக்கடி அந்த கதாபாத்திரத்தால் உபயோகிக்கப்பட்டது மட்டுமல்லாமல் நாமும் அந்தக் காலத்தில் அடிக்கடி முனுமுனுத்த வசனமாக இருந்தது. அத்தோடு டாக்டர் ஜக்காலின் <b>“பாவ்வர்”</b> என்ற வசனமும் கூட. </div>
<div>
<br /></div>
<div>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKXTBmwNUfEDcSSL2NluHDTKxDyuIlFXSiurOOZdnJKQbs1l37INC2kpffewwaceKEl5TYAa8NNP6IvGVSlN8A2LH4iHzhZdYG-7hbbS8L8xXkTfvMzThHI9j14tt9epKnDuI7iTBsi8A/s1600/3.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="198" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKXTBmwNUfEDcSSL2NluHDTKxDyuIlFXSiurOOZdnJKQbs1l37INC2kpffewwaceKEl5TYAa8NNP6IvGVSlN8A2LH4iHzhZdYG-7hbbS8L8xXkTfvMzThHI9j14tt9epKnDuI7iTBsi8A/s200/3.jpg" width="200" /></a></div>
<div>
2000ம் ஆண்டை நெருங்கிய காலகட்டத்தில் மிகப் பிரபல்யமாக ஒளிபரப்பப்பட்ட தொடர் நாடகம் என்றால் அது சக்திமான் தான், அதன் பாடலும் கூட அந்த காலத்தில் மிகப் பிரபலமாக இருந்தது. இன்று பலரால் மறக்கப்பட்டிருக்கும் சக்திமான் என்ற நாடகம் இப்பதிவை வாசிப்பவர்கள் மனதில் மீண்டும் அந்த சூப்பர் ஹீரோ ஞாபகத்திற்கு வந்திருப்பார் என்பது திண்ணம். :) </div>
<div>
<br /></div>
<div>
ஹாய் நண்பர்ஸ்! நம்ம ஹீரோவ நாங்க மறக்கலாமா...? அது தான் ஒருக்கா ஞாபகப்படுத்தினன் :) “இருள் நீடிக்கிறது” #லொலொ</div>
<div>
<br /></div>
<div>
நாடகத்த ஞாபகப்படுத்திட்டன் அப்ப நான் போய்ட்டு வரட்டே... பாய்...! </div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
Premhttp://www.blogger.com/profile/04447613447033692983noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6107119563974400858.post-9856626900507730782012-09-29T18:17:00.002+05:302012-09-30T12:20:54.021+05:30எழுத்து திருட்டும், விசயமே அற்ற பதிவுகளும்...!<b>சி</b>ல மாத இடைவெளியின் பின்னர் பதிவர்களையும் பதிவுலக நாயகர்களையும் சந்திப்பது மிக்க மகிழ்ச்சி! இனி இனி தொடர்ச்சியாக பதிவுகள் எழுதுவேன் என்று எழுந்தமாணமாய் கருத்துக்களைச் சொல்லி நான் அதைச் செயற்படுத்தியது இல்லை இதுவரையில் ;)<br />
<div>
கருத்து சொல்வது சுலபம் செயற்படுத்துவது சிரமம்! ஆதலால் இம்முறை நான் எந்த வாக்கும் கொடுப்பதாக இல்லை! கொடுத்த வாக்குகள் செல்லுபடியற்றுவிட்டன. </div>
<div>
<br /></div>
<div>
இன்றைய விசயம்<i> <span style="color: #666666;">பதிவர்களின் பதிவுகளும் அவர்களின் பதிவுகள் திருட்டுப் போவதும்</span>,</i> வேதனைக்குரிய விடயம். சில பதிவர்கள் நல்ல கருத்தோட்டமான பதிவுகளை அனுபவங்களை சிந்தித்து சிறிது சிறிதாக செதுக்கி அதை ஆக்கமாக்கி சமூகத்தின் முன் பகிர, ஒரு சில நொடிகளில் அதையே சுருட்டி எடுத்து தமது தளங்களில் பிரசுரித்து பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள் ஒரு சில புதிய பதிவர்கள். சரி திருட்டு தான் செய்கிறீர்கள் செய்யும் திருட்டு திருட்டு இல்லாமல் இருக்க திருடும் தளத்தின் சுட்டியையாவது போட்டு உங்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாமே! </div>
<div>
<br /></div>
<div>
மிகச்சிறந்த பதிவுகள் மற்றவர்களால் சமூகத்திற்கு பரிமாற்றப்படுவது வரவேற்க்கத்தக்கதே ஆனால் அது திருடாமல் சரியான விதத்தில் பரிமாற்றப்படும் போது பதிவர்களைப் பொறுத்தவரையில் ஏற்றுக் கொள்ளப்படத் தக்க ஒன்று! </div>
<div>
<br /></div>
<div>
எழுத்து திருட்டு என்பது சில ஆண்டுகளுக்கு முதல் பதிவுலகில் பதிவர்கள் பகிர்ந்த பதிவுகளைத் தோண்டி எடுத்து தமது பெயர்களில் பிரசுரிக்கிறார்கள். திருடும் அவர்களின் நினைப்பு யாராலும் கண்டுபிடிக்க முடியாதென்று! <b><span style="color: red;">“உனக்கு இரண்டு கண்கள் என்றால் சமூகத்திற்கு ஆயிரம் கண்கள்” </span></b>ஒவ்வொருவர் எழுத்து நடையும், சிந்தனையும் வேறுபட்டவை, எழுதிய பதிவர்களுக்கு தெரியாதா தமது சொந்த பதிவா இல்லை தமது பதிவு திருடப்பட்டு விட்டனவா என்று!!!</div>
<div>
<br /></div>
<div>
சுயமாக சிந்திக்க தெரியாதவர்கள் எல்லாம் கருத்துக்கள் பகிர்கின்றோம் என்ற போர்வையில் ஏன் இந்த நாடகம்...? இது இவ்வாறிருக்க சிறந்த பல பதிவர்களின் ஆக்கங்கள் இந்த காலகட்டத்தில் பெரிதாய் வெளிவருவதில்லை போலும், <b>எங்கையா போனீர்கள் பிரபல பதிவர்களே!!!</b> உங்களது கருத்தோட்டமான, காத்திரமான படைப்புக்கள் தான் பதிவுலகத்திற்கும் சமூகத்திற்கும் தேவையான ஒன்று! பிரபல பதிவர்களின் வேகம் குறைய புதிது புதிதாய் கிளம்பியிருக்கிறார்கள் சில குட்டிப் பதிவர்கள்! புதிய பதிவர்களை பதிவுலகில் வரவேற்கின்றோம்!</div>
<div>
<br /></div>
<div>
புதிதாய் பதிவுலகில் காலடி எடுத்து வைத்திருக்கும் சில பதிவர்கள் ஏதாவது பதிவுகளை தாமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக விசயமே இல்லாத, சமூகத்திற்கு இயல்பான கருத்துக்களை மறுத்து ஏதேதோ பதிவுகளைப் பகிர்ந்துவிடுகின்றார்கள். பதிவுலகைப் பொறுத்த வரையில் புதியவர்களால் பதிவுகள் பகிரப்படுகின்றன ஆனால் கருத்துக்கள் புதைக்கப்படுகின்றன. </div>
<div>
<br /></div>
<div>
தரமான நல்ல சமூக சிந்தனையாளர்களின் கருத்துக்கள் மீண்டும் பதிவுலகை ஆக்கிரமிக்க வேண்டும், தொய்ந்து போய் இருக்கும் பதிவுலகம் மீண்டும் புதுப் பொலிவுடன் எழுச்சி கொள்ள வேண்டும். உங்களது சிறந்த பதிவுகள் ஒரு பாடமாக புதிய பதிவர்களுக்கு இருக்க வேண்டும்! </div>
<div>
<br /></div>
<div>
<i><span style="color: #741b47;">எழுத்து திருட்டை தடுக்க மூத்த பதிவர்களே நீங்கள் விழித்திருக்க வேண்டும்! உங்கள் முயற்சியின் பலனை வேறொருவன் அனுபவிக்க இடமளிக்காதீர்! எழுத்து திருட்டுக்கும் விசயமே அற்ற பதிவுகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம்!!! </span></i></div>
<div>
<br /></div>
<div>
<span style="color: #073763;"><b>“யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல! இப்படிப்பட்ட தவறுகள் இனியும் இடம் பெறக்கூடாது என்பதற்கான வேண்டுகோள்”</b></span></div>
Premhttp://www.blogger.com/profile/04447613447033692983noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6107119563974400858.post-71538874086722309912012-07-08T12:53:00.001+05:302012-07-08T12:53:13.000+05:30யாழில் பரவி வரும் பஸ் காமம்...!மீண்டும் ஒரு தடவை யாழ்ப்பாணப் பதிவோடு உங்கள் முன் வருகின்றேன் என் பார்வையில் ஏற்பட்ட அவதானிப்பு இது. அன்றே கொட்டித்தீர்த்திருக்க வேண்டும், மடிக்கணினி கைவசம் இல்லாததால் கொஞ்சம் ஆற வைத்துப் பதிவிடுகின்றேன்.<br />
<br />
யாழின் பதிவுகளை தினம் தினம் ஏதோ ஒரு வழியில் நாம் அறிந்து கொண்டே இருக்கின்றோம், தினம் மோசமடையும் யாழின் போக்கே இன்றைய நிலை. இதற்கான காரணங்களாக கலாசாரம், மற்றும் காதல் எனும் பெயரில் அரங்கேறும் காமம் என்பன காரணங்களாக் இருந்து வருகின்றன. <span style="background-color: white;">கட்டவிழ்த்துவிடப்பட்ட கலாசார நோயால் தினம் பாதிக்கப்படுவது என்னவோ எம் மக்களே, இதை நன்கு அறிந்தும் அதன் வழி மீள்ச்சியில்லாமல் தொடர்ந்து செல்லும் எம்மவர்கள் மீதும் தவறுகள் இருக்கின்றது.</span><br />
<span style="background-color: white;"><br /></span><br />
<span style="background-color: white;"><span style="color: #660000;"><b>யாழ்ப்பாணத்தின் கலாசாரம், பண்பாடு என்பவற்றை சிதைக்கும் நோக்கில் தினம் செயற்பட்டு வருகின்றன சில சக்திகள் அதற்கு துணை போகும் தமிழ் கறுப்பு ஆடுகள் இருக்கும் வரையில் தமிழ் தாழ்வாந்து போகும் என்பது திண்ணமே!</b> </span>படித்தோர் பெரியோர் இருந்தும் என்ன பயன். கெடுகிறேன் பந்தையம் பிடி எனும் போக்கில் போய்க் கொண்டிருக்கின்றது தமிழ் இளைஞர்களின் போக்கு.</span><br />
<span style="background-color: white;"><br /></span><br />
<span style="background-color: white;">சரி நான் சொல்ல வந்த விசயத்துக்கு வருகின்றேன்...! </span><br />
<span style="background-color: white;"><br /></span><br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjm4EUBeOZsRknZXj89Gn-iOdfN9l9J5CQb1O-fwukQpRYvv0g9cY-TSsUhmEOTK-gXa7ko2_WCytYFIo-OHcYxr_Fzm30BRVl1hSu4tVYj6XkczZUg6X-GZioXbW1eIP5TUa-9FRW62Mc/s1600/Favim.com-3874.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="222" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjm4EUBeOZsRknZXj89Gn-iOdfN9l9J5CQb1O-fwukQpRYvv0g9cY-TSsUhmEOTK-gXa7ko2_WCytYFIo-OHcYxr_Fzm30BRVl1hSu4tVYj6XkczZUg6X-GZioXbW1eIP5TUa-9FRW62Mc/s320/Favim.com-3874.jpg" width="320" /></a><span style="background-color: white;">கொழும்பைப் பொறுத்தவரையில் பஸ்சில் காதல் என்ற பெயரில் காமம் என்பது சர்வ சாதாரணமாகிப் போனது என்பது உண்மையே! <b><span style="color: red;">சராசரியாக ஒவ்வொரு பஸ்சிலும் காதலர்கள் மத்தியில் காமுகர்களும் பயணிக்கின்றார்கள். </span></b>இப்படியான கேவலங்களைப் கொழும்பு பஸ்களில் பார்த்து சலித்து போய்விட்டோம்... இது இவ்வாறு இருந்த போதிலும் யாழ்ப்பாணத்திலும் இதே நிலை என நான் நினைத்திருக்கவில்லை, கலாச்சார மாற்றம் சடுதியாக இருக்கின்றது என்பதை நான் அறிவேன், ஆளில்லா வீடுகளில் காமம் அரங்கேறுவதை செய்திகள் வாயிலாக அறிந்திருக்கின்றேன் ஆனால் இந்த தொற்று வியாதி பஸ்சுக்குள்ளும் பரவும் என பெரிதாய் நினைக்கவில்லை! </span><br />
<span style="background-color: white;"><br /></span><br />
<span style="background-color: white;">இதற்கு ராணும்வம் நடாத்தும் களியாட்ட நிகழ்வுகள், இராத்திரி நேர நிகழ்ச்சிகள், ஆபாச பட வினியோகம் என பல காரணங்களால் காதல் இளைஞர்கள் மத்தியில் காமமாக மாறியுள்ளது என்பதே உண்மை...! </span><br />
<span style="background-color: white;"><br /></span><br />
<span style="background-color: white;">பஸ்சைப் பொறுத்தவரையில் கடைசி ஆசனம் என்பது காமுகர்களுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவதானிப்புக்கள் மூலம் அறிய முடியும்! (எல்லா நேரமும் அல்ல) நான் யாழில் நேரில் கண்ட காமத்தை சொல்கிறேன் இது எவ்வளவு கேவலம் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்...! </span><br />
<span style="background-color: white;"><br /></span><br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGwtG-6JcmLTVMgN5yg698lMI4oISLeNkHjL3voFP6rKNJNT6IaV-60VA5QhiO6AaPJTu2eSlOWJ4kycirP4azvXdT8Yk0DvmKAAAU6IKtAvXQV_p7UNjh0Ka9u48y9y8Lmu_Fi73jTbg/s1600/these_lovebirds_cant_keep_their_lips_off_each_other_on_the_bus-thumbnail.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="192" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGwtG-6JcmLTVMgN5yg698lMI4oISLeNkHjL3voFP6rKNJNT6IaV-60VA5QhiO6AaPJTu2eSlOWJ4kycirP4azvXdT8Yk0DvmKAAAU6IKtAvXQV_p7UNjh0Ka9u48y9y8Lmu_Fi73jTbg/s320/these_lovebirds_cant_keep_their_lips_off_each_other_on_the_bus-thumbnail.jpg" width="320" /></a><span style="background-color: white;"><br /></span><br />
அதே கடைசி ஆசனம்!<br />
ஒரு 45 வயசு மதிக்க தக்க பெண், பெண் என்று சொல்வதை விட அன்ரி என்று சொல்லலாம் 20 வயது மதிக்கத் தக்க பெடியன் <b>(இவனுக்கென்ன மரியாதை பையன் எண்டு சொல்ல)</b> கிட்டத்தட்ட அந்த அன்ரியின் மகன் எண்டு சொல்லிக்கலாம், அதுகள் ரெண்டும் கடைசியில் பண்ணிய காமலீலைகளை (Hidden Camera) நீலப் படத்துக்குள் சேர்க்கலாம்...! வெக்கம், மானம், சூடு, சுறணை இல்லாத பிறவிகள்...!<br />
<br />
அன்று தான் தெரிந்து கொண்டேன் காமம் யாழில் வயது பேதம் இன்றி பாதித்துக் கொண்டிருக்கின்றது என்பதை!<span style="color: #444444;"><i> மலசல கூட குழியில் குழந்தை, குப்பைத் தொட்டிக்குள் சிசு, கருக் கலைப்பு, தற்கொலை, ஏமாற்றம், கற்பழிப்பு என எல்லா வித மனம் கோணும் நிகழ்வுகளும் யாழில் அரங்கேறியது எப்போதிருந்து...? </i></span><br />
<br />
காமம் தொடர்பாக யாழ் மக்களிற்கு போதிய தெளிவின்மை என யாராச்சும் சொன்னியளோ வாயில சூடுவைப்பன்! ஏன்னா எங்கட சனம் ஒண்ணுமே தெரியாத பாப்பா தானே! ஏய்யா வாய கிளர்றீங்க...?<br />
<br />
<b>கலாச்சார காவலர்கள் எங்கே...? ஒரு காலத்தில் இருந்தார்களாம்! (ஒரு காலத்தில்)</b><br />
<br />
கிட்டத்தட்ட யாழ்ப்பாணத்தில் காமம் என்பது காதலின் பெயரால் மேடையேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்கு யார்மேலும் காரணம் சொல்ல விரும்பவில்லை, ஆனால் சுய புத்தி என்று ஒன்று இருக்கிறது என்று நான் நினைக்கின்றேன்! அது சில பேருக்கு சுய புத்தி சரியாக இயங்குவதில்ல போலும் ஆதலால் வந்த விளைவு...!<br />
<br />
<span style="color: red;"><b>ஊசி இடம் கொடாமல் நூல் நுழையாது...! இது காமுகர் மொழி...! </b></span><br />
<br />
மனவருத்தத்தோடு விடைபெறுகின்றேன்...! யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல! என் அவதானிப்பு இது! உண்மையும் கூட!<br />
<br />
<br />
<br />
<span style="background-color: white;"><br /></span>Premhttp://www.blogger.com/profile/04447613447033692983noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-6107119563974400858.post-70448156449049103692012-06-27T09:07:00.001+05:302012-06-27T09:07:30.780+05:30புரிதல் தொலைத்த வலி...!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEPi4QqunIdRjv1yNcJga4JE9rKPwYBqYDztTuMjcSSPn2RGCYT_wFlVJ631RnICYSEm4d5wEpUTRvYwzogktTP6D_dUPmfygLIEGxjVA38Hujsf2wp3mMGNxKoBvcpWmT-cFbXvPG_WE/s1600/bird+pencil+drawing.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="228" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEPi4QqunIdRjv1yNcJga4JE9rKPwYBqYDztTuMjcSSPn2RGCYT_wFlVJ631RnICYSEm4d5wEpUTRvYwzogktTP6D_dUPmfygLIEGxjVA38Hujsf2wp3mMGNxKoBvcpWmT-cFbXvPG_WE/s320/bird+pencil+drawing.jpg" width="320" /></a><span style="font-size: small;">இன்றும் பயணிக்கின்றேன் <br />புது புது கனவுகளைச் சுமந்தபடி<br />போகும் வழி நெடுக சிதறி <br />விழுகின்றன என் கனவுகள்<br />நான் செல்லும் பாதை <br />புல் வெளி தாண்டி <br />முட்கள் நிறைந்த வழிவழி<br />திருப்பம் காண்கிறது,<br />மனதின் கடிவாளத்திற்குள் <br />கட்டுண்டு கிடக்கிறேன் - நான்<br />கடலில் தத்தளிக்கும் துரும்பு போல <br />அவ்வப்போது கனவுகளும் வந்து போகும்<br />வரும் கனவுகளில் வலிப்பது <br />என்னவோ என் இதயமே! - உயிர் வலியது!<br />இனம் தெரியாத புரிதலுடன் <br />இரு மருங்கும் பரந்து தொடரும் <br />இரட்சகர்கள் கூட்டம் நடுவே<br />நாதியற்றவனாய் பயணிக்கின்றேன்<br />விடிவென்பது உனக்கில்லை <br />என கூவிப் பறக்கின்றது சாக்குருவி...!!!</span>Premhttp://www.blogger.com/profile/04447613447033692983noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6107119563974400858.post-25965992130347689932012-06-20T21:53:00.000+05:302012-06-20T21:53:59.977+05:30சிந்தனைக்கு ஒரு நிமிடம் - உங்கள் சிந்தனை உங்களைக் குறிகாட்டும்...!<b>மீ</b>ண்டும் ஒருமுறை வணக்கங்களைச் சொல்லிக்கொண்டு வித்தியாசமான ஒரு கருத்தாடலோடு வந்திருக்கிறேன்! இது முழுக முழுக்க மனிதர்களுடைய சிந்தனை சம்பந்தப்பட்டதாகவே இருக்கப் போகின்றது. அதாவது சராசரியாக குறிப்பிட்ட ஒரு தொகை மக்களை எடுத்துக் கொண்டால் அவர்களது சிந்தனைத் திறன் மனிதருக்கு மனிதர் வித்தியாசமானதாகவே காணப்படுகின்றது, இருப்பினும் ஒரு சில சந்தர்ப்பங்களில் சிலரது சிந்தனைகள் ஒன்றுபட்டனவாகக் காணப்படக்கூடிய சாத்தியங்களும் இருக்கின்றன.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkeqFvETOl0p9AeKXxifS_fx6TGWADc2jodTxVAFk9wLHFSljkPoI5XPRACM1xDkW-EK0oQgIonak5lu5V_k55EO5MNr09HNt4fHMgKGuH9sslwBMT7y-IpCheLeqJBfcdqO40uT2Hw3o/s1600/Man-thinking-phto.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkeqFvETOl0p9AeKXxifS_fx6TGWADc2jodTxVAFk9wLHFSljkPoI5XPRACM1xDkW-EK0oQgIonak5lu5V_k55EO5MNr09HNt4fHMgKGuH9sslwBMT7y-IpCheLeqJBfcdqO40uT2Hw3o/s320/Man-thinking-phto.jpg" width="213" /></a>குறிப்பாக சிந்தனை என்று வருகின்ற போது பல எண்ணற்ற சிந்தனைகள் ஒரு சில கணத்திலேயே தோன்றிவிடுகின்றன அதுவே குறிப்பிட்ட நாளை சந்தோஷமானதாக அல்லது குழப்பம் நிறைந்த நாளாக மாற்றிவிடுகின்றன. அதற்கான காரணங்கள் என பார்க்கப் போனால் சிலரது சிந்தனை கடந்த கால சம்பவங்களின் தொடர்ச்சியாக இருக்கும். அதாவது சிறிது காலத்திற்கு முன்னராக நடந்த சம்பவம் அவரவர் சிந்தையில் புதிய தொடர்ச்சியாக தோன்ற வாய்ப்புள்ளது, அது சில வேளைகளில் நல்லதாக இருக்க கூடும் சில வேளைகளில் கடுமையானதாக கூட இருக்க கூடும்.<br />
<br />
இதே போன்று வேலைக்கு செல்பவர்களின் மன நிலையை எடுத்துக் கொண்டால், ஞாயிற்றுக் கிழமையாக இருக்கும் போது ஒரு சிலர் மனதில் சடுதியாக தோன்றும் எண்ணம் ஐயய்யோ நாளைக்கு திங்கக்கிழமை, வேலைக்கு போகணும்... இப்படி அவர்கள் சிந்தனை சலிப்புடன் இருக்குமேயானால் அன்றைய நாள் அவர்களைப் பொறுத்தவரையில் மகிழ்ச்சிகரமானதாக அமைய வாய்ப்புக்கள் குறைவே!<br />
<br />
எது எவ்வாறாயினும் வேலைத் தளங்களில் வேலையுடன் ஒருமித்துவிட்டால் இப்படியான சிந்தனைகள் கூட மழுங்கடிக்கப்பட்டுவிடும். எல்லாம் மனம் சம்பந்தப்பட்ட எண்ணங்களாகவே இருக்கின்றன.<br />
<br />
அது தவிர்த்து சிலர் தமது சக வேலையாட்களுடன் எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறோம் என்றவாறே சிந்தனைக்குள் பயணிப்பர், இது கூட அவர்களை தேவையற்ற கற்பனைக்குள் அழைத்து சென்று முடக்கிவிட சாத்தியங்கள் அதிகமே.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhptNWAO4smd8BQAGs-x6LgbZchyrV108fHhP9-2xUw5GikArUR6Ev1tt4UpljduEFNQqTdWRmNSpHefZK3dftQevDYYGFuxn-BWRfTDR7fcXfHAjb_zNDMtEE9-F3qYKc7C58w-oxWPeM/s1600/Thinking-man1.gif" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="257" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhptNWAO4smd8BQAGs-x6LgbZchyrV108fHhP9-2xUw5GikArUR6Ev1tt4UpljduEFNQqTdWRmNSpHefZK3dftQevDYYGFuxn-BWRfTDR7fcXfHAjb_zNDMtEE9-F3qYKc7C58w-oxWPeM/s320/Thinking-man1.gif" width="320" /></a>இது போன்று இன்னும் பல வேறுபட்ட சிந்தனைகளை நாம் கண்டிருக்கின்றோம், ஒரே நாளில் ஒரே நிமிடத்தில் அளவுக்கு அதிகமான சிந்தனைகள் எழுவது சாத்தியமே. ஒருவரின் மனநிலையே அவரது சிந்தனையை வழிநடாத்துகின்றது, அதாவது ஒருவரது மனம் எதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறதோ அதுவே பிரதிபலனாக குறிப்பிட்ட சிந்தனையை அடையாளப்படுத்துகின்ன்றது. இதுவே யதார்த்தமும் கூட.<br />
<br />
<br />
சிலர் மனதில் கெட்ட கீழான சிந்தனைகள் அரங்கேறும், ஆதலால் அவர்களது நாள், நடவடிக்கைகள் தவறான பாதையிலேயே பயணிக்க ஆரம்பிக்கும். ஒருவனை நல்லவனாக்குவதும் சிந்தனை தான், கெட்டவனாக்குவதும் சிந்தனை தான். எப்போதும் எண்ணம் உயர்வாக இருத்தல் வேண்டும் என பல ஆய்வுகளில் கண்டிருக்கிறோம். அது உண்மையே!<br />
<br />
இந்த சிந்தனை சம்பந்தமான பதிவைப் படிக்கும் நீங்கள் உங்கள் மனதிடம் ஒரு கேள்வியைச் சடுதியாகக் கேளுங்கள், இந்த நிமிடம் எதுபற்றிய சிந்தனை உங்கள் மனதில் நிரையோடிக்கொண்டிருக்கின்றது என்பதை. அது ஏற்புடையதென்றால் தொடர்ந்து செல்லுங்கள். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்...!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpH96ROxwrftbaNvK_WEnjrYB8EyAsDuhxOyYeZkolcaigxl5y31VQeUEOQbj5pf_6Ec8lmgGCSYIE5OrtHewgd9eE4HDtSaTyj6yXWzzurjXw7q5HUgylx0Nfl6Er-ThZoyJwkmskzq4/s1600/einstein_thinking.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="231" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpH96ROxwrftbaNvK_WEnjrYB8EyAsDuhxOyYeZkolcaigxl5y31VQeUEOQbj5pf_6Ec8lmgGCSYIE5OrtHewgd9eE4HDtSaTyj6yXWzzurjXw7q5HUgylx0Nfl6Er-ThZoyJwkmskzq4/s320/einstein_thinking.jpg" width="320" /></a></div>
<br />
எல்லாம் யதார்த்தமே!<br />
<br />
பெரிய மனுசன் போல கதைச்சிட்டன் எல்லா! மன்னிச்சூசூசூசூசூசூ...!Premhttp://www.blogger.com/profile/04447613447033692983noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6107119563974400858.post-71813748564120733252012-06-19T11:03:00.000+05:302012-06-19T11:40:59.038+05:30நண்பனின் காதல் சுயசரிதை<span style="font-size: small;">நண்பனின் சுயசரிதை...<br /><br />இது ஒரு சோகக் கதை...! நண்பனின் கடுப்புக்கலந்த கவலை...! வாசிங்க உங்களுக்கே விளங்கும்! வேலைத் தளத்தில் நான் என் நண்பனைச் சந்திச்சபோது அவன் சொன்ன கதை...! <br /><br />இதோ...! <br /><br />அவரை நான் எனது பாணியில் அறிமுகப்படுத்துகிறேன்...<br /><br />நான் காண்டிபன், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு படிக்க வந்தனான், வந்த இடத்தில ஆப்பு இருக்கு தெரியாம மேல குந்திட்டன்! வலி தாங்க முடியல தான் இருந்தாலும் என்னால எழும்ப முடியல, குந்தினாலும் வலிக்கிது கொஞ்சம் அசைஞ்சாலும் வலிக்கிது! ஆனாலும் ஒரு வழியா படிச்சு முடிச்சிட்டன். வாழ்நாள் சாதனை இது! ஏன் தான் இப்பிடியோ! - சலிச்சுக்கிறான் நண்பன்! <br /><br />மாசத்துக்கு மாசம் விசர் ஊசி போடுறதே வேலையா போச்சு! எடுகிற சம்பளம் ஊசில போது! ஓசில திண்ட காலம் போய் ஊசி திண்டுற காலம் எனக்கு! இதை ஏன் சொல்லுறன் எண்டு இன்னும் கொஞ்சம் வாசிச்சீங்கள் எண்டால் விளங்கும்.<br /><br />இப்ப புதுசா ஒரு வேலைக்கு சேந்திருக்கிறன் அதில எடுக்கிற சம்பளம் அப்பாடா இந்த மாசம் சம்பளம் வந்திட்டு எண்டு சொல்லுறதுக்குள்ளையே வர்ற காசு முடிஞ்சிடுது, எனக்கும் ஒரு கேள் பிரண்ட் இருக்கிறா, என்ர ஊசி செலவு அவவால தான்! இப்ப முதல் சொன்னது ஞாபகம் வரும் உங்களுக்கு...<br />மற்றவங்க தொட்டு தொட்டு பேசுவாங்க ஆனா என்ர அவா கீறி கீறி பேசுவா! அவளவு பாசம் என் மேல! <br /><br />இப்பிடி கனக்க நடந்திருக்கு எனக்கு எல்லாமே சொல்ல ஏலாது தானே! இத ஒருவேள அவ பாத்தா அப்புறம் ஒரு அன்புக் கீறல் விழும்! எதுக்கு எனக்கு ஊசி செலவு? <br /><br />அப்பிடி இருந்தும் நான் அவ கூட அன்பா கதைக்க போவன் கடைசில அதுவே புது ஆப்பா மாறிடும்! ஊத்தப் பேச்சைத் தவிர மிச்ச எல்லா கேவலத்தையும் ஒண்ணா சேத்து பேசுவா! அதிலையும் விசர் சவம், விசர் மூதேவினு அவ திட்டுறது கேவலமா தெரிஞ்சாலும் அழகா இருக்கும்...! <br /><br /><b>ஆனா ஒண்ணுங்க லவ் பண்ணுற பசங்க ஒருத்தருக்கொருத்தர் அடிக்கடி முத்தம் குடுப்பாங்க ஆனா என்ர அவ எனக்கு மொத்தமா குடுப்பா நாலு நாளைக்கு வீங்கிற மாரி! அப்புன்னா அப்பு அப்பிடியொரு அப்பு! மூஞ்சில <br />மூஞ்சி எனக்கு மட்டும் தான் அடிக்கடி வரும்...</b><br /><br />ஆ! இன்னும் ஒண்ட சொல்ல மறந்திட்டன்! அவ போன்ல கதைக்கிறதே நேர்ல கதைக்கிற போல தான் இருக்கும் அவளவு மெல்லமா தான் கதைப்பா, சிரிப்பு கூட அவளவு அழகு! அவ சிரிக்கும் போது சூர்பனகைக்கு டப்பிங் குடுத்தத போல இருக்கும்...<br /><br />அட விடுங்க என்ர சோகக் கதைய இதோட நிப்பாட்டுறன், இவளவு சொல்லியும் உங்களுக்கு புரிஞ்சிருக்காதா என்ர வீர வரலாறு...? என் உடம்பில் உள்ள தழும்புகள் எல்லாம் காதல் தழும்புகள்...! தழும்புகளைப் பாக்குற நேரமெல்லாம் ஏதோ நேர்ல அவ வந்து அடிச்சிட்டு போற போல கற்பனையெல்லாம் தோணுது! சாமத்தில கத்திக்கூட இருக்குறன்னா பாருங்கவன்! <br /><br />இனியும் நான் கதைக்க விரும்பல... இத மட்டும் அவக்கு சொல்லிடாதீங்க அடி அகோரமா இருக்கும்..! <br /><br />கேட்டியள் தானே அவன்ர கதைய! உந்த பெட்டையளே இப்பிடி தான் போல! ஒருத்தன் கதையே இப்பிடி நாறிப் போய் கிடக்கு...!!!</span><br />
<span style="font-size: small;">ச்சீ ச்சீ! வெந்து போய் கிடக்கு! இது காணும் இண்டைக்கு! </span><br />
<br />
<span style="font-size: small;"><span style="color: red;">வேணாம்டா வேணாம் காதல் மோகம், பொண்ணுங்க எல்லாம் வாழ்வின் சாபம்...!</span> <br /><br />அப்பாடா சொல்லி முடிச்சாச்சு! போய்ட்டு வாறன்! - நண்பனின் குமுறல் இது! <br /></span>Premhttp://www.blogger.com/profile/04447613447033692983noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6107119563974400858.post-38254587542513876312012-06-19T06:03:00.002+05:302012-06-19T06:03:45.803+05:30பஸ் எண் - 154 இல் திருடர்கள்...!தெமட்டகொட, பொரல்ல, கொழும்புக்கம்பஸ், பம்பலப்பிட்டிய எண்டு இடங்களின்ர பெயர அடுக்கிக் கொண்டே போனார் கொண்டைக்டர். 154 எண்ட பஸ் கிரிபத்கொடைக்கும் - அங்குலானைக்கும் ஓடுற ஒரு பஸ். ஓரளவு வேகமா ஓடும் ஆனா என்ன ஒவர்நாளும் கொழும்ப சுத்திக் காட்டிக்கொண்டே தான் போகும்! சுத்திற சுத்தில களவும் போகும். விடிய காலம வேலை நேரத்திலையும், பின்னேரம் வேலை முடிஞ்சு வாற நேரமும் அந்த பஸ்ல சனம் தாங்காது! அப்பிடி ஒரு கூட்டம் அந்த பஸ்ஸுக்க.<div>
<br /></div>
<div>
கொண்டைக்டர் கத்த கத்த சனமும் ஏறினபடியே தான், அதுக்க கள்ளங்களும் ஏறுவாங்கள்!<span style="color: red;"> மக்கா! ஜாக்கிருதை! </span></div>
<div>
<span style="color: red;"><br /></span></div>
<div>
இப்ப கொஞ்சக்காலமா நான் கேட்டறிஞ்சதின் படி 154ல செரியான கள்ளர் தொல்லையாம் நம்மள, நம்மட சாமான் சக்கட்டுக்கள பாதுகாக்க வேண்டியது நம்மட கடமை, அதிலையும் வேற யாருக்கும் கள்ளரால ஆபத்து எண்டு வந்திச்செண்டாலும் அவர்களுக்கு அதை தெரியப்படுத்திறதிலையும் நாங்க முன் நிக்க தான் வேணும்! ஏன்னா நாளை எங்களுக்கும் இதுவே நடக்க கூடும்! </div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNYNAsyK0xA7kVxzdTOx0jhgSpBC-usxn22lEQVlXhFLLri4RNYEYg1Z8M5UcT0ExvW7Zoq5zkN9VaUbbvq0p0j8GsBJ-mROugyI821ETHuHu_0lMhhx5Aqy1ZQ8RdN2CpI9teKidFvr4/s1600/2008111151320301.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="272" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNYNAsyK0xA7kVxzdTOx0jhgSpBC-usxn22lEQVlXhFLLri4RNYEYg1Z8M5UcT0ExvW7Zoq5zkN9VaUbbvq0p0j8GsBJ-mROugyI821ETHuHu_0lMhhx5Aqy1ZQ8RdN2CpI9teKidFvr4/s320/2008111151320301.jpg" width="320" /></a></div>
<div>
<br /></div>
<div>
பஸ்ஸில செரியான கூட்டம் எண்டால் கொஞ்சம் கவனமா நில்லுங்க, கூட்டமான பஸ்ல தான் கள்ளர் அதிகம் ஏறுவாங்கள். உங்கட உங்கட பேர்ஸ்(Purse), ஹாண்ட்பாக் (Handbag), கையடக்க தொலைபேசி (Phones), சங்கிலி காப்பு நகைகள் (chain) அது மட்டுமில்லாம காசு (cash) அப்பிடி ஏதாச்சும் வைச்சிருந்தா பத்திரப்படுத்திக் கொள்ளுங்க! </div>
<div>
<br /></div>
<div>
இப்பெல்லாம் களவெடுக்க வாறவங்கள் எங்கள விட Decentடா தான் வாறாங்கள், பாத்தா பெரிய பெரிய கொம்பனில CEO Levelல இருக்கிறாக்கள் போல. <span style="color: red;">போலிகளைக் கண்டு ஏமாராதீர்கள்!</span></div>
<div>
<span style="color: red;"><br /></span></div>
<div>
இன்னார் தான் திருடன் என்று ஒரு சில வழிகளில் ஊகிக்க முடியும், அவர்களிடத்தில் கொஞ்சம் ஜாக்கிரிதையாக இருந்தால் போதும். பஸ்ஸில் திருட வரும் கள்ளர் கையில் ஒரு 5ரூபா ஓ 10 ரூபா Shopping Bagஐ வைத்திருப்பார்கள், அவர்களுடைய பார்வை ஆக்களையும் திருட எத்தணிக்கும் நபருடைய உடைமையிலுமாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் கொஞ்சம் பதற்றத்துடனே காணப்படுவர், முக்கியமா யாராச்சும் சீட்டில இருந்தபடி உங்கட சாமான் ஓ Bagஐ தான் வைச்சிருக்கிறதா சொல்லி கேட்டா கொஞ்சம் உஷாராகிக்கொள்ளுங்க! </div>
<div>
<br /></div>
<div>
பெண்கள் உங்கள் Handbagஐ எக்காரணம் கொண்டும் கூட்டமாய் இருந்தாலும் பரவாயில்லை அமர்ந்திருப்பவர்கள் கைகளில் கொடுக்க வேண்டாம்! நான் நேரில் கண்ட அனுபவத்தை வைத்து சொல்கிறேன். உங்கள் நண்பராக இருக்கட்டும் உங்கள் உறவுகளாக இருக்கட்டும் கொடுங்கள் பரவாயில்லை ஆனால் அறிமுகமில்லா நபர்களிடம் பைகளைக் கொடுப்பதை தவிருங்கள். அப்படி ஒருவேளை கொடுக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தால் கொடுத்தவர் மேல அவதானமாய் இருங்கள்.</div>
<div>
<br /></div>
<div>
நான் இவள நேரமும் 154ஐ பற்றி தான் சொல்லிக்கொண்டு இருக்கிறன், ஆனா வேற வேற பஸ்ல என்னென்ன நடக்குதெண்டு யாருக்கு தெரியும்.</div>
<div>
<br /></div>
<div>
பையன்களின் கவனத்துக்கு!</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkMuTANfiNhGkO-DYL-BKWBXvNUjZHUI97F02qQm-MIQ1fduB2n-ZK_uqIPeTRqwXhdagZ5Z7Ya_fQDGqu2S8SHwcwEbJ7yk1feyo2mQyvXbUTWs6tjrVHcVyOJo8OkPFMHp2twuo8hfw/s1600/the-packed-bus-to-tissa-sri-lanka-tissamaharama.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkMuTANfiNhGkO-DYL-BKWBXvNUjZHUI97F02qQm-MIQ1fduB2n-ZK_uqIPeTRqwXhdagZ5Z7Ya_fQDGqu2S8SHwcwEbJ7yk1feyo2mQyvXbUTWs6tjrVHcVyOJo8OkPFMHp2twuo8hfw/s320/the-packed-bus-to-tissa-sri-lanka-tissamaharama.jpg" width="320" /></a></div>
<div>
<br /></div>
<div>
உங்கள் Purse, பணம், கையடக்க தொலைபேசி எல்லாம் பத்திரமாக இருக்கிறதா என்பதை நேரத்துக்கு நேரம் சரி பார்த்துக் கொள்ளுங்கள்! யார்மேலாவது சந்தேகம் வந்துவிட்டால் அவர்கள் மேல் ஒரு கண் வையுங்கள், அத்தோடு யாக்கிருதையாகவும் இருங்கள்! </div>
<div>
<br /></div>
<div>
தினம் தினம் வித்தியாசமான முறைகளில் திருட்டு நடக்கிறது! அனைவருக்கும் இதை அறியப்படுத்த வேண்டியது எனது கடமை! </div>
<div>
<br /></div>
<div>
<b><span style="color: purple;">இது முழுக்க முழுக்க பயணிகள் கவனத்துக்கு! அடுத்த முறை இன்னும் ஒரு பதிவோட வாறன்! </span></b></div>
<div>
<br /></div>
<div>
கவனமா இருந்து கொள்ளுங்கோ! </div>Premhttp://www.blogger.com/profile/04447613447033692983noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6107119563974400858.post-38009079799084733232012-06-13T05:30:00.000+05:302012-06-13T05:46:03.455+05:30உனக்குள் நான்!என்<br />
மனமெனும் ஓடையில்<br />
<div>
இன்றும் அழகாய்</div>
<div>
நீந்திக்கொண்டிருக்கின்றன </div>
<div>
அழகிய நீ எனும்</div>
<div>
கவிதைகள்...</div>
<div>
<br /></div>
<div>
என் மௌன மொழிகளுக்கு</div>
<div>
இதயத்தில் இருந்தபடியே</div>
<div>
அழகாய் பதில் தந்து கொண்டிருக்கிறாய்</div>
<div>
நீ!</div>
<div>
<br /></div>
<div>
எம் கடந்தகாலம் - பற்றி</div>
<div>
இதயத்திற்கு மெல்ல</div>
<div>
தந்தியனுப்பிக் கொண்டிருக்கின்றது</div>
<div>
என் நரம்புகள்...</div>
<div>
<br /></div>
<div>
உன் நினைவுகளுடே</div>
<div>
நானும் மெல்ல உனக்குள் </div>
<div>
கடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன்</div>
<div>
என்னையே அறியாமல்...</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizUidYsluQLFB-bOLOqz49CVyfhw7HuYE658aQJ-pOGTjz_pxYiQyYNJRydwr0dNQGsZjU2g9RF7fYZV7i5tTu8hCWrZAirPvIFwduRyjdfKGA7NpWYRNmF1kgc1N9yQJFGeSRGsp_f5o/s1600/mind-power.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="208" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizUidYsluQLFB-bOLOqz49CVyfhw7HuYE658aQJ-pOGTjz_pxYiQyYNJRydwr0dNQGsZjU2g9RF7fYZV7i5tTu8hCWrZAirPvIFwduRyjdfKGA7NpWYRNmF1kgc1N9yQJFGeSRGsp_f5o/s320/mind-power.jpg" width="320" /></a></div>Premhttp://www.blogger.com/profile/04447613447033692983noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6107119563974400858.post-82830347222701482742012-05-28T20:09:00.000+05:302012-05-28T20:09:15.607+05:30தெருவோர பிச்சை...ஒவர்நாளும் காலம வேலைக்கு போகேக்க இல்லாட்டி வேலையால வரேக்க எப்பிடியும் ஒரு பிச்சக்காரன கண்டுடுவன்.... அவங்கள்ல கனக்க விதம் இருக்கினும், பஸ்சுக்க பிச்சையெடுக்கிறது, றோட்ல பிச்சஎடுக்கிறது, வீடு வீடா பிச்சஎடுக்கிறது எண்டு கனக்க விதம்! ஆனா பஸ்சிலயோ ரெயின்லயோ பாட்டுப் பாடி பிச்சைஎடுக்கிறவங்கள் எண்ணிக்க குறைவு எண்டாலும் அவங்களுக்கு ஏலுமோ ஏலாதோ எண்டத அடுத்த கட்டம் விட்டு அவையளின்ர முயற்சிய பாராட்டவேணும். இல்ல உண்மையா ஏதும் நொண்டிச்சாட்டு சொல்லாம தங்களால முடிஞ்சத பண்ணி காசு வாங்கிற தெருவோர விரதங்கள பஸ்லையோ ரெயின்லையோ ஏத்திறது சரி எண்டு தான் நான் சொல்லுவன்...<br />
<br />
இண்டயான் அனுபவத்த சொல்லுறன்..<br />
<br />
நான் வழக்கமா வேலைக்கு போற நேரத்தில பஸ் செரியான சனம் உந்த புட்போட்ல தொங்கிக்கொண்டு தான் போனவையள் எல்லாரும், அதோட மழ வேற! ஏற்கனவே காச்சல் குணமா இருந்தது சோ நான் கொஞ்சம் சுணக்கமா தான் பஸ் பிடிச்சுக்கொண்டு போனனான் அங்க போனா 8.30க்கு செரியா தெகிவளை ஸ்டேசனுக்கு ரெயின் வந்து நிண்டது, நான் அவசர அவசரமா ரிக்க்ட்ட எடுத்துக்கொண்டு ஓடினா பெரிசா சனம் இருக்கேல்ல ரெய்னுக்க...<br />
<br />
நல்ல ஆசுவாசமா இருந்து போனன். அப்ப எங்கையோ தூரத்தில ஆரோ பாட்டுப்படிக்கிற சத்தம் கேட்டது... நான் நினைச்சன் சில வேள காலி மாத்தறைல இருந்து வாறவங்கள் அலுப்புத் தெரியாம இருக்க பாட்டுபாடுறவங்கள், அவங்கள் தான் பாடுறாங்களாக்கம் எண்டு அத கேட்டுக்கொண்டே இருந்தன்... சும்மா சொல்ல கூடாது பாட்டு நல்லா தான் இருந்தது.. கொஞ்சத்தில பாட்டு பெரிசா கேக்குதேண்டு பாத்தா உது யாரோ ரெண்டு பேர் மேளமும் அடிச்சு பாட்டும் பாடிக்கொண்டு வந்தவே... அவையள் ரெண்டு பேருக்கும் செரியான வயசு தான் ஒருத்தருக்கு ஒரு கால் இல்ல, மற்றவருக்கு செரியான வயசு, ஆனா கிழவன் சும்மா சொல்ல கூடாது மவுத்தோகன வாய்ல வைச்சது தான் தாமதம் என்ன ஒரு இசை மழையா!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJuhUzFFLkcLdVJyRs9r7r_8KrhA3QY8Uaq3cSXdDx16N8nmBkdbFXmHtNX1sloaSKudBLUZtZLWG_LnWXsACgV29WIBpiuGNP97h-9NvW_cWXYsC4y5Ay76f3TQ6-8FNQJXXzc1_eJpM/s1600/lianga_singing-man.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJuhUzFFLkcLdVJyRs9r7r_8KrhA3QY8Uaq3cSXdDx16N8nmBkdbFXmHtNX1sloaSKudBLUZtZLWG_LnWXsACgV29WIBpiuGNP97h-9NvW_cWXYsC4y5Ay76f3TQ6-8FNQJXXzc1_eJpM/s320/lianga_singing-man.jpg" width="320" /></a></div>
<br />
இடைக்க இடைக்க பாட்டும் வேற பாடின படி, ஒரு இன்னிசக்கச்சேரியே போச்சு ரெய்னுக்க, அவையள் எடுக்கிறது பிச்சையா இருந்தாலும் நல்ல ஒரு இசைய எங்களுக்காக குடுத்து தான் காசு வாங்கினும்...<br />
<br />
உத நான் ஏன் சொல்ல வாறன் எண்டா, பாவம் அவையள் இவ்வளவு கஸ்டத்துக்கையும் பாட்டும் பாடி சம்பாதிக்க நினைக்கேக்க நாங்க தானே அவையளுக்கு ஏதோ எங்களால முடிஞ்சத குடுக்கோணும், இலையெண்டுறியளே...? குறைஞ்சது ஒர்வா தனும் போடலாம் தானே! நான் பாத்தன் மனுசன் நல்ல வாசிக்கிது, பாடுது , மேளத்துக்கெ ஏற்ற மாரி நம்ம சில்க் மாரி இடுப்ப வழைச்சு வழைச்சு ஆடுது...<br />
<br />
அவர்ட வயசுக்கு மீறின ஆட்டத்துக்காவது காசு குடுக்கலாம் தானே!<br />
<br />
<b>நான் ஒண்டு கவனிச்சிருக்கிறன் அது பஸ்சிலயும் சரி ரெயின்லையும் சரி ஆராச்சும் பாடேக்க அத கேக்கிறியள் பாக்கிறியள் எல்லாம் முடிஞ்சதுக்கு பிறகு அவர் பிச்சை எடுத்துக்கொண்டு வாறார் எண்டோன காத சொறிவியள், ரெலிபோன தூக்கி காதுக்க வைப்பியள், பக்கத்தில இருக்கிறவரோட கத குடுப்பியள் ஏன் நித்திரையே கொள்ளாம நித்திர மாரி கிடப்பியள்...</b><br />
<br />
ஏன் இந்த அற்ப நாடகம்....? நீங்க மற்றவைக்கு உதவுறதால உங்கட வயசு குறைஞ்சிடுமா...? இல்ல என்ன காரணத்துக்காக பிச்சை போட மறுக்குறீங்க...? அத தான் விடுவம் பிச்சக்காரன் என்ன நீங்க போடுற காச பாத்து உது காணாது இன்னும் கொஞ்சம் போட்டு தா எண்டா கேக்கிறான்...?<br />
ஒவரு நாளும் தன்ர வயித்துப் பசிக்கா பிச்சை கேக்கிற பிச்சைக்காரர்களுக்கு உதவி செய்ங்க... நீங்க வாழ்கைல நல்லா இருப்பீங்க....<br />
<br />
அதுக்காக எல்லா பிச்சைகாரங்களுக்கும் குடுங்க எண்டு சொல்ல வரேல, எனக்கு தெரியும் நான் எத்தினையோ பிச்சக்காரங்கள் கஸ்டப்படுறமாரி கத எல்லாம் சொல்லுவாங்கள் ஆனா காச நல்லா சேத்திட்டு நேர நவீன தவறணை (பார்)க்கு தான் போவாங்கள், குடிச்சு வெறிச்சு அதே றோட்டில விழுந்தும் கிடப்பாங்கள்... அவர்களை நீங்க இனங்கண்டா பாத்தும் பாராம இருங்க, உண்மையாவே பசிக்காக சாப்பாடு தேடி தன்னால எது முடிதோ அத பண்ணி உழைப்பு கேக்கிற பிச்சைக்காரங்களுக்கு சிறு உதவியாவது செய்ங்க...!<br />
<br />
உது நான் ஆர்ட மனசையும் காயப்படுத்த சொல்லேல மனசில பட்டது சொல்லிட்டன்... தப்பு இருந்த மன்னிச்சுக்கொள்ளுங்க.... :)Premhttp://www.blogger.com/profile/04447613447033692983noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6107119563974400858.post-54967647015351015922012-05-24T19:56:00.000+05:302012-05-24T19:56:20.176+05:30அவள் காவியா...!அம்மா காவியா!<br />
குஞ்சு காவியா எழும்பு விடிஞ்சு நேரமாச்சு எழும்பி போய் கால் முகத்த கழுவிட்டு வா பிள்ள...<br />
<br />
அனுக்கம் கலந்த குரலில் அவளது அம்மா அவளை துயில் எழுப்புகிறாள்! என்னம்மா இப்ப தானே படுத்தன் இன்னும் கொஞ்ச நேரம் படுக்க விடம்மா எண்டு சினுங்கிய படியே சோம்பல் முறித்து மறு பக்கம் திரும்பிப் படுக்கிறாள் காவியா!<br />
<br />
இப்பிடி அதிக நேரம் காவியா தூங்குவதில்லை, மிகவும் சுறு சுறுப்பான பிள்ளை அவள்! காவியாவின் நீண்ட நேர உறக்கமும், சோம்பலும் அவளது அம்மாவிற்கு சந்தேகத்தை எழுப்பியது! காவியா அருகே சென்ற அம்மா அவளை பார்த்த போது அவள் முகத்தில் ஏதோ வாட்டம் தெரிந்தது!<br />
<br />
பொதுவா காவியா தான் சோகமா இருக்கிற நேரங்களில தன்ர கடந்த கால நிகள்வுகள அதிலும் தன்ர பள்ளிப் பருவ வாழ்க்கைய, தன்ர நண்பி துளசியோட தான் செய்த குறும்புகள நினைச்சு தன்னை ஆறுதல்ப்படுத்திக்கொள்ளுவாள்...<br />
<br />
அம்மா கேக்கிறா...<br />
<br />
பிள்ள உனக்கென்னாச்சு, நீ இப்பிடி ஒருகாலமும் இருக்கிறதில்லையே! அம்மாக்கு சொல்லு ராசாத்தி எண்டு அம்மா காவியாவிடம் கருசனையாக பேச, அது ஒண்ணும் இல்லை அம்மா என்று சொல்லிக்கொண்டே காவியா அம்மாவிடம், அம்மா என்ர கால எடுத்து தா என கேக்கிறாள் (காவியாவிற்கு போரில் அகப்பட்டு ஒரு கால் அகற்றப்பட்டது, துணைத் தடிகள் வைத்தே அவள் தன் கடமைகளை செய்பவள்) அம்மா எடுத்து குடுக்க சிறிய சிரிப்போடு எழுந்து தனது அன்றாட கடமைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற ஆரம்பிக்கிறாள்.<br />
<br />
காவியா தான் ஊனம் ஆனவள் என ஒரு நாள் கூட ஏங்கியதில்லை அவளது ஏக்கத்துக்கும் , கவலைகளுக்கும் காரணமாய், தன்னால் சுயமாக ஏதாவது வேலையை செய்து சொந்த காலில் நின்று அம்மாவை தான் பார்க்க வேண்டும் என்பதாகவே இருந்தது. ஆனால் அவளது வேலைகள் அனைத்தும் வீடளவிலே மட்டுப்படுத்தப்பட்டமையே அவளது வாட்டத்துக்கு காரணம்.<br />
<br />
தன் பிள்ளை ஊனம் ஆனவள் என்பதாலே காவியாவின் அம்மா அவளை இன்னும் சிறு குழந்தையை பராமரிப்பதைப் போலவே பார்த்துவருகிறாள் ஆனால் அவள் மகள் சுறுசுறுப்பானவள் என்பதை அம்மா அறிய முற்படவில்லை.<br />
<br />
காவியா காலையில் இருந்து மாலை வரை தன் வேலை முதற்கொண்டு அம்மாவிற்கான வேலை வரை அனைத்தையும் முடித்துக்கொண்டு மெல்லவே ஓய்விற்கு வந்து படிக்கட்டில் அவரவே அவளது மாமா படலையில வந்து அம்மா காவியா....? என்று கூப்பிட்ட படி உள்ளே வருகிறார், அட வாங்க மாமா என்று அன்பு கலந்த வார்த்தைகள் கொண்டு தன் மாமாவை வரவேற்கிறாள் காவியா! தன் தம்பியின் குரல் கேக்க அடுப்படியில் இருந்து முந்தானையில் கைகளை துடைத்தபடி விரைந்து வருகிறாள் காவியாவின் அம்மா,<br />
<br />
வா தம்பி என்ன புதினம், கன காலம் இஞ்சால பக்கம் காணவே இல்ல. என்ன பிஸியோ அப்பிடி எண்டு கேட்ட படி தன் நெற்றி வேர்வைய புறங்கையால் துடைக்கிறாள் காவியாவின் அம்மா.<br />
<br />
அது ஒண்ணும் இல்ல அக்கா, உந்த வீடு கட்டிற அத்தடிக்க நான் ஒரு இடமும் அசயேல உப்பிடியே மணல் ஏத்திறதும் கல்லு பறிக்கிறதிலையும் ஒரே ஓடுப்பட்டுத் திரிஞ்சன் அது தான் வர ஏலாம போச்சு!<br />
<br />
பிறகு காவியா சொல்லு நீ என்னம்மா செய்ற? அம்மாக்கு உதவி ஏதும் செய்றியா எண்டு சிறு சிரிப்போடு கேக்கிறார் காவியாவிடம், காவியா பதில் சொல்ல முன்னமே அவளது அம்மா பதில் சொல்லுறா!<br />
அத ஏன் கேக்கிற நீ, ஒரு இடத்தில நில்லாள்! எப்ப பாரு எங்கையாச்சும் திரிவாள், நான் செய்ய வேண்டிய வேலை எல்லாம் அவளே செய்றாள். நான் எவளவு சொன்னாலும் கேக்கிறாள் இல்ல, மாமா நீ சொன்னா தான் கேப்பாள்.<br />
<br />
அதுக்கென்ன அக்கா! என்ர மருமகள் சுறுசுறுப்பான பிள்ள தானே! அப்ப அப்பிடி தானே இருப்பாள். பாவம் விதி காவியாவ ஊனமாக்கிட்டு எண்டு சொல்லிய படியே காவியாவின் காலை பாக்கிறார் அவர். மாமா தனக்கு கால் இல்லை எண்டதை ஞாபகப்படுத்திட்டார் என நினைச்சு கண்கலங்கி மெல்ல வானம் பாத்து நிக்கிறாள் காவியா.<br />
<br />
காவியாவின் கண்களில் கலக்கத்தைக் கண்ட மாமா, உடனே அவளை வழிப்படுத்த காவியா! நீ சொந்தமா உழைக்க நான் ஒரு வழி சொல்லட்டே என்று பேச்சுக் குடுத்தார், உடனே காவியா முகத்தில் அப்பிடியொரு மலர்ச்சி, ஓம் மாமா ஏதாவது நல்ல உருப்படியா சொல்லுங்க நான் நல்லா செய்து முன்னுக்கு வருவன் எண்டாள் காவியா.<br />
<br />
ம்ம்ம்...<br />
<br />
காவியா உனக்கு தான் வாகனங்கள் எண்டாலே செரியான பைத்தியம், உன்ர மச்சான்ர CD 100 மோட்டச்சைக்கிளையே எடுத்து ஓடினாளாச்சே! ஏன் நீ ஓட்டோ ஒண்டு வாங்கி ஓட கூடாது எண்டு மாமா கேக்க, இடையே குறுக்கிடுகிறாள் காவியாவின் அம்மா... ஏன் தம்பி! நீ தெரிஞ்சு தான் பேசிறியா? காவியாட நிலை தான் உனக்கு தெரியுமே அப்பிடி இருக்க ஏன் நீ இப்பிடி ஒரு யோசின சொல்லுற உனக்கென்ன புத்தி கித்தி கெட்டு போச்சா எண்டு திட்டுகிறாள் காவியாவின் அம்மா.<br />
<br />
அதுக்கு மாமாவின் பதில் வர முன்னமே காவியா தன் அம்மாவிடம் கோவமாக சொல்லுகிறாள், இப்பிடி என்னை காலில்லாதவள், ஊனம் ஆனவள் எண்டு நீங்களே சொல்லி சொல்லி ஏன்மா என்ன நோகடிக்கிறீங்க? நான் ஒருகாலமும் எனக்கு ஒரு கால் இல்ல எண்டு யோசிச்சதே இல்ல. என்னால எல்லாம் முடியும் எண்டு வீறாப்போடு சொன்னாள் காவியா, காவியாவின் குரலில் ஒரு தன் நம்பிக்கை துளிர்விட்டிருந்தது.<br />
<br />
மாமா தொடர்கிறார்......<br />
<br />
அக்கா! காவியா தைரியசாலி, தன்னம்பிக்கையானவள் அவள்ட பிடிவாதம் தான் உனக்கு தெரியுமே அக்கா ஒரு ஓட்டோ ஒண்ட தான் வாங்கி குடுத்துப்பாப்பமே. அது அவளுக்கு பிடிச்சிருந்தா அப்பிடியே அத செய்யட்டும் இல்லாட்டி வேற ஏதாவது வழிய பாப்பம். இப்பிடியே வீடு வளவு எண்டு எவளவு காலம் தான் அவளும் வீட்டுக்கையே இருக்கிறது. நாலிடத்துக்கு போய் பழகத்தானே வேணும்.<br />
<br />
எண்டாலும் தம்பி அவள் ஒரு பொம்பிள பிள்ள, அத விட இப்ப நாடு இருக்கிற நிலமல இது தேவ தானா? பேசாம ஒரு தையல் மிசின வாங்கி தைக்க பழக்கினா அவள் வீட்ட இருந்தே தைப்பாள்! இப்ப தான் ஏதோ மோட்டர் போட்ட தையல் மிசின் இருக்காமே...? அதவிட்டிட்டு வாகனம் கீகனம் எண்டுற! தச்சேலா ஏதும் நடந்திட்டா...?<br />
<br />
ஐயோ அக்கா, அவள் என்ன யாழ்ப்பாணம் கொழும்பு பஸ்ஸா ஓட போறாள் ஓட்டோ தானே ஓட போறாள் அதுவும் பகல்ல குறிப்பிட்ட ஒரு கொஞ்ச தூரத்துக்கு தானே. அவள் எல்லாம் நல்லபடியா செய்வாள் அக்கா, நீ ஒன்னுக்கும் யோசியாத.<br />
அவளுக்கு நம்பிக்க குடுக்கவேண்டிய நாங்க நம்பிக்க இல்லாம கதைச்சா என்ன தான் ஆகிறது.<br />
சரி அக்கா இருட்டுது நான் போய்ட்டு பிறகு வாறன், காவியா ஓட்டோ விசயத்த நான் நாள நாளண்டைக்கு சொல்லுறன் நாங்க போய் பாத்து எடுப்பம் எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் இருக்கிறார் அவரிட்ட ஓட்டோ வாடகைக்கு எடுக்கலாம்னு நினைக்கிறன், எதுக்கும் நான் கேட்டிட்டு சொல்லுறன்.<br />
<br />
சரி நீ எதுக்கும் யோசியாத, அக்கா நீயும் தான். போய்ட்டு வாறன்..<br />
<br />
மாமா படலைய தாண்டி போய்விட்டார்.............<br />
<br />
காவியாவின் மனதில் அப்பிடியொரு சந்தோசம். வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கனும் போல தோணிருக்கும் அவளுக்கு. காவியா தன் கனவிலையே வாழ்கைய ஆரம்பிச்சு நடத்த ஆரம்பிச்சிட்டாள். நிம்மதியான தூக்கம், விடியக்காலம வழக்கம் போல எழும்பிறது எண்டு எல்லாமே ரிப்ரொப்பா நடக்கிது....<br />
<br />
ஒருவாரம் உருண்டோடியது.....................<br />
<br />
காவியா வீட்டு வாசலில் ஒரு ஓட்டோ வந்து நிண்டது. அது தான் காவியாவின் வாழ்கையில் அவள் ஒரு காவியம் படைக்க உந்து சக்தியானது.<br />
விரைவாய் ஏறி இருந்துகொண்டாள் பிறகு அம்மா வாங்க மாமா வாங்க எண்டு ரெண்டு பேரையும் ஓட்டோக்குள் ஏற சொன்னாள் மெல்லமாக ஓட்டம் எடுத்த அவள் சந்தோசத்தின் உச்சத்தில் வேகத்தை கூட்டிக்கொண்டே போனாள், ஒரு கட்டத்தில் அவளது அம்மா பிள்ள கொஞ்சம் மெதுவா போ! பயமாகிடக்கு! கண்டபாட்டுக்கு யாரும் கொண்டந்து குறுக்க விட்டிடுவாங்கள் பிள்ள. பாத்து போ எண்டு சொல்லிக்கொண்டே இருந்தாள். அட சும்ம இரம்மா நீ எண்டு சொல்லி ஊரெல்லாம் சுத்தி தன் வீட்டு வாசலில் கொண்டுவந்து நிப்பாட்டினாள் காவியா...!<br />
<br />
படிப்படியாக அவளது தொழில் வளர்ச்சிகண்டது....<br />
<br />
நிஜாயமான உழைப்பு , நேர்மை, நேரசூசி, கட்டுப்படியான காசு எண்டதால அந்த ஏரியாக்காரர்களுக்கு வாடிக்கையான ஓட்டோக்காரியானாள் காவியா. இப்பிடியே நாட்கள் கரைந்தோடியது.<br />
<br />
ஒருநாள் தன் அம்மாவையும் ஏத்திக்கொண்டு சந்தைக்கு போட்டு வாற வழில தனது ஓட்டோக்கு குறுக்காக கைக் குழந்தைய தூக்கிக் கொண்டு ஒரு பெம்புள கடக்கிறத கண்டோன ஓட்டோவ சடுதியா நிறுத்திக்கொண்டாள் காவியா, நிறுத்திய வேகத்தில சரிஞ்சு விழுந்த கூடைக்க இருந்த தேங்காய் றோட்டில விழுந்து குழந்தைய தூக்கிக்கொண்டு நிண்ட பெண்மணின்ர காலில பட்டு கிடந்திச்சு அத எடுக்க போன காவியா கிட்டப்போய் பாத்ததும் அதிர்ச்சியடைஞ்சிட்டாள், அது வேற ஒண்ணும் இல்ல கையில குழந்தைய தூக்கிக்கொண்டு பிச்சை எடுக்கிறது அவளது உயிர் நண்பி துளசி.<br />
<br />
இவ்வளவு காலமும் தன்ர நண்பி தன்னவிட்டு பிரிஞ்சிட்டதாவே இருந்துவிட்டாள் காவியா! எல்லாம் உந்த சண்டையின்ர விளைவுகள்...<br />
<br />
யாராலையோ ஏமாத்தப்பட்டு, குடும்பத்த துலைச்சு நடு றோட்டில பிச்சை எடுத்துக்கொண்டு நிண்ட துளசிய கண்டதும் காவியா மலைத்துப்போய் நின்றுவிட்டாள் அதே கணம் தன் நண்பி கால் இழந்து தடிகளில் தன்னை தாங்கி நிப்பதைக் கண்ட துளசிவாயடைத்து நின்றாள்.<br />
<br />
இருவரிடையிலும் பேச்சுப்பரிமாற்றங்கள் தடைப்பட்டு இருந்தது. இடையிட்ட அம்மா துளசி!!! என்னம்மா உன்ர கோலம்! என்னாச்சு உனக்கு! அழுகுரலில் அரவணைத்துக் கொண்டாள் அவர்கள் மூவரையும் ஒன்றாய்...!<br />
<br />
சிறிது நேரம் கழிய காவியா பழைய நிலைக்கு திரும்பி நண்பிகள் இருவரும் தம் சொந்தக்கதை சோகக்கதைகளை ஒருவருக்கொருவர் சொல்லி ஆறுதல் படுத்திக் கொண்டனர்... காவியா தனது முயற்சி, சுறுசுறுப்பு வேலை எல்லாவற்றையும் துளசிக்கு சொல்லிக்கொண்டிருக்க துளசிக்கு காவியா ஒரு அதிசயமாக தெரிந்தாள்!<br />
<br />
கால் போனாலும் காவியா நீ ஒரு காவியம் படைத்த வீர பெண் என அவள் தோள் தட்டி அதே பழைய தன்னம்பிகை குடுத்தாள் அவள் உயிர் நண்பி துளசி!<br />
<span style="font-size: x-small;"><br /></span><br />
<span style="font-size: x-small;"><br /></span><br />
<b>மனிதருக்கு ஊனம் ஒரு குறையில்லை - முயன்றால் முன்னேறலாம் என்ற தொணிப் பொருளுக்குள் அடக்கப்படும் காவியா என்ற பெண்மணியின் காவியம்.</b>Premhttp://www.blogger.com/profile/04447613447033692983noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6107119563974400858.post-12179623627645041742012-05-12T21:42:00.000+05:302012-05-12T21:43:27.281+05:30உயிரும் நீயே.........!<br />
<div style="font-family: arial; font-size: small;">
அம்மா...!</div>
<div style="font-family: arial; font-size: small;">
அன்னையர் தினமென்று </div>
<div style="font-family: arial; font-size: small;">
இதயத்தில் சொல்லெடுத்து</div>
<div style="font-family: arial; font-size: small;">
வார்த்தைகளாய் கோர்ப்பித்து</div>
<div style="font-family: arial; font-size: small;">
வரைக்கிறேன் ஓர் மடல்!</div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: small;">
அம்மா இது உனக்கு </div>
<div style="font-family: arial; font-size: small;">
பாசமே உருவான என் வாழ்த்து மடலாகட்டும்!</div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: small;">
கணப்பொழுதும் கலங்காது </div>
<div style="font-family: arial; font-size: small;">
என்னை ரட்சிக்கும் ஆருயிரே</div>
<div style="font-family: arial; font-size: small;">
உன் </div>
<div style="font-family: arial; font-size: small;">
நினைவெல்லாம் நானாய்</div>
<div style="font-family: arial; font-size: small;">
நித்தமும் நினைத்தபடி </div>
<div style="font-family: arial; font-size: small;">
என் வாழ்க்கைக்கும் அர்த்தம் தந்த தாயே! </div>
<div style="font-family: arial; font-size: small;">
உனக்கு என் கோடி நன்றிகள்!</div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: small;">
என்</div>
<div style="font-family: arial; font-size: small;">
சோர்விற்கும், தோல்விக்கும்</div>
<div style="font-family: arial; font-size: small;">
என்றும் துணை நிற்பது உன்</div>
<div style="font-family: arial; font-size: small;">
மடி தான் அம்மா! </div>
<div style="font-family: arial; font-size: small;">
தூக்கம் தொலைத்த பொழுதுகளில்</div>
<div style="font-family: arial; font-size: small;">
உன்னைக் கட்டியணைத்து </div>
<div style="font-family: arial; font-size: small;">
குறுகிப் படுத்த மாத்திரத்தில்</div>
<div style="font-family: arial; font-size: small;">
தூக்கம் தருவிப்பதும் நீயே அம்மா! </div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: small;">
சின்னக் கோபங்கள், சிறு தண்டிப்புக்கள்</div>
<div style="font-family: arial; font-size: small;">
பாசமான பேச்சுக்கள், அன்பான அரவணைப்புக்கள்</div>
<div style="font-family: arial; font-size: small;">
என் வாழ்க்கையின் நல்வழிக்காய்</div>
<div style="font-family: arial; font-size: small;">
நீ செய்த முயற்சிகள்...! </div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: small;">
நான் வெற்றி பெற்ற நாட்களில்</div>
<div style="font-family: arial; font-size: small;">
நீ</div>
<div style="font-family: arial; font-size: small;">
உச்சி மோர்ந்து </div>
<div style="font-family: arial; font-size: small;">
தலை கோதிய கணங்களை</div>
<div style="font-family: arial; font-size: small;">
எண்ணிப்பார்க்கிறேன்...</div>
<div style="font-family: arial; font-size: small;">
பனிக்கிறது என் கண்கள்! </div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: small;">
கால நேரம் தவறாது </div>
<div style="font-family: arial; font-size: small;">
எனக்கான பணிவிடைகள் </div>
<div style="font-family: arial; font-size: small;">
கச்சிதமாய் செய்யும் தாயே!</div>
<div style="font-family: arial; font-size: small;">
இன்று! இது! </div>
<div style="font-family: arial; font-size: small;">
உனக்கான நாள் அம்மா! </div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: small;">
அம்மா!</div>
<div style="font-family: arial; font-size: small;">
உன்னை நினைக்கும் போது</div>
<div style="font-family: arial; font-size: small;">
சிலிர்க்கும் என் தேகம்</div>
<div style="font-family: arial; font-size: small;">
அந்த நொடி தாய்மையின் உச்சக்கட்டம்!</div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: small;">
என் வழிகாட்டி, கலங்கரை விளக்கு</div>
<div style="font-family: arial; font-size: small;">
முன்னோடி எல்லாமாய் நீயே அம்மா!</div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: small;">
நடமாடும் தெய்வமாய்</div>
<div style="font-family: arial; font-size: small;">
அகிலமெங்கும் பரந்திருக்கும்</div>
<div style="font-family: arial; font-size: small;">
தாய்மை என்ற மந்திரத்தின்</div>
<div style="font-family: arial; font-size: small;">
அரசிகட்கு! </div>
<div style="font-family: arial; font-size: small;">
என் மனம் கனிந்த </div>
<div style="font-family: arial; font-size: small;">
அன்னையர் தின வாழ்த்துக்கள்</div>
<div style="font-family: arial; font-size: small;">
உரித்தாகட்டும்...!</div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJwHR_wO_XmQcRqR1KwNDv9dMXa7gM10i4xEtt35opoFSEx23EJmJQAlO1epfAB4pu7pKVIJGiXXq6l6_xjUzfUrGBkxeqwfkrsK2nys5uOxp2Y_OtYSu3h5BzPF9q-muZZvGZR6C0jso/s1600/Lessons-from-Our-Mothers.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="212" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJwHR_wO_XmQcRqR1KwNDv9dMXa7gM10i4xEtt35opoFSEx23EJmJQAlO1epfAB4pu7pKVIJGiXXq6l6_xjUzfUrGBkxeqwfkrsK2nys5uOxp2Y_OtYSu3h5BzPF9q-muZZvGZR6C0jso/s320/Lessons-from-Our-Mothers.jpg" width="320" /></a></div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />Premhttp://www.blogger.com/profile/04447613447033692983noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6107119563974400858.post-53023877487255326292012-04-16T19:25:00.005+05:302012-04-16T20:25:44.025+05:30திருந்துவார்களா இவர்கள் - சீரழியும் பஸ் சேவை (A9)<span >எந்தவொரு தனி மனிதனுக்கும் தனது சொந்தமண்ணுக்கு, தான் பிறந்து வளர்ந்த இடத்தை நாடிச் செல்லும் போது மனதளவில் பலத்த எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது! இதை எவராலும் மறுத்துவிட முடியாது. அவ்வாறான காலகட்டம் இப்போ அடிக்கடி நம்மவர்களுக்கு அனுபவமாக, நிகழ்வுகளாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது! அது வேறு எதுவும் அல்ல! யாழ்ப்பாணம் - கொழும்புக்கிடையிலான போக்குவரத்து தான். நம் சொந்த ஊருக்கான பயணம்.</span><div><span ><br /></span><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoEca0ruo6SqkrKKNPp0NVgqI9YV8WihH5N1Ly2sgQkbCVcka-qv0SNjWu2HSAaIeHeLs4HN3MpjvnIavjwlAJJVde_nzxHgfTHqWdcNa24aKorZ7oSD3ujKYa2Nu2LHx7FkAJbtKE4nQ/s320/jaffna%252Bcolombo%252Bbus.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5732011628977694514" /><div><span ><br /></span></div><div><span >தத்தமது சொந்த இடங்களுக்கு செல்வதெனும் போது பலவாறான கற்பனைகளை தமக்குள்ளே தீட்டி வைத்துக் கொள்கிறார்கள், அது மட்டுமல்லாமல் அந்த கனவுகள் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் தமக்கான தயார்ப்படுத்தல்களில் ஈடுபட்டுக்கொள்கிறார்கள்!</span></div><div><span ><br /></span></div><div><span >இவ்வாறான தயார்ப்படுத்தலின் இறுதிக்கட்டமாக தொடர்வது தான் போக்குவரத்து ஊடகம்! அதாவது தாம் தமது சொந்த இடங்களுக்கு செல்வதற்கான போக்குவரத்து சேவை. பலருக்கு தெரிந்திருக்கும் யாழ் - கொழும்பு A9 வீதியூடான பயணத்திற்காக பல்வேறு பட்ட பேருந்துச் சேவைகள்</span></div><div><span ><br /> நடாத்தபட்டுக் கொண்டிருக்கின்றது. அரசாங்கம் மற்றும் தனியார் இணைந்து இந்த போக்குவரத்து சேவையை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இது வரவேற்க்கத்தக்க விடயமாக இருக்கிற போதிலும், ஒரு சில பஸ் சேவைகளின் குழறுபடிகளால் அவ் பஸ் சேவைகள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சம் குறைவடைந்து கொண்டே செல்கின்றது என்பதையும் யாராலும் மறுத்துவிட முடியாது.</span></div><div><span >தனியாரால் நடாத்தப்படும் பஸ் சேவைகளை அரை சொகுசு, சொகுசு, கடுகதி என பலவகைப்படுத்திக் கொள்ளலாம். பெயர்கள் என்னவோ கேட்பதற்கு ஆசையாக இருந்தாலும் சேவை தரமானதா என்ற கேள்வி எழும்போது அதற்கான பதில் தற்காலத்தில் கொஞ்சம் ஆட்டம் காணுகிறது என்றே கூற வேண்டும்!</span></div><div><span ><br /></span></div><div><span >யாழ் கொழும்புக்கிடையிலான பிரயாணத்தைப் பொறுத்தவரையில் என்னை விட பல தடவைகள் சென்றுவந்தவர்கள் பலர் இதை படித்துக்கொண்டிருப்பீர்கள்! உங்களுக்கு நிச்சயமாக புரிந்திருக்கும் நான் சொல்ல வரும், சொல்லிக்கொண்டிருக்கும் விடயத்தின் உண்மைத்தன்மை.</span></div><div><span ><br /></span></div><div><span >மக்களின் தேவைக்கேற்ற சேவை கிடைக்காதவிடத்து சேவைக்கான தேவையும் மக்களால் புறந்தள்ளப்பட்டுக்கொண்டே செல்லும்! பஸ் சேவையானது சிறப்புற நடக்கவேண்டும் என்றால் மக்களின் நன்மதிப்பை பெற்றுக் கொள்ளவேண்டியது முக்கிய இடத்தைப் பெறுகிறது.</span></div><div><span >அவ்வாறான சேவையை ஒரு சில பஸ் உரிமையாளர்களே தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் நிரந்தரம் இல்லை என்று தான் எண்ணத் தோன்றுகிறது.</span></div><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEit_NJxkygZsVx97sHWDIze811qTOIYYLpw_e08dBMCzof3VCikXNEuRuERSU1NTbExSdQKx8YxWtFzF38XXDxpWtLxsmOdHduNswHjb03JNAERyaW4Ry8sFK5diuhoahyWptIxtR0OkDU/s320/d8133fe8b5933594698b20331fea7c64_XL.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5732012073971929186" style="float: right; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 10px; margin-left: 10px; cursor: pointer; width: 320px; height: 227px; " /></div><div><br /><div><span ><br /></span></div><div><span >சில பஸ் உரிமையாளர்கள் நடத்துனர்கள் மற்றும் வாகன ஓட்டுணர்கள் பயணிகளை எவ்வாறு நடத்தவேண்டும் என்ற போதிய அறிவே இல்லாமல் ஏதோ ஆடு மாடுகளை விரட்டுவதைப் போல பேசிக்கொ(ல்)ள்வார்கள். அது அவர்களது சின்னத்தனத்தையே எடுத்துக்காட்டிக் கொள்கிறது அது மட்டும் அல்லாமல் பயணிகள் மத்தியில் அவர்களுக்கான அவப்பெயரை தாமே ஏற்படுத்திக் கொள்ள வழிசமைக்கிறது.</span></div><div><span ><br /></span></div><div><span >இது ஒருபுறமிருக்க...</span></div><div><span ><br /></span></div><div><span >முன்னரைப்போல் அல்லாமல் பஸ் சேவைகள் முழுக்க முழுக்க வியாபார மயமாக்கப்பட்டு வருகிறது. அதற்கான சில உதாரணங்களை நான் இங்கே முன்வைக்கின்றேன்...!</span></div><div><span >முற்பதிவுக்காக செல்லும் பயணிகளுக்கு ஒரு ஆசனத்தை பதிவு செய்து அதே ஆசன இலக்கத்துக்கு வேறு ஒருவரையும் பதிவு செய்தல்!</span></div><div><span >இதற்கான காரணம் ஒன்று பணமதிப்பு மற்றையது ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் ஒரு பஸ்ஸுக்கான பதிவுகளை மேற்கொள்ளல்.</span></div><div><span >முன்னர் எல்லாம் பெண்களுக்காக ஒரு ஆசனம் ஒதுக்கப்பட்டால் அதற்க்கு பக்கத்து ஆசனத்தில் ஒரு பெண்ணையே பதிவு செய்வது வழக்கம், ஆனால் இன்று அது மருவி விட்டது.</span></div><div><span >பஸ் பதிய செல்லும் பயணிகளிடம் நல்ல பஸ், முன்னுக்கு சீட், அட்யஸ்ட் பண்ணலாம் சீட்ட! நேரத்துக்கு போய்டும், நேரத்துக்கு எடுப்பம் எண்டு ஈர்வையாய் பேசுவதில் உள்ள உண்மைத் தன்மை பஸ்ஸில் ஏறியவுடன் பொய்த்துவிடும்.</span></div><div><span ><br /></span></div><div><span >இது எல்லாவற்றுக்கும் காரணங்கள் என்று பார்க்கப்போனால், ஒன்று வியாபாரமயமாக்கப்பட்ட போக்குவரத்து சேவை, பதிவுகள் மேற்கொள்ளுகையில் உள்ள விசுவாசத் தன்மையின்மை, ஏனோதானோ என்ற பற்றற்ற சேவை, பதிவுகளில் உள்ள போட்டி.</span></div><div><span ><br /></span></div><div><span >இது முழுக்க முழுக்க பயணிகளை நம்பி நடாத்தப்படும் சேவை. ஆகவே பயணிகள் நிச்சயமாக சிறந்த பயனை பெற்றுக்கொள்ளவேண்டும். அவர்களால் கொடுக்கும் பணத்திற்கேற்ற சேவையை பஸ் உரிமையாளர்களாக இருக்கட்டும், ஓட்டுணர் நடத்துனராக இருக்கட்டும் கட்டாயம் மக்களுக்கு, மக்கள் மனங்களுக்கு வழங்கி மதிப்பழிக்க வேண்டியது உங்களது கடமையாகிறது.</span></div><div><span ><br /></span></div><div><span >தொடர்ந்தும் சிறந்த சேவையை மக்களுக்காக வழங்கிவீர்கள் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன்!</span></div><div><span ><br /></span></div><div><span >இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல! நான் கண்ட உண்மைத் தன்மையின் வெளிப்பாடு. யார் மனதையும் காயப்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்...!</span></div><div><span ><br /></span></div><div><span >இப்ப போறன் திரும்பி வருவன் வேற வில்லங்கத்தோட!!!!</span></div><div><span >பாய்...</span></div><div><span ><br /></span></div><div><span ><br /></span></div><div><span ><br /></span></div></div>Premhttp://www.blogger.com/profile/04447613447033692983noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6107119563974400858.post-59901726620380440132012-02-13T19:34:00.007+05:302012-02-13T20:02:24.232+05:30என் காதலே...!<p style="font-size: 100%; font-weight: normal; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); "></p><p style="font-size: 100%; font-weight: normal; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; "></p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); "><strong>என் காதலே!</strong></p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">கண்கள் வழி இதயம் புதுந்து</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">என்னை நித்தம் கொல்லும் </p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">என் காதலே!</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); "> </p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">இமைகளில் ஒரு கணம் இதமாய் வாழ்ந்துவிட்டு போவாய் </p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">நீ!</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">தூக்கம் தொலைத்து என்னுள்</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">வலி கொள்பவன் நான் தானே! </p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); "> </p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">புயலென வந்து</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">வலிக்காமல் இதயம் திருடும் </p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">வித்தையை எங்கே தான் கற்றாயோ!</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); "> </p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">இன்றும்</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">உனக்காய் வரைந்த காதல் கடிதங்கள்</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">சட்டைப் பைக்குள் ஏராளம்!</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">அவை ஓர் குட்டி நூலகம் என்பேன்! </p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); "> </p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">எனக்குள் சேர்த்தேன்</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">உன் நினைவுகளை </p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">ஓர்</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">பொக்கிஷமாய்! </p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">அவையாவும் அழகிய கவிதையென்பேன்!</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); "> </p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">காதலர் தினங்களில் </p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">காத்திருப்பு தான் என் காதலியாகிறது!</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">என் </p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">தனிமைக்குளேயும் குதூகலமாய்</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">வந்து போகிறாய் நீ!</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); "> </p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">என் கனவுகளில் உனக்கே முதலிடம்!</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">என்னே! அழகாய் பேசிகிறாய் நீ!</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">உன் ஓரப் பார்வையில்</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">என் </p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">கனவுகள் அனைத்தும் </p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">உயிர் பெற்றெழக் காண்பேன்!</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); "> </p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">இனிமையான பேச்சுக்களில் </p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">இலக்கியப் பாவையாகிறாய் - நீ!</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">தனிமையான நேரங்களில்</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">தளிர் விடும் பசுமையாகிறாய் - நீ!</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); "> </p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">தினம் ஓர் கற்பனைக்குள்</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">வாழ்ந்துவிட்டுப் போகிறேன் உன்னோடு! </p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">கனவில் உன் நெருக்கம், காதல் </p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">அது போதும் எனக்கு!</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); "> </p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">காலங்களுக்குள் கட்டுண்டவனாய்</p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">உன் காதலின் வாசல் தேடி </p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); ">இன்றும் காத்திருக்கும் உன் காதலன்! </p><p></p><div style="font-size: 100%; color: rgb(0, 0, 0); font-family: Georgia, serif; line-height: normal; "><p style="font-weight: normal; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; "></p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; "><b><br /></b></p></div><div style="font-size: 100%; font-weight: normal; "><span style="font-weight: normal; font-size: 100%; "><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjzKtTAB-t7mv4ZQG0lDSQ9H9WFnjLkw1UDz_T-Qj0t14G-smXbZWGARDXEDeLAA3Habrz3UvArOrpkVefzN-63qJAF48uJE6Cxuk0-kZ7oPCHVdBVW5_v6zlCwgiceTqgm6M4wbRXUVE/s320/29553-bigthumbnail.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5708621604027699698" style="float: left; margin-top: 0px; margin-right: 10px; margin-bottom: 10px; margin-left: 0px; cursor: pointer; width: 320px; height: 200px; " /></span></div><div style="font-weight: normal; "><br /><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); "> </p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); "><br /></p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); "><br /></p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); "><br /></p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); "><br /></p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); "><br /></p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); "><br /></p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); "><br /></p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); "><br /></p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); "><br /></p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); "><br /></p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); "><br /></p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); "><br /></p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); "><br /></p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; line-height: 16px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; background-color: rgb(255, 255, 255); "></p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; "><span >நினைவுகளோடு, </span></p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; "><span >யாசித்திருக்கும் உன் காதலன்!</span></p><p style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; "><span >பிறேம்!</span></p><p style="font-size: 100%; "></p></div>Premhttp://www.blogger.com/profile/04447613447033692983noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6107119563974400858.post-71158932695302996462012-02-11T09:38:00.005+05:302012-02-11T10:37:06.941+05:30போக்குவரத்து நெரிசலின் உந்துசக்தி - போக்குவரத்து பொலிஸ்<span style="font-style: normal; ">இதோ வந்திட்டேன்...!</span><div style="font-style: normal; "><span><br /></span></div><div style="font-style: normal; "><span>கொஞ்ச நாளாவே யாரையாச்சும் வம்புக்கிழுத்து அரட்டையடிக்கிறதே எனக்கு வேலையா போச்சு. இளம் கண்று பயமறியாதாமே... என்னை சொன்னன்... லொலொ </span></div><div style="font-style: normal; "><span><br /></span></div><div style="font-style: normal; "><span>இண்டைக்கு நம்ம நாட்டின் காவலர்கள், சேவகர்கள் பற்றி கொஞ்சமா சொல்ல போறன்! இவர்கள் தான் நாட்டின் தூண்கள் (முட்டுக்கட்டையான தூண்கள்) என்றால் மிகையாகாது! </span></div><div style="font-style: normal; "><span><br /></span></div><div style="font-style: normal; "><span>போக்குவரத்து பொலிஸின் சேவை ஒரு நாட்டுக்கு இன்றியமையாதது. அதுவும் கொழும்பு போன்ற பெரு நகரங்களுக்கு போக்குவரத்து பொலிஸாரின் தேவை அத்தியாவசியமானது. பொதுவாகவே போக்குவரத்து பொலிஸ் என்பதன் விளக்கம். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவது தான் என்று நம் எல்லோருக்கும் தெரிந்த விடயமே! </span></div><div style="font-style: normal; "><span><br /></span></div><div style="font-style: normal; "><span>இருந்த போதும் நமது நாட்டில் போக்குவரத்து பொலிஸ் என்பதன் விளக்கம் சனமே இல்லாத இடத்தில் சன நெரிசலை ஏற்படுத்துபவர்கள் என்று பொருள்படுகிறது.</span></div><div style="font-style: normal; "><span>இத நான் சொல்லேல பொதுவா எல்லாரும் தான் சொல்லுறாங்கள். அதுக்காக என் மேல கோபப்படாதீங்க சொல்லிப்போட்டன்.</span></div><div style="font-style: normal; "><span><br /></span></div><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjB9s9QXxzNYJLaaCot-fNP4zMubRWzhaEpbWIUYB8-FbW8B1n4htQp1ZbigyWT3acn3iG1OqNk7nRb7y5Sfp59AjPi9OIWZdA_SRXKnRTwE80MMvjxiZCnzJI1yYd4L8JR8Af4K8bOw3s/s320/P-23-TRA.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5707736039770264850" style="float: left; margin-top: 0px; margin-right: 10px; margin-bottom: 10px; margin-left: 0px; cursor: pointer; width: 320px; height: 167px; " /><div style="font-style: normal; "><span><b><span>எங்கெல்லாம் சன</span>மே இல்லையோ அங்கெல்லாம் கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் வரைக்கும் சன நெரிசலை ஏற்படுத்துவதே இவர்களின் அளப்பெரிய சேவை! அதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக செயற்படுகிறார்கள். </b></span></div><div style="font-style: normal; "><span><b>இதனாலேயே வீதிகளில் கொஞ்சமாக வாகன நெரிசலை கண்டவர்கள் மனதில் உடனே எழும் சந்தேகம் போக்குவரத்து பொலிஸ் ஏதும் கடமையில் நிற்கிறார்களோ என்பதே! </b></span></div><div style="font-style: normal; "><span><b>மனசத் தொட்டு சொல்லுங்கப்பா! நான் சொன்னது உண்மையோ இல்லையோ!</b></span></div><div style="font-style: normal; "><span><br /></span></div><div style="font-style: normal; "><span>இதற்கு, இந்த போக்குவரத்து பொலீஸாரால் ஏற்படுத்தப்படும் போக்குவரத்து நெரிசலுக்கு பல காரணங்களை சொல்லிக்கொள்ளலாம்!</span></div><div style="font-style: normal; "><span>குறிப்பாக அனுபவமில்லாத இளம் பொலீஸாரை கடமையில் ஈடுபடுத்தல். அவர்களால் தங்களையே கட்டுப்படுத்த தெரியாதவர்கள் எப்படி வீதிப் போக்குவரத்து ஒழுங்கு முறைகளை கைக்கொண்டு நெரிசலைக் கட்டுப்படுத்த போகிறார்கள்.</span></div><div style="font-style: normal; "><span><br /></span></div><div style="font-style: normal; "><span>தேவையில்லாத தருணங்களில் வீதிகளை மறியல் போடுதல், அதுவும் குறிப்பாக மந்திரி, தந்திரி வாறாராம் எண்டு யாராச்சும் புரளிய கிழப்பினாலும் சரி உண்மையா சொன்னாலும் சரி இதையே குறிக்கோளா வைச்சு காலைல இருந்து வெய்யில் காஞ்சு வீதிகளை மறியல் போட்டு நெருக்கடிகளைத் தாங்களாவே ஏற்படுத்திக் கொள்கிறார்கள்! </span></div><div style="font-style: normal; "><span>பின்னர் அதையே அறக்கபறக்க அப்புறப்படுத்த முயற்சிப்பது! இது சிறந்த திட்டமிடல் இல்லாமையின் வெளிப்பாடு என்றே சொல்லிக்கொள்ளலாம்.</span></div><div style="font-style: normal; "><span><br /></span></div><div style="font-style: normal; "><span>இதுக்கெல்லாம் அப்பால் போக்குவரத்து நெரிசலுக்கு பொலிஸாரையே காரணகர்த்தா ஆக்குவதை விட நம்மவர்களிலும் சில தவறுகள் இருக்கதான் செய்கிறது! அதுவும் குறிப்பாக அளவுக்கு மீறிய பேருந்து போக்குவரத்து சேவைகள், அதிகரித்த முச்சக்கர வண்டிகள் பாவனை! இதனாலும் அதிகம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது! </span></div><div style="font-style: normal; "><span><br /></span></div><div style="font-style: normal; "><span>இவற்றைக் கட்டுப்படுத்துவதே போக்குவரத்து பொலிஸாரின் மிகப்பெரிய சவாலாக காணப்படுகிறது! ஆனாலும் அதிலே இன்றும் அவர்கள் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள். நம்மவர்களும் விடுவதாய் இல்லை. கெடுகிறேன் பந்தையம் பிடி எண்ட கணக்கில் அவர்களும் குறுக்கும் நெடுக்குமாக வாகனங்களை செலுத்திய வண்ணமே இருக்கிறார்கள்.</span></div><div style="font-style: normal; "><span><br /></span></div><div style="font-style: normal; "><span>இப்படியான செயற்பாடுகளால் திறமையான பொலிஸார் பலரின் திறமைகள் வீண் போகின்றது! எது எவ்வாறு இருந்தாலும் போக்குவரத்து பொலிஸாரின் பணி இலங்கையைப் பொறுத்த வரையில் சரியான வகையில் கட்டமைக்கபடவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.</span></div><div style="font-style: normal; "><span><br /></span></div><div style="font-style: normal; "><span>அளவுக்கு அதிகமான வாகன பாவனை, தற்போதைய போக்குவரத்து நெரிசல், வீதி கட்டமைப்புக்கள் எல்லாமே இவற்றுக்கு வழிகோலும் அடிப்படைக் காரணங்களாக இருக்கின்றன, இருந்தும் வருகின்றன.</span></div><div style="font-style: normal; "><span><br /></span></div><div style="font-style: normal; "><span>இவற்றையில்லாம் தாண்டி நெரிசலைக் குறைக்கும் வகையில் மின் சமிக்ஞைகள், பாதசாரிகள் கடவைகள் இருந்தும் அவ்விடங்களில் போக்குவரத்து பொலிஸ் ஒருவர் கடமையேற்கும் போது தானாகவே வீதி நெரிசல் ஏற்படுகிறது.</span></div><div style="font-style: normal; "><span><br /></span></div><div style="font-style: normal; "><span>ஆகவே போக்குவரத்து நெரிசலின் உந்துசக்தி போக்குவரத்து பொலிஸாரே....! </span></div><div style="font-style: normal; "><span><br /></span></div><div style="font-style: normal; "><span>பொலிஸ் மாமாஸ் என்னை மன்னிச்சுக்கோங்கோ.... ஐயாம் பாவம்! </span></div><div style="font-style: normal; "><span><br /></span></div><div><span><i>இனி காதலர் தினத்தில காதலியோட வாறன்...! பாய்!</i></span></div><div style="font-size: 100%; font-style: normal; font-weight: normal; "><span><br /></span></div>Premhttp://www.blogger.com/profile/04447613447033692983noreply@blogger.com0