Thursday, August 20, 2009

ஆறுமுகத்தாற்ர குசும்பு

அட என்ன தம்பியவ இங்க வெள்ளவத்தேக்க சுத்தித் திரியிறியள், யாழ்ப்பாணம் போகலையே...??? அங்க நல்லூர்த் திருவிழாவும் வேற நடக்குது நீங்க எல்லாம் போகனும் எண்டதுக்காக உங்கட பெரிய மாமா A9 றோட்டையெல்லாம் திறந்திட்டாராம் நீங்க கேள்விப்படலையோ....???

அட போங்கையா நீங்க.... உவங்கட கதையக் கேட்டு Busல யாழ்ப்பாணம் போக வெளிக்கிட்டா அவ்வளவும் தான் நடு றோட்டில நிக்க வேண்டியது தான் பாருங்கோ...!!!

தம்பி ஏன் நீங்க அப்பிடிச் சொல்லுறியள் ஆ....
இஞ்ச பாருங்கோ தம்பியவ... நான் சொல்லுறத கொஞ்சம் கேக்கிறியளே.... நீங்களெல்லாம் இளந்தாரிப் பெடியள் தானே அப்புறமென்ன Busல ஏறி பெடியளோட பெடியளா போய்ட்டு வாறது தானே... விழங்குதே நான் சொல்லுறது....

அது சரி ஐயா...!!!
அப்போ நீங்க ஏன் போகல...

எனக்கு வயசு போச்சுத் தம்பி... பிரயாணம் செய்யிறதெண்டால் செரியாண கஷ்டம்... அதால தான் நான் எங்கையும் போகிறேல... அப்பிடியும் வெளிக்கிட்டாலும் உடம்பு உசும்பாதப்பா... ஒரே அம்மலாயிடும் பொடியள்....

என்னையா நீங்க...
பெரிசுகளோட பெரிசா பகிடியா போய்ட்டு வாறது தானே.... ஆ....

தம்பி உங்களுக்கும் என்னோட தனகாட்டி திருப்தியா இருக்காதே...
சரி தம்பியவ எனக்கு நேரமாச்சு என்ட மனிசிய வேற கோயிலுக்கு கூட்டிக்கொண்டு போகணும்... அப்ப நான் வரட்டே....
பிறகு சந்திப்பம்....!!!

பிறேம்...

No comments:

Post a Comment