Friday, April 2, 2010

அன்பு நண்பனே கிருஷான்...!!!

அன்பு நண்பனே கிருஷான்...!!!
கல்லூரிக் காலமதில்
சொல்லிலடங்கா சந்தோஷங்களைப்
பகிர்ந்த நாம்...
பள்ளி கடந்தும் தொடர்ந்திருக்க
பாதி வழியில் எனை விட்டுச்
செல்ல எப்படி மனசு வந்தது
உனக்கு...!!!

கல்லூரித் தடகளமதில்
உனக்காகக் கரகோஷம்
செய்த பவிலியன் தனை
கண்ணீரில் பரிதவிக்க விட்டு
சென்றுவிட்டாயே நண்பா...!!!

சொல்லுக்கு சொல்
மச்சான் சொல்லிக்
கதைக்கும் உன்
அழகிய பேச்சை
நான் இனி
எப்போது கேட்பேன் நண்பா...???

அன்பு நெஞ்சம் கொண்ட உனை
அழிக்கும் அளவுக்கு
ஆழிக்கு என்னடா கோபம்
உன்மேல்....???

நீ இல்லா
இவ்வுலகில்
உன் நினைவுகள் மட்டும்
நிமிடம் தோறும்
கனத்துக் கொண்டே
இருக்கிறது தோழனே...!!!

என்
அன்பு நண்பனே கிருஷான்...!!!
உன்னோடு
நான்
பகிர்ந்து மகிழ்ந்த
அத்தனை சந்தோஷங்களும்
என்னுள்ளே
என்றென்றும் நிரையோடிக்
கொண்டே இருக்கும்...!!!

நண்பா
என்
இதயத்தை உடைத்து
மனதைப் பறித்து
உன் நினைவுகளை
என்னுள் விதைத்து
சென்றவனே...
உனக்காக
என்
இறுதிக் கண்ணீர்த் துளியைக்
காணிக்கையாக்குகிறேன்....!!!

நேசமுடன்....
பிறேம்...

நிலவு தேவதை...!!!

என்
சலனம் கண்ட
மனதிலிருந்த
சோகங்கள் அத்தனையும்
என்னவளிடம்
பகிர்ந்து கொள்ள...
என்
நிலவுப் பெண்டாட்டி
வருகைக்காய்
காத்திருந்த வேளை தனில்
நாண் ஏற்றும் விழியில்
நாணமதை ஏற்றிக்கொண்டு
என்
கண்ணெதிரே
வந்து நின்றாய்...

இனிமையாக பேசி
என்
சோகமதை உணர்ந்த
நீ
தலை சாய மடி தந்தாய்...
என்
மனம் மகிழ
தலை கோதி ஆறுதலும் தந்தாய்...

நீ
காட்டிய பாசமதில்
தாய்மையின் சாயலை
ஒரு கணம் உணர வைத்தாய்...

என்
சோகங்களை
உன்னிடத்தில்
இறக்கி வைத்தேன்...
அத்தனையும்
நீ
சுமக்கின்றாய் எனக்காக
இனியவளே...

இத்தனை
அன்பான காதலி
நீ
என் அருகிருக்க
உன் குட்டி
இதயமதில்
அன்பான காதலனாய்
நான் என்றென்றும்
உன்னோடு துணையிருப்பேன்...!!!

நேசமுடன்.......
பிறேம்...