Thursday, August 20, 2009

மண் வாசனை

என் தாய் நிலத்தில்
நான் பெற்ற சந்தோஷங்களை
எண்ணிப்பார்க்கின்றேன்...!!!
ஏக்கத்துடன்....!

அயல் வீட்டில்த் தணல் எடுத்து
எம் வீட்டில் அடுப்பு மூட்டி
மண் பானை, சட்டி கொண்டு
மனம் மகிழச் சோறாக்கி......!
மத்தியான நடு வெயிலில்
அக்கம் பக்கம் பரிமாறி
நாமும் உண்ட காலம் எங்கே....???

வயலுக்குச் சென்ற கணவன்
திரும்பி வரும் வேளைதனில்
அயரை மீன் குழம்பு ஆக்கி
காத்திருந்து காத்திருந்து...!
குதூகலமாய் ஊட்டி
மகிழ்ந்த காலம் எங்கே....???

ஊர் வீட்டுத் திண்ணையில்ப்
பாட்டியுடன் அமர்ந்திருந்து...!
பழங் கதைகள் கேட்டு
ரசித்த காலம் எங்கே...???

கோயில் மணலில் அமர்ந்திருந்து,
கேலிக் கதைகள் பேசிப் பேசி
மணல் வீடு கட்டி நாம்
குடிபுகுந்த காலம் எங்கே...???

ஒற்றைப் பனையடியில்
நொங்கு குடித்துவிட்டு
தோழர்களாய் அமர்ந்து அங்கே,
காவோலை மேடை கட்டி
கரகாட்டம் ஆடி மகிழ்ந்த
காலம் எங்கே...???

வயல் வரம்பு தனில்
இதமான காற்றோடு
என் காதல்க் கதை பேசி
மகிழ்ந்த காலம் எங்கே...???

பட்டப் பகல் வேளை
எட்டுமூலைப் பட்டம் கட்டி,
பணிக்கர் வளவுதனில்....!!!
இராக் கொடி பறக்க விட்ட
காலம் தான் எங்கே...???

நான் தொலைத்த என்
அத்தனை சந்தோஷங்களும்
என்னில் மீள வந்து சேருமா...???

பிறேம்...

ஆறுமுகத்தாற்ர குசும்பு

அட என்ன தம்பியவ இங்க வெள்ளவத்தேக்க சுத்தித் திரியிறியள், யாழ்ப்பாணம் போகலையே...??? அங்க நல்லூர்த் திருவிழாவும் வேற நடக்குது நீங்க எல்லாம் போகனும் எண்டதுக்காக உங்கட பெரிய மாமா A9 றோட்டையெல்லாம் திறந்திட்டாராம் நீங்க கேள்விப்படலையோ....???

அட போங்கையா நீங்க.... உவங்கட கதையக் கேட்டு Busல யாழ்ப்பாணம் போக வெளிக்கிட்டா அவ்வளவும் தான் நடு றோட்டில நிக்க வேண்டியது தான் பாருங்கோ...!!!

தம்பி ஏன் நீங்க அப்பிடிச் சொல்லுறியள் ஆ....
இஞ்ச பாருங்கோ தம்பியவ... நான் சொல்லுறத கொஞ்சம் கேக்கிறியளே.... நீங்களெல்லாம் இளந்தாரிப் பெடியள் தானே அப்புறமென்ன Busல ஏறி பெடியளோட பெடியளா போய்ட்டு வாறது தானே... விழங்குதே நான் சொல்லுறது....

அது சரி ஐயா...!!!
அப்போ நீங்க ஏன் போகல...

எனக்கு வயசு போச்சுத் தம்பி... பிரயாணம் செய்யிறதெண்டால் செரியாண கஷ்டம்... அதால தான் நான் எங்கையும் போகிறேல... அப்பிடியும் வெளிக்கிட்டாலும் உடம்பு உசும்பாதப்பா... ஒரே அம்மலாயிடும் பொடியள்....

என்னையா நீங்க...
பெரிசுகளோட பெரிசா பகிடியா போய்ட்டு வாறது தானே.... ஆ....

தம்பி உங்களுக்கும் என்னோட தனகாட்டி திருப்தியா இருக்காதே...
சரி தம்பியவ எனக்கு நேரமாச்சு என்ட மனிசிய வேற கோயிலுக்கு கூட்டிக்கொண்டு போகணும்... அப்ப நான் வரட்டே....
பிறகு சந்திப்பம்....!!!

பிறேம்...

நிலவு தேவதை...!!!

என்
சலனம் கண்டமனதிலிருந்த
சோகங்கள் அத்தனையும்
என்னவளிடம்பகிர்ந்து கொள்ள...
என்நிலவுப் பெண்டாட்டிவருகைக்காய்
காத்திருந்த வேளை தனில்
நாண் ஏற்றும் விழியில்
நாணமதை ஏற்றிக்கொண்டு
என்
கண்ணெதிரேவந்து நின்றாய்...
இனிமையாக பேசி
என்
சோகமதை உணர்ந்த
நீ
தலை சாய மடி தந்தாய்...
என்
மனம் மகிழ தலை கோதி
ஆறுதலும் தந்தாய்...
நீ
காட்டிய பாசமதில்
தாய்மையின் சாயலை
ஒரு கணம் உணர வைத்தாய்...
என்
சோகங்களை உன்னிடத்தில்
இறக்கி வைத்தேன்...
அத்தனையும்
நீ
சுமக்கின்றாய் எனக்காக
இனியவளே...
இத்தனை அன்பான காதலி
நீ
என் அருகிருக்க
உன் குட்டிஇதயமதில்
அன்பான காதலனாய்
நான் என்றென்றும்
உன்னோடு துணையிருப்பேன்...!!!