Sunday, September 4, 2016

கணினி வகுப்பில் முதல் நாள்...

2000ம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் மெல்ல கணினி பாவனை வரத் தொடங்கிய காலம்.
என்னையும் குட்டி அண்ணாவையும் அம்மா கணினி படிக்க திருநெல்வேலியில் இருக்கும் கணினி ஆசிரியரிடம் சேர்ப்பித்தார், பின்னர் தான் தெரிந்தது அது எனது நண்பன் சிவராஜ்ன் அக்கா என்று...

மெல்ல மெல்ல தட்டுத்தடுமாறி கணினியை பயில தொடங்கினோம், முதல் பாடம் பெயிண்டில்(Paint) வட்டம் சதுரம் கீறி அதற்கு கலர் அடிப்பது.

அது அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை என்றாலும் அந்தக் காலத்தில் பாவனையில் இருந்த மவுசை(Mouse) கையாள்வதில் தான் வெற்றி இருந்தது ஏனெனில்  மவுசை கொஞ்சம் அசைத்தால் மவுஸ் பொயிண்டர்(Mouse Point) எங்கே போய் சொருகிக்கிடக்குதெண்டு மொனிட்டருக்குள்(Monitor) பல தேடல்கள்...

ஒருவழியாக பலத்த போராட்டத்திற்கு மத்தியில் ஓரளவு கணினி அறிவை பெற்றுக் கொண்டோம்...!

இப்படியே 2004ம் ஆண்டு வந்து விடுகிறது கொஞ்சம் மேலதிகமாக கற்றுக்கொள்ள யாழ்ப்பாணத்தில் இருந்த ஏசியன் கணினி நிறுவனத்தில்(Asian Computer Institution) போய் சேர்ந்தேன்...

அங்கு வரிசையில் அடுக்கப்பட்ட கணினியில் ஒரு கணினியில் போய் அமர்ந்தேன் எனக்கு இடது புறத்தில் ஒருவன் வந்து அமர்ந்து கொண்டான் நான் அறிய அவனுக்கு அது தான் முதல் ஓ இரண்டாவது வகுப்பாக இருக்க வேண்டும்.

கணினி ஆசிரியர் சொல்வதை செய்ய ஆரம்பித்தவன் சிறிது நேரத்தில் எனது எனது மொணிட்டரை(Monitor) உற்று பார்த்தவண்ணம் ஏதோ தேடலில் இருந்தான் பெடியன்...
இதை கவனித்த நான் என்ன என்று கேக்க அவன் அப்பாவியாய் ஒரு பதில் சொன்னான் "இல்ல மவுஸ் பொயிண்டை வலது பக்கம் இழுத்தன் அதை காணல உங்கட மொணிட்டருக்க வந்திருக்குமோன்னு தான்...!"

ஆரம்ப காலத்தில் மவுஸ் பொயிண்டரோரு நான் போராடிய நாட்கள் நினைவிற்கு வந்தது...
இவன் என்னை விட ஒருபடி மேலே போய் அடுத்தவன் மொணிட்டரில் தேடியிருக்கிறான் அம்புட்டும் தான்...!

ஆரம்ப கால கணினி வாழ்க்கை அற்புதமானது எங்களைப் போல பல அன்றைய கணினி போராளிகள் இன்று கணினியில் கைதேர்ந்தவர்களாய்...