Wednesday, November 3, 2010

காலம் மாறிப்போச்சு...!!!

கலாச்சாரம் சீரழிகிறதா...
இல்லவே இல்லை...!!!
கலாசாரம் சீரழிக்கப்படுகிறது...!
இது தான் உண்மை.
உடலுக்கேற்ற உடுப்பிருந்தும்
உடல் தெரிய உடுப்பு உடுக்கும்
பெட்டைப் பிள்ளைகளே...!!!
உங்கள் வீட்டில்
அம்மா, அப்பா வேறுலோகம்
சென்றிட்டனரோ...?
இல்லை
பார்வையிலே கோளாறோ...?
முதல் கோணல் முற்றும் கோணல் தானே
யார்தான் கண்டது...?

பெண்...!
பூவை, கோதை, மடந்தை
எவன் சொன்னான் பைத்தியக்காரன்...!
இன்று நடக்கும்
அநீதி காண்.......
பூவை, கோதை, மடந்தை
இவை கடந்தும் எல்லாமே
வாயிருந்தால்
தேம்பி தேம்பி சொல்லியழும்.

அது கிடக்க...
மின் சமிக்கையில் பஸ் ஒதுங்க
யன்னல் எங்கும் காதலர் கூட்டங்கள்
கவர்ச்சி உடையில் ஒரு சிலர்...
யான் பெற்ற இன்பம்
இவ் வையகமும் பெறுக எண்டு
காதலன் ஊர்வலம் கூட்டிச் செல்கிறானோ அவளை...?

இருந்தும்
ஒன்று, இரண்டு நியக் காதலர்களும்
இடையிடையே இருக்கத் தான் செய்கிறார்கள்.
ம்ம்ம்ம்...
கொழும்பு றொம்ப சூடு போலும்
அது தான் சூடு தணிக்கிறார்கள்
பாவம்...!

பேச்சோடு பேச்சாய்
என் பக்கம்
யன்னல் வழி எச்சில் துப்புகிறான்
ஒரு காதலன்.
ஊரே அவர்களைப் பார்த்துக்
காறித் துப்புவதை அறியாமல்...!!!