Wednesday, June 27, 2012

புரிதல் தொலைத்த வலி...!

இன்றும் பயணிக்கின்றேன்
புது புது கனவுகளைச் சுமந்தபடி
போகும் வழி நெடுக சிதறி
விழுகின்றன என் கனவுகள்
நான் செல்லும் பாதை
புல் வெளி தாண்டி
முட்கள் நிறைந்த வழிவழி
திருப்பம் காண்கிறது,
மனதின் கடிவாளத்திற்குள்
கட்டுண்டு கிடக்கிறேன் - நான்
கடலில் தத்தளிக்கும் துரும்பு போல
அவ்வப்போது கனவுகளும் வந்து போகும்
வரும் கனவுகளில் வலிப்பது
என்னவோ என் இதயமே! - உயிர் வலியது!
இனம் தெரியாத புரிதலுடன்
இரு மருங்கும் பரந்து தொடரும்
இரட்சகர்கள் கூட்டம் நடுவே
நாதியற்றவனாய் பயணிக்கின்றேன்
விடிவென்பது உனக்கில்லை
என கூவிப் பறக்கின்றது சாக்குருவி...!!!