Thursday, July 15, 2010

தனித்து விட்டேன் நான்...!!!

மெல்லிய மழைத் தூறலில்
உனக்காய்
நான் பல மணி நேரம்
காத்திருந்தேன்... நான்
நீயோ
வழமை போல் தாமதமாய்
ஆடி அசைந்து என் பக்கம்
வருகிறாய்...!

நீ வரும் நேரம் காட்டில்

அருகே தேங்கிக் கொண்டிருந்த
மழை நீரில்
நிலா முகம் பார்த்து
உன்னை ரசித்துக் கொண்டிருந்தேன்
நான்...!

உன்னில் சிறு கோபம்

எனக்கு...
கேட்கிறேன்
ஏன் இந்த தாமதம்...?
வார்த்தைகளை அனலாய்
பொழிந்தாய்...நீ!
ஒரு நிமிடம் மௌனியாய்
உன் முன் நான்...!

உன்

தவறை மறைப்பதற்காய்
என்னைக்
குற்றவாளியக்கி விட்டாய்...நீ!
இருந்தும்
பொறுத்துக் கொண்டேன்
அனைத்தையும்...

இறுதியில்

நான் நிலா ரசித்த
மழை நீரில்
எச்சில் உமிழ்ந்துவிட்டு
செல்கிறாய் நீ...
எனக்காய் ஒரு கணம்
கலக்கம் கொள்கிறது
அந்த நிலா...!

என்னை விட்டு போகாதே

என்று கத்திக் கொள்ள
வார்த்தைகள் என்னிடம் இல்லை...!

ஓர் நொடியில்

மின்னல் வெட்டுகிறது,
இடி, காற்று, மழை
என
அனைத்தும் அசுர வேகத்தில்
உன்னை என்னிடத்தே
சேர்ப்பதற்காய்...
தமக்குள்ளே போட்டி போட்டபடி...

இருந்தும்

ஏதும் அறியா ஜடம்
போல
நீ விலகிப் போய்க் கொண்டு
இருக்கிறாய்...

நானோ

மெல்ல கிழிந்து கிடக்கும்
தாவாரத்துக்குள்
சுவரோரம் ஒதுங்கி கொள்கிறேன்...!

எனக்குள்ளே

என்னை அடக்கி
முழங்கால்களுக்குள்
முகம் புதைத்த படி

ஒரு கணத்தில்

எல்லாமே
ஓய்ந்து கொள்கிறது...
எனக்கான இயற்கையின்
போராட்டங்கள்
அனைத்தும் தோல்வியில்...

என்

மனக் குமுறலை விடுத்து
எல்லாமே நிசப்தமானதாய்...!
இதமாய் வந்து
என் தலை கோதி
தன் மடி மீது உறங்கச் சொல்கிறது
அந்த காற்று...!!!

Wednesday, July 7, 2010

அட வாங்கப்பா மூஞ்சி புத்தகத்தில Barn Buddy விளையாடுவம்...!

வணக்கமுங்கோ...!

உங்க எல்லாருக்கும் மூஞ்சி புத்தகம் தெரிஞ்சிருக்கும் எண்டு நினைக்கிறன். அது தான் ஆங்கிலத்தில (Facebook)ன்னு சொல்லுவாங்களே, அத தான் சொல்லுறன். அதப் பற்றி நான் உங்க எல்லாருக்கும் விளக்கம் தர வேண்டிய அவசியம் இல்ல. ஏன்னா நீங்களும் என்ன மாதிரி எந்த நேரமும் அதில வெட்டித் தனமாய் இருந்திருப்பியள் எண்டு நினைக்கிறன். மன்னிச்சுக்கோங்கோ உண்மைய பப்லிக்ல (Public) உளறினதுக்கு...!

நான் நினைக்கிறன் இந்த மூஞ்சி புத்தகம் தான் தற்காலத்தில மிக பெரிய தொடர்பாடல் வலையமைப்புன்னு. இது உலகிற்கு அறிமுகமானதுக்கு பிறகு தான் விடுபட்ட பல நட்பின்ர, உறவுகளின்ர தொடர்புகள் எல்லாம் எங்களுக்கு மீண்டும் கிடைச்சிச்சுன்னலாம். So அதுக்காக மூஞ்சி புத்தக ஓணருக்கு ஒரு சலாம் போட்டுகிறேன்.

சரிங்க நாம இப்ப விசயத்துக்க வருவம்...விசயம் இது தான்... இந்த மூஞ்சி புத்தகத்த பொறுத்த வரையில பல தரப்பட்ட பசிலிட்டி (Facilities) உள்ளடங்கப்பட்டிருக்கு, அத விட வித்தியாசமான விளையாட்டுக்களும் சேர்த்திருக்குறானுக. ஆனாலும் இந்த மூஞ்சிப் புத்தகம் உலகலாவிய ரீதியில றீச் ஆகினது எப்ப எண்ணு தெரியுமா. இந்த Barn Buddy எண்ட விளையாட்டு வந்ததுக்கு அப்புறமாத் தான். ஏன்னா அப்பிடி ஒரு சுவாரசியமான விளையாட்டு தான் இந்த Barn Buddy. நீங்களும் விளையாடியிருப்பியள் எண்டு நினைக்குறன்.

இந்த Barn Buddy வந்ததுக்கு அப்புறமா தான் பல பேர் மூஞ்சி புத்தக எக்கவுண்ட்(Account) திறந்துகிட்டாங்க. அதிலும் குறிப்பா ஏற்கனவே Account வைச்சிருக்கிறாவர் கூட கள்ளப் பெயரோட புதுசா Account எல்லாம் உருவாக்கி வச்சுக்கிட்டாங்க! ஏன்னா அந்த விளையாட்டு அப்பிடி Interestingன்னா பாத்துக்கோங்களேன்.

நானும் ஒரு காலத்தில மும்முரமா Barn Buddy விளையாடினவன் தான். கனக்க லெவல்((Levels) தாண்டினன் நானும். எங்க வீட்டில மொத்தம் இப்ப நாலு பொடியள் ஒரு பொட்டைச்சி இருக்கிறம். இவனுகளுக்கே நான் தான் Barn Buddy காட்டிக்குடுத்தன் but இப்ப இவனுகள் இம்சை தாங்க முடியல எப்ப பாரு தோட்டம் தான். Barn Buddyய சொன்னன். இவங்களாவது தோட்டம் செய்யிறதாவது என்னையும் சேர்த்துத் தான் சொல்லுறன். அப்ப பாருங்களன்.

அப்போ நான் விளையாடின காலத்தில Barn Buddyல நாய் ஒண்டு வாங்கிறதுக்குத் தான் போட்டி போட்டுக்கிட்டாங்க. அத வாங்கினா போதும் மற்ற தோட்டக்காரன் வந்து ஆட்டையப் போட முடியாது. ஆனா அப்பிடி இருந்தும் கடி வாங்கியே ஆட்டைய போடுறவங்க நம்ம பசங்க. அடுத்தவன் தோட்டத்தில ஆட்டையப் போடுறது தான் எவ்வளவு சுகம் நிஜத்திலும் சரி கணணியிலும் சரி. அதுவும் பட்டப் பகலிலேயே!களவாணிப் பசங்க.

அப்பிடியே சுவாரசியமா விளையாடிக்கிட்டு வந்த நான் கல்லூரி Exam எண்ட துன்பத்தால அத தற்காலிகமா நிறுத்திக்க வேண்டியதாகிற்று.என்ன செய்யிறது செரியான மன வருத்தத்தோட Barn Buddy இருந்து விலகிக்கிட்டன் ஆனாலும் எண்ட வீட்டில இருக்கிற களவாணிப் பசங்க இன்னும் லொள்ளுப் பண்ணிக்கிட்டே தான் இருக்கிறாங்க.

இத விடுங்க நாங்க தான் இத பண்ணிக்கிறம் ஏதோ பொழுது போக்கா. எண்ட கல்லூரிக் கதைய கேளுங்கோவன். எங்களுக்கு கல்லூரி தொடங்கிறது 8.30 மணிக்கு. ஆனா பொடியள் எல்லாம் timeக்கு வந்திடுவாங்கள். வாத்திமார் தான் timeக்கு வர மாட்டாங்க ஏன்னு பாத்தா அவங்க அவங்களுக்காக ஒதுக்கின கபினட்ல இருந்து Barn Buddy விளையாடிக்கிட்டு இருக்கிறாங்க. இந்த Barn Buddy வந்ததுக்கு அப்புறாமா நாமெல்லாம் றொம்ப சோம்பறிகளாகிட்டம்னா அது உண்மை தானுங்கோ.

இத மாதிரி எத்தினையோ இருக்குது சொல்லிக்கிட்டு போனா உங்களுக்கே அலுப்புத் தட்டிடும். ஏங்க வீட்டுக்கு முன்னாடி வளர்ற பூக்கண்டுக்கு ஒரு சொட்டுத் தண்ணீயும் ஊத்திக்க மாட்டானுகள். Barn Buddyல விழுந்து விழுந்து தண்ணிய ஊத்துறாங்கள். இதில என்ன நகைச்சுவைன்னா அடுத்தவன் தோட்டத்துக்கும் சேர்த்து ஊத்துறானுகள். பூச்சிக்கு மருந்து அடிக்கிறது, காணி வாங்கி விடுறது. (ஆமா சொந்தமா வியர்வை சிந்தி வாங்கினதாக்கம்) எண்ணு ஏகப்பட்ட வேலைய பண்ணுறானுக. நடுச்சாமத்தில (Alarm) வைச்சு வேற எழும்பி நடத்துறானுகள். அப்ப பாருங்களன் நிலமைய.

என்ன தான் இருந்தாலும் மூஞ்சி புத்தகம் இன்னும் முன்ணணில வெற்றி நடை போட்டுக்கிட்டு தானுங்கோ இருக்குது. ஏன்னா எங்கள மாதிரி வெட்டிப் பசங்க இருக்கும் வரையில Barn Buddyயும் வளரும் மூஞ்சிப் புத்தகமும் வளரும்.

அட வாங்கப்பா இன்னுமொரு தடவ தோட்டம் செய்வம். நானும் மற்றவன் தோட்டத்தில ஆட்டையப் போட்டு கன காலமாச்சு சகோதரங்களா. என்ன நீங்க றெடியோ...?

அப்புறமென்ன ஆரம்பிக்க வேண்டியது தானே....!!!

அண்ணேமார் இந்த பதிவு சொட்டு அலட்டலாய் இருந்தா மன்னிச்சுக்கோங்க...!

Tuesday, July 6, 2010

வெள்ளவத்தைக் கடற்கரையும் வேண்டாத வேலைகளும்...!!!

போன சில வாரம் எனக்கு செரியான அலைச்சலா போச்சு. அதால இந்த பதிவுப் பக்கம் சரியா வர முடியல. அதுக்காக மன்னிச்சுக்கோங்கோ...!!! அது எல்லாத்துக்கும் சேத்து இண்டைக்கு ஒரு இசக்கு பிசக்கான விசயத்தோட வந்திருக்கிறன். இத யாரிட்டையும் சொல்லேலைன்னா எனக்கு தூக்கமே வராது பாருங்கோ...!!!

இத பாத்துப்புட்டு நீங்களே சொல்லுங்க ஞாயத்த சரியே...!

கடக்கரைக்கு எதுக்குங்க நீங்க போறனியள். அட சும்மா சொல்லுங்கப்பா. எங்களுக்க ஏன் இந்த ஒழிவு மறைவெல்லாம்... ம்ம் சரி
நானே பொதுவா சொல்லிக்கிறன் . நாமல்லாம் கடக்கரைக்கு பெரும்பாலும் காத்து வாங்க தானே போறது வழக்கம். அது தவிர பல பேருக்குக்கு பல தரப்பட்ட பிரச்சினைகள் இருக்கலாம் so அதையெல்லாம் தணிச்சுக்கிறதுக்காக அவங்க கடக்கரைக்கு போய்க்குவாங்க. அப்பிடி இல்லாக் காட்டிலும் என்ன மாதிரி வயசுப் பையல்கள் ஒரு பொண்ண கூட்டிக்கிட்டு (அட நான் சொல்லுறாது அவன் காதலியை) அப்பிடியே ஒரு றவுண்ட் வருவாங்க சரி தானே.

அட நானும் அந்த ரகம் தாங்க. அதாவது நான் என்ன சொல்ல வாறன் எண்டா நானும் ஒரு காலத்தில அடிக்கடி கடக்கரைப் பக்கம் போனவன் தான் காத்து வாங்க மட்டும் தான் காதல் வாங்க இல்ல தப்பா நினைச்சிடாதீங்க. அப்போ நான் போறப்போ எல்லாம் அன்பான பெரிய மனிசர பாத்தன், அழகான காதல் ஜோடிகளைப் பாத்தன், அவங்க குறும்புத்தனங்களையும் ரசிச்சன். அதுக்கப்புறமா என்னோட படிப்பு பிஸில கடக்கரையையும் மறந்தே போனன். இதெல்லாம் நடந்திச்சு எப்போ...? அது ஒரு காலம்.

இப்பிடியே கொஞ்ச காலம் ஓடி ஓய... அண்மையில அதே கடக்கரைக்கு போறதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிசு அதுவும் என் நண்பன் கூட. அந்த கடக்கரை விஜயம் எங்க ரெண்டு பேரையும் வியக்க வைத்த ஒரு சம்பவம் எண்டே சொல்லலாம். பஸ்ல இருந்து இறங்கி கடக்கரை றோட்டால நடக்கிறபோவே ஏதோதோ மாறுதல்களை எங்களால் உணர முடிந்தது. நடந்து சென்ற பாதை, எங்கள கடந்து போன மனிதர்கள், எண்டு எல்லாமே வித்தியாசமான நகர்வுகள், இப்பிடியே கடக்கரைக்குக் கிட்ட போய்ப் பாத்தா என்ன கொடுமைப்பா...!

உங்கட அவசரம் விளங்குது...!
இனித் தான் விசயத்தையே சொல்ல போறன் கேளுங்கோ... கரையோரம் எங்கும் அடர்ந்து படர்ந்த புதர்கள், சிறு பற்றைகள், அது தவிர இப்போ தான் கன வான், பஸ் எல்லாம் கடக்கரையில அடுக்கி விட்டுக்கிடக்கே சங்கக் கடையில சாமான் வாங்க ஆக்கள் கியூல நிக்கிற மாதிரி. சரி இது எல்லாத்தையும் கடந்து கரைக்கு நடந்து போனம். முதல் ரயில் தண்டவாளத்த கடக்கிறபோ வலப்பக்க புதருக்க இருந்து ச்சு... ச்சு... எண்டு சத்தம் கேட்டிச்சு அப்பிடியே திரும்பிப் பாத்தா அதுக்குள்ள ரெண்டு இருந்து நெழிஞ்சிதுகள்.

நண்பன் சொன்னான் ஆகா ஆரம்பமே அசத்தலா இருக்குதே அப்போ உள்ள போனா சொல்லவா வேணும் என்ற படியே கரையில அலைகள் தளுவ பேசிக்கிட்டம். அதில ஒரு சுவாரசியமான விஷயம் என்ன எண்டா எண்ட நண்பனுக்கு தண்ணியக் கண்டா சூ.. சூ.. வந்திடும். so அவன் என்கிட்ட கையால சிக்னல் காட்டிற்ரு ஒரு ஓரமா போனான். போனவன் போன வரத்திலே திரும்பி வந்து டேய்... டேய்... இங்க வாடா நான் சூ போக போன புதருக்க ரெண்டு பேர் இருக்கிறாங்கடா எண்டான். அவன் சொன்னத கேட்டு நானும் பாத்தேனா அதுக்கையும் ரெண்டு குழைஞ்சுக்கிட்டே...

ம்ம் அதுக்கப்புறமா தான் தேடல் தொடங்கிச்சு திரும்புற பக்கமெல்லாம் ரெண்டு ரெண்டா. அதில இருந்த ஜோடிகளில காதலர்கள் எண்டா விரல் விட்டு எணிக்கலாம் எண்டா பாருங்களன். காதலர்களைத் தேடிப்பாத்தா காமுகர்கள் தான் அதிகம் இருந்தாங்க. அவரவர் றொம்ப பிஸியான வேலையில். சரி நம்ம வயசுப் பசங்க தான் ஏதோ பண்ணிக்கிறாங்க என்னா எங்க வயசு அப்பிடி.
இதில என்ன காமடின்னா! சும்மா ஒரு அறுபது அறுபத்தஞ்சு வயசிருக்கும் ஒரு கிளடு அதுக்கு பக்கத்தில ஒரு அதுக்கும் அறுபது எண்டே மதிச்சுக்கலாம். அதுகள் ரெண்டும் நாங்க உகாந்திருந்த கல்லுக்கு முன்னால இருந்து பண்ணின கொடுமை தாங்க முடியல.


அப்ப தான் நண்பன் சொன்னான் நாங்கெல்லாம் சுத்த வேஸ்ட்டா. வாடா இந்த கடலுக்க போய் குதிப்பம்டா எண்டான். ஏன்னா கொடுமைன்னா கொடுமை அப்பிடி ஒரு கொடுமை... முடியலடா சாமி. இதுக்கு மேலையும் அங்க இருந்திருந்தா எங்களுக்கும் அவங்க லீலைகளை புளூருத்ல ஏத்தியிருப்பாங்க.

எல்லாமே மாறுதலாய், எங்கும் புது மனிதர்களாய், காதலர் காதல், பசுமை எல்லாமே கடலேடு கலக்கப்பட்டதாய் ஒரு கடல்க்கரையில் நானும் ஒருவனாய்....!!!

ஆவலாய் நான் இதமான காற்று வாங்க போன கடற்கரை ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாய் கரைகளைத் தளுவிக்கொண்டுடிருந்தது. பாவம் கடல் அன்னை எவ்வளவு காலம் தான் இவர்கள் கொடுமைகளைப் பார்த்துக் கொண்டிருப்பாள்.

காதலர்கள் அலைகள் தீண்ட கைகள் கோர்த்து நடந்து செல்ல நான் பார்த்து ரசித்த என் முன்னைய கடற்கரை மூழ்கடிக்கப் பட்டுவிட்டது இந்த காமுகர்களால்.