Thursday, July 15, 2010

தனித்து விட்டேன் நான்...!!!

மெல்லிய மழைத் தூறலில்
உனக்காய்
நான் பல மணி நேரம்
காத்திருந்தேன்... நான்
நீயோ
வழமை போல் தாமதமாய்
ஆடி அசைந்து என் பக்கம்
வருகிறாய்...!

நீ வரும் நேரம் காட்டில்

அருகே தேங்கிக் கொண்டிருந்த
மழை நீரில்
நிலா முகம் பார்த்து
உன்னை ரசித்துக் கொண்டிருந்தேன்
நான்...!

உன்னில் சிறு கோபம்

எனக்கு...
கேட்கிறேன்
ஏன் இந்த தாமதம்...?
வார்த்தைகளை அனலாய்
பொழிந்தாய்...நீ!
ஒரு நிமிடம் மௌனியாய்
உன் முன் நான்...!

உன்

தவறை மறைப்பதற்காய்
என்னைக்
குற்றவாளியக்கி விட்டாய்...நீ!
இருந்தும்
பொறுத்துக் கொண்டேன்
அனைத்தையும்...

இறுதியில்

நான் நிலா ரசித்த
மழை நீரில்
எச்சில் உமிழ்ந்துவிட்டு
செல்கிறாய் நீ...
எனக்காய் ஒரு கணம்
கலக்கம் கொள்கிறது
அந்த நிலா...!

என்னை விட்டு போகாதே

என்று கத்திக் கொள்ள
வார்த்தைகள் என்னிடம் இல்லை...!

ஓர் நொடியில்

மின்னல் வெட்டுகிறது,
இடி, காற்று, மழை
என
அனைத்தும் அசுர வேகத்தில்
உன்னை என்னிடத்தே
சேர்ப்பதற்காய்...
தமக்குள்ளே போட்டி போட்டபடி...

இருந்தும்

ஏதும் அறியா ஜடம்
போல
நீ விலகிப் போய்க் கொண்டு
இருக்கிறாய்...

நானோ

மெல்ல கிழிந்து கிடக்கும்
தாவாரத்துக்குள்
சுவரோரம் ஒதுங்கி கொள்கிறேன்...!

எனக்குள்ளே

என்னை அடக்கி
முழங்கால்களுக்குள்
முகம் புதைத்த படி

ஒரு கணத்தில்

எல்லாமே
ஓய்ந்து கொள்கிறது...
எனக்கான இயற்கையின்
போராட்டங்கள்
அனைத்தும் தோல்வியில்...

என்

மனக் குமுறலை விடுத்து
எல்லாமே நிசப்தமானதாய்...!
இதமாய் வந்து
என் தலை கோதி
தன் மடி மீது உறங்கச் சொல்கிறது
அந்த காற்று...!!!