Sunday, April 4, 2010

என் யாழ் மண்...!!!

வாழ்ந்து கொஞ்சக் காலம் என்றாலும்
நெஞ்சில் வாழும்
புனித தேசம் தான்...
என் யாழ் தேசம் தான்........

அழகிய இழகிய நெஞ்சங்கள்......
இந்து, கிறிஸ்தவமும் உண்டு தான்..........

நகரத்தில் நல்லூர் எனும்
கிராமத்தில் மக்கள்
நளினம் நிறைந்த தேசம் தான்........

நகரத்து சினிமா தமிழை விட மோசம்......
கிராமத்து கலையெல்லாம் அருமை தான்.....

பல்கலைக் கழகங்கள் பெயருக்கேற்ப
பல்கலைக் கோயில்கள் தான்.....
பெருமனம் கொண்ட பேராசிரியர்கள்
யாழ் பெற்ற பெரும் பேறு தான்.....

தேசத்தின் ஜனாதிபதிக்கு மாளிகை......
அவர்
தேசியமும் வியப்புத்தான்........!
ஆனால்
அங்கும் கொலைகள், கொள்ளைகள்......
எங்கேயும் அவலம் தான்..........

அரசியல் புரட்சி அலைகள் எங்கேயும்
ஆழமதாய் கேட்கும்.........
சில
மாவட்டங்கள் சுதந்திர நாடாய்(...)
தனித்திடப் போராடும்............!
என்னதான் இருந்தாலும்
இங்கும்
மயக்கம் மேலையில் தான்...........

Hi...!
உங்கள் தேசத்திலும்
பெருங்கோயில்கள் உண்டா....?
என் நல்லூர்
தேசத்தை வியப்பதுவும்
இதிலே தான்.......!

பஞ்சகுடியேற்றத்தின் பிடிகளுக்குள்
நன்கு நசுக்குகின்றார்கள்.........
நம்மைப் போலவே
புறத்தியர்களும் கூலிகளய்
நாடு நாடாய்
அலைந்து திரிகிறார்கள்......

அன்னியர் பிடியினுள்
அகப்பட்டுக் கொண்டாலும்
நலமாக வாழத்தான்
நல்லூரானை நினைப்பார்கள்........

நசுக்கப்பட்டு இருந்தாலும்
நமது தமிழை நினைப்பார்கள்.......
சிலர்
நம்மை நல்லூரான் என்று...
நகைத்துமே
தம்மை மறக்கிறார்கள்......!

இந்த நிலைமை
எரிச்சலாய் இருந்தாலும்
இனிய மனிதர்கள் தான்..........
என்றும்
சந்தோஷமாய் சிரித்து உழைப்பதில்..........
சந்தர்ப்பவாதிகள் தான்.........

மதங்களின் கொள்கைகளை
மனதினில் கொண்டு.............
மகிழ்ச்சியாய் வாழ்வதில்
இவர்களுக்கு ஈடு எவருமில்லை...........

வாழ்ந்து கொஞ்சக் காலம்
என்றாலும்
வாழும் தேசம் தான்.......
என்
நல்லூர் தேசம் தான்..............!