Monday, May 28, 2012

தெருவோர பிச்சை...

ஒவர்நாளும் காலம வேலைக்கு போகேக்க இல்லாட்டி வேலையால வரேக்க எப்பிடியும் ஒரு பிச்சக்காரன கண்டுடுவன்.... அவங்கள்ல கனக்க விதம் இருக்கினும், பஸ்சுக்க பிச்சையெடுக்கிறது, றோட்ல பிச்சஎடுக்கிறது, வீடு வீடா பிச்சஎடுக்கிறது எண்டு கனக்க விதம்! ஆனா பஸ்சிலயோ ரெயின்லயோ பாட்டுப் பாடி பிச்சைஎடுக்கிறவங்கள் எண்ணிக்க குறைவு எண்டாலும் அவங்களுக்கு ஏலுமோ ஏலாதோ எண்டத அடுத்த கட்டம் விட்டு அவையளின்ர முயற்சிய பாராட்டவேணும். இல்ல உண்மையா ஏதும் நொண்டிச்சாட்டு சொல்லாம தங்களால முடிஞ்சத பண்ணி காசு வாங்கிற தெருவோர விரதங்கள பஸ்லையோ ரெயின்லையோ ஏத்திறது சரி எண்டு தான் நான் சொல்லுவன்...

இண்டயான் அனுபவத்த சொல்லுறன்..

நான் வழக்கமா வேலைக்கு போற நேரத்தில பஸ் செரியான சனம் உந்த புட்போட்ல தொங்கிக்கொண்டு தான் போனவையள் எல்லாரும், அதோட மழ வேற! ஏற்கனவே காச்சல் குணமா இருந்தது சோ நான் கொஞ்சம் சுணக்கமா தான் பஸ் பிடிச்சுக்கொண்டு போனனான் அங்க போனா 8.30க்கு செரியா தெகிவளை ஸ்டேசனுக்கு ரெயின் வந்து நிண்டது, நான் அவசர அவசரமா ரிக்க்ட்ட எடுத்துக்கொண்டு ஓடினா பெரிசா சனம் இருக்கேல்ல ரெய்னுக்க...

நல்ல ஆசுவாசமா இருந்து போனன். அப்ப எங்கையோ தூரத்தில ஆரோ பாட்டுப்படிக்கிற சத்தம் கேட்டது... நான் நினைச்சன் சில வேள காலி மாத்தறைல இருந்து வாறவங்கள் அலுப்புத் தெரியாம இருக்க பாட்டுபாடுறவங்கள், அவங்கள் தான் பாடுறாங்களாக்கம் எண்டு அத கேட்டுக்கொண்டே இருந்தன்... சும்மா சொல்ல கூடாது பாட்டு நல்லா தான் இருந்தது.. கொஞ்சத்தில பாட்டு பெரிசா கேக்குதேண்டு பாத்தா உது யாரோ ரெண்டு பேர் மேளமும் அடிச்சு பாட்டும் பாடிக்கொண்டு வந்தவே... அவையள் ரெண்டு பேருக்கும் செரியான வயசு தான் ஒருத்தருக்கு ஒரு கால் இல்ல, மற்றவருக்கு செரியான வயசு, ஆனா கிழவன் சும்மா சொல்ல கூடாது மவுத்தோகன வாய்ல வைச்சது தான் தாமதம் என்ன ஒரு இசை மழையா!


இடைக்க இடைக்க பாட்டும் வேற பாடின படி, ஒரு இன்னிசக்கச்சேரியே போச்சு ரெய்னுக்க, அவையள் எடுக்கிறது பிச்சையா இருந்தாலும் நல்ல ஒரு இசைய எங்களுக்காக குடுத்து தான் காசு வாங்கினும்...

உத நான் ஏன் சொல்ல வாறன் எண்டா, பாவம் அவையள் இவ்வளவு கஸ்டத்துக்கையும் பாட்டும் பாடி சம்பாதிக்க நினைக்கேக்க நாங்க தானே அவையளுக்கு ஏதோ எங்களால முடிஞ்சத குடுக்கோணும், இலையெண்டுறியளே...? குறைஞ்சது ஒர்வா தனும் போடலாம் தானே! நான் பாத்தன் மனுசன் நல்ல வாசிக்கிது, பாடுது , மேளத்துக்கெ ஏற்ற மாரி நம்ம சில்க் மாரி இடுப்ப வழைச்சு வழைச்சு ஆடுது...

அவர்ட வயசுக்கு மீறின ஆட்டத்துக்காவது காசு குடுக்கலாம் தானே!

நான் ஒண்டு கவனிச்சிருக்கிறன் அது பஸ்சிலயும் சரி ரெயின்லையும் சரி ஆராச்சும் பாடேக்க அத கேக்கிறியள் பாக்கிறியள் எல்லாம் முடிஞ்சதுக்கு பிறகு அவர் பிச்சை எடுத்துக்கொண்டு வாறார் எண்டோன காத சொறிவியள், ரெலிபோன தூக்கி காதுக்க வைப்பியள், பக்கத்தில இருக்கிறவரோட கத குடுப்பியள் ஏன் நித்திரையே கொள்ளாம நித்திர மாரி கிடப்பியள்...

ஏன் இந்த அற்ப நாடகம்....? நீங்க மற்றவைக்கு உதவுறதால உங்கட வயசு குறைஞ்சிடுமா...? இல்ல என்ன காரணத்துக்காக பிச்சை போட மறுக்குறீங்க...? அத தான் விடுவம் பிச்சக்காரன் என்ன நீங்க போடுற காச பாத்து உது காணாது இன்னும் கொஞ்சம் போட்டு தா எண்டா கேக்கிறான்...?
ஒவரு நாளும் தன்ர வயித்துப் பசிக்கா பிச்சை கேக்கிற பிச்சைக்காரர்களுக்கு உதவி செய்ங்க... நீங்க வாழ்கைல நல்லா இருப்பீங்க....

அதுக்காக எல்லா பிச்சைகாரங்களுக்கும் குடுங்க எண்டு சொல்ல வரேல, எனக்கு தெரியும் நான் எத்தினையோ பிச்சக்காரங்கள் கஸ்டப்படுறமாரி கத எல்லாம் சொல்லுவாங்கள் ஆனா காச நல்லா சேத்திட்டு நேர நவீன தவறணை (பார்)க்கு தான் போவாங்கள், குடிச்சு வெறிச்சு அதே றோட்டில விழுந்தும் கிடப்பாங்கள்... அவர்களை நீங்க இனங்கண்டா பாத்தும் பாராம இருங்க, உண்மையாவே பசிக்காக சாப்பாடு தேடி தன்னால எது முடிதோ அத பண்ணி உழைப்பு கேக்கிற பிச்சைக்காரங்களுக்கு சிறு உதவியாவது செய்ங்க...!

உது நான் ஆர்ட மனசையும் காயப்படுத்த சொல்லேல மனசில பட்டது சொல்லிட்டன்... தப்பு இருந்த மன்னிச்சுக்கொள்ளுங்க.... :)