Saturday, September 12, 2009

உனது விழிகளுக்குள் நான்

உன்னைப் பார்த்த நாள் முதலாய்
நான் நானாக இல்லை...!
உனது விழிகளுக்குள்
எனது விம்பம் தோன்றிய போது
என் மனதில்
ஆயிரம்பட்டாம் பூச்சிகள்
சிறகடித்துப் பறந்தன...!

என் மனதில் உன் விம்பம்
சஹானாவாக வீற்றிருந்தது..!
நான் இரவில் தூங்கும் போது
உன் எண்ணம் என்னை
பல பல வண்ணக் கனவுகளோடு
ஆக்கிரமித்துக் கொள்கின்றன...!

என் தூக்கம் கலைந்ததும்
நான் சுனாமியில் அகப்பட்ட
ஓடம் போல எங்கெங்கோ
உன்னை நினைத்து
அலைந்து திரிகின்றேன்...
மீண்டும் எனக்கு
தூக்கம் வரும் வரை....!!!