Friday, November 19, 2010

அப்ப பாருங்களன் இவேன்ர செயற்பாட்ட...!!!

அடேங்கப்பா...!!!
என்னமா நாடு முன்னேறிக்கிட்டு போகுதுடோய். இப்பிடியொரு வேகத்த இதுக்கு முன்னாடி பாத்ததே இல்ல. அப்பிடியொரு வளர்ச்சி. தேங்கிக் கிடந்த குப்பை எல்லாத்தையும் கூட்டி அள்ளுறானுக... வாய்க்கால் எல்லாத்தையும் துப்பரவாக்குறானுக... றோட்டில இருக்கிற பிச்சக்காறங்கள கூட அடிச்சு விரட்டுறாணுக...!

ஏதோ நல்லா செய்யிறாங்க தான் ஆனாலும் இதெல்லாம் விசயம்மில்ல, நான் சொல்ல வந்ததே வேற... அபிவிருத்தி வேலையெல்லாம் சும்மா பிச்சல் வே
கத்தில போய்க்கிட்டு இருக்கு. துரித வளர்ச்சிக்கு உதாரணம் இலங்கை என்னு சொல்லிக்கலாமே...!

போன வருசம் இங்க வந்திட்டு போனவன் எல்லாம் அதே இடத்துக்கு இப்ப வந்து எங்க நான் வந்து போன இடம் என்னு கேக்கிற அளவுக்கு எல்லாமே மாறிக்கிட்டு வருது. 24 மணி நேர பொலிஸ் சேவையாம், றோட்டில கண்ட படி குப்பை போடேலாதாம், ஏன் எங்கட பாரம்பரிய தொழில் அதுதாங்க றோட்டில காறி துப்புறது. அதக்கூட அப்பப்போ பிடிக்கிறாங்களாம். தண்ணியே தேங்காத மாதிரி வடிகாலமைப்பு, மின்வெட்டே இல்லாத மாநகரம், முக்கியமா வீதி போக்குவரத்தெல்லாம் சும்மா அமர்க்களமா கண்காணிக்கிறாங்களாம்.... இப்பிடியே சொல்லிக்கிட்டே போனா எவ்வளத்த தான் நானும் சொல்லுறது.

எல்லாம் நல்லா தான் இருந்தாலும் சில விசயத்தில நம்மாக்கள் கொஞ்சம் சறுகத் தான் செய்யிறாங்கப்பா...! உங்களுக்கு விசயம் தெரியுமே இப்பெல்லாம் கொழும்பு றோட்டெல்லாம் “காப்பெட்” தான் தெரியுமோ...? அந்த மாதிரி இருக்குது... ஒரு சான் உயத்தி ஒரே சீரா றோட்டுப் போடுறாங்க பரவலா எல்லா இடத்துக்கும். இப்ப கிட்டத்தில கூட “இராஜகிரிய” பக்கம் வலு மும்முரமா போடுறாங்க...!

ஒன்னு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி பாத்தன் மாலபேல இருந்து இராஜகிரிய வரைக்கும் றோட்டெண்டா றோட்டு அந்த மாதிரி றோட்டு போட்டிருந்தாங்க... பாக்கிறத்துக்கு ஆசையாவும் இருந்திச்சு. அதையே போன கிழமை அந்த றோட்டில போனபோ பாத்தன், நீர்ப்பாசன திணைக்களத்து ஆக்கள் வரிசையா றோட் நீளத்துக்கும் கிண்டிக்கிட்டு வாறாங்க... ஏன்னா பைப்ல வெடிப்பாம் புது பைப் போட்டுக்கனுமாம். அப்ப பாருங்களன் நிலமைய... இவ்வளவு கஷ்டப்பட்டு றோட்ட போட்டிட்டு பைப் போட்டுக்கிறதுக்காக கிண்டிக்கிறாங்களாம்.


அங்க மட்டும் இப்பிடி நடக்கிறதில்ல பொதுவாவே எல்லா இடத்திலும் இப்பிடி தான் நடக்குது. இவங்கள் இப்ப கிண்டிற்ரு போக பிறகு அத மேவி விட, அடுத்த மாசம் மின்சார பொறியியல் திணைக்களம் வந்து நடுவால றோட்ட கிண்டி வயருகள தாக்க, அமைப்பா இருந்த றோட்டு மேடு பள்ளமாக, அடுத்தடுத்த நாள் மழை சும்மா தூறினோனையே தண்ணீ அதுக்க நிக்க, அடுத்த நாள் பேப்பரில வரும் ”நாடு பூராவும் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றனர்” வீதிகளில் எல்லாம் வெள்ள நீர் தேங்கி நிற்பதால் டெங்கு பரவும் அபாயம் நிலவுவதாக சுகாதாரத் தினைக்களம் தெருவித்திருக்கிறது. இப்பிடி ஒரு அறிக்கை வரும்.
இதுக்கு யார் மேல குற்றம் சொல்லுறது. சத்தியமா எனக்கு தெரியல...!

எல்லாத்தையும் நல்லாச் செய்யிறவே இதுகளையும் கொஞ்சம் கவனிச்சா சரி...!
வடிவேலு சொல்லுற மாதிரி ”எந்தவொரு விசயத்தையும் பிளான் பண்ணிப் பண்ணணும், பிளான் பண்ணாம பண்ணினா இப்பிடி தான்...!!!” ஓக்கே....!!!

இதெல்லாம் வேடிக்கையா இருந்தாலும் நிச்சயமாக சிந்திக்க வேண்டிய விடயங்கள்.
இப்ப போறன் திரும்பி வரேக்க வேற குதர்க்கத்தோட வாறன் சரியே...!!!
பாய்...!