Wednesday, June 13, 2012

உனக்குள் நான்!

என்
மனமெனும் ஓடையில்
இன்றும் அழகாய்
நீந்திக்கொண்டிருக்கின்றன 
அழகிய நீ எனும்
கவிதைகள்...

என் மௌன மொழிகளுக்கு
இதயத்தில் இருந்தபடியே
அழகாய் பதில் தந்து கொண்டிருக்கிறாய்
நீ!

எம் கடந்தகாலம் - பற்றி
இதயத்திற்கு மெல்ல
தந்தியனுப்பிக் கொண்டிருக்கின்றது
என் நரம்புகள்...

உன் நினைவுகளுடே
நானும் மெல்ல உனக்குள் 
கடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன்
என்னையே அறியாமல்...