Tuesday, November 17, 2009

உன் வருகைக்காய்...

உன்னில் நான் ஏன்
அன்பு கொண்டேன்?
அடிக்கடி என் மனதை
விடைதேட வினாவுகிறேன்
இன்றுவரை பதில் இல்லை

ஆதலால் அன்பே
நான் உன்னை விட்டு
நீண்ட தூரம் போக
எத்தணித்து அதை

உன்னிடம் தெரிவிக்க

"எப்போ மீண்டும் வருவாய் என
அப்பாவியாய் உன் மனம் வினாவ
நீயோ வாய் திறந்து பேசாமல்
மெளனித்திருப்பது ஏனோ

உன் மெளனம் எனை
இன்று சாகடிப்பது போல்
என் மரணமும் உனை
ஓர்நாள் சாகடிக்கும்

அதுநாள்வரை

எனைப் பார்க்கத் துடிக்கும்
உன் விழிகளிடமிருந்து
விடைபெற்றுச் செல்கின்றேன்

உன் மனம் என்னோடு
பேச முயன்றால்
உன் நினைவோடு இருக்கும்
என் மனசுக்கு அது புரியும்

உன் வாய்மொழி பேச்சால்

என் மீதான காதலை
என்றொருநாள் உதிர்ப்பாயோ
அன்று எனக்கு
சொல்லி அனுப்பு
அதை செவிமெடுக்க
உன்னருகில் நான் இருப்பேன்.

அதுவரையில்
உனைப் பிரிந்து
உன் மேலான காதலினால்
உருகிப்போயிருக்கும்
உன்னுயிர் காதலன்...!