Tuesday, July 6, 2010

வெள்ளவத்தைக் கடற்கரையும் வேண்டாத வேலைகளும்...!!!

போன சில வாரம் எனக்கு செரியான அலைச்சலா போச்சு. அதால இந்த பதிவுப் பக்கம் சரியா வர முடியல. அதுக்காக மன்னிச்சுக்கோங்கோ...!!! அது எல்லாத்துக்கும் சேத்து இண்டைக்கு ஒரு இசக்கு பிசக்கான விசயத்தோட வந்திருக்கிறன். இத யாரிட்டையும் சொல்லேலைன்னா எனக்கு தூக்கமே வராது பாருங்கோ...!!!

இத பாத்துப்புட்டு நீங்களே சொல்லுங்க ஞாயத்த சரியே...!

கடக்கரைக்கு எதுக்குங்க நீங்க போறனியள். அட சும்மா சொல்லுங்கப்பா. எங்களுக்க ஏன் இந்த ஒழிவு மறைவெல்லாம்... ம்ம் சரி
நானே பொதுவா சொல்லிக்கிறன் . நாமல்லாம் கடக்கரைக்கு பெரும்பாலும் காத்து வாங்க தானே போறது வழக்கம். அது தவிர பல பேருக்குக்கு பல தரப்பட்ட பிரச்சினைகள் இருக்கலாம் so அதையெல்லாம் தணிச்சுக்கிறதுக்காக அவங்க கடக்கரைக்கு போய்க்குவாங்க. அப்பிடி இல்லாக் காட்டிலும் என்ன மாதிரி வயசுப் பையல்கள் ஒரு பொண்ண கூட்டிக்கிட்டு (அட நான் சொல்லுறாது அவன் காதலியை) அப்பிடியே ஒரு றவுண்ட் வருவாங்க சரி தானே.

அட நானும் அந்த ரகம் தாங்க. அதாவது நான் என்ன சொல்ல வாறன் எண்டா நானும் ஒரு காலத்தில அடிக்கடி கடக்கரைப் பக்கம் போனவன் தான் காத்து வாங்க மட்டும் தான் காதல் வாங்க இல்ல தப்பா நினைச்சிடாதீங்க. அப்போ நான் போறப்போ எல்லாம் அன்பான பெரிய மனிசர பாத்தன், அழகான காதல் ஜோடிகளைப் பாத்தன், அவங்க குறும்புத்தனங்களையும் ரசிச்சன். அதுக்கப்புறமா என்னோட படிப்பு பிஸில கடக்கரையையும் மறந்தே போனன். இதெல்லாம் நடந்திச்சு எப்போ...? அது ஒரு காலம்.

இப்பிடியே கொஞ்ச காலம் ஓடி ஓய... அண்மையில அதே கடக்கரைக்கு போறதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிசு அதுவும் என் நண்பன் கூட. அந்த கடக்கரை விஜயம் எங்க ரெண்டு பேரையும் வியக்க வைத்த ஒரு சம்பவம் எண்டே சொல்லலாம். பஸ்ல இருந்து இறங்கி கடக்கரை றோட்டால நடக்கிறபோவே ஏதோதோ மாறுதல்களை எங்களால் உணர முடிந்தது. நடந்து சென்ற பாதை, எங்கள கடந்து போன மனிதர்கள், எண்டு எல்லாமே வித்தியாசமான நகர்வுகள், இப்பிடியே கடக்கரைக்குக் கிட்ட போய்ப் பாத்தா என்ன கொடுமைப்பா...!

உங்கட அவசரம் விளங்குது...!
இனித் தான் விசயத்தையே சொல்ல போறன் கேளுங்கோ... கரையோரம் எங்கும் அடர்ந்து படர்ந்த புதர்கள், சிறு பற்றைகள், அது தவிர இப்போ தான் கன வான், பஸ் எல்லாம் கடக்கரையில அடுக்கி விட்டுக்கிடக்கே சங்கக் கடையில சாமான் வாங்க ஆக்கள் கியூல நிக்கிற மாதிரி. சரி இது எல்லாத்தையும் கடந்து கரைக்கு நடந்து போனம். முதல் ரயில் தண்டவாளத்த கடக்கிறபோ வலப்பக்க புதருக்க இருந்து ச்சு... ச்சு... எண்டு சத்தம் கேட்டிச்சு அப்பிடியே திரும்பிப் பாத்தா அதுக்குள்ள ரெண்டு இருந்து நெழிஞ்சிதுகள்.

நண்பன் சொன்னான் ஆகா ஆரம்பமே அசத்தலா இருக்குதே அப்போ உள்ள போனா சொல்லவா வேணும் என்ற படியே கரையில அலைகள் தளுவ பேசிக்கிட்டம். அதில ஒரு சுவாரசியமான விஷயம் என்ன எண்டா எண்ட நண்பனுக்கு தண்ணியக் கண்டா சூ.. சூ.. வந்திடும். so அவன் என்கிட்ட கையால சிக்னல் காட்டிற்ரு ஒரு ஓரமா போனான். போனவன் போன வரத்திலே திரும்பி வந்து டேய்... டேய்... இங்க வாடா நான் சூ போக போன புதருக்க ரெண்டு பேர் இருக்கிறாங்கடா எண்டான். அவன் சொன்னத கேட்டு நானும் பாத்தேனா அதுக்கையும் ரெண்டு குழைஞ்சுக்கிட்டே...

ம்ம் அதுக்கப்புறமா தான் தேடல் தொடங்கிச்சு திரும்புற பக்கமெல்லாம் ரெண்டு ரெண்டா. அதில இருந்த ஜோடிகளில காதலர்கள் எண்டா விரல் விட்டு எணிக்கலாம் எண்டா பாருங்களன். காதலர்களைத் தேடிப்பாத்தா காமுகர்கள் தான் அதிகம் இருந்தாங்க. அவரவர் றொம்ப பிஸியான வேலையில். சரி நம்ம வயசுப் பசங்க தான் ஏதோ பண்ணிக்கிறாங்க என்னா எங்க வயசு அப்பிடி.
இதில என்ன காமடின்னா! சும்மா ஒரு அறுபது அறுபத்தஞ்சு வயசிருக்கும் ஒரு கிளடு அதுக்கு பக்கத்தில ஒரு அதுக்கும் அறுபது எண்டே மதிச்சுக்கலாம். அதுகள் ரெண்டும் நாங்க உகாந்திருந்த கல்லுக்கு முன்னால இருந்து பண்ணின கொடுமை தாங்க முடியல.


அப்ப தான் நண்பன் சொன்னான் நாங்கெல்லாம் சுத்த வேஸ்ட்டா. வாடா இந்த கடலுக்க போய் குதிப்பம்டா எண்டான். ஏன்னா கொடுமைன்னா கொடுமை அப்பிடி ஒரு கொடுமை... முடியலடா சாமி. இதுக்கு மேலையும் அங்க இருந்திருந்தா எங்களுக்கும் அவங்க லீலைகளை புளூருத்ல ஏத்தியிருப்பாங்க.

எல்லாமே மாறுதலாய், எங்கும் புது மனிதர்களாய், காதலர் காதல், பசுமை எல்லாமே கடலேடு கலக்கப்பட்டதாய் ஒரு கடல்க்கரையில் நானும் ஒருவனாய்....!!!

ஆவலாய் நான் இதமான காற்று வாங்க போன கடற்கரை ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாய் கரைகளைத் தளுவிக்கொண்டுடிருந்தது. பாவம் கடல் அன்னை எவ்வளவு காலம் தான் இவர்கள் கொடுமைகளைப் பார்த்துக் கொண்டிருப்பாள்.

காதலர்கள் அலைகள் தீண்ட கைகள் கோர்த்து நடந்து செல்ல நான் பார்த்து ரசித்த என் முன்னைய கடற்கரை மூழ்கடிக்கப் பட்டுவிட்டது இந்த காமுகர்களால்.