இன்றும் பயணிக்கின்றேன்
புது புது கனவுகளைச் சுமந்தபடி
போகும் வழி நெடுக சிதறி
விழுகின்றன என் கனவுகள்
நான் செல்லும் பாதை
புல் வெளி தாண்டி
முட்கள் நிறைந்த வழிவழி
திருப்பம் காண்கிறது,
மனதின் கடிவாளத்திற்குள்
கட்டுண்டு கிடக்கிறேன் - நான்
கடலில் தத்தளிக்கும் துரும்பு போல
அவ்வப்போது கனவுகளும் வந்து போகும்
வரும் கனவுகளில் வலிப்பது
என்னவோ என் இதயமே! - உயிர் வலியது!
இனம் தெரியாத புரிதலுடன்
இரு மருங்கும் பரந்து தொடரும்
இரட்சகர்கள் கூட்டம் நடுவே
நாதியற்றவனாய் பயணிக்கின்றேன்
விடிவென்பது உனக்கில்லை
என கூவிப் பறக்கின்றது சாக்குருவி...!!!
No comments:
Post a Comment