Friday, April 2, 2010

நிலவு தேவதை...!!!

என்
சலனம் கண்ட
மனதிலிருந்த
சோகங்கள் அத்தனையும்
என்னவளிடம்
பகிர்ந்து கொள்ள...
என்
நிலவுப் பெண்டாட்டி
வருகைக்காய்
காத்திருந்த வேளை தனில்
நாண் ஏற்றும் விழியில்
நாணமதை ஏற்றிக்கொண்டு
என்
கண்ணெதிரே
வந்து நின்றாய்...

இனிமையாக பேசி
என்
சோகமதை உணர்ந்த
நீ
தலை சாய மடி தந்தாய்...
என்
மனம் மகிழ
தலை கோதி ஆறுதலும் தந்தாய்...

நீ
காட்டிய பாசமதில்
தாய்மையின் சாயலை
ஒரு கணம் உணர வைத்தாய்...

என்
சோகங்களை
உன்னிடத்தில்
இறக்கி வைத்தேன்...
அத்தனையும்
நீ
சுமக்கின்றாய் எனக்காக
இனியவளே...

இத்தனை
அன்பான காதலி
நீ
என் அருகிருக்க
உன் குட்டி
இதயமதில்
அன்பான காதலனாய்
நான் என்றென்றும்
உன்னோடு துணையிருப்பேன்...!!!

நேசமுடன்.......
பிறேம்...

No comments:

Post a Comment