Friday, August 21, 2009

பேருந்துப் பயணம்

யன்னலோரம் அமர்ந்தபடி
என்
பேருந்துப் பயணமதில்
முன்பு எங்கோ பார்த்த முகம்
இருந்தும்
முழுமையாக அறியாத...
கருமைக் கயல் விழியாள்
என் முன் ஆசனமதில்
அமைதியான சிறு புன்னகையுடன்....!

என் ஒவ்வொரு அசைவுகளையும்
தெரிந்தும் தெரியாதவளாய்
அவளும்...!
அவளின் ஒவ்வொரு அசைவினாலும்
மனம் தடுமாறி தவிப்பவனாய்
நானும்...!
ஒரே வீச்சில் பயணித்த படி...!

சிறு தூர இடைவெளியில்
காற்றோடு மிதந்து வந்த
பூவாசம் வீசும் அவள்
தோகைக் கூந்தல்
என் வதனம் பட்ட கணம்
மயில்த் தோகை வருடல்
எனக்குள் அவள் நினைப்பைத்
தூண்டுவதாய்...!

அப்படியே அவள்
கூந்தல் தனைக் கையிலெடுத்து
அவளிடத்தில் சேர்த்த போது
விழியோரம் சிறு பார்வை
சிறைப்பட்டேன் முழுமையாக...!

அவள் கன்னமதை
அலங்கரிக்கும் கருங் கூந்தல்
காற்றில் நடனமிட
அதை அவள்
காதோரம் சேர்க்கும்
ஒவ்வொரு தருணங்களிலும்
என்னை அவள் பக்கம்
ஈர்ப்பதாய் ஓர் அதிர்வு
மனதுள்ளே...!

என்
எண்ணற்ற கற்பனைகளும்
அழகிய இயற்கைகளும்
அவள் முன் சரண்
புகுந்தாற் போல்
ஓர் ஏக்கம்...!

என் இனிமையான
நெடுதூரப் பயணம்
குறுந்தூரம் கண்டபடி
முடிவுறப் போகுதென்ற
உணர்வோடு
அவளை ரசித்தபடி
சென்றிருக்க...!!!

என் இடம் வந்துவிட்டதாம்...
நடத்துனர் தட்டி சொல்கிறார்
இருந்தும்...
இறங்கிக் கொள்ள மனமின்றி
என் மனதை அங்கேயே விட்டுவிட்டு
தனியே நடக்கலானேன்
அவள் நினைவுகளைச் சுமந்தபடி...!!!


பிறேம்...

1 comment:

  1. real incident...
    when i was traveling in the bus at wellawatte, i met this crash...
    nice feeling.... unforgettable day in my life...

    ReplyDelete