கண்கள் என்னை தேடுகின்றபோது
உன் விழிமலர நான் எதிரில் இல்லை !
சந்தோஷத்தை கொண்டாடுகின்றபோது
பகிர்ந்துக்கொள்ள நான் பக்கத்தில் இல்லை !
சோகங்களில் சோர்ந்து போகின்றபோது
ஆறுதலாக தலைகோதிட நான் அருகினில் இல்லை !
தனிமையில் உணர்கின்றபோது
துணையாக நான் உன்னுடன் இல்லை !
உறக்கமில்லா இரவுகளின்போது
மடிசாய்த்து தூங்கவைக்க நான் உன்னுடன் இல்லை !
இசையை கவிதையை ரசிக்கின்றபோது
சுவாசமாக நேசிக்க நான் உன்னுடன் இல்லை !
பார்த்ததை படித்ததை பற்றி பேசவிரும்பும்போது
கருத்து பறிமாற்றத்திற்கு நான் உன்னுடன் இல்லை !
மனதின் ஆர்வம் குறைகின்றபோது
உற்சாகத்திற்கு உயிர்கொடுக்க நான் உன்னுடன் இல்லை !
ஆனால்நீ நினைக்கும்போது மட்டும்
இதயத்தில்.....
உணர்வுகளில்.......
உன் உயிரில் நான் இருப்பேன் !
No comments:
Post a Comment