Saturday, April 3, 2010

மண் வாசனை...!!!
















என் தாய் நிலத்தில்
நான் பெற்ற சந்தோஷங்களை
எண்ணிப்பார்க்கின்றேன்...!!!
ஏக்கத்துடன்....!

அயல் வீட்டில்த் தணல் எடுத்து
எம் வீட்டில் அடுப்பு மூட்டி
மண் பானை, சட்டி கொண்டு
மனம் மகிழச் சோறாக்கி......!
மத்தியான நடு வெயிலில்
அக்கம் பக்கம் பரிமாறி
நாமும் உண்ட காலம் எங்கே....???

வயலுக்குச் சென்ற கணவன்
திரும்பி வரும் வேளைதனில்
அயரை மீன் குழம்பு ஆக்கி
காத்திருந்து காத்திருந்து...!
குதூகலமாய் ஊட்டி
மகிழ்ந்த காலம் எங்கே....???

ஊர் வீட்டுத் திண்ணையில்ப்
பாட்டியுடன் அமர்ந்திருந்து...!
பழங் கதைகள் கேட்டு
ரசித்த காலம் எங்கே...???

கோயில் மணலில் அமர்ந்திருந்து,
கேலிக் கதைகள் பேசிப் பேசி
மணல் வீடு கட்டி நாம்
குடிபுகுந்த காலம் எங்கே...???

ஒற்றைப் பனையடியில்
நொங்கு குடித்துவிட்டு
தோழர்களாய் அமர்ந்து அங்கே,
காவோலை மேடை கட்டி
கரகாட்டம் ஆடி மகிழ்ந்த
காலம் எங்கே...???

வயல் வரம்பு தனில்
இதமான காற்றோடு
என் காதல்க் கதை பேசி
மகிழ்ந்த காலம் எங்கே...???

பட்டப் பகல் வேளை
எட்டுமூலைப் பட்டம் கட்டி,
பணிக்கர் வளவுதனில்....!!!
இராக் கொடி பறக்க விட்ட
காலம் தான் எங்கே...???

நான் தொலைத்த என்
அத்தனை சந்தோஷங்களும்
என்னில் மீள வந்து சேருமா...????

2 comments:

  1. "நான் தொலைத்த என்
    அத்தனை சந்தோஷங்களும்
    என்னில் மீள வந்து சேருமா"

    நிச்சயம் வரும் அழகான கவிதை

    ReplyDelete
  2. நன்றி நண்பரே....

    நானும் காத்திருக்கின்றேன் அந்த அழகான பொழுதுகளுக்காய்...

    ReplyDelete