Friday, August 13, 2010

யாழ்ப்பாண மினிபஸ்சிலையும் மனிசன் ஏறுவானா....???

வணக்கமுங்கோ....!!!
ஆனப்பந்தி, அரசடி, நல்லூர், முத்திரச்சந்தி, கட்டப்பிரா, இருபால, கோப்ப, அச்சுவேலி, நெல்லியடி, பருத்துறை, பருத்துறை.....
ஆனப்பந்தி, அரசடி, நல்லூர், முத்திரச்சந்தி, கட்டப்பிரா, இருபால, கோப்ப, அச்சுவேலி, நெல்லியடி, பருத்துறை, பருத்துறை.....!

வாங்க வாங்க... அம்மா எவடம் போகணும். வாங்கோ ஏறுங்கோ. அண்ணே அந்த வாசல்ல நிக்கிற அண்ணை கொஞ்சம் தள்ளி இடம் விடுங்கோ அம்மா உள்ள போகட்டும். தயவு செய்து வாசல்ல நிக்காதீங்க அண்ணே. சொன்னா கேளுங்கோவன்...!!!
இதவிட எங்கண்ணே உள்ள போறது? புட்போட்டில நிண்டுகிட்டே கொண்டைக்ரரோட சண்ட.
இந்தக் கட்டத்தில தான் என்ர கதையக் கேளுங்க...
அதே பஸ்ல தான் நானும் போக வேண்டிய கட்டாயம் சோ கொஞ்ச நேரம் பஸ்சுக்குப் பக்கத்திலேயே நிண்டன் உந்த திருக் கூத்துக்கள பாத்துக்கிட்டு... ஏன்னா நான் நல்லூர்ல இறங்கணும் அதால என்ன கடசியா ஏறச் சொன்னார் அந்த நல்ல மனிதர். நானும் பாக்கிறன் பாக்கிறன் உர(B)பாக்கில உமிய அடையிற மாத்திரி அந்த டம்மாத் துண்டு கதவுக்கால வாறாக்கள கூப்பிட்டு கூப்பிட்டு அடைஞ்சுக்கிட்டு இருந்தார் அந்த நடத்துனர்.

இப்போ பஸ் வெளிக்கிட தொடங்கிச்சு கொண்டைக்ரர் என்னட்ட சொல்லுறார் அப்பன் ஏறு, உள்ள கால வை, தலைய உள்ள எடு எண்டு தொண தொணத்துக்கிட்டே... ஒரு கட்டத்துக்கு அப்புறம் முடியல. சோ ஒரு கால வெளில தொங்கப் போட்டுக்கிட்டு கதவ இறுக்கமா பிடிச்ச படி நான் நிக்கிறன் ஆனா பஸ் வேகமா போறதுக்கான எந்த அறிகுறியும் இல்ல. இறங்கி நடந்து போயிடலாமோ எண்டு கூட நினைச்சன். அப்பிடி ஒரு இம்சை.

ஏதோ ஏறிற்ரம் இனி என்ன வீடு போய் சேருவம் எண்டு வௌவால் மாதிரி தொங்கிக்கிட்டே வந்தன் வீடு வரைக்கும். என்ர பஸ் ஹொல்ட்ல இறங்கினதுக்கு பிறகு தான் யோசிச்சன் எனி என்ர சீவியத்தில உந்த யாழ்ப்பாண மினி பஸ்சில ஏறவே கூடாதெண்டு... என்னமா படுத்துறானுகள்.

இத விடுங்கப்பா போற வழில நடக்கிற சில்மிசங்கள் அத விடக் கொடும. ஏன்னா எந்த நேரமும் கம்பஸ் அக்காமார், பள்ளிக்கூட பிள்ளையள் எண்டு அடிக்கடி ஏறிக் கொள்ளுவாங்க. அப்பேக்கில நம்ம கொண்டைக்ரர் மார் என்ன செய்வினம் தெரியுமோ (கொஞ்சப் பேர் தான்) அவங்களுக்கு முதுகு தடவி விடுவினும். இதவிட வேற வேற சேட்டைகளும் நடந்திருக்கிறதா அறிஞ்சன். நானா பாக்காததால இங்க சொல்லிக்க விரும்பல.

இதுக்கெல்லாம் என்ன காரணம் மினிபஸ்காரங்களுக்குள்ள இருக்கிறா போட்டியா இல்ல காசா...? அவங்கட லாபத்துக்கும் தொழிலுக்கும் நாங்கதானா கிடச்சம். நாங்க என்ன ஆட்டு மந்தையளா அடசி ஏத்திக் கொண்டு போறதுக்கு...?
ஆனா வேற வழி இல்லாம திரும்பவும் அவங்ககிட்டையே போக வேண்டி இருக்கு. இத விட அரசாங்கம் ஓடுற இ.போ.ச கொஞ்சம் பறவால்ல (இ.போ.ச) ட விளக்கம் தெரியுமோ... ( இதில போனா சங்கு)

நான் அனுபவப்பட்ட என்னொரு சந்தர்ப்பம்...
ஏதோ ஒரு கோயில் திருவிழா மூட்டம் அடிக்கடி மினிபஸ் விட்டாங்கள். சன்னதி கோயில் திருவிழாவா இருக்கணும். ஒவ்வொரு ஹோல்ட்லையும் தங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேர ஏத்திக்கிட்டு போய்க்கிட்டே இருந்தானுகள். ஒரு கட்டத்தில யாரையும் ஏத்த இடமில்லை எண்ட நிலை வந்தபோ எதப்பற்றியுமே யோசிக்காம பஸ்ஸின்ர மேல் கரியர்ல என்னைய மாதிரி பெடியங்கள ஏத்திவிட்டாங்கள். சோ மேலுக்கும் (f)புள் கீளுக்கும்
(f)புள். ஆனா உள்ளுக்க இருந்த சனங்கள் உம்மையாவே செரியான பாவங்கள். உள்ள இருந்து நசிஞ்சு வெந்திருக்குங்கள்.

இந்த நிலையிலும் அவங்க குறிக்கோள் காசாத்தான் இருந்திச்சே தவிர எங்கட சனத்துக்கான போக்குவரத்துச் சேவையா இருக்கல. இந்த மாதிரியான போட்டியால எத்தினையோ தரம் பஸ் அடிபட்டிருக்குது, எத்தினையோ உயிர் போயிருக்கு. இதுக்கெல்லாம் முகம் குடுத்தும் திரும்பவும் இதையே தான் இண்டை வரைக்கும் செய்யிறாங்கள். இனியும் செய்ய போறாங்க...

கடசியா போன மாசம் ஒரு பஸ் கொண்டைக்ரரோட சண்ட பிடிச்ச கதைய கேளுங்க... முதல் சொன்ன மாதிரியே புட்போட்டில தான் நான் நிக்கிறன் ஒரு படி மேல போற அளவுக்கு அங்க இடமே இல்ல... இதில அவர் என்னட்ட சொல்லுறார் தம்பி றோட்டில பொலிஸ் நிக்கிது மேலுக்கு ஏறு எண்டு... அப்ப நான் சொல்லுறன் அண்ணே இடமில்ல அண்ணே மேலுக்கு போறதுக்கு. அதெல்லாம் போகலாம் நீ ஏறு எண்டார். அப்ப எனக்கு வந்திச்சே பாரு கோபம். நான் அவன் கிட்ட கேட்டன் எங்க முதல்ல நீ அந்த இடத்தில ஏறி நிண்டு காட்டு அப்புறமா நான் நிக்கிறன். அதுக்கப்புறமா எதுவுமே கதைக்கல அந்த நல்ல மனிதர்.

மூஞ்சுறு தான் போக வழியக்காணம் விளக்குமாத்தையும் சேத்துக் காட்டிச்சாம் எண்ட மாத்திரி இருந்திச்சு அந்தாள்ட கத...

இனிமேலும் யாழ்ப்பாணம் போனா 200 என்ன 2000 குடுத்து ஓட்டோலையோ இல்ல ஒன்னுமே இல்லாம நடந்து போவனேயொளிய உந்த மினிபஸ்சில மட்டும் ஏறவே மாட்டன்.
இது ஒண்ணும் சிரிக்கிற விசயமில்ல சிந்திக்கிற விசயம்.

யார் மனசையும் புண்படுத்திறதுக்காக சொல்லல இது நான் கண்ட அனுபவம், நீங்க கூட என்ன விட அதிகமா அனுபவப்பட்டிருப்பியள். இன்னமும் யாழ்ப்பாணத்தில இருகிற உங்களுக்கு கனக்க தெரிஞ்சிருக்கும்,,,, இப்ப சொல்லுங்க நான் சொன்னதில ஏதும் பிழையிருக்குதோ...?

11 comments:

  1. "க்ளிக்" செய்து படியுங்கள்.

    ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.

    …………………………………..
    ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வொரு வசனங்களையும் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம் – யாரிடம் வேண்டுமானாலும் படித்துக்காட்டலாம், எப்பொழுது வேண்டுமானாலும் அதன் கருத்துக்களை விளக்கலாம் என்பது ஒரு இறை வேதத்தினுடைய பொது நியதி. இது எல்லா வேதங்களுக்கும் இருக்கப்படவேண்டிய ஒரு பொதுவான தகுதியும் கூட.

    புனித பைபிளில் வரும் இந்தவசனங்களை எவராவது தன் குடும்பத்தோடு – குறிப்பாகத் தன் தாய், தந்தை, மகன், மகள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரோடும் சேர்ந்து படிக்க இயலுமா? சிந்தித்துப் பாருங்கள் சகோதரர்களே! விபச்சார சகோதரிகள் பற்றி சொல்லப்படும் இந்த கதையின் வர்ணனையின் மூலம் கர்த்தர் இவ்வுலக மக்களுக்கு என்ன சொல்ல வருகின்றார்? இதனால் என்ன பயன்?

    "க்ளிக்" செய்து படியுங்கள்.

    வேசிகள் அடங்காத‌ காமத்துடன்

    ....................................................
    ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...??? ** ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா? ** இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா? என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது
    கிறிஸ்துவ போலிமாயைக்கு சவால்?

    ReplyDelete
  2. இந்த நிலை என்று தீரும் ????????

    ReplyDelete
  3. யாழ் மினி பஸ்களில ஆக்களை மந்தைகளைப் போல நிரப்பிறது இன்று நேற்று ஆரம்பிச்ச பிரச்சினை இல்லை..ஆனா இப்போதைக்கு தீரப் போற பிரச்சினையும் இல்லை..
    யாழ் கொழும்பு பஸ்களின்ர மொத்த எண்ணிக்கை உள்ளூர் பஸ்களின்ர எண்ணிக்கையை விடக் கூடினாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை.. :(

    ReplyDelete
  4. எல்லாம் அவன் செயல்...
    பாப்பம்... தீரும் எண்டு நினைக்கிறீங்களா...?

    ReplyDelete
  5. இது என்னவோ உண்மை தான்...
    இப்பவே அளவு கணக்கில்லாம யாழ்ப்பாண ரவுணுக்க நிக்கிதாம் எண்டு ஒரு கேள்வி...!

    ReplyDelete
  6. இது உங்கள் சொந்த பதிவா? ஏnனில் அண்மையில் ஒரு பத்திரிகையில் இதைப்போலவே ஒரு படித்திருந்தேன் அதுதான் கேட்டேன்.

    ReplyDelete
  7. ஓ...
    இது என் சொந்த அனுபவங்களே தவிர வேறேதும் பதிவுகளை திரிவுபடுத்திப் பதிவிட வேண்டிய அவசியம் எனக்கில்லை...!!!

    ReplyDelete
  8. நல்லா எழுதியிருக்கின்றீர்கள் பிரேம்.
    நானும் யாழ்ப்பாணத்திலை எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து பார்க்கின்றேன் "மாற்றம் என்ற ஒன்றுதான் மாறாது" என்பதை முறியடித்து இன்றும் அப்படியே இருக்கின்றது இந்தக்கதை.
    இந்த மினிபஸ் நெருக்கத்திற்குள் கொள்ளைக்கூட்டம்வேறு தமது கைவரிசையினை காட்டிவிடும்.

    ReplyDelete
  9. நிச்சயமான உண்மை ஜனா...
    கொள்ளையர்களின் அராஜகம் இன்னமும் கையோங்குகிறதே தவிர கொஞ்சமும் குறைவதாக இல்லை... சில சந்தர்ப்பங்களில் பஸ்காரர்களும் உடந்தை என்றவாறும் நான் கேள்வியுற்றிருக்கிறேன்... உண்மை நிலை அறியேன்....
    நன்றி அண்ணா...!!!

    ReplyDelete
  10. அருயையான பதிவு நண்பரே, நான் உந்த காரணத்துக்காக யாழ்ப்பாண மினி பஸ் இல ஏறுவதில்லை..

    ReplyDelete
  11. ம்ம்...
    எனக்கொரு சோடி சேந்திட்டார்... :)
    நன்றிகள்...!

    ReplyDelete