Monday, December 20, 2010

மனம் எனக்காய் அழுகிறது...!

அவள்
என் உயிரோடு சேர்ந்து வாழ்ந்தது
அது ஒரு கனாக்காலம்...

அவள்!
அழகானவள்...
அன்பானவள்...
உயிரினும் மேலானவள்...!

என்
மனம் எனக்காய் எடுத்துரைத்த பாடங்கள் இவை...

அவள் என் பார்வையில் பட்ட பொழுதுகளில்
விலகி நடந்தேன்
அவளை நான் காதலித்திடக் கூடாதென்பதற்காய்...!

இருந்தும்

மனமோ என் கடிவாளத்தை
இறுகவே பற்றிக் கொண்டது
நான் அவளைக் காதலிக்க வேண்டும் என்பதற்காய்...
மனம் ஒரு மந்தி! அறிந்திருக்கவில்லை அன்று.

அவள் கண்களுக்குள் சிறைப்பட்டுக் கொண்டேன்
அன்று...
நிசப்தமான இரவுகளில் அவள்
நினைவுகளால் ஆக்கிரமிக்கப்பட்டேன்...
மீள முடியாத இன்ப வலி காதல்...
ஒவ்வொரு நிமிஷங்களும்
எனக்காய் உணர்த்திய காதல் தார்ப்பரியங்கள்...

எனக்குள் பிறந்திட்ட
புது றணத்தில் எத்தனை வலிகள்...
கார் இருளில் நீண்டு சென்ற
எனக்கான பகல் பொழுதுகள்...
கிறுக்குப் பிடித்தவனாய் அன்று...

வார்த்தைகளை மெல்ல கோர்க்க
பழக்கித் தந்தது காதல்...
நேரத்தை விழுங்க காட்டித் தந்ததும்
காதல்...!

காலப்போக்கில் எத்தனை காத்திருப்புக்கள்...
சலித்துப் போயும் சாந்தமானவனாய் நான்...

எல்லாம் அவள் அன்புக்காய்...

என்னைப் புரிந்தும் புரியாதவளாய்
அவள்...!
அவளைப் போல் எடுத்தெறிய
தெரியவில்லை எனக்கு...

சில கணங்களில்
என்னை வார்த்தைகளால் வஞ்சித்துக் கொள்வாள்
அப்போதெல்லாம்
என்
இதயத்தில் நெருப்பை வைத்ததைப் போல் இருக்கும்
எனக்கு....

இருந்தும் பொறுத்துக் கொள்வேன்
என் உயிர் அவளாயிற்றே...!
அன்றும் நம்பி இருந்தேன்
அவளுக்கு என்மேல்
அதீத பிரியம் என்று...!!!

காலப்போக்கில்
தொடர்புகள் தூரம் போகிறது...!

என்னவளுக்கு
கடிதம் வரைந்தேன்
பதிலேதும் இல்லை...
தொலைபேசியில் அழைத்தேன்
குரல் ஏதும் இல்லை...
நேரில் சென்றேன்
அவள் அங்கு இல்லை...

இதயமே வெடித்தாற் போல்
சுறுண்டு விழுகிறேன் சுடு மணலில்...
காய்ந்த சருகுகள் கன்னத்தில் ஒட்டிக் கொள்கிறது...
மெல்ல எடுக்கையில்
அவள் சென்று வெகு நாட்கள்
தடயம் சொல்கிறது சருகுகள்...!

இன்று என்
கண்களில் கண்ணீர் வரவில்லை...
மனம் எனக்காய் கதறி அழுகிறது
காதலை உணரா ஜடத்தை
எனக்கு குறி காட்டியதற்காய்....!!!

















வலிகள் பிடித்திருந்தால் கருத்துக்களை விட்டுச்செல்லுங்கள்... :)


5 comments: