Friday, February 10, 2012

உதுகள் திருந்தவே திருந்தாதுகள்...!

வணக்கமுங்கோ...!

இதோ வந்துட்டேன்! சின்ன விவகாரமான விசயத்தோட தான் வாறன் றோட்டில கீட்டில கண்டா ஆள் வைச்சு அடிச்சு போடாதீங்கோ! பொடியன் பாவம்....!

என்ன பெரிசா ஒண்ணும் சொல்ல வரல! நம்மட சனத்தப்பற்றி ஒரு நாலு விசயம் கண்டறிஞ்சன் அத யாரிட்டையாவது சொல்லனும் போல இருக்கு அது தான் இதுல வந்து பகிரங்கமா ஊதிட்டு போலாம்னு ஒரு முனைப்பு தான்.... லொலொ!

போன கிழம நான் யாழ்ப்பாணம் போயிருந்தன்!
என்னென்னமோ அபிவிருத்தி எண்ட பேர்ல செய்திருக்கிறாங்களப்பா... அதுக்கு பாராட்டு மாலை தெரிவிக்கிற வகைல றோட்டு முழுக்க மண் புளுதி! உது தான் யாழ்ப்பாணமா எண்டு ஒரு சந்தேகம் வேற!

எப்ப யாழ்ப்பாணத்துக்கு போனாலும் இன்னும் மாற்றம் இல்லாம இருக்கிறது ஒரு சில விசயங்களும் நம்மடாக்களின்ர நடவடிக்கைகளும்.

பொதுவாவே எனக்கு யாழ்ப்பாணம் போனா மினி பஸ்சில ஏற பிடிக்கிறதில்ல! ஏன்னா அவங்கள் தங்கட வியாபார போட்டிக்காக நம்மள பலிக்கடா ஆக்கிர்றாங்கள்!
உவங்களின்ர பஸ்சில நெரிஞ்சு கொண்டு போகணும்னு எங்களுக்கென்ன தலையெழுத்தா...!
அவையளுக்கு எங்கள பாத்தா உமி, பஞ்சு, நெல்லின்ர ஞாபகம் வாறதோ என்னமோ! நம்மள போட்டு அந்த அடைசல் அடைவினும்!
விரலுக்கேத்த வீக்கம் இருக்கனும்! பஸ்சுக்கேத்த சனம் இருக்கணும்! அளவுக்கு மீறி ஆக்கள ஏத்தி போட்டி போட்டு எத்தினையோ மினி பஸ் இடிபட்ட, கவுண்ட தரவுகள் ஆறா வடுக்கள் இன்னும் இருக்குது.

ஆனாலும் உவங்கள் திருந்தவே இல்ல! உவங்களோட இப்பிடி சண்டை பிடிச்சு தான் பயணம் பண்ணனும் எண்ட அவசியம் எனக்கில்ல! என்னை போல பலருக்கும் இல்லை.

அடுத்தது!
எந்த பஸ்சில ஏறினாலும் ஒரு தாய் கைக் குழந்தைய தூக்கிட்டு வந்தா ஒரு மனுசர் கூட அந்த பொண்ணுக்கு இடங்குடுக்க தயாரில்ல! பாவம் அந்த தாய்மார் தங்கட குழந்தைகள தூக்கிக் கொண்டு பரிதாபமா நிப்பாங்க!
நம்மட ஆக்களுக்கு பழக்கவழக்கம் பூச்சியம்!

சத்தியமா சொல்லுறன் பஸ் பயணம், கரிசனை, பிறருக்கு உதவி எண்டத நம்மட சனம் எங்கட சிங்கள மக்களிட்ட இருந்து தான் பழகிக்கணும்!
இதுக்காகவே சிங்கள சனத்திட்ட ஒரு கிழம பயிற்சி எடுத்தா கூட தப்பில்ல எண்டு தான் நான் சொல்லுவன்!

அரை ரிக்கட்! முழு ரிக்கட் சண்டை பிடிக்கிறது கைக் குழந்தைக்கு அடை ரிக்கட் போடுறது! ரெண்டு பேர் இருக்கிற சீட்டில மூணு நாலு பேர நெருக்கி ஏத்திறது! ஏய்யா இந்த வெறி!
ஒரு கலியாண வீட்டுக்கு போற பெண் பஸ்ல ஏறி போனா அது இறங்கிறபோ கலியாண வீட்ட போற மாதிரியா போய்ச் சேரும்...?
இல்ல தெரியாம தான் கேக்கிறன் உவங்களுக்கு இந்த விசயத்தில மனசாட்சி தான் இல்லையா இல்ல சமயோசிதமா சிந்திக்க தான் தெரியலையா...?

ம்ம்...!
உவங்கள் திருந்தவே மாட்டாங்கள்!

அத தான் விடுவம் பள்ளிக்கூடத்துக்கு போனா வாத்திமாருக்க ரெண்டு பிரிவு! அதிபருக்கு பந்தம் பிடிக்கிற வாளி வைக்கிற கூட்டம் மற்றது வாத்திமாருக்கே வாளி வைக்கிற கூட்டம்!
வேலையே செய்யாம செய்ற மாதிரி பிள்ளைகளையும் ஏமாத்தி தங்கள, தங்கட முன்னேற்றத்துக்கு தாங்களே முட்டுக்கட்டையா இருக்கிற கோஷ்டி! உதுகளும் வாழ்க்கைல திருந்தவே திருந்தாதுகள்!

இன்னும் சொல்ல போனா படிபெல்லாம் முடிச்சிட்டு றோட்டில வெட்டியா அங்கையும் இங்கையும் திரிற கூட்டம்! இப்பெல்லாம் காலுக்கையும் கைக்கையும் ஓரே மோட்டச்சைக்கிள் தானே! பெடி பெட்டை எல்லாம்!
அதில வெட்டியா திரிறது தான் கூட!

இதுகள திருத்தவே முடியாது!
என்ன தான் சரியா சரியான நேரத்துக்கு திருந்தினாலும் ஒரு சிலர, அவங்களின்ர நடவடிக்கைகள திருத்தவோ மாற்றவோ முடியாது!
இது நான் என்ர வாழ்கைல, யாழ் நோக்கிய பயணத்தில கண்ட உண்மை!

திரும்பவும் சொல்லுறன் ஏதோ எண்ட மனசில பட்டிச்சு! சொல்லனும்னு தோணிச்சு சொல்லிட்டன்!
ஏற்றுக்கொள்ளுறவங்க ஏற்றுக்கொள்ளுங்க!

அப்ப போய்ட்டு வரட்டே!
கூடிய சீக்கிரம் திரும்ப வாறன்....! பாய்!

1 comment:

  1. I agree with most of what you have written except / engada singala makkal/. Are you talking about the same engada singala makkal that killed 50000 of our engada makkal in a few weeks? Neenga eppa thiruntha poreenga?

    ReplyDelete