கொண்டைக்டர் கத்த கத்த சனமும் ஏறினபடியே தான், அதுக்க கள்ளங்களும் ஏறுவாங்கள்! மக்கா! ஜாக்கிருதை!
இப்ப கொஞ்சக்காலமா நான் கேட்டறிஞ்சதின் படி 154ல செரியான கள்ளர் தொல்லையாம் நம்மள, நம்மட சாமான் சக்கட்டுக்கள பாதுகாக்க வேண்டியது நம்மட கடமை, அதிலையும் வேற யாருக்கும் கள்ளரால ஆபத்து எண்டு வந்திச்செண்டாலும் அவர்களுக்கு அதை தெரியப்படுத்திறதிலையும் நாங்க முன் நிக்க தான் வேணும்! ஏன்னா நாளை எங்களுக்கும் இதுவே நடக்க கூடும்!
பஸ்ஸில செரியான கூட்டம் எண்டால் கொஞ்சம் கவனமா நில்லுங்க, கூட்டமான பஸ்ல தான் கள்ளர் அதிகம் ஏறுவாங்கள். உங்கட உங்கட பேர்ஸ்(Purse), ஹாண்ட்பாக் (Handbag), கையடக்க தொலைபேசி (Phones), சங்கிலி காப்பு நகைகள் (chain) அது மட்டுமில்லாம காசு (cash) அப்பிடி ஏதாச்சும் வைச்சிருந்தா பத்திரப்படுத்திக் கொள்ளுங்க!
இப்பெல்லாம் களவெடுக்க வாறவங்கள் எங்கள விட Decentடா தான் வாறாங்கள், பாத்தா பெரிய பெரிய கொம்பனில CEO Levelல இருக்கிறாக்கள் போல. போலிகளைக் கண்டு ஏமாராதீர்கள்!
இன்னார் தான் திருடன் என்று ஒரு சில வழிகளில் ஊகிக்க முடியும், அவர்களிடத்தில் கொஞ்சம் ஜாக்கிரிதையாக இருந்தால் போதும். பஸ்ஸில் திருட வரும் கள்ளர் கையில் ஒரு 5ரூபா ஓ 10 ரூபா Shopping Bagஐ வைத்திருப்பார்கள், அவர்களுடைய பார்வை ஆக்களையும் திருட எத்தணிக்கும் நபருடைய உடைமையிலுமாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் கொஞ்சம் பதற்றத்துடனே காணப்படுவர், முக்கியமா யாராச்சும் சீட்டில இருந்தபடி உங்கட சாமான் ஓ Bagஐ தான் வைச்சிருக்கிறதா சொல்லி கேட்டா கொஞ்சம் உஷாராகிக்கொள்ளுங்க!
பெண்கள் உங்கள் Handbagஐ எக்காரணம் கொண்டும் கூட்டமாய் இருந்தாலும் பரவாயில்லை அமர்ந்திருப்பவர்கள் கைகளில் கொடுக்க வேண்டாம்! நான் நேரில் கண்ட அனுபவத்தை வைத்து சொல்கிறேன். உங்கள் நண்பராக இருக்கட்டும் உங்கள் உறவுகளாக இருக்கட்டும் கொடுங்கள் பரவாயில்லை ஆனால் அறிமுகமில்லா நபர்களிடம் பைகளைக் கொடுப்பதை தவிருங்கள். அப்படி ஒருவேளை கொடுக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தால் கொடுத்தவர் மேல அவதானமாய் இருங்கள்.
நான் இவள நேரமும் 154ஐ பற்றி தான் சொல்லிக்கொண்டு இருக்கிறன், ஆனா வேற வேற பஸ்ல என்னென்ன நடக்குதெண்டு யாருக்கு தெரியும்.
பையன்களின் கவனத்துக்கு!
உங்கள் Purse, பணம், கையடக்க தொலைபேசி எல்லாம் பத்திரமாக இருக்கிறதா என்பதை நேரத்துக்கு நேரம் சரி பார்த்துக் கொள்ளுங்கள்! யார்மேலாவது சந்தேகம் வந்துவிட்டால் அவர்கள் மேல் ஒரு கண் வையுங்கள், அத்தோடு யாக்கிருதையாகவும் இருங்கள்!
தினம் தினம் வித்தியாசமான முறைகளில் திருட்டு நடக்கிறது! அனைவருக்கும் இதை அறியப்படுத்த வேண்டியது எனது கடமை!
இது முழுக்க முழுக்க பயணிகள் கவனத்துக்கு! அடுத்த முறை இன்னும் ஒரு பதிவோட வாறன்!
கவனமா இருந்து கொள்ளுங்கோ!
No comments:
Post a Comment