
1998/99 காலப்பகுதி... அப்போது தான் யாழ்ப்பாணம் மீண்டும் நீண்ட கால இடைவெளியின் பின்னர் ஒளி பெற்று துல்லியதொரு வளர்ச்சியை எட்டிக்கொண்டிருந்த காலம், தொலைக்காட்சி பாவனையும் அதிகமாக பயன்படுத்தப்பட்ட காலம் அது! எல்லா வீடுகளிலும் தொலைக்காட்சி குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சிக்காக இயங்கிக்கொண்டு இருக்குமேயானால் அது ஞாயிற்றுக் கிழமை மதியம் 12 மணியாக தான் இருக்க முடியும்.
பொதிகை அலைவரிசை யாழ் மண்ணைப் பொறுத்தவரை எமது பொழுதுபோக்கு தொலைக்காட்சி அலைவரிசை. மதியம் 12 என்றாலே போதும் எங்கும் சக்திமான், சக்திமான் தான்! குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் மிக பிடித்த சூப்பர் ஹீரோ நாடகம் அது! சிறுவர்கள் என்ற வட்டத்தில் இருந்து நானும் சக்திமானை ரசித்தவன் தான்... :)
எல்லோருக்கும் பிடித்தமான கதாபத்திரம் அந்த சக்திமான் கதாபாத்திரம், சக்திமானில் முகேஷ் கண்ணா(Mukesh Khanna) சக்திமானாகவும், கங்காதராகவும்(Gangadhar) இரு வேடங்களில் நடித்திருப்பார். இவர் தவிர சிறப்பான கதாபாத்திரங்களாக கீதா விஷ்வாஸ், தாம்ராஜ் கில்ஃபிஷ், டாக்டர் ஜக்கால் என முக்கிய பாத்திரங்களை ஏற்று திறமையான படைப்பொன்றை உருவாக்கியிருந்தார்கள்.

சக்திமானை பொறுத்தவரையில் முக்கிய கதாபாத்திரமாக பார்ப்போரை அஞ்சவைக்கும் விதத்தில் தாம்ராஜ் கில்ஃபிஷ்ன் கதாபாத்திரம் இருந்தது. “இருள் நீடிக்கின்றது” என்ற வாசகம் அடிக்கடி அந்த கதாபாத்திரத்தால் உபயோகிக்கப்பட்டது மட்டுமல்லாமல் நாமும் அந்தக் காலத்தில் அடிக்கடி முனுமுனுத்த வசனமாக இருந்தது. அத்தோடு டாக்டர் ஜக்காலின் “பாவ்வர்” என்ற வசனமும் கூட.
2000ம் ஆண்டை நெருங்கிய காலகட்டத்தில் மிகப் பிரபல்யமாக ஒளிபரப்பப்பட்ட தொடர் நாடகம் என்றால் அது சக்திமான் தான், அதன் பாடலும் கூட அந்த காலத்தில் மிகப் பிரபலமாக இருந்தது. இன்று பலரால் மறக்கப்பட்டிருக்கும் சக்திமான் என்ற நாடகம் இப்பதிவை வாசிப்பவர்கள் மனதில் மீண்டும் அந்த சூப்பர் ஹீரோ ஞாபகத்திற்கு வந்திருப்பார் என்பது திண்ணம். :)
ஹாய் நண்பர்ஸ்! நம்ம ஹீரோவ நாங்க மறக்கலாமா...? அது தான் ஒருக்கா ஞாபகப்படுத்தினன் :) “இருள் நீடிக்கிறது” #லொலொ
நாடகத்த ஞாபகப்படுத்திட்டன் அப்ப நான் போய்ட்டு வரட்டே... பாய்...!
No comments:
Post a Comment