Friday, September 2, 2016

நல்லூரில் இன்று நான்! கச்சான் கடையும் நானும் - நினைவில் 2

தேடுவாரத்துக் கிடக்கும் கச்சான் சாப்பிடும் ஆசை எல்லாம் அந்த 25 நாட்களுக்கும் அளவே இன்றி அத்தியாவசியமாகும். நல்லூருக்கு போனால் கச்சான் சாப்பிடாமல் வீட்டுக்கு வந்தால் அந்த நாள் அர்த்தமற்றதாய் ஒரு பிரம்மையை தோற்றுவிக்கும் காரணம் நல்லூருக்கு போறவன் எல்லாம் கட்டாயம் கச்சான் வாங்கி தின்னாம வீட்ட போக மாட்டான் என்பது ஐதீகம்... 

கடவுள் சித்தம் நான் நல்லூர் கோயிலடியிலே பிறந்தது வளர்ந்தது எல்லாமே, செரியா 4 மணிக்கு கம்பீரமாய் அடிக்கும் அந்த நல்லூரான் மணி ஆலய தரிசனத்திற்கான புறப்பாட்டு மணியாக மனதில் பதிந்து கொள்ளும் திருவிழா நேரம் அதுவும் பின்னேரம் வீதிகள் சல சலக்க தொடங்கிவிடும் வியாபரிகள் கூக்குரல் போட‌ தொடங்கிவிடுவார்கள் வீதியின் இரு மருங்கும் ஒரே களேபரமாய் தான் காணப்படும் குறைந்தது இரவு 9-10 மணி வரைக்காவது. கூட்டத்தோடு கூட்டமாய் நடந்து கோயிலுக்கு போய் சாமியுடன் ஐக்கியமாகி வீடு திரும்பும் இருள் தூழ்ந்த வேளையில் கச்சான் கடைக்காரருடன் பேரம் பேசுவதிலும் ஒரு சுவாரசியம் இருக்க தான் செய்கிறது.

(+) நல்லூர் நடு மையம் என்றால் நாலா புறமும் கட்டாயம் கச்சான் கடைகளால் அணிவகுத்திருக்கும் அந்த நல்லூர் ஏரியாவே, சரி விசயத்திற்கு வருவம்...

சாமிய இருப்புக்கு அனுப்பிட்டு பின் வீதியால நடக்கிறன் நான்,
முதல் கடைல இருந்து தொங்கல் கடை வரைக்கும் ஆக்களைக் கண்டோன கத்த தொடங்கிடுவாங்கள்:
அம்மா வாங்கோ கச்சான் வாங்கிட்டு போங்க‌
அக்கா வாங்க சாப்பிட்டு பாத்து வாங்குங்கிட்டு போங்க‌
தம்பி வாடா சுடச்சுட கச்சான்
அண்ண வாங்க இப்ப வறுத்தது சுட சுட  கச்சான், சாப்பிட்டு பாத்து வாங்குங்கோ... ஓடியாங்கோ எண்டு ஆளாளுக்கு கூவ.... 



சரி அவங்கட கூவலுக்கு சொவி சாச்சு ஏதாச்சும் ஒரு கடைக்க பூந்தா முதல் றவுண்டு சுளகுக்க குவிச்சிருக்கிற கச்சான்ல ரெண்டு மூண்ட எடுத்து திண்டு பாத்திட்டு இந்தா இதில அம்போருவாக்கு போடுங்க போளம் போடாம எண்டு சொல்லிட்டு எங்கட பாட்டில அந்த குவியல்ல ஒண்ணொண்ணா எடுத்து கொறிச்சுக்கொண்டே நிண்ட படி பேரம் போசுவம் பேசினன்...

என்னம்மா கொஞ்சமா போடுறியள் இன்னும் கொஞ்சம் கிள்ளி போடாம அள்ளி போடுங்க எண்டு சொல்லி சொல்லி கச்சான் பாஃக்கு வாய் மூடாத அளவுக்கு நிரப்பிக்கொண்டு வழி நீளமும் திண்டபடி வெளிக்கிட தெரிஞ்சவன் எவனாச்சும் சிக்குவான் பின்ன அவனுக்கும் நீட்டி கதைச்சு கதைச்சு நிக்க அந்த பக்கட் முடிஞ்சிடும்...

சரி போவம் எண்டு அவன காய் வெட்டிட்டு இன்னும் ஒரு பக்கட்ட வாங்கிக்கொண்டு கொஞ்ச தூரம் கோயில் பக்கமா நடக்க இன்னும் ஒரு அடிமை சிக்கும் அதையும் கூட்டிக்கொண்டு வாடா மச்சான் அப்பிடி அந்த பின் வீதி மணலுக்க இருந்து கச்சான் சாப்பிட்ட படி சரக்கு பாப்பம் எண்டு அதையும் இழுத்துக்கொண்டு மணலுக்க இருந்து திண்டிட்டு ஒரு ஒம்பது மணி வரைக்கும் அரட்டை அடிச்சு வீட்ட போகேக்க இன்னும் ஒரு பக்கட்ட வாங்கிக் கொண்டு போய் வேட்டி எல்லாம் களட்டி வைச்சிட்டு ஈசி சியர்ல படுத்துக் கிடந்து திரும்பவும் மிச்சம் சொச்சம் எல்லாத்தையும் கொறிச்சு தள்ளி கச்சான் கோதெல்லாத்த்தையும் அங்கங்க கொட்டி அம்மாட்ட பேச்சும் வாங்கி வீட்ட கூட்டிட்டு விறாந்தைக்க வெறுந்தரைல விட்டத்த பாத்தபடி மல்லாக்கா படுத்தோண வரும் பாருங்க ஒரு மரண நித்திரை அது தான் சார் சொர்க்கம்...! 

No comments:

Post a Comment