Thursday, August 5, 2010

என்னே ஒரு ஈர்ப்பு அவள் கண்களில்...!!!

வழக்கம் போல் புலர்கிறது காலை
வழக்கத்துக்கு மாறாய்
எனது செயற்பாடுகள்
எல்லாமே வேகமாய் நடப்பனவாய்
ஒரு புரிதல்...!

பாயைச் சுருட்டிக் கொண்டு
கட்டில் பக்கம் ஓடுகிறேன்...
சுவரோரம் அவற்றை சாய்த்துவிட்டு
அருகே தொங்கும் நாட்காட்டியில்
தின பலன் பார்ப்பதற்காய்...
திகதி கிழிக்கிறேன்...!
இடபம் - புதிய சந்திப்பு
பார்த்த கணத்தில் இருந்து
மனதில் அன்று மட்டும் ஏதோ
கேள்விகள்...!

அந்தரப்பட்டு அவசரப்பட்டு
காலைச் சாப்பாட்டை மறந்து
புறப்பட தயாராகிக் கொண்டிருக்கையில்
அம்மா அழைக்கிறார்
தம்பி ஒருவாயாவது சாப்பிட்டுப் போயன்...
மறுப்புக் குரல் குடுத்து
வேகமாய் வாசல் கடக்கிறேன்...!

என்னவாய் இருக்கும்..?
யாராய் இருக்கும்..?
அவள் எப்படி இருப்பாள்...?
வினாக்கள் மட்டுமே என்னுள்
விடைகள் ஏதுமில்லை...
இப்படியே நுழைகிறேன்
ஏதோ ஒரு Plazzaக்குள்...
என் தேவையை ஒவ்வொன்றாய்
நிவர்த்தி செய்து கொண்டுவருகிறேன்
இருந்தும்
புதிய சந்திப்புக்களுக்கான
தடயங்கள் ஏதும் இல்லை...

ஒரு கட்டத்தில்
மனசு கேட்கிறது என்னிடத்தே
”ஏன் இத்தனை ஆர்ப்பரிப்பு...?
நீ யாரையாவது சந்திக்க நேர்ந்தால்
அவர்கள் ஏன் ஒரு ஆணாக இருக்கக் கூடாது...?
இல்லை
வயது வந்தவராக இருக்கக் கூடாது...?”
மனசின் கேள்வி நிஜாயமானதாய்
எனக்குப்பட்டது...!
ஒரு கணம் என் தலையை நானே தட்டிக் கொண்டு
இத்தனை நேரமும் என் எண்ண ஓட்டத்தில்
ஒரு பெண்ணின் சந்திப்பாய் எண்ணியிருக்கிறேனே... சே...!

அவ்விடம் விட்டு நகர
வாசல் நோக்குகிறேன்
எதிரே ஒரு தேவதை...
என்னுள் எல்லாமே ஸ்தம்பித்தாயிற்று
அவள் முன் ஒரு சிலை என நின்றேன்
சில வினாடிகள்...!
என்னே ஒரு ஈர்ப்பு அவள் கண்களில்...!

Heyyy....!
Helloooov...!
Excuse meee...!
அவள் என்னிடத்தே ஏதோ சொல்லிக் கொள்கிறாள்
நானோ அவள் கண்கள் வழி உள்நுழைந்து
அவள் மனசில் எனக்காய் இடம் தேடிக் கொண்டிருக்கிறேன்...!
இது தான் கண்டதும் காதலா... ம்ம்
கண்களை குணுக்கி
உதடுகளைச் சுழித்தபடி விலகிச் செல்கிறாள்
அவள்...

என்னுள்
மீண்டு வந்தேன் நான்
ஆனால்
என் முன் அவள் இல்லை...
தூரம் விலகிச் சென்று கொண்டிருக்கிறாள்
சற்றே துரத்துகிறேன்...
Excuse me...! Excuse me...!
மெல்லத் திரும்புகிறாள்...
அவள் விழி விழிம்பில் சிறைப்பட்டுக் கொண்டேன்
நான்...!

மெல்ல வாய் திறக்கிறேன்...
you... you... you are looking very cute...!
என்னை அறியாமல் சொல்லிவிட்டேன்...
அவளோ சிறிதாய் புன்னகைத்து
Thanks... என்று ஒரு வார்த்தையில்
எல்லாத்தையும் முடித்துவிட்டு
அவள்பாட்டுக்கு சென்றுவிட்டாள்...!

இது தான் அந்த சந்திப்பா...?
இருந்தும்
அவசரப்பட்டு விட்டோமோ
என எண்ணி கைகளால்
என் தலையைக் குழப்பியபடி
கண்களுக்குள் பதிந்திட்ட
அவள் நினைவுகளோடு
வெளியில் விரைகிறேன் நான்...!!!




Tuesday, August 3, 2010

நல்லூர் கந்தனுக்கு அரோகரா...!!!

கந்தனுக்கு அரோகரா.... முருகனுக்கு அரோகரா... முத்துக் குமரனுக்கு அரோகரா.... வடிவேலனுக்கு அரோகரா... முருகா... முருகா... முருகா... முருகா...!!!

ஏய்... ஏய்... கொஞ்சம் பொறுங்கப்பா இத வாசிச்சிட்டு இப்பவே வீட்டுக்க உறுண்டிடாதீங்கப்பா... பொறுமை... பொறுமை...! நாமெல்லாம் ஒண்ணா விடியக்காலம நல்லூர்ல போய் பிரதட்ட அடிக்கிறதுக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு அது வரைக்கும் பொறுத்துக்குங்கப்பா...!

இப்ப விசயம் என்னண்டா இந்த முற நல்லூர் திருவிழா ஒரு களைகட்டும் அதில எந்த சந்தேகமும் இல்ல ஆனா என்ன நல்லூர் தொண்டர் படை தான் ஏதோ புதுசா சட்டம் போட்டிருக்கினம் போல. அது வேற ஒண்ணுமில்லிங்கோ கோயிலுக்குள்ள போறப்போ ஆம்பிளைங்க வேட்டி சால்வையோட மட்டும் தான் போகேலுமாம் அதே மாதிரி பொம்பளைங்க சேலை, முழுப்பாவாடை சட்டை அதோட பாவாடை தாவணியோட தான் போகலாமாம்.

இதுகூட நல்ல ஐடியா தான். இல்ல சீரியஸ்சா தான் சொல்லுறன் A9 திறந்து பட்டி அவிட்டு விட்டதுக்குப் பிறகு யாழ்ப்பாணம் றொம்ப மாறிட்டு. யாழ் மண்ணுக்கே உரிய பாரம்பரியங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டு தான் போகுது. இந்த காலகட்டத்தில நல்லூர் கோயில் நிர்வாகம் இப்பிடியான அறிவித்தல குடுத்தது உண்மையில ஒரு நல்ல விசயம் எண்டு தான் நான் சொல்லுவன். ஏன்னா சமயப் பாரம்பரியங்களையாவது கட்டிக்காக்கிறதுக்கு இவங்கட இந்த முயற்சி நிச்சயமா வெற்றி பெறும் எண்டு நினைக்கிறன். இதையே தொடந்து செய்வினும் எண்டா இது பாராட்டுக்குரிய விசயம் தான்...!

இதால கோயில்லுக்க காத்து வாங்கிற மாதிரியான யன்னல் வைச்ச உடுப்புக்கள் போடுறவங்க பாடு அதோ கெதி தான். அது மட்டுமில்லாம ஒரு சாண் களிசாணும் ரெண்டு கைக்குட்டையளவு மேலுடுப்பும் போட்டுக்கிற பொண்ணூங்களுக்கு கோயில் வைச்சிச்சே பாரு ஆப்பு. முதலாளி உங்களுக்கு ஒரு பாராட்டு.

மூண்டு வருசத்துக்கு பிறகு நல்லூர் திருவிழாக்குப் போறதா இருக்கிறன். கன வித மாறுதலோட இந்த முற திருவிழா நடக்கும் எண்டு எதிர் பார்க்கிறன். அதிலும் மும் மதமும் ஒண்ணா நிண்டு கொண்டாடிற மாதிரியா இம் முற திருவிழா இருக்க போகுது. எல்லாருக்கும் இருக்கிற போல எனக்குள்ளும் கனக்க கற்பனைகள மெருகேத்தி வைச்சிருக்கிறன். முடிஞ்சளவு எல்லாத்தையும் நிறைவேத்திடனும்.

உங்க எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும் நல்லூர் கொடி ஏறிடிச்சுன்னா ஐஞ்சில இருந்து தொண்ணூறு வரைக்கும் ஒரே கொண்டாட்டம் தான் அந்த இருவத்தஞ்சு நாளும். கோயில சுத்தி ஒரே கடையளும், பாதாள கிணறு சேக்கஸ் எண்டு எந் நேரமும் எங்கட சனங்கள் பிஸியா தான் திரிவினும் காலமல இருந்து நடுச் சாமம் வரைக்கும் அப்பிடி ஒரு திருவிழாவ வேறெங்கையும் பாத்ததில்ல. என்ன இந்த முற கொஞ்சம் அட்வான்ஸா பல தரப்பட்ட பிஸ்னஸ் நடக்கும் “வாங்க வாங்க மலிவு எல்லாம் மலிவு எண்டு கத்துறவங்க மத்தியில அப்பப்போ லாபாய்... லாபாய்... எண்ட சத்தமும் கேக்கப் போது”.

அதால எந்த நேரமும் சன நடமாட்டம் கோயில சுத்தி இருக்கப் போது. அப்ப என்ன மாதிரிப் பொடிப் பசங்கள சொல்லவா வேணும்...! எங்க பாடு ஒரே ஜாலி தான்.

அட இத விடுங்கப்பா முக்கியமான விஷயம் என்னண்டா கள்ளர் தான் இந்த முறை திருவிழாவின் கதாநாயகர்கள், மறை பொருட்களும் அவர்களே... இந்த முற அவங்க பாடு கொந்தாய் தான்... ஒரே தங்க வேட்டை தான் போங்க... சோ திருவிழாக்கு போறவங்க நீங்க நீங்க உங்க உடமைகள சரியா பாதுகாத்துக்கோங்க.

இது எல்லாத்தையும் கடந்து இம் முற நல்லூர் கந்தனின் உட்சவம் வெகு சிறப்பாக நடந்தேறும் எண்ட நம்பிக்கைல இப்ப நான் போய்ட்டு வாறன்.

பிறகென்ன திருவிழால சந்திப்பம்.
கந்தனுக்கு அரோகரா...!!!