கந்தனுக்கு அரோகரா.... முருகனுக்கு அரோகரா... முத்துக் குமரனுக்கு அரோகரா.... வடிவேலனுக்கு அரோகரா... முருகா... முருகா... முருகா... முருகா...!!!
ஏய்... ஏய்... கொஞ்சம் பொறுங்கப்பா இத வாசிச்சிட்டு இப்பவே வீட்டுக்க உறுண்டிடாதீங்கப்பா... பொறுமை... பொறுமை...! நாமெல்லாம் ஒண்ணா விடியக்காலம நல்லூர்ல போய் பிரதட்ட அடிக்கிறதுக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு அது வரைக்கும் பொறுத்துக்குங்கப்பா...!
இப்ப விசயம் என்னண்டா இந்த முற நல்லூர் திருவிழா ஒரு களைகட்டும் அதில எந்த சந்தேகமும் இல்ல ஆனா என்ன நல்லூர் தொண்டர் படை தான் ஏதோ புதுசா சட்டம் போட்டிருக்கினம் போல. அது வேற ஒண்ணுமில்லிங்கோ கோயிலுக்குள்ள போறப்போ ஆம்பிளைங்க வேட்டி சால்வையோட மட்டும் தான் போகேலுமாம் அதே மாதிரி பொம்பளைங்க சேலை, முழுப்பாவாடை சட்டை அதோட பாவாடை தாவணியோட தான் போகலாமாம்.
இதுகூட நல்ல ஐடியா தான். இல்ல சீரியஸ்சா தான் சொல்லுறன் A9 திறந்து பட்டி அவிட்டு விட்டதுக்குப் பிறகு யாழ்ப்பாணம் றொம்ப மாறிட்டு. யாழ் மண்ணுக்கே உரிய பாரம்பரியங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டு தான் போகுது. இந்த காலகட்டத்தில நல்லூர் கோயில் நிர்வாகம் இப்பிடியான அறிவித்தல குடுத்தது உண்மையில ஒரு நல்ல விசயம் எண்டு தான் நான் சொல்லுவன். ஏன்னா சமயப் பாரம்பரியங்களையாவது கட்டிக்காக்கிறதுக்கு இவங்கட இந்த முயற்சி நிச்சயமா வெற்றி பெறும் எண்டு நினைக்கிறன். இதையே தொடந்து செய்வினும் எண்டா இது பாராட்டுக்குரிய விசயம் தான்...!
இதால கோயில்லுக்க காத்து வாங்கிற மாதிரியான யன்னல் வைச்ச உடுப்புக்கள் போடுறவங்க பாடு அதோ கெதி தான். அது மட்டுமில்லாம ஒரு சாண் களிசாணும் ரெண்டு கைக்குட்டையளவு மேலுடுப்பும் போட்டுக்கிற பொண்ணூங்களுக்கு கோயில் வைச்சிச்சே பாரு ஆப்பு. முதலாளி உங்களுக்கு ஒரு பாராட்டு.
மூண்டு வருசத்துக்கு பிறகு நல்லூர் திருவிழாக்குப் போறதா இருக்கிறன். கன வித மாறுதலோட இந்த முற திருவிழா நடக்கும் எண்டு எதிர் பார்க்கிறன். அதிலும் மும் மதமும் ஒண்ணா நிண்டு கொண்டாடிற மாதிரியா இம் முற திருவிழா இருக்க போகுது. எல்லாருக்கும் இருக்கிற போல எனக்குள்ளும் கனக்க கற்பனைகள மெருகேத்தி வைச்சிருக்கிறன். முடிஞ்சளவு எல்லாத்தையும் நிறைவேத்திடனும்.
உங்க எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும் நல்லூர் கொடி ஏறிடிச்சுன்னா ஐஞ்சில இருந்து தொண்ணூறு வரைக்கும் ஒரே கொண்டாட்டம் தான் அந்த இருவத்தஞ்சு நாளும். கோயில சுத்தி ஒரே கடையளும், பாதாள கிணறு சேக்கஸ் எண்டு எந் நேரமும் எங்கட சனங்கள் பிஸியா தான் திரிவினும் காலமல இருந்து நடுச் சாமம் வரைக்கும் அப்பிடி ஒரு திருவிழாவ வேறெங்கையும் பாத்ததில்ல. என்ன இந்த முற கொஞ்சம் அட்வான்ஸா பல தரப்பட்ட பிஸ்னஸ் நடக்கும் “வாங்க வாங்க மலிவு எல்லாம் மலிவு எண்டு கத்துறவங்க மத்தியில அப்பப்போ லாபாய்... லாபாய்... எண்ட சத்தமும் கேக்கப் போது”.
அதால எந்த நேரமும் சன நடமாட்டம் கோயில சுத்தி இருக்கப் போது. அப்ப என்ன மாதிரிப் பொடிப் பசங்கள சொல்லவா வேணும்...! எங்க பாடு ஒரே ஜாலி தான்.
அட இத விடுங்கப்பா முக்கியமான விஷயம் என்னண்டா கள்ளர் தான் இந்த முறை திருவிழாவின் கதாநாயகர்கள், மறை பொருட்களும் அவர்களே... இந்த முற அவங்க பாடு கொந்தாய் தான்... ஒரே தங்க வேட்டை தான் போங்க... சோ திருவிழாக்கு போறவங்க நீங்க நீங்க உங்க உடமைகள சரியா பாதுகாத்துக்கோங்க.
இது எல்லாத்தையும் கடந்து இம் முற நல்லூர் கந்தனின் உட்சவம் வெகு சிறப்பாக நடந்தேறும் எண்ட நம்பிக்கைல இப்ப நான் போய்ட்டு வாறன்.
பிறகென்ன திருவிழால சந்திப்பம்.
கந்தனுக்கு அரோகரா...!!!
குட்டி உலகத்தில் ஓர் வழிப்போக்கன்...! காலை இளம் பனி! நிலா முற்றம்! குளிர்ந்த காற்று! வெண்பஞ்சு முகில்கள்! குழந்தையின் செல்ல சிரிப்பு! காதல் பெண்ணின் ஓரப் பார்வை! அம்மாவின் அன்பு மடி! இதுவே என் குட்டி உலகம்...!
Tuesday, August 3, 2010
Thursday, July 15, 2010
தனித்து விட்டேன் நான்...!!!
மெல்லிய மழைத் தூறலில்
உனக்காய்
நான் பல மணி நேரம்
காத்திருந்தேன்... நான்
நீயோ
வழமை போல் தாமதமாய்
ஆடி அசைந்து என் பக்கம்
வருகிறாய்...!
நீ வரும் நேரம் காட்டில்
அருகே தேங்கிக் கொண்டிருந்த
மழை நீரில்
நிலா முகம் பார்த்து
உன்னை ரசித்துக் கொண்டிருந்தேன்
நான்...!
உன்னில் சிறு கோபம்
எனக்கு...
கேட்கிறேன்
ஏன் இந்த தாமதம்...?
வார்த்தைகளை அனலாய்
பொழிந்தாய்...நீ!
ஒரு நிமிடம் மௌனியாய்
உன் முன் நான்...!
உன்
தவறை மறைப்பதற்காய்
என்னைக்
குற்றவாளியக்கி விட்டாய்...நீ!
இருந்தும்
பொறுத்துக் கொண்டேன்
அனைத்தையும்...
இறுதியில்
நான் நிலா ரசித்த
மழை நீரில்
எச்சில் உமிழ்ந்துவிட்டு
செல்கிறாய் நீ...
எனக்காய் ஒரு கணம்
கலக்கம் கொள்கிறது
அந்த நிலா...!
என்னை விட்டு போகாதே
என்று கத்திக் கொள்ள
வார்த்தைகள் என்னிடம் இல்லை...!
ஓர் நொடியில்
மின்னல் வெட்டுகிறது,
இடி, காற்று, மழை
என
அனைத்தும் அசுர வேகத்தில்
உன்னை என்னிடத்தே
சேர்ப்பதற்காய்...
தமக்குள்ளே போட்டி போட்டபடி...
இருந்தும்
ஏதும் அறியா ஜடம்
போல
நீ விலகிப் போய்க் கொண்டு
இருக்கிறாய்...
நானோ
மெல்ல கிழிந்து கிடக்கும்
தாவாரத்துக்குள்
சுவரோரம் ஒதுங்கி கொள்கிறேன்...!
எனக்குள்ளே
என்னை அடக்கி
முழங்கால்களுக்குள்
முகம் புதைத்த படி
ஒரு கணத்தில்
எல்லாமே
ஓய்ந்து கொள்கிறது...
எனக்கான இயற்கையின்
போராட்டங்கள்
அனைத்தும் தோல்வியில்...
என்
மனக் குமுறலை விடுத்து
எல்லாமே நிசப்தமானதாய்...!
இதமாய் வந்து
என் தலை கோதி
தன் மடி மீது உறங்கச் சொல்கிறது
அந்த காற்று...!!!
உனக்காய்
நான் பல மணி நேரம்
காத்திருந்தேன்... நான்
நீயோ
வழமை போல் தாமதமாய்
ஆடி அசைந்து என் பக்கம்
வருகிறாய்...!
நீ வரும் நேரம் காட்டில்
அருகே தேங்கிக் கொண்டிருந்த
மழை நீரில்
நிலா முகம் பார்த்து
உன்னை ரசித்துக் கொண்டிருந்தேன்
நான்...!
உன்னில் சிறு கோபம்
எனக்கு...
கேட்கிறேன்
ஏன் இந்த தாமதம்...?
வார்த்தைகளை அனலாய்
பொழிந்தாய்...நீ!
ஒரு நிமிடம் மௌனியாய்
உன் முன் நான்...!
உன்
தவறை மறைப்பதற்காய்
என்னைக்
குற்றவாளியக்கி விட்டாய்...நீ!
இருந்தும்
பொறுத்துக் கொண்டேன்
அனைத்தையும்...
இறுதியில்
நான் நிலா ரசித்த
மழை நீரில்
எச்சில் உமிழ்ந்துவிட்டு
செல்கிறாய் நீ...
எனக்காய் ஒரு கணம்
கலக்கம் கொள்கிறது
அந்த நிலா...!
என்னை விட்டு போகாதே
என்று கத்திக் கொள்ள
வார்த்தைகள் என்னிடம் இல்லை...!
ஓர் நொடியில்
மின்னல் வெட்டுகிறது,
இடி, காற்று, மழை
என
அனைத்தும் அசுர வேகத்தில்
உன்னை என்னிடத்தே
சேர்ப்பதற்காய்...
தமக்குள்ளே போட்டி போட்டபடி...
இருந்தும்
ஏதும் அறியா ஜடம்
போல
நீ விலகிப் போய்க் கொண்டு
இருக்கிறாய்...
நானோ
மெல்ல கிழிந்து கிடக்கும்
தாவாரத்துக்குள்
சுவரோரம் ஒதுங்கி கொள்கிறேன்...!
எனக்குள்ளே
என்னை அடக்கி
முழங்கால்களுக்குள்
முகம் புதைத்த படி
ஒரு கணத்தில்
எல்லாமே
ஓய்ந்து கொள்கிறது...
எனக்கான இயற்கையின்
போராட்டங்கள்
அனைத்தும் தோல்வியில்...
என்
மனக் குமுறலை விடுத்து
எல்லாமே நிசப்தமானதாய்...!
இதமாய் வந்து
என் தலை கோதி
தன் மடி மீது உறங்கச் சொல்கிறது
அந்த காற்று...!!!
Subscribe to:
Posts (Atom)