Monday, February 13, 2012

என் காதலே...!

என் காதலே!

கண்கள் வழி இதயம் புதுந்து

என்னை நித்தம் கொல்லும்

என் காதலே!

இமைகளில் ஒரு கணம் இதமாய் வாழ்ந்துவிட்டு போவாய்

நீ!

தூக்கம் தொலைத்து என்னுள்

வலி கொள்பவன் நான் தானே!

புயலென வந்து

வலிக்காமல் இதயம் திருடும்

வித்தையை எங்கே தான் கற்றாயோ!

இன்றும்

உனக்காய் வரைந்த காதல் கடிதங்கள்

சட்டைப் பைக்குள் ஏராளம்!

அவை ஓர் குட்டி நூலகம் என்பேன்!

எனக்குள் சேர்த்தேன்

உன் நினைவுகளை

ஓர்

பொக்கிஷமாய்!

அவையாவும் அழகிய கவிதையென்பேன்!

காதலர் தினங்களில்

காத்திருப்பு தான் என் காதலியாகிறது!

என்

தனிமைக்குளேயும் குதூகலமாய்

வந்து போகிறாய் நீ!

என் கனவுகளில் உனக்கே முதலிடம்!

என்னே! அழகாய் பேசிகிறாய் நீ!

உன் ஓரப் பார்வையில்

என்

கனவுகள் அனைத்தும்

உயிர் பெற்றெழக் காண்பேன்!

இனிமையான பேச்சுக்களில்

இலக்கியப் பாவையாகிறாய் - நீ!

தனிமையான நேரங்களில்

தளிர் விடும் பசுமையாகிறாய் - நீ!

தினம் ஓர் கற்பனைக்குள்

வாழ்ந்துவிட்டுப் போகிறேன் உன்னோடு!

கனவில் உன் நெருக்கம், காதல்

அது போதும் எனக்கு!

காலங்களுக்குள் கட்டுண்டவனாய்

உன் காதலின் வாசல் தேடி

இன்றும் காத்திருக்கும் உன் காதலன்!
















நினைவுகளோடு,

யாசித்திருக்கும் உன் காதலன்!

பிறேம்!

2 comments:

  1. உனக்காய் வரைந்த காதல் கடிதங்கள்சட்டைப் பைக்குள் ஏராளம்!அவை ஓர் குட்டி நூலகம் என்பேன்!

    அருமை..

    ReplyDelete
  2. நன்றி தோழமையே...!

    ReplyDelete