மனமெனும் ஓடையில்
இன்றும் அழகாய்
நீந்திக்கொண்டிருக்கின்றன
அழகிய நீ எனும்
கவிதைகள்...
என் மௌன மொழிகளுக்கு
இதயத்தில் இருந்தபடியே
அழகாய் பதில் தந்து கொண்டிருக்கிறாய்
நீ!
எம் கடந்தகாலம் - பற்றி
இதயத்திற்கு மெல்ல
தந்தியனுப்பிக் கொண்டிருக்கின்றது
என் நரம்புகள்...
உன் நினைவுகளுடே
நானும் மெல்ல உனக்குள்
கடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன்
என்னையே அறியாமல்...
அழகிய கவிதை
ReplyDeleteகடைசி நான்கு வரிகள் அற்புதம் .
ReplyDeleteநன்றிகள் :) Sasi Kala //கடைசி நான்கு வரிகள் அற்புதம் .//
ReplyDelete// அழகிய கவிதை// & சௌந்தர் :)))