Tuesday, June 19, 2012

நண்பனின் காதல் சுயசரிதை

நண்பனின் சுயசரிதை...

இது ஒரு சோகக் கதை...! நண்பனின் கடுப்புக்கலந்த கவலை...! வாசிங்க உங்களுக்கே விளங்கும்! வேலைத் தளத்தில் நான் என் நண்பனைச் சந்திச்சபோது அவன் சொன்ன கதை...!

இதோ...!

அவரை நான் எனது பாணியில் அறிமுகப்படுத்துகிறேன்...

நான் காண்டிபன், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு படிக்க வந்தனான், வந்த இடத்தில ஆப்பு இருக்கு தெரியாம‌ மேல குந்திட்டன்! வலி தாங்க முடியல தான் இருந்தாலும் என்னால எழும்ப முடியல, குந்தினாலும் வலிக்கிது கொஞ்சம் அசைஞ்சாலும் வலிக்கிது! ஆனாலும் ஒரு வழியா படிச்சு முடிச்சிட்டன். வாழ்நாள் சாதனை இது! ஏன் தான் இப்பிடியோ! - சலிச்சுக்கிறான் நண்பன்!

மாசத்துக்கு மாசம் விசர் ஊசி போடுறதே வேலையா போச்சு! எடுகிற சம்பளம் ஊசில போது! ஓசில திண்ட‌ காலம் போய் ஊசி திண்டுற காலம் எனக்கு! இதை ஏன் சொல்லுறன் எண்டு இன்னும் கொஞ்சம் வாசிச்சீங்கள் எண்டால் விளங்கும்.

இப்ப புதுசா ஒரு வேலைக்கு சேந்திருக்கிறன் அதில எடுக்கிற சம்பளம் அப்பாடா இந்த மாசம் சம்பளம்  வந்திட்டு எண்டு சொல்லுறதுக்குள்ளையே வர்ற காசு முடிஞ்சிடுது, எனக்கும் ஒரு கேள் பிரண்ட் இருக்கிறா, என்ர ஊசி செலவு அவவால தான்! இப்ப முதல் சொன்னது ஞாபகம் வரும் உங்களுக்கு...
மற்றவங்க தொட்டு தொட்டு பேசுவாங்க ஆனா என்ர அவா கீறி கீறி பேசுவா! அவளவு பாசம் என் மேல!

இப்பிடி கனக்க நடந்திருக்கு எனக்கு எல்லாமே சொல்ல ஏலாது தானே!  இத ஒருவேள அவ பாத்தா அப்புறம் ஒரு அன்புக் கீறல் விழும்! எதுக்கு எனக்கு ஊசி செலவு?

அப்பிடி இருந்தும் நான் அவ கூட அன்பா கதைக்க போவன் கடைசில அதுவே புது ஆப்பா மாறிடும்! ஊத்தப்  பேச்சைத் தவிர மிச்ச எல்லா கேவலத்தையும் ஒண்ணா சேத்து பேசுவா! அதிலையும் விசர் சவம்,  விசர் மூதேவினு அவ திட்டுறது கேவலமா தெரிஞ்சாலும் அழகா இருக்கும்...!

ஆனா ஒண்ணுங்க லவ் பண்ணுற பசங்க ஒருத்தருக்கொருத்தர் அடிக்கடி முத்தம் குடுப்பாங்க ஆனா என்ர அவ‌ எனக்கு மொத்தமா குடுப்பா நாலு நாளைக்கு வீங்கிற மாரி! அப்புன்னா அப்பு அப்பிடியொரு அப்பு! மூஞ்சில
மூஞ்சி எனக்கு மட்டும் தான் அடிக்கடி வரும்...


ஆ! இன்னும் ஒண்ட சொல்ல மறந்திட்டன்! அவ போன்ல கதைக்கிறதே நேர்ல கதைக்கிற போல தான் இருக்கும் அவளவு மெல்லமா தான் கதைப்பா, சிரிப்பு கூட அவளவு அழகு! அவ சிரிக்கும் போது சூர்பனகைக்கு டப்பிங் குடுத்தத போல இருக்கும்...

அட விடுங்க என்ர சோகக் கதைய இதோட நிப்பாட்டுறன், இவளவு சொல்லியும் உங்களுக்கு புரிஞ்சிருக்காதா என்ர வீர வரலாறு...? என் உடம்பில் உள்ள தழும்புகள் எல்லாம் காதல் தழும்புகள்...! தழும்புகளைப் பாக்குற  நேரமெல்லாம் ஏதோ நேர்ல அவ வந்து அடிச்சிட்டு போற போல கற்பனையெல்லாம் தோணுது!  சாமத்தில கத்திக்கூட இருக்குறன்னா பாருங்கவன்!

இனியும் நான் கதைக்க விரும்பல... இத மட்டும் அவக்கு சொல்லிடாதீங்க அடி அகோரமா இருக்கும்..!

கேட்டியள் தானே அவன்ர கதைய! உந்த பெட்டையளே இப்பிடி தான் போல! ஒருத்தன் கதையே இப்பிடி  நாறிப் போய் கிடக்கு...!!!

ச்சீ ச்சீ! வெந்து போய் கிடக்கு! இது காணும் இண்டைக்கு!  

வேணாம்டா வேணாம் காதல் மோகம், பொண்ணுங்க எல்லாம் வாழ்வின் சாபம்...!

அப்பாடா சொல்லி முடிச்சாச்சு! போய்ட்டு வாறன்! - நண்பனின் குமுறல் இது!

3 comments:

  1. பாசக்கயிறை வீசுற எமனும் ..
    பார்வைய வீசுற WOMAN ம்..
    பால் ஊத்தாம போனதா சரித்திரம் இல்லை ...

    ReplyDelete
  2. //பாசக்கயிறை வீசுற எமனும் ..
    பார்வைய வீசுற WOMAN ம்..
    பால் ஊத்தாம போனதா சரித்திரம் இல்லை//

    அது எனவோ உண்மை தான்... லொலொ! ;)

    டானி! //hehe// - யாருன்னு கண்டுபிடிச்சிட்டியா...?

    ReplyDelete